search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Makkal Needhi Maiam"

    • மக்கள் நலனை குறிக்கோளாய் கொண்டது 2 தத்துவங்கள். செய்ததை சொல்லி கொண்டு வருபவரை நம்பலாம்.
    • செய்யாததை சொல்வதும், செய்வதாய் பொய் சொல்வதுமாய் வருபவரை நம்ப கூடாது.

    திருப்பூர்:

    திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த சுப்பராயனை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    நாட்டை காக்கும் தருணம் என்பதால் பரப்புரைக்கு நான் வந்துள்ளேன். தனக்கான தேவைகளை மட்டும் பூர்த்தி செய்யாமல் உலகளாவிய உடை தேவைகளை பூர்த்தி செய்யும் நகரம் இந்த திருப்பூர். திருப்பூரில் பனியன் தொழில் மந்தமாக உள்ளது. இதற்கு மத்திய அரசின் ஜி.எஸ்.டி., பெட்ரோல் விலை உயர்வு காரணம். இப்போது மந்தமாக உள்ள போதே ரூ.40 ஆயிரம் கோடி வர்த்தகம் என்றால் 10 ஆண்டுகளுக்கு முன் எப்படி இருந்திருக்கும். அதிக வருவாய் ஈட்டித்தரும் திருப்பூரை ஒழுங்காக கவனிக்க முடியவில்லை. இதில் 75 புதிய நகரத்தை பிரதமர் எப்படி உருவாக்குவார்.

    மக்கள் நலனை குறிக்கோளாய் கொண்டது 2 தத்துவங்கள். செய்ததை சொல்லி கொண்டு வருபவரை நம்பலாம். செய்யாததை சொல்வதும், செய்வதாய் பொய் சொல்வதுமாய் வருபவரை நம்ப கூடாது.

    கலைஞர் சொல்வதை செய்பவர். திருப்பூர் மாநகராட்சியாக மாறுவதற்கு கலைஞர் முக்கிய காரணம். நிறைய பாலங்கள் சாலைகள் கொடுத்துள்ளார். மத்திய அரசு உதவியை தடை செய்தால் தொகுதியில் வேலை தடைபடும். ஒரு எம்.பி.க்கு ரூ.5 கோடி கொடுப்பார்கள். இங்கு 6 சட்டமன்ற தொகுதி. 6 தொகுதிக்கு ஒரு கோடி கிடையாது. மக்களுக்கான வளர்ச்சி பணிகளை செய்வதற்கு கூட ஜி.எஸ்.டி. வரி போட்டது தான் ஒன்றிய அரசு.

    ஜி.எஸ்.டி. போடும் போது சினிமா துறையில் இருந்து நான் குரல் கொடுத்தேன்.

    ஜி.எஸ்.டி. நல்ல திட்டம் என்றால் அந்த வரி திட்டத்தை சொல்லி பாரதிய ஜனதாவினர் ஓட்டு கேட்டிருக்கலாம். ஜி.எஸ்.டி., வேண்டாம் என முழங்கியவர்களில் நானும் ஒருவன். ஜி.எஸ்.டி., மற்றும் பணமதிப்பிழப்பு உள்ளிட்ட மத்திய அரசின் இரட்டை தாக்குதலால் கடந்த 10 ஆண்டுகளாக திருப்பூர் பனியன் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.

    பஞ்சு விலை உயர்வு, நூல் தட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களால் உலக அளவில் முதல் இடத்தை நெருங்கி கொண்டிருந்த இந்தியாவை பின்னால் தள்ளியது பங்களாதேஷ். அங்கு வரி குறைவு. பங்களாதேசில் இருந்து நூல் துணியை இறக்குமதி செய்கின்றனர். இந்த உதாரணம் போதும். ஒன்றிய அரசு என சொன்னாலும் மக்களுடன் ஒன்றாத அரசாக மத்திய பா.ஜ.க. அரசு மாறி விட்டது. எனக்கென்று எதிர்பார்ப்பு இல்லாமல் நமக்காக வந்திருக்கிறேன். நாட்டைக்காக்கவே இந்தியா கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பிரசாரத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி த்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், செல்வராஜ் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • மதுரை ஆனையூரில் மாலை 6 மணிக்கும், இரவு 7 மணிக்கு புதூர் பேருந்து நிலையத்திலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறார்.
    • தேர்தல் பிரசாரம் நல்லபடியாக போய்க் கொண்டிருக்கிறது.

    மதுரை:

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

    அந்த வகையில் அவர் இன்று மதுரை ஆனையூரில் மாலை 6 மணிக்கும், இரவு 7 மணிக்கு புதூர் பேருந்து நிலையத்திலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறார். இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் மதியம் அவர் மதுரைக்கு வருகை தந்தார்.

    விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சிறப்பாக பணியாற்றி வரும் காம்ரேட் வெங்கடேசனுக்காக நான் வாக்கு சேகரிக்க வந்திருக்கிறேன். நல்லவர்களுக்கு மீண்டும் வாக்கு கேட்டு வருவது எனக்கு பெருமையாக இருக்கிறது. இந்த தேர்தல் பிரசாரம் நல்லபடியாக போய்க் கொண்டிருக்கிறது என்றார்.

    • திருவள்ளூர் தே.மு.தி.க. வேட்பாளர் நல்லதம்பியை ஆதரித்து இன்று மாலை எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்கிறார்.
    • மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்று மாலை ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்குட்பட்ட நங்கநல்லூர் மற்றும் முகப்பேர்-கலெக்டர் நகர் சந்திப்பில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

    சென்னை:

    சென்னையில் இன்று மாலை அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் பிரசாரம் மேற்கொள்கிறார்கள்.

    பாராளுமன்ற தேர்தலையொட்டி திருச்சியில் கடந்த மாதம் 24-ந்தேதி தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய எடப்பாடி பழனிசாமி பல்வேறு தொகுதிகளுக்கும் சென்று கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார்.

    இந்த நிலையில் திருவள்ளூர் மற்றும் சென்னையில் இன்று மாலையில் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார். திருவள்ளூர் தே.மு.தி.க. வேட்பாளர் நல்லதம்பியை ஆதரித்து இன்று மாலை 4 மணிக்கு எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்கிறார்.

    இதன் பின்னர் வடசென்னை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ராயபுரம் மனோவை ஆதரித்து பெரவள்ளூரில் இரவு 7 மணிக்கு எடப்பாடி பழனிசாமி பேசுகிறார்.

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்று மாலை 4 மணிக்கு ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்குட்பட்ட நங்கநல்லூர் மற்றும் முகப்பேர்-கலெக்டர் நகர் சந்திப்பில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

    மாலை 6 மணிக்கு வடசென்னை தொகுதிக்குட்பட்ட ஓட்டேரி, ராயபுரம் ஆகிய இடங்களில் பிரசாரம் செய்து வாக்கு சேகரிக்கிறார்.

    • தமிழ்நாட்டில் செயல்படுத்தும் திட்டங்களை இந்தியா முழுவதும் செயல்படுத்தினால் உலகம் இந்தியாவை திரும்பி பார்க்கும்.
    • எதிர்த்து குரல் கொடுப்பவர்களை இல்லாமல் செய்வது ஒருவித அரசியல்.

    திருச்சி:

    திருச்சியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின்போது கமல்ஹாசன் பேசியதாவது:-

    நாம் மதிக்கும் மிக முக்கியமான புத்தகம், நம் அரசியல் அமைப்பு சட்டம். அந்த புத்தகம் பாதுகாக்கப்பட்டால் தான் நீங்கள் வணங்கும் மற்ற புத்தகங்கள் பாதுகாக்கப்படும். நான் இங்கு சீட்டுக்காக வரவில்லை. நாட்டுக்காக வந்து இருக்கிறேன்.

    தமிழக மக்களுக்கும், இந்தியாவுக்கும் எனக்குள்ள காதல் சாதாரணமானது அல்ல. அதையும் தாண்டி புனிதமானது. என் காதல் உங்கள் அனைவரின்பால் உண்டு. அதனால் தான் நான் அரசியலுக்கே வந்தேன்.

    தமிழ்நாட்டில் செயல்படுத்தும் திட்டங்களை இந்தியா முழுவதும் செயல்படுத்தினால் உலகம் இந்தியாவை திரும்பி பார்க்கும். இல்லத்தரசிகளுக்கு உதவித்தொகை என்பதை முதன்முதலில் மக்கள் நீதி மய்யத்தில் அறிவித்தோம். அப்போது என்னென்னமோ கிண்டல் செய்தார்கள்.

    ஆனால் அதை உற்றுநோக்கி நடைமுறைப்படுத்திய ஒரு காரணத்துக்காக நான் இங்கு வந்தேன் என்று வைத்து கொள்ளலாம். பெண்களுக்கு பஸ்சில் கட்டணமில்லா பயணம் என்ற திட்டம் ஏன் தமிழ்நாட்டோடு முடியணும்? இந்தியா முழுவதும் ஏன்? வரக்கூடாது. அது தான் நல்ல அரசியல், அதை செய்யுங்கள்.

    எதிர்த்து குரல் கொடுப்பவர்களை இல்லாமல் செய்வது ஒருவித அரசியல். எதிர்த்து குரல் கொடுத்தாலும் என்ன சொல்கிறார்கள் என்று கேட்பது நமது அரசியல். அண்ணன், தம்பிகளை மோதவிட்டு பார்ப்பது ஒரு அரசியல் தந்திரம். அது இன்று நிகழ்ந்து கொண்டு இருக்கிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்கள் மத்திய அரசிடம் இருந்து நெருக்கடியை சந்தித்து வருகின்றன.
    • கொரோனா பாதிப்பு மற்றும் நிபா வைரஸ் பரவியபோது, சுகாதாரத்துறை மந்திரியாக இருந்தவர் கே.கே.சைலஜா.

    கோழிக்கோடு:

    கேரள மாநிலம் வடகரா பாராளுமன்ற தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைமையிலான இடது முன்னணி சார்பில் முன்னாள் மந்திரி கே.கே.சைலஜா போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவு தெரிவித்து மக்கள் நீதி மய்ய தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் காணொலி காட்சி மூலம் மலையாளத்தில் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இதுவரை நடைபெற்ற தேர்தல்களுக்கும், இந்த முறை நடைபெற உள்ள தேர்தலுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது. தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்கள் மத்திய அரசிடம் இருந்து நெருக்கடியை சந்தித்து வருகின்றன. இந்த சமயத்தில் கே.கே.சைலஜா போன்றவர்கள் பாராளுமன்றத்திற்கு சென்று நமது குரலை எதிரொலிப்பது அவசியம்.

    கொரோனா பாதிப்பு மற்றும் நிபா வைரஸ் பரவியபோது, சுகாதாரத்துறை மந்திரியாக இருந்தவர் கே.கே.சைலஜா. மனம் தளராமல் நிவாரண பணிகளை ஒருங்கிணைத்து மக்களை காப்பாற்றினார். தேர்தலில் கே.கே.சைலஜா வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க கூட்டணிக்கு கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி ஆதரவு அளித்துள்ளது.
    • கமல்ஹாசன் வரும் 29-ந்தேதி முதல் ஏப். 16-ந்தேதி வரை பிரசாரம் செய்ய உள்ளார்.

    சென்னை:

    தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் தி.மு.க. 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது. கூட்டணி கட்சிகளான காங்கிரஸ்-9, விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகள் தலா 2 இடங்களிலும், ம.தி.மு.க., கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் தலா ஒரு இடத்தில் போட்டியிடுகிறது. இதில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட உள்ளது.

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க கூட்டணிக்கு கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி ஆதரவு அளித்துள்ளது.

    இந்நிலையில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, வரும் 29-ந்தேதி முதல் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பிரசாரம் செய்ய உள்ளார்.

    அவர் வரும் 29-ந்தேதி முதல் ஏப். 16-ந்தேதி வரை பிரசாரம் செய்ய உள்ளார். ஈரோட்டில் 29-ந்தேதி பிரசாரத்தை கமல்ஹாசன் தொடங்குகிறார்.

    • மக்கள் நீதி மய்யம் கட்சியை தனித்துவமாக நடத்துவதாக சொல்லிவிட்டு தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்து விட்டதாக என்னை விமர்சிக்கிறார்கள்.
    • நான் நினைத்திருந்தால் தொகுதி பங்கீடு நடந்தபோது 3 அல்லது 4 சீட்டு கேட்டு நெருக்கடி கொடுத்திருக்க முடியும்.

    தி.மு.க. கூட்டணியில் சேர்ந்து மேல்சபை எம்.பி. பதவி பெற்றிருக்கும் நடிகர் கமல்ஹாசன் அந்த கூ டணியில் சேர்ந்தது பற்றி விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

    தொடக்கத்தில் நற்பணி மன்றம் மூலம் மட்டும் சமூக சேவை செய்தால் போதும் என்று நினைத்தேன். ஆரம் பத்தில் எனக்கும் அரசியல் மீது கொஞ்சம் வெறுப்பு இருந்தது. ஆனால் நல்ல முயற்சிகளை அரசியல் மூலமே செய்ய முடியும் என்பதை உணர்ந்ததால் அரசியலுக்கு வந்தேன்.

    மக்கள் நீதி மய்யம் கட்சியை தனித்துவமாக நடத்துவதாக சொல்லிவிட்டு தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்து விட்டதாக என்னை விமர்சிக்கிறார்கள். அதை பற்றி கவலையில்லை. இதற்கு முன்பு கூட பல்வேறு மாற்று கருத்துக்கள் கொண்டவர்கள் ஓரணியில் இணைந்து இருக்கிறார்கள்.

    தற்போதைய சூழ்நிலை யில் நாட்டில் ஒரு சக்தி மக்களை பிளவுப்படுத்த நினைக்கிறது. அதுவும் மனி தர்கள் மத்தியில் மதத்தின் அடிப்படையில் கடப்பா ரையை வைத்து குத்தி பிளவு ஏற்படுத்துகின்றனர். எனவேதான் அதற்கு எதிராக செயல்பட வேண் டும் என்ற முடிவுடன் நான் தி.மு.க. கூட்டணியில் என்னை இணைத்துக் கொண்டிருக்கிறேன்.

    நான் நினைத்திருந்தால் தொகுதி பங்கீடு நடந்தபோது 3 அல்லது 4 சீட்டு கேட்டு நெருக்கடி கொடுத்திருக்க முடியும். தி.மு.க. கூட்டணி வலுவாக இருக்க வேண்டும் என்ற கொள்கை அடிப்படை யில் நான் அதை செய்ய வில்லை.

     இந்தியா கூட்டணிக்கு தலைமை தாங்க ஒருவர் தேவை. அதற்கு ராகுல்காந்தி பொருத்தமானவர் என்று நான் நினைக்கிறேன்.

    இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.

    • மக்கள் பற்றி யோசித்தே இந்த தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி முடிவெடுத்து உள்ளது.
    • பாராளுமன்றத் தேர்தலே முக்கியம் என்று கருதி தேசத்தின் நலன் கருதி இந்த முடிவை எடுத்துள்ளோம்.

    சென்னை:

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பாராளுமன்றத் தேர்தல் குறித்தும், தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்தது பற்றியும் பேட்டி அளித்து உள்ளார். அவர் கூறியதாவது:

    40 ஆண்டுகளாக எனது நற்பணி மன்றங்கள் மூலம் பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்து வந்துள்ளோம். அந்த பணிகளை அதிகாரத்தின் மூலமாக அரசியலுக்கு வந்து செய்ய நினைத்தோம்.

    அதன் விளைவாகவே மக்கள் நீதி மய்யம் கட்சி உதயமானது. லஞ்ச ஊழலை இல்லாத அரசியலை உருவாக்கவே புதிய கட்சியை தொடங்கி பயணித்து வருகிறோம்.

    முன்பு தி.மு.க.வை கடுமையாக விமர்சித்து டி.வி.யையெல்லாம் உடைத்ததாக என் மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கு பின்னர் பதில் கூறுவேன்.

    அதற்கு பதில் அளிக்க வேண்டிய நேரம் இதுவல்ல. மக்கள் பற்றி யோசித்தே இந்த தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி முடிவெடுத்து உள்ளது. பாரதிய ஜனதா கட்சி பாசிசத்தை நோக்கியே பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது.

    இந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு எச்சரிக்கை மணி அடிக்க வேண்டியது அவசியமாக மாறியுள்ளது. தேச நலனுக்கு எதிரான போராகவே இந்த தேர்தலை பார்க்கிறேன்.

    அதில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் இருப்பதாலேயே இந்தியா கூட்டணியை வலுப்படுத்தும் எண்ணத்தில் தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியுடன் கைகோர்த்துள்ளோம்.

    பாரதிய ஜனதா கட்சியினர் தங்களை மாற்றிக் கொள்வதற்கான எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை.

    அதற்கான அறிகுறிகளும் அவர்களிடம் தென்படவில்லை. தி.மு.க.வுடனான கூட்டணி ஒப்பந்தத்தின்படி மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒரு மேல்சபை எம்.பி. பதவி வழங்கப்பட்டுள்ளது. எனது சொந்த வாழ்க்கையை பற்றி இந்த நேரத்தில் யோசிக்கவில்லை. எனது கட்சியின் முன்னேற்றத்துக்காகவும், சொந்த அரசியல் முன்னேற்றத்துக்காகவும் நான் சுயநலத்தோடு சில முடிவுகளை எடுத்திருக்கலாம்.

    எனது கட்சியில் உள்ள எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களின் எண்ணிக்கையை பார்ப்பது முக்கியம் இல்லை. பாராளுமன்றத் தேர்தலே முக்கியம் என்று கருதி தேசத்தின் நலன் கருதி இந்த முடிவை எடுத்துள்ளோம்.

    தி.மு.க. கூட்டணியில் 3 அல்லது 4 இடங்களை எங்களால் எளிதாக கோரி இருக்க முடியும். ஆனால் தமிழகத்தில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியை வலுப்படுத்துவதே முக்கியம் என்று தோன்றியது. எனது கருத்தை நிரூபிக்க தேர்தலில் பங்கேற்க வேண்டும் என்றே கட்சியினர் கூறினார்கள்.

    ஆனால் அதை வேறு யாராவது பயன்படுத்திக் கொள்ளட்டும். நாம் கூட்டணியை பலப்படுத்தலாம் என்று நான் கூறிவிட்டேன். மற்றத் தரப்பில் இருந்தும் கூட்டணி தொடர்பாக பேசப்பட்டு சலுகைகளை அளிக்கவே தயாராக இருந்தனர். ஆனால் நாங்கள் அதனை ஏற்கவில்லை.

    தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கு இது கடைசி கோட்டையாக இருக்கும் என்றே கருதுகிறேன்.

    இந்தியா முழுவதும் இந்த மறுமலர்ச்சியை பேச்சாக மாற்றி இருக்கிறார்கள். வாழ்வாதார பிரச்சனைகளில் இருந்து மக்களை திசை திருப்பும் சூழ்ச்சியாகவே இதனை பார்க்கிறேன்.

    இல்லத்தரசிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை யோசனையை முதலில் மக்கள் நீதி மய்யம்தான் முன் வைத்தது. ஆனால் அதனைப் பற்றி நினைக்காமல் தி.மு.க. அதனை செயல்படுத்தி உள்ளது.

    தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணியே வெல்லும். மத்தியில் பிரதமர் மோடிக்கு எதிராக தற்போதைய சூழலில் இந்தியா கூட்டணியின் அடையாளமாக ராகுல் காந்தியே உள்ளார்.

    தமிழகத்தில் கவர்னர் அவரது வேலையை சரியாக செய்யாமல் உள்ளார். தமிழகத்தில் திராவிட அரசியலை எப்போதுமே வீழ்த்த முடியாது. தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் களம் தி.மு.க. கூட்டணிக்கு சாதகமாகவே உள்ளது.

    இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.

    • கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் தி.மு.க கூட்டணியில் இணைந்துள்ளது
    • தி.மு.க. கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒரு மாநிலங்களவை சீட் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

    தி.மு.க தலைமையிலான கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் கட்சி இணைந்துள்ள நிலையில், தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்தது ஏன் என்பது குறித்து கமல்ஹாசன் வீடியோ ஒன்றை வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார்.

    அந்த வீடியோவில், எதிர்வாத சக்திகளுக்கு சாதகமாக அமைந்து விடக்கூடாது என்பதற்காக கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. தேசத்திற்காக நாம் எல்லாம் ஒரே மேடையில் அமர வேண்டும். தமிழ்நாடு, தேசத்தின் நலனை காக்க எடுத்த முடிவு இது" என்று கமல் கூறியுள்ளார்.

    கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் தி.மு.க கூட்டணியில் இணைந்துள்ளது. தி.மு.க. கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மக்களவை தொகுதி எதுவும் ஒதுக்கப்படவில்லை. எனினும், ஒரு மாநிலங்களவை சீட் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • வேட்பாளராக நின்று மக்களிடம் பேச முடியாத அவர், பிரசாரத்துக்கு வந்து மட்டும் என்ன பயன்?
    • கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்து இருந்தாலும், மீண்டும் வந்து மக்களை சந்தித்து இருக்கலாம்.

    கோவை:

    பாராளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தி.மு.க. கூட்டணியில் இணைந்த மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு பாராளுமன்ற தேர்தலில் எந்த தொகுதியும் ஒதுக்கப்படவில்லை. மாநிலங்களவையில் மட்டும் ஒரு இடம் கொடுக்கப்பட்டு உள்ளது.

    இந்தநிலையில் கடந்த சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசனை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்ற பா.ஜனதா தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

    கமல்ஹாசன் ஏற்கனவே சட்டமன்ற தேர்தலில் கோவையில் போட்டியிட்டபோது, பொதுமக்கள் அணுக முடியாத அளவுக்குதான் இருந்தார். அவருக்கு சரியான பதிலை கோவை தெற்கு தொகுதி மக்கள் அளித்தனர். இப்போது மீண்டும் போட்டியிடும் மனநிலையில் இருந்து மாறியுள்ளார். கோவையில் மூக்கு உடைபட்டாலும் நான் வருவேன் என்று சொல்லிக்கொண்டு இருந்தார். நாங்களும் ஆவலுடன் காத்திருந்தோம். அவர் போட்டியிடாதது எங்களுக்கு ஏமாற்றம்தான்.

    தமிழ்நாட்டில் ஒரு மாற்றத்தை கொண்டு வருவேன் என்று சொல்லி வந்தார். ஆட்சி அமைக்க போகிறேன் என்று சொல்லி வந்த கமல்ஹாசன், தனது அரசியல் பயணத்தில் எந்த கட்சியை விமர்சித்தாரோ, அந்த கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளார்.

    வேட்பாளராக நின்று மக்களிடம் பேச முடியாத அவர், பிரசாரத்துக்கு வந்து மட்டும் என்ன பயன்? அரசியல் ஆசைக்காக அந்த பதவியை எடுத்துள்ளார்.

    அவர் நட்சத்திர பேச்சாளர். அந்த நட்சத்திர பேச்சாளருக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி விலை அவ்வளவுதான். கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்து இருந்தாலும், மீண்டும் வந்து மக்களை சந்தித்து இருக்கலாம். இப்போது அவரது அரசியல் சாயம் வெளுத்துவிட்டது.

    இவ்வாறு வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. கூறினார்.

    • நம்முடைய வாழ்வில் பெண்களின் பங்களிப்பும் தியாகமும் அளவீடற்றவை.
    • எதிலும் சளைக்காத பெண்ணினத்தை எல்லா விஷயங்களிலும் இணைத்துக்கொண்டு அனைத்திலும் சம உரிமை கிடைக்கச் செய்வோம்.

    சென்னை :

    நடிகரும், மக்கள் நீதி மய்யத் தலைவருமான கமல்ஹாசன் இன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    நம்முடைய வாழ்வில் பெண்களின் பங்களிப்பும் தியாகமும் அளவீடற்றவை. அவர்களின் கண்ணியத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வேன் என ஒவ்வொரு ஆணும் உறுதிமொழி எடுத்துக்கொள்ளவேண்டும்.

    எதிலும் சளைக்காத பெண்ணினத்தை எல்லா விஷயங்களிலும் இணைத்துக்கொண்டு அனைத்திலும் சம உரிமை கிடைக்கச் செய்வோம்.

    சாதிக்கத் துடிக்கும் பெண்கள் அனைவரையும் சர்வதேச மகளிர் தினத்தில் வாழ்த்தி மகிழ்கிறேன் என கூறியுள்ளார்.

    • தோழமை கட்சிகளின் பிடிவாதம் தி.மு.க. தலைவர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.
    • இந்த வார இறுதியில் இருந்து மீண்டும் தி.மு.க.வுடன் தோழமை கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளன.

    சென்னை:

    தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, முஸ்லீம் லீக், கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

    இதில் முஸ்லிம் லீக், கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி ஆகிய 2 கட்சிகளுக்கும் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு விட்டது. முஸ்லிம் லீக் கட்சி ராமநாதபுரம் தொகுதியிலும், கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி நாமக்கல் தொகுதியிலும் போட்டியிடுகின்றன.

    இந்த நிலையில் தி.மு.க.வுடன் நடத்திய 2 கட்ட பேச்சுவார்த்தையில் இதுவரை காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சிகள் உடன்பாடுக்கு வரவில்லை. இந்த கட்சிகள் கடந்த தேர்தலை விட இந்த தடவை கூடுதல் தொகுதிகள் கேட்கின்றன.

    காங்கிரஸ் கட்சி 12 இடங்கள் கேட்கிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சி 4 இடங்கள் கேட்கிறது. இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சிகள் தலா 3 இடங்கள் கேட்கின்றன.

    ம.தி.மு.க. 2 இடம் வேண்டும் என்கிறது. இந்த கூட்டணிக்கு புதிதாக வந்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் 2 இடம் வேண்டும் என்கிறது. இதனால் இழுபறி நீடித்து கொண்டே இருக்கிறது.

    இந்த நிலையில் தோழமை கட்சிகளின் பிடிவாதம் தி.மு.க. தலைவர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து தி.மு.க. தரப்பில் புதிய வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. வருகிற 9-ந்தேதிக்குள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளை நிறைவு செய்யும் வகையில் ஒத்துழைக்க கேட்டு கொண்டு உள்ளது.

    அதன் பேரில் இந்த வார இறுதியில் இருந்து மீண்டும் தி.மு.க.வுடன் தோழமை கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளன. அதில் சுமூக தீர்வு எட்டப்படும் என்று தெரிகிறது.

    ×