தமிழ்நாடு

தங்கு தடையின்றி சீரான மின் விநியோகம் செய்யப்படும்- தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா

Published On 2024-05-06 13:39 GMT   |   Update On 2024-05-06 13:39 GMT
  • பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி மின்சாரம் வழங்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது
  • தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக 20,000 மெகா வாட் மின் தேவை உள்ளது.

குடிநீர் விநியோகம், தடையின்றி மின்சாரம் வழங்குவது குறித்து சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, திண்டுக்கல், ஈரோடு, மதுரை உள்ளிட்ட 19 மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆலோசனை நடத்தினார்.

பின்பு மின்னகத்தை ஆய்வு செய்த தலைமை செயலாளர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "கோடை காலத்தில் அதிக மின் தேவை இருப்பதால் சீரான மின்சாரம் வழங்க மின்சார வாரியம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது. பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி மின்சாரம் வழங்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சென்னையில் நாள் ஒன்றுக்கு 4000 மெகா வாட் மின் தேவை உள்ளது. தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக 20,000 மெகா வாட் மின் தேவை உள்ளது. இதை கருத்தில் கொண்டு தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் உடனடியாக சரி செய்ய சென்னையில் 60 பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது

கோடையில் அதிக மின் தேவை ஏற்பட்டால் அதை சமாளிக்க தமிழக மின்சார வாரியம் தயாராக உள்ளது. மின் தடை ஏற்பட்டால் பொதுமக்கள் உடனடியாக மின்னகத்திற்கு அணுகி சீரான மின்சாரம் பெறலாம்" என்று அவர் தெரிவித்தார்.

விழுப்புரம், தேனி, நெல்லை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்களுடன் நாளை, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆலோசனை நடத்த உள்ளார்.

Tags:    

Similar News