இந்தியா

பன்னீர் சாண்ட்விச்க்கு பதிலாக சிக்கன் சாண்ட்விச் - 50 லட்சம் இழப்பீடு கோரிய பெண்

Published On 2024-05-08 15:43 GMT   |   Update On 2024-05-08 15:43 GMT
  • இரவு உணவிற்காக, உணவு ஆர்டர் செய்யும் செயலி மூலம் பன்னீர் டிக்கா சாண்ட்விச்சை நீராலி என்பவர் ஆர்டர் செய்துள்ளார்.
  • அவருக்கு பன்னீர் டிக்கா சாண்ட்விச்சிற்கு பதிலாக சிக்கன் சாண்ட்விச் அனுப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரின் சாமுண்டாநகர் என்ற பகுதியில் வசித்து வரும் நீராலி, கடந்த வெள்ளிக்கிழமை இரவு உணவிற்காக, உணவு ஆர்டர் செய்யும் செயலி மூலம் பன்னீர் டிக்கா சாண்ட்விச்சை ஆர்டர் செய்துள்ளார்.

அவருக்கு பன்னீர் டிக்கா சாண்ட்விச்சிற்கு பதிலாக சிக்கன் சாண்ட்விச் அனுப்பட்டுள்ளது. அதை அறியாமல் அதை அவர் சிறிது சாப்பிட்டுள்ளார். பின்னர் இது சிக்கன் சாண்ட்விச் என்று தெரிந்ததும் ஆத்திரமடைந்த அவர் அகமதாபாத் மாநகராட்சியின் சுகாதாரத்துறையில் இது குறித்து புகார் அளித்துள்ளார்.

தனக்கு இழப்பீடாக அந்நிறுவனம் 50 லட்சம் வழங்கவேண்டும் என்று அந்த புகார் மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இதனை விசாரித்த சுகாதாரத்துறை VRYLY வென்ச்சர்ஸ் உணவு நிறுவனம் இந்த தவறுக்காக நீராலிக்கு ரூ.5000 அபராதம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் இதே தவறை மீண்டும் செய்தால், உங்கள் நிறுவனத்திற்கு சீல் வைக்கப்படும்" என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

Tags:    

Similar News