search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கட்சி தலைவர்கள்"

    புத்தாண்டு மலருகின்ற இந்த இனிய நாளில், கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். #newyear2019 #partyleaders

    சென்னை:

    புத்தாண்டையொட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன்:-

    உலக ஜனத்தொகையில் அதிகப்படியான இளைஞர்களை கொண்ட நமது நாட்டில், இளைஞர்களின் எதிர்கால வாழ்வை வள மாக்கி உலகை வெல்லும் வல்லமை படைத்தவர்களாக ஒவ்வொரு இந்திய இளைஞனும் உருவாகும் காலத்திற்கான துவக்கம் 2019. இந்த நல்ல நோக்கத்தை நிறைவேற்றும் விதமாக இந்திய மக்கள் ஒவ்வொருவரும் நல்லமுடி வினை எடுத்து, நமது பிரதமர் நரேந்திர மோடிக்கு பக்கபலமாக துணைநிற்க வேண்டும் என்ற எனது அன்பான வேண்டுகோளை வைக்கிறேன்.

    தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்:-

    இந்திய நாடு மதச்சார்பற்ற நாடு. ஜாதி, மத, மொழி வேற்றுமைகளை மறந்து நாம் அனைவரும் இந்தியத் தாயின் புதல்வர்களாக பல்வேற்றுமைகளிலும் ஒற்றுமை உள்ளவர்களாக வாழ்ந்து வரும் நிலை ஏற்பட வேண்டும். வெறுப்பு அரசியல் அகன்றிட வேண்டும். ஆட்சிகள் ஊழல் அற்றதாக, ஏழை-எளிய, ஒடுக்கப்பட்ட மக்களின் நம்பிக்கையை பெற்றதாக இருந்திட வேண்டும்.

    இப்புத்தாண்டில் மத்தியிலும், மாநிலத்திலும் மக்கள் விரும்பும் நல்லாட்சி மலர்ந்திட வேண்டும். மாற்றங்கள் நிகழ்த்தப்பட மக்கள் இந்நாளில் சபதம் ஏற்க வேண்டும்.

    தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன்:-


    ஊழல் இல்லாத ஆட்சி நடத்தி காட்டிய சாதனை நாயகன், மெய் வருத்தம் பாராமல், கண் துஞ்சாமல், ஓய்வின்றி நாட்டு மக்களுக்காக உழைத்த நம் பாரதப் பிரதமர் மோடியின் ஆட்சி மீண்டும் அமைய இப்புத்தாண்டில் நாம் அனைவரும் சபதமேற்போம்.

    2019-ம் ஆண்டு, மக்களின் எதிர்பார்ப்புகளை நிறை வேற்ற வேண்டும். ஏழை, எளிய மக்களின் துன்பங்கள் நீங்கி, மகிழ்ச்சியும், ஏற்றமிகு வாழ்வும், வாழ்வில் நம்பிக் கையும், வளர்ச்சியும், எழுச்சியும் ஏற்பட வேண்டு மென எனது புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

    இந்த புத்தாண்டாவது சாதி, மதம், இனம், மொழி வேறுபாடு இன்றி, சமதர்ம சமுதாயம் அமைந்திடவும், மனித நேயம் மலர்ந்திட வேண்டும்.

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:-

    2019-ம் ஆண்டை அரசியல் விழிப்புணர்வு ஆண்டாக பாட்டாளி மக்கள் கட்சியுடன் இணைந்து மக்களும் கடைபிடிக்க வேண்டும். அல்லவை அகன்று நல்லவை நிறைந்த ஆண்டாக 2019-ம் ஆண்டு அமைய வேண்டும். தமிழ் நாடு இதுவரை சந்தித்த ஏமாற்றங்கள் அனைத்தும் பழங்கதையாகி மாற்றமும், முன்னேற்றமும் ஏற்பட வேண்டும். அதன் பயனாக தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் வளர்ச்சியும், மலர்ச்சியும் மட்டுமே தொடர்கதையாக வேண்டும். அதற்காக இப்போதிலிருந்தே உழைக்க ஆங்கிலப் புத்தாண்டு நாளில் தமிழக மக்கள் அனைவரும் சபதம் ஏற்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் தினகரன்:-

    மீண்டும் அம்மாவின் உண்மையான நல்லாட் சியை தமிழகத்தில் இப்புத் தாண்டில் படைத்திட நம் இதயங்களும், கரங்களும் ஒன்றிணையட்டும்.

    மலர்ந்திடும் இப்புத்தாண்டில் மதநல்லிணக்கமும், சகோதர நேசமும் மேலோங்கிடும் மகிழ்ச்சியின் ஆண்டாக, செழிப்பின் ஆண்டாக, சாதனைகளை நாம் செதுக்கிடும் ஆண்டாக அமைந்திடட்டும் என வாழ்த்தி மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் எனது இதயம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகளை உரித் தாக்குகிறேன்.

    இயேசு கிறிஸ்துவின் பிறப்பை மையமாக ஆக்கி, அதற்கு முன்பும்பின்பும் இரண்டாகப் பகுக்கப்பட்டு, கிறிஸ்துவுக்குப் பின் தற்போது இரண்டு ஆயிரம் ஆண்டுகள் கடந்து, இந்த நாளில் 2019-ல், உலகம் அடி எடுத்து வைக்கின்றது.

    தமிழகம், புதுவை உள்ளிட்ட 40 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் தி.மு.க. தலைமையிலான கூட்டணி வெற்றிபெற வாக்காளப் பெருமக்கள் இந்த நாளில் உறுதி ஏற்க வேண்டுகின்றேன்.

    அதன் தொடர் விளைவாக, தமிழ்நாட்டில் நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலிலும் தி.மு.க. தலைமையிலான அணி வெற்றி பெற்று, ஆட்சி அமைக்க தமிழக வாக்காளப் பெருமக்கள் கடமை ஆற்ற வேண்டும். ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கின்றேன்.

    இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன்:-

    மதச்சார்பற்ற, ஜனநாயக, இடதுசாரி சக்தி ஒன்றுபட்டு விரிவான பரந்துப்பட்ட, மக்கள் மேடை அமைப்பதும், மத்திய ஆட்சி அதிகாரத்தில் இருந்து வகுப்புவாத சக்திகளையும், நிதிமூலதன சக்திகளையும் அகற்றுவதும் 2019-ம் ஆண்டு முன்நிறுத்தும் கடமையாகும்.

    காலம் முன்னிறுத்தும் கடமையினை நிறைவேற்ற புத்தாண்டில் உறுதி ஏற்போம். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்:-


    ஆங்கில புத்தாண்டு கொண்டாடும் அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். கஜா புயலால் கடும் துயரத்தை சந்திக்க நேர்ந்தது. தூத்துக்குடி பயங்கரம் நிகழ்ந்தது. ஆற்றுநீர் பிரச்சினைகள் நம் அமைதியை சீர்குலைத்தது. இவ்வாறு பல இன்னல்களை சுமந்த ஆண்டாக 2018 கடந்து இருகிறது.

    புதிய ஆண்டு 2019 இயற்கை பேரிடர் இல்லாத ஆண்டாக, இன்னல்கள் நம்மை சூழாத ஆண்டாக, ஜனநாயகம் தழைக்கும் ஆண்டாக மலர வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி விரும்புகிறது.

    தமிழகத்திலும் அகில இந்திய அளவிலும் ஜனநாயக சக்திகள் ஓரணியில் திரண்டு ஆட்சி அதிகாரத்தை வெல்லும் ஆண்டாக அமைய வேண்டும், அதற்கு ஏதுவாக புத்தாண்டு அமைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

    புத்தாண்டை மகிழ்வோடு வரவேற்கும் தமிழ் மக்களாகிய நாமெல்லாம் தமிழ்நாட்டில் இனி ஒரு போதும் லஞ்ச லாவன்யத்துக்கு இடம் கொடுக்க மாட்டோம், நல்லாட்சி அமைய வேண்டும் என்பதற்காக மக்களுக்கு நம்பிக்கை கொடுக்கக் கூடிய நல்லோர்களை தேர்ந்தெடுப்போம், வளமான தமிழகத்தையும் வலிமையான பாரதத்தையும் படைப்போம் என்று உறுதி ஏற்போம்.

    பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன்:-

    ஆட்சியாளர்களின் பிடியில் சிக்கியுள்ள அதிகாரிகள், விவசாயிகள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள், பகுதிநேர ஊழியர்கள், அனைவருக்கும் வரும் புத்தாண்டில் விடிவு காலம் பிறந்திட வேண்டும். மத்தியில் உள்ள சர்வாதிகார ஆட்சியும், மாநிலத்தில் உள்ள செயல்படாத ஆட்சியும் முழுமையாக அகன்றிட வரும் புத்தாண்டு வழிவிடட்டும்.

    சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்:-

    இந்திய இறையாண்மைக்கும், சகிப்புத்தன்மைக்கும் சவால்விட்டு ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்கி கொண்டிருக்கும் மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசின் அதிகாரத்தை தகர்க்கும் விதமாகவும், தேசத்தின் வளர்ச்சிக்கு வித்திடும் ஆட்சி மாற்றத்தை எதிர்பார்த்தும் 2019-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த நேரத்தில் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

    புதிய நீதிக்கட்சித் தலை வர் ஏ.சி.சண்முகம்:-

    ஒவ்வொருவரும் மற்றவர்களுக்கு உதவிக்கரம் நீட்டத் தொடங்கிவிட்டால் இல்லாமை, இயலாமை போன்ற தீமைகளை நம் தேசத்தைவிட்டே விரட்டி விடலாம். ஒவ்வொரு குடும்பமும் வளமானால் ஒட்டுமொத்த தேசமும் வளமாகும். இந்த நாடும் யாராலும் அசைக்க முடியாத வல்லரசாகும். நம்நாட்டை உயர்த்த நாட்டுமக்கள் அனை வரும் கரங்கள் கோர்ப்போம். இந்த இனிய புத்தாண்டு தினத்தில் நம் நாட்டு மக்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

    சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன்:-

    இந்த புத்தாண்டில் சாதி, சமய, மொழி வேறுபாடுகளை மறந்து, நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற சகோதர எண்ணத்துடன் செயல்பட வேண்டும்.

    இந்த புத்தாண்டு மக்களுக்கு நன்மைகளையும், நம்பிக்கைகளையுமே வழங்கும் ஆண்டாக அமைய வேண்டும். ஊழலயற்ற, பொதுநலன் காக்கும் அரசு அமைய வேண்டும்.

    தமிழக முன்னேற்ற காங்கிரஸ் தலைவர் அருள்தாஸ்:-

    2019-ம் ஆண்டு தமிழக மக்கள் எல்லோருக்கும் மகிழ்ச்சிதரும் ஆண்டாகவும், பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடையக்கூடிய ஆண்டாக அமைந்திடவும், ஜாதி, மதம் கடந்து தமிழக மக்கள் அனைவரும் தமிழன் என்ற உணர்வோடும், அன்பு, அமைதி, சகோதரத்துவத் துடன் வாழ்வில் எல்லா வளங்களும் பெற்று வாழ் வாங்கு வாழ்ந்திட வாழ்த்துகிறேன்.

    மேலும் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ள தலைவர்கள் விவரம் வருமாறு:-

    பா.ம.க. இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, இந்திய ஜனநாயக கட்சித் தலைவர் பாரிவேந்தர், லட்சிய தி.மு.க. தலைவர் டி.ராஜேந்தர், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன், கோகுல மக்கள் கட்சி தலைவர் எம்.வி.சேகர், மக்கள் தேசிய கட்சித் தலைவர், சேம.நாராயணன், தொழில் அதிபர் வி.ஜி.சந்தோ‌ஷம் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். #newyear2019 #partyleaders

    தூத்துக்குடி போராட்டம் குறித்து ரஜினிகாந்த் கூறியது பற்றி அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
    சென்னை:

    தூத்துக்குடி போராட்டம் குறித்து ரஜினிகாந்த் கூறியது பற்றி அரசியல் கட்சி தலைவர்கள் தெரிவித்த கருத்துக்கள் விவரம் வருமாறு:-

    வைகைச்செல்வன் (அ.தி.மு.க.):-

    போராட்டத்தினுடைய வடிவம் சமீப காலமாக வன்முறையை நோக்கி நகர்ந்துகொண்டே இருக்கிறது. ஜல்லிக்கட்டு போராட்டம் வேறு திசையை நோக்கி சென்றது. காவிரி போராட்டமும் வேறு விதமாக நகர்ந்தது.

    இதேபோலத்தான் ஸ்டெர்லைட் போராட்டமும். போராட்டம் வேறு திசை நோக்கி சென்றதால்தான் இதுபோன்ற சம்பவங்கள் நடந்திருக்கிறது என்பதை ரஜினிகாந்த் தெளிவுபடுத்தியிருக்கிறார்.

    டி.கே.எஸ்.இளங்கோவன் (தி.மு.க.):-

    போலீஸ் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டவர்கள் யார்? என்ற கேள்வியைத்தான் நாங்கள் முன்வைக்கிறோம். அப்பாவி மக்களை கொன்றது ஏன்? இறந்துபோன 13 பேரில் சமூக விரோதிகள் யார்? ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களில் சமூக விரோதிகள் யார்? சமூக விரோதிகளை விட்டுவிட்டு போலீசார் அப்பாவி மக்களை சுட்டுக் கொன்றது ஏன்? என்பதற்கு ரஜினிகாந்த் பதில் கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

    திருநாவுக்கரசர் (காங்கிரஸ்):-

    சமூக விரோதிகள் என்று போராட்டக்காரர்களை ரஜினிகாந்த் கூறுவது சரியல்ல. தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், நான் மற்றும் மற்ற தலைவர்கள் எல்லோரும் கலவரம் நடந்த மறுநாள் அங்கு சென்று பார்த்தோம். அங்கு சமூகவிரோதிகளையும், பயங்கரவாதிகளையும் நாங்கள் பார்க்கவில்லை. ரஜினிகாந்துக்கு வந்த தகவல்படி அவர் கூறியிருக்கலாம். ஆனால் அதில் முழுவதும் உண்மை இல்லை.

    டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் (பா.ஜ.க.):-

    இந்த போராட்டம் பயங்கரமாக மாறியது பயங்கரவாதிகளால் தான். பஸ்களுக்கு தீ வைப்பது, கல் எறிவது போன்றவை பொதுமக்களின் எண்ணம் கிடையாது. ஆகவே போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியிருக்கிறார்கள். போராட்டம் எந்த திசையை நோக்கி திரும்பியது என்று பார்த்தாலே அங்கு சமூக விரோதிகள் ஊடுருவியிருக்கிறார்கள் என்று தெரிகிறது. எனவே ரஜினிகாந்த் கூறிய கருத்தை தான் நாங்களும் சொல்லிக்கொண்டு இருந்தோம்.

    பீட்டர் அல்போன்ஸ் (காங்கிரஸ்):-

    தூத்துக்குடி விவகாரத்தில் ரஜினிகாந்தின் பிரவேசமும், அவருடைய கருத்துகளும் மர்மமாக இருக்கின்றன. எந்த கருத்துகளை பரப்புவதற்கு அவர் தூத்துக்குடிக்கு அனுப்பப்பட்டார்? என்ற கேள்வி இயற்கையாகவே எழுகிறது. 100 நாட்கள் நடந்த போராட்டத்தில் ஒரு நாள் கூட அங்கு சென்று போராட்டக்காரர்களை சந்தித்து, அதன் பின்னணியில் உள்ள நியாயத்தை புரிந்துகொள்ள ரஜினிகாந்த் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மக்கள் புரட்சிக்காக போராடுபவர்களை கொச்சைப்படுத்தியிருக்கிறார்.

    ஜி.கே.வாசன் (த.மா.கா.):-

    மக்கள் வாழ்வாதாரங்களுக்கு பாதகமாக இருக்கிற திட்டங்களை அரசு அவர்கள் மீது திணிக்க நினைத்தால் அநீதி. அந்த அநீதிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றால் போராட்டம் அவசியம். போராடுபவர்கள் வன் முறைக்கு காரணமானவர்கள் கிடையாது. அந்த போராட்டத்தில் வன்முறை ஏற்படுகிறது என்றால், யார் காரணம்? ஏன் நடக்கிறது? எப்படி நடக்கிறது? என்பதற்கு அரசு தான் பொறுப்பு. அப்பாவி மக்கள் அல்ல.

    தொல்.திருமாவளவன் (விடுதலை சிறுத்தைகள்):-

    பொதுமக்களின் போராட்டத்தை ரஜினிகாந்த் வலதுசாரி பார்வையில் இருந்து பார்த்திருக்கிறார். அவர் ஆட்சியாளர்களை பாதுகாக்கவேண்டும். போலீசாரை பாதுகாக்கவேண்டும். அதிகார வர்க்கத்தினர் எடுத்த முடிவு சரிதான் என்ற நிலைபாட்டில் முன்கூட்டியே அவர் எடுத்த முடிவின்படி இந்த கருத்தை தெரிவித்திருக்கிறார். மக்களோடு நின்று போராடியவர்களை சமூகவிரோதிகள் என்று கூறுவது வேதனை அளிக்கிறது.

    ரா.முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்டு):-

    போராட்டம் நடத்தவேண்டிய நிர்பந்தம் ஏன் ஏற்படுகிறது? என்பதை ரஜினிகாந்த் முதலில் பார்க்கவேண்டும். வேண்டும் என்றே யாரும் போராடவில்லை. மக்கள் நடத்திய போராட்டத்தை திசை திருப்புகிற வகையில் தவறான முறையில் போலீசாரை வழிநடத்திய அரசை காப்பாற்றவேண்டும் என்ற நோக்கத்தோடு ரஜினிகாந்த் கூறியிருக்கிறார். ரஜினிகாந்தின் கருத்து ஏற்புடைய கருத்து இல்லை.

    கே.பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு):-

    தூத்துக்குடியில் மக்கள் கிளர்ந்தெழுந்து நடத்திய நியாயமான போராட்டத்தை சமூக விரோதிகளின் போராட்டம் என்று ரஜினிகாந்த் அடையாளப்படுத்துவது கண்டனத்துக்குரியது. போலீசார் துப்பாக்கிச்சூட்டை கண்டிக்காமல் அதை நியாயப்படுத்துகிறவராக ரஜினிகாந்த் மாறி இருக்கிறார். போராடினால் தமிழகம் சுடுகாடாகி விடும் என்று அவர் சொல்லி இருப்பது, போராடுகிற மக்களை கொச்சைப்படுத்தி இருக்கிறார். இந்த பேச்சுக்கு ரஜினிகாந்த் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.

    கி.வீரமணி (திராவிடர் கழக தலைவர்):-

    போராட்டம் ஏன் உருவாகுகிறது என்ற அடிப்படை கூட அறியாதவராக இருப்பது, ரஜினிகாந்த் அரசியலில் தான் உடனடியாக பதவி மாடத்தில் ஏறி அமர வேண்டும் என்ற ஆசையை மட்டும் தேக்கி வைத்திருக்கிறார். தூத்துக்குடி போராட்டகாரர்கள் விஷ கிருமிகள் தான் காரணம் என்றோ, சமூக விரோதிகள் தான் என்றோ பேசுவது அறியாமையின் உச்சம். மவுனமாக இருக்கும் போது மிகப்பெரிய அறிவாளியாக தோன்றுகிறார். ஆனால் பேச ஆரம்பிக்கும்போது, அவருடைய உண்மை அடையாளம் வெளிப்படுகிறது. அவர் நிறைய பேசட்டும். மக்கள் புரிந்துகொள்ளட்டும்.

    ஜவாஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சி):-

    மக்கள் விரோத திட்டங்களுக்கு எதிரான போராட்டங்களை கொச்சைப்படுத்தி வரும் பா.ஜ.க.வின் குரலை ரஜினிகாந்த் எதிரொலித்து வருகிறார். பா.ஜ.க. அனுப்பிய தூதராகவே ரஜினிகாந்த் தூத்துக்குடிக்கு சென்றுள்ளார். தன்னெழுச்சியாக நடைபெற்று வரும் போராட்டங்களை கொச்சைப்படுத்தும் பாசிச சக்திகளின் முகவர் ரஜினிகாந்தை தமிழக மக்கள் முழுவதுமாக புறக்கணிக்கவேண்டும்.

    தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. (மனிதநேய ஜனநாயக கட்சி):-

    ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்களை சமூக விரோதிகள் என்று ரஜினிகாந்த் குற்றம் சாட்டி இருப்பதை கண்டிக்கிறேன். ரஜினிகாந்த் அரசியல் பேசுவதை நிறுத்திக்கொள்வது நல்லது. தமிழர்களின் அரசியல் விழிப்புணர்வை கொச்சைப்படுத்திய ரஜினிகாந்த் தமிழக மக்களிடம் நிபந்தனையற்ற முறையில் மன்னிப்பு கேட்கவேண்டும்.

    இவ்வாறு அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    காவிரி பிரச்சினை தொடர்பான கூட்டத்தில் பங்கேற்க வைகோ, திருமாவளவன் உள்பட கட்சி தலைவர்களுக்கு மக்கள் நீதி மய்யம் அழைப்பு விடுத்துள்ளது.#vaiko #thirumavalavan #KamalHaasan
    சென்னை:

    மக்கள் நீதி மய்யம் சார்பில் அதன் தலைவர் கமல்ஹாசன் ‘காவிரிக்கான தமிழகத்தின் குரல்’ என்ற தலைப்பில் வருகிற 19-ந்தேதி சென்னையில் ஒரு கூட்டம் நடத்த ஏற்பாடு செய்துள்ளார்.

    இதில் அனைத்து கட்சி தலைவர்கள், விவசாய சங்கங்கள் மற்றும் தமிழ் அமைப்புகள் கலந்து கொள்ள இருக்கின்றனர். இதற்காக கமல்ஹாசன் நேற்று முன்தினம் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, ‘காவிரிக்கான தமிழகத்தின் குரல்’ என்ற தலைப்பில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்தார்.



    அதன் தொடர்ச்சியாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, திரைப்பட இயக்குனர் பாரதிராஜா, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், அனைத்திந்திய லட்சிய திராவிட முன்னேற்றக்கழக நிறுவனர் விஜய டி.ராஜேந்தர் ஆகியோர் அந்த கூட்டத்தில் பங்கேற்க கமல்ஹாசன் நேற்று அழைப்பு விடுத்துள்ளார்.

    மேற்கண்ட தகவல் மக்கள் நீதி மய்யத்தின் ‘டுவிட்டர்’ பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவிரி பிரச்சினை தொடர்பான கூட்டத்தில் பங்கேற்க வைகோ, திருமாவளவன் உள்பட கட்சி தலைவர்களுக்கு மக்கள் நீதி மய்யம் அழைப்பு விடுத்துள்ளது.#vaiko #thirumavalavan #KamalHaasan
    ×