இந்தியா

PM Modi | ஈரான் அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு

Published On 2026-03-13 00:03 IST   |   Update On 2026-03-13 00:03:00 IST
  • ஈரான்மீது அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து தொடுத்துள்ள போர் தீவிரமடைந்து வருகிறது.
  • உலகளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, எரிவாயு தட்டுப்பாடு சூழல் ஏற்பட்டுள்ளது.

புதுடெல்லி:

ஈரான்மீது அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து தொடுத்துள்ள போர் தீவிரமடைந்து வருகிறது. இதனால் உலகளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, எரிவாயு தட்டுப்பாடு சூழல் ஏற்பட்டுள்ளது.

உலக நாடுகளுக்கு கச்சா எண்ணெய் போக்குவரத்துக்கு முக்கிய வழித்தடமாக விளங்கும் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து ஒரு லிட்டர் எண்ணெய் கூட வெளியேறாது என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், பிரதமர் மோடி ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியனுடன் தொலைபேசியில் பேசினார்.

அப்போது, ஈரானில் அதிகரித்து வரும் பதட்டங்கள், பொதுமக்களின் உயிரிழப்பு, பொதுமக்களின் உள்கட்டமைப்புக்கு ஏற்பட்ட சேதம் குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்தார்.

இந்திய குடிமக்களின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், பொருட்கள் மற்றும் எரிசக்தியின் தடையற்ற போக்குவரத்தை எளிதாக்குவதும் இந்தியாவின் முதன்மையான முன்னுரிமையாக உள்ளது என பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கான இந்தியாவின் உறுதிப்பாட்டையும் உறுதிப்படுத்தினார்.

Tags:    

Similar News