செய்திகள்

வைகோ, திருமாவளவன் உள்பட கட்சி தலைவர்களுக்கு அழைப்பு- மக்கள் நீதி மய்யம் தகவல்

Published On 2018-05-16 02:37 GMT   |   Update On 2018-05-16 02:48 GMT
காவிரி பிரச்சினை தொடர்பான கூட்டத்தில் பங்கேற்க வைகோ, திருமாவளவன் உள்பட கட்சி தலைவர்களுக்கு மக்கள் நீதி மய்யம் அழைப்பு விடுத்துள்ளது.#vaiko #thirumavalavan #KamalHaasan
சென்னை:

மக்கள் நீதி மய்யம் சார்பில் அதன் தலைவர் கமல்ஹாசன் ‘காவிரிக்கான தமிழகத்தின் குரல்’ என்ற தலைப்பில் வருகிற 19-ந்தேதி சென்னையில் ஒரு கூட்டம் நடத்த ஏற்பாடு செய்துள்ளார்.

இதில் அனைத்து கட்சி தலைவர்கள், விவசாய சங்கங்கள் மற்றும் தமிழ் அமைப்புகள் கலந்து கொள்ள இருக்கின்றனர். இதற்காக கமல்ஹாசன் நேற்று முன்தினம் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, ‘காவிரிக்கான தமிழகத்தின் குரல்’ என்ற தலைப்பில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்தார்.



அதன் தொடர்ச்சியாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, திரைப்பட இயக்குனர் பாரதிராஜா, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், அனைத்திந்திய லட்சிய திராவிட முன்னேற்றக்கழக நிறுவனர் விஜய டி.ராஜேந்தர் ஆகியோர் அந்த கூட்டத்தில் பங்கேற்க கமல்ஹாசன் நேற்று அழைப்பு விடுத்துள்ளார்.

மேற்கண்ட தகவல் மக்கள் நீதி மய்யத்தின் ‘டுவிட்டர்’ பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவிரி பிரச்சினை தொடர்பான கூட்டத்தில் பங்கேற்க வைகோ, திருமாவளவன் உள்பட கட்சி தலைவர்களுக்கு மக்கள் நீதி மய்யம் அழைப்பு விடுத்துள்ளது.#vaiko #thirumavalavan #KamalHaasan
Tags:    

Similar News