இந்தியா
காஷ்மீரில் சாலை விபத்து - சி.ஆர்.பி.எப். வீரர் உள்பட 4 பேர் பலி
- ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஜகானி-செனானி பகுதியில் இன்று காலை பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது.
- பஸ் திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
ஜம்மு:
ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் மாவட்டம் ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஜகானி-செனானி பகுதியில் இன்று காலை பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது.
டோடாவிலிருந்து ஜம்மு நோக்கி சென்ற அந்த பஸ் திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சி.ஆர்.பி.எப் படை வீரர் உள்பட 4 பேர் பலியானார்கள்.