இந்தியா

96,317 கோடி ரூபாய் ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் பங்கேற்க மூன்று நிறுவனங்கள் விண்ணப்பம்

Published On 2024-05-06 15:14 GMT   |   Update On 2024-05-06 15:14 GMT
  • மே 10-ந்தேதி விண்ணப்பித்துள்ள நிறுவனங்கள் விவரம் வெளியிடப்படும்.
  • விண்ணப்பங்களை திரும்பப் பெற மே 17-ந்தேதி கடைசி நாளாகும்.

96,317 கோடி ரூபாய் ஸ்பெக்ட்ரம் ஏலம் ஜூன் மாதம் 6-ந்தேதியில் இருந்து நடைபெற இருக்கிறது. இந்த ஏலத்தில் ரிலையன்ஸின் ஜியோ, பாரதி ஏர்டெல், வோடாஃபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் பங்கேற்க இருக்கின்றன. இந்த மூன்று நிறுவனங்களும் விண்ணப்பத்துள்ளன.

கடந்த 2022-ல் யாரும் எதிர்பார்க்காத வகையில் அதானி குரூப் நிறுவனம் விண்ணப்பத்திருந்தது. தற்போது புதிதாக எந்த நிறுவனமும் ஏலத்திற்காக விண்ணப்பிக்கவில்லை.

800 மெகா ஹெர்ட்ஸ், 900 மெகா ஹெர்ட்ஸ், 1800 மெகா ஹெர்ட்ஸ், 2100 மெகா ஹெரட்ஸ், 2300 மெகா ஹெர்ட்ஸ், 2500 மெகா ஹெர்ட்ஸ், 3300 மெகா ஹெர்ட்ஸ், 26 ஜிகா ஹெர்ட்ஸ் அலைவரிசைகளின் அனைத்தும் ஸ்பெக்டரம் ஏலத்தின் ஒரு பகுதியாகும். மொத்த அலைவரிசைகள் அடிப்படை விலை 96317 கோடி ரூபாய் ஆகும்.

இந்த ஸ்பெக்ட்ரம் 20 வருடத்திற்கு ஒதுக்கப்படும். ஏலம் எடுத்த நிறுவனம் 20 சம வருடாந்திர தவணையில் பணத்தை செலுத்த வேண்டும். குறைந்தபட்சம் 10 வருடம் முடிவடைந்த நிலையில், வரவிருக்கும் ஏலத்திற்காக சரண்டர் செய்யும் வாய்ப்பை தகவல்தொடர்பு துறை வழங்கியுள்ளது.

மே 10-ந்தேதி விண்ணப்பித்துள்ள நிறுவனங்கள் விவரம் வெளியிடப்படும். விண்ணப்பங்களை திரும்பப் பெற மே 17-ந்தேதி கடைசி நாளாகும். மே 20-ந்தேதி ஏலத்தில் கலந்து கொள்ளும் நிறுவனங்களின் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும்.

Tags:    

Similar News