search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மக்கள் நீதி மய்யம்"

    • மக்கள் நலனை குறிக்கோளாய் கொண்டது 2 தத்துவங்கள். செய்ததை சொல்லி கொண்டு வருபவரை நம்பலாம்.
    • செய்யாததை சொல்வதும், செய்வதாய் பொய் சொல்வதுமாய் வருபவரை நம்ப கூடாது.

    திருப்பூர்:

    திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த சுப்பராயனை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    நாட்டை காக்கும் தருணம் என்பதால் பரப்புரைக்கு நான் வந்துள்ளேன். தனக்கான தேவைகளை மட்டும் பூர்த்தி செய்யாமல் உலகளாவிய உடை தேவைகளை பூர்த்தி செய்யும் நகரம் இந்த திருப்பூர். திருப்பூரில் பனியன் தொழில் மந்தமாக உள்ளது. இதற்கு மத்திய அரசின் ஜி.எஸ்.டி., பெட்ரோல் விலை உயர்வு காரணம். இப்போது மந்தமாக உள்ள போதே ரூ.40 ஆயிரம் கோடி வர்த்தகம் என்றால் 10 ஆண்டுகளுக்கு முன் எப்படி இருந்திருக்கும். அதிக வருவாய் ஈட்டித்தரும் திருப்பூரை ஒழுங்காக கவனிக்க முடியவில்லை. இதில் 75 புதிய நகரத்தை பிரதமர் எப்படி உருவாக்குவார்.

    மக்கள் நலனை குறிக்கோளாய் கொண்டது 2 தத்துவங்கள். செய்ததை சொல்லி கொண்டு வருபவரை நம்பலாம். செய்யாததை சொல்வதும், செய்வதாய் பொய் சொல்வதுமாய் வருபவரை நம்ப கூடாது.

    கலைஞர் சொல்வதை செய்பவர். திருப்பூர் மாநகராட்சியாக மாறுவதற்கு கலைஞர் முக்கிய காரணம். நிறைய பாலங்கள் சாலைகள் கொடுத்துள்ளார். மத்திய அரசு உதவியை தடை செய்தால் தொகுதியில் வேலை தடைபடும். ஒரு எம்.பி.க்கு ரூ.5 கோடி கொடுப்பார்கள். இங்கு 6 சட்டமன்ற தொகுதி. 6 தொகுதிக்கு ஒரு கோடி கிடையாது. மக்களுக்கான வளர்ச்சி பணிகளை செய்வதற்கு கூட ஜி.எஸ்.டி. வரி போட்டது தான் ஒன்றிய அரசு.

    ஜி.எஸ்.டி. போடும் போது சினிமா துறையில் இருந்து நான் குரல் கொடுத்தேன்.

    ஜி.எஸ்.டி. நல்ல திட்டம் என்றால் அந்த வரி திட்டத்தை சொல்லி பாரதிய ஜனதாவினர் ஓட்டு கேட்டிருக்கலாம். ஜி.எஸ்.டி., வேண்டாம் என முழங்கியவர்களில் நானும் ஒருவன். ஜி.எஸ்.டி., மற்றும் பணமதிப்பிழப்பு உள்ளிட்ட மத்திய அரசின் இரட்டை தாக்குதலால் கடந்த 10 ஆண்டுகளாக திருப்பூர் பனியன் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.

    பஞ்சு விலை உயர்வு, நூல் தட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களால் உலக அளவில் முதல் இடத்தை நெருங்கி கொண்டிருந்த இந்தியாவை பின்னால் தள்ளியது பங்களாதேஷ். அங்கு வரி குறைவு. பங்களாதேசில் இருந்து நூல் துணியை இறக்குமதி செய்கின்றனர். இந்த உதாரணம் போதும். ஒன்றிய அரசு என சொன்னாலும் மக்களுடன் ஒன்றாத அரசாக மத்திய பா.ஜ.க. அரசு மாறி விட்டது. எனக்கென்று எதிர்பார்ப்பு இல்லாமல் நமக்காக வந்திருக்கிறேன். நாட்டைக்காக்கவே இந்தியா கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பிரசாரத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி த்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், செல்வராஜ் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • மதுரை ஆனையூரில் மாலை 6 மணிக்கும், இரவு 7 மணிக்கு புதூர் பேருந்து நிலையத்திலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறார்.
    • தேர்தல் பிரசாரம் நல்லபடியாக போய்க் கொண்டிருக்கிறது.

    மதுரை:

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

    அந்த வகையில் அவர் இன்று மதுரை ஆனையூரில் மாலை 6 மணிக்கும், இரவு 7 மணிக்கு புதூர் பேருந்து நிலையத்திலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறார். இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் மதியம் அவர் மதுரைக்கு வருகை தந்தார்.

    விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சிறப்பாக பணியாற்றி வரும் காம்ரேட் வெங்கடேசனுக்காக நான் வாக்கு சேகரிக்க வந்திருக்கிறேன். நல்லவர்களுக்கு மீண்டும் வாக்கு கேட்டு வருவது எனக்கு பெருமையாக இருக்கிறது. இந்த தேர்தல் பிரசாரம் நல்லபடியாக போய்க் கொண்டிருக்கிறது என்றார்.

    • அமெரிக்கா மாதிரி வெள்ளை, கருப்பு என்கிற பிரிவு இங்கு கிடையாது.
    • தமிழ்நாடு மீனவர்களை காக்க தவறிய அரசு இந்த ஒன்றிய அரசு.

    சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் விசிக தலைவர் திருமாவளவனுக்கு ஆதரவாக ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

    அப்போது, மேலவீதி பகுதியில் கமல்ஹாசன் பேசியதாவது:-

    சாதியம் தான் என் எதிரி. என் வாழ்க்கையில் சாதிக்கு இடமில்லை. என் சினிமாக்களிலும் அப்படிதான். பிறகு, சினிமாவிற்கு ஏன் ஜாதி பெயர் வைக்கிறீர்கள் என்று கேட்கலாம். குடியின் கொடுமையைப் பற்றி நான் ஒரு குறும்படம் எடுக்க நேர்ந்தால், அதன் மையப் பாத்திரம் யாராக இருப்பான் ? ஒரு குடிகாரனாகத் தான் இருப்பான். அவன் இல்லாமல் அந்த கருத்தை சொல்ல முடியாது.

    அதுபோல், சாதி வெறியனை மையப்படுத்தி தான், படத்தின் நிறைவு கருத்தை சொல்ல முடியும். அவன் பாழான கதையையும், பண்பட்ட கதையையும் கூறுவதால் அது சாதியை உயர்த்திப்பிடிப்பது ஆகாது. விமர்சிப்பதாகும். இது பதில் அல்ல. விளக்கம்.

    ஆனால், சாதியே இல்லை என்கிறீர்கள். சாதி வாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்கிறீர்களே என்று கேட்கலாம். இன்னும் எத்தனை பேர் அடிகோட்டு விளிம்பில் இருக்கிறார்கள் என்று எங்களுக்கு தெரிய வேண்டும்.

    ஏனென்றால், இங்கு அமெரிக்கா மாதிரி வெள்ளை, கருப்பு என்கிற பிரிவு கிடையாது. மாநிறத்தில் இருப்பவனும் விளங்கு போட்டு இருப்பான். கருப்பாக இருப்பவனும் விளங்கு போட்டு இருப்பான். அவனை எல்லாம் விடுவிக்க வேண்டும்.

    தமிழ்நாடு மீனவர்களை காக்க தவறிய அரசு இந்த ஒன்றிய அரசு. 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தும் எப்போதும் இல்லாத அளவில் நம் மீனவர்கள் கைதாவதும், சிறையில் அடைக்கப்படுவதும் இன்று அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

    ஒன்றிய அரசு என்று சொன்னால் இவர்களுக்கு கோபம் வருகிறது. இவர்கள் ஒன்றிய அரசு கிடையாது. மக்களோடு ஒன்றாத அரசு.

    இதனால் தான் திருமாவளவனோடு தோள் உரசி களம் காண்கிறேன்.

    தமிழ்நாட்டின் குரலாக ஸ்டாலின் திகழ்கிறார்.. இளைஞர்களின் குரலாக தம்பி உதயநிதி திகழ்கிறார்.. குரலற்றவர்களின் குரலாக பெருஞ்சிறுத்தை திருமாவளவன் இருக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழ்நாட்டில் செயல்படுத்தும் திட்டங்களை இந்தியா முழுவதும் செயல்படுத்தினால் உலகம் இந்தியாவை திரும்பி பார்க்கும்.
    • எதிர்த்து குரல் கொடுப்பவர்களை இல்லாமல் செய்வது ஒருவித அரசியல்.

    திருச்சி:

    திருச்சியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின்போது கமல்ஹாசன் பேசியதாவது:-

    நாம் மதிக்கும் மிக முக்கியமான புத்தகம், நம் அரசியல் அமைப்பு சட்டம். அந்த புத்தகம் பாதுகாக்கப்பட்டால் தான் நீங்கள் வணங்கும் மற்ற புத்தகங்கள் பாதுகாக்கப்படும். நான் இங்கு சீட்டுக்காக வரவில்லை. நாட்டுக்காக வந்து இருக்கிறேன்.

    தமிழக மக்களுக்கும், இந்தியாவுக்கும் எனக்குள்ள காதல் சாதாரணமானது அல்ல. அதையும் தாண்டி புனிதமானது. என் காதல் உங்கள் அனைவரின்பால் உண்டு. அதனால் தான் நான் அரசியலுக்கே வந்தேன்.

    தமிழ்நாட்டில் செயல்படுத்தும் திட்டங்களை இந்தியா முழுவதும் செயல்படுத்தினால் உலகம் இந்தியாவை திரும்பி பார்க்கும். இல்லத்தரசிகளுக்கு உதவித்தொகை என்பதை முதன்முதலில் மக்கள் நீதி மய்யத்தில் அறிவித்தோம். அப்போது என்னென்னமோ கிண்டல் செய்தார்கள்.

    ஆனால் அதை உற்றுநோக்கி நடைமுறைப்படுத்திய ஒரு காரணத்துக்காக நான் இங்கு வந்தேன் என்று வைத்து கொள்ளலாம். பெண்களுக்கு பஸ்சில் கட்டணமில்லா பயணம் என்ற திட்டம் ஏன் தமிழ்நாட்டோடு முடியணும்? இந்தியா முழுவதும் ஏன்? வரக்கூடாது. அது தான் நல்ல அரசியல், அதை செய்யுங்கள்.

    எதிர்த்து குரல் கொடுப்பவர்களை இல்லாமல் செய்வது ஒருவித அரசியல். எதிர்த்து குரல் கொடுத்தாலும் என்ன சொல்கிறார்கள் என்று கேட்பது நமது அரசியல். அண்ணன், தம்பிகளை மோதவிட்டு பார்ப்பது ஒரு அரசியல் தந்திரம். அது இன்று நிகழ்ந்து கொண்டு இருக்கிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்கள் மத்திய அரசிடம் இருந்து நெருக்கடியை சந்தித்து வருகின்றன.
    • கொரோனா பாதிப்பு மற்றும் நிபா வைரஸ் பரவியபோது, சுகாதாரத்துறை மந்திரியாக இருந்தவர் கே.கே.சைலஜா.

    கோழிக்கோடு:

    கேரள மாநிலம் வடகரா பாராளுமன்ற தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைமையிலான இடது முன்னணி சார்பில் முன்னாள் மந்திரி கே.கே.சைலஜா போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவு தெரிவித்து மக்கள் நீதி மய்ய தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் காணொலி காட்சி மூலம் மலையாளத்தில் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இதுவரை நடைபெற்ற தேர்தல்களுக்கும், இந்த முறை நடைபெற உள்ள தேர்தலுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது. தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்கள் மத்திய அரசிடம் இருந்து நெருக்கடியை சந்தித்து வருகின்றன. இந்த சமயத்தில் கே.கே.சைலஜா போன்றவர்கள் பாராளுமன்றத்திற்கு சென்று நமது குரலை எதிரொலிப்பது அவசியம்.

    கொரோனா பாதிப்பு மற்றும் நிபா வைரஸ் பரவியபோது, சுகாதாரத்துறை மந்திரியாக இருந்தவர் கே.கே.சைலஜா. மனம் தளராமல் நிவாரண பணிகளை ஒருங்கிணைத்து மக்களை காப்பாற்றினார். தேர்தலில் கே.கே.சைலஜா வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் இடம்பெற்றுள்ளது.
    • மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஈரோட்டில் பிரசாரம் தொடங்கினார்.

    ஈரோடு:

    பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பிரசாரம் செய்யும் அரசியல் கட்சிகள் கொடுத்துள்ள நட்சத்திர பேச்சாளர்கள் பெயர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதில் 29 கட்சிகளைச் சேர்ந்த 640 பேச்சாளர்களுக்கு நட்சத்திர அந்தஸ்துடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    மக்கள் நீதி மய்யம் கட்சியில் கமல்ஹாசன் பெயருடன் 9 பேர் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

    இந்நிலையில், தி.மு.க. தலைமையிலான கூட்டணியின் ஈரோடு பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் கே.இ.பிரகாஷுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்டு, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் ஈரோட்டில் இன்று பிரசாரம் தொடங்கினார்.

    அப்போது அவர் கூறுகையில், ஈரோட்டில் எனது பிரசாரத்தை தொடங்க பெரியார் ஒரு காரணம். ஈரோட்டில் இடைத்தேர்தலின் போது நான் இங்கே வந்தபோது நீங்கள் காட்டிய அன்பும் மற்றொரு காரணம். பாராளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடாததற்கு காரணம் தியாகம் என கூறுகிறார்கள். ஆனால் அது தியாகம் அல்ல, வியூகம். தமிழ்நாடு காக்கும் வியூகம் என தெரிவித்தார்.

    • கமல்ஹாசன் கடந்த 2018-ம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கினார்.
    • மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாற்று அரசியல் களம் கேள்விக் குறியாகவே மாறியுள்ளது.

    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து தேர்தலில் போட்டியிடாமல் புறக் கணித்துள்ளது.

    மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மேல் சபை எம்.பி. பதவி மட்டுமே வழங்கப்பட்டுள்ள நிலையில் கமல்ஹாசனின் முடிவு சரிதானா? என்பது பற்றி பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வருகிறார்கள்.

    தி.மு.க.வை விமர்சித்து கமல்ஹாசன் ரிமோட்டை தூக்கி வீசி டி.வி.யை உடைக்கும் பழைய வீடியோக்களை வெளியிட்டும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

    கமல்ஹாசன் கடந்த 2018-ம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கினார். அதன் பின்னர் ஓராண்டிலேயே நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிட்ட கமல்ஹாசன், 2021-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலையும் தனித்தே சந்தித்தார்.

    இப்படி 2 பெரிய தேர்தல்களை மட்டுமே சந்தித்த நிலையில் நடைபெறும் பாராளுமன்றத் தேர்தலில் கமல்ஹாசன் கூட்டணி அரசியலை முன்னெடுத்துச் சென்றுள்ளார். தேர்தலில் போட்டியிடாமல் விலகிச் சென்று தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ள கமல்ஹாசன் மற்ற கட்சிகளின் சின்னங்களுக்காக வாக்கு சேகரிப்பில் ஈடுபட இருக்கிறார்.


    தேர்தலில் போட்டியிடாத நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சின்னமான 'டார்ச் லைட்' சின்னம் தேர்தலில் களம் காண முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது. தி.மு.க.வில் இடம் பெற்றுள்ள மற்ற கூட்டணி கட்சிகளை போன்று மக்கள் நீதி மய்யம் கட்சியும் ஒன்று அல்லது இரண்டு இடங்களை பெற்று தேர்தலில் போட்டியிட்டு இருக்க வேண்டும் என்பதே பெரும் பாலானவர்களின் கருத்தாக உள்ளது. ஆனால் அது போன்று முடிவெடுக்காமல் கமல்ஹாசன் தேர்தலில் போட்டியிடுவதை புறக்கணித்திருப்பதன் மூலமாக மக்கள் நீதி ம்யயம் கட்சியின் எதிர்காலம் என்ன ஆகும்? என்கிற கேள்வியையும் அரசியல் நோக்கர்கள் முன் வைத்து உள்ளனர்.

    தி.மு.க. கூட்டணியில் இணைந்து பாராளுமன்றத் தேர்தலை சந்தித்துள்ள கமல்ஹாசன் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலையும் கூட்டணியில் இணைந்தே சந்திக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    அதுபோன்று ஒரு நிலை ஏற்பட்டால் தி.மு.க. கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளை போலவே மக்கள் நீதி மய்யம் கட்சியும் மாறிவிடும் என்றே அரசியல் நோக்கர்கள் கருத்துக்களை கூறி வருகிறார்கள். இதனால் மக்கள் நீதி மய்யம் கட்சியால் அது என்ன நோக்கத்துக்காக (மாற்று அரசியல்) தொடங்கப்பட்டதோ? அதனை எட்ட முடியாத சூழலே எதிர்காலத்தில் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் கணிக்கப்பட்டு உள்ளது.

    இதன் மூலம் கமல்ஹாசன் தனது மாற்று அரசியல் கோஷத்தை கைவிட்டு விட்டு கூட்டணி அரசியலை தொடரவே அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகிறது.

    இதனால் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாற்று அரசியல் களம் கேள்விக் குறியாகவே மாறியுள்ளது என்பதே மறுக்க முடியாத உண்மையாகும்.

    • தி.மு.க கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, வரும் 29-ந்தேதி முதல் கமல்ஹாசன் பிரசாரம் செய்ய உள்ளார்
    • தி.மு.க.வை கடுமையாக விமர்சித்துவிட்டு தற்போது, அந்தக் கூட்டணியில் கமல் சேர்ந்தது விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது

    தமிழ்நாட்டில் வரும் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க கூட்டணிக்கு கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி ஆதரவு அளித்துள்ளது. இதனால் மக்கள் நீதி மய்யத்திற்கு திமுக ஒரு மாநிலங்களவை தொகுதி கொடுக்கப்பட உள்ளது. ஆனால், மக்களவை தொகுதி எதுவும் வழங்கப்படவில்லை.

    இந்நிலையில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, வரும் 29-ந்தேதி முதல் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பிரசாரம் செய்ய உள்ளார்.

    அவர் வரும் 29-ந்தேதி முதல் ஏப். 16-ந்தேதி வரை பிரசாரம் செய்ய உள்ளார். ஈரோட்டில் 29-ந்தேதி பிரசாரத்தை கமல்ஹாசன் தொடங்குகிறார்.

    கடந்த சட்டமன்ற தேர்தலின் போது தி.மு.கவை கமல்ஹாசன் கடுமையாக விமர்சித்து பேசினார். கமல்ஹாசன் பிரசார விளம்பர வீடியோவில், தொலைக்காட்சி பெட்டியை தனது கையில் இருந்த ரிமோட்டை வைத்து உடைக்கும் காட்சிகள் இடம் பெற்றிருக்கும். தி.மு.க.வை கடுமையாக விமர்சித்துவிட்டு தற்போது, அந்தக் கூட்டணியில் சேர்ந்ததை எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்தனர்.

    இந்நிலையில், இது தொடர்பாக கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார். அதில்,

    மக்களவைத் தேர்தலில் போட்டியிடாததற்கு நிறைய பேர் வருத்தப்பட்டார்கள்; இந்த முடிவை எப்படி என்ன தைரியத்தில் எடுத்தீர்கள் என்றெல்லாம் ராஜாஜியை கேட்டது போல் என்னையும் கேட்பார்கள் அவர் சொன்ன பதிலை தான் நானும் சொல்லுவேன். நான் காந்தியின் கொள்ளு பேரன். நாம் காந்தியின் கொள்ளு பேரன்கள். எனக்கு சந்தர்ப்பவாதம் என்ற ஒரு வாதமே இல்லை.

    நம் வாதத்தை சந்தர்ப்பத்திற்கேற்ப பேசக்கூடாது. தேர்தலில் போட்டியிடாதது தியாகம் இல்லை..வியூகம். தி.மு.க.வை விமர்சித்து ரிமோட்டை எடுத்து டி.வியை உடைத்துவிட்டு இப்போது கூட்டணியா என கேட்கிறார்கள். நமது டி.வி; நமது ரிமோட். அது இங்குதான் இருக்கும். எப்போது வேண்டுமானாலும் உடைத்துக் கொள்ளலாம். டி.வி.க்கான கரண்ட், ரிமோட்டுக்க்கான பேட்டரியை எடுக்க நினைப்பவர்கள்தான் நமக்கு முக்கியம்

    ஒரு தொகுதி, 2 தொகுதி என இல்லாமல் அனைத்து தொகுதிகளிலும் என்னால் பிரச்சாரம் செய்ய முடியும். மாநில அரசின் உரிமைகளை மத்திய அரசு பறிப்பதால்தான் திமுக கூட்டணியை ஆதரிக்கிறேன். பிரதமர் என்பதற்காக மோடி இங்கு வந்தால் அவருக்கு தலை வணங்குவேனே தவிர தன்மானத்தை விட்டு தலை வணங்க மாட்டேன்.

    என் அரசியல் எதிரி சாதியம்தான். எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் சாதியம் தான் எதிரி. 70 ஆண்டுகளுக்கு முந்தைய சாதியத்தை மீண்டும் தூக்கிப் பிடிக்க பாஜக முயற்சிக்கிறது. எந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் அடிமைப்பட்டு கிடக்கிறார்கள் என்பதை கண்டறிய சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது அவசியம்" என அவர் தெரிவித்தார்.

    • பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க கூட்டணிக்கு கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி ஆதரவு அளித்துள்ளது.
    • கமல்ஹாசன் வரும் 29-ந்தேதி முதல் ஏப். 16-ந்தேதி வரை பிரசாரம் செய்ய உள்ளார்.

    சென்னை:

    தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் தி.மு.க. 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது. கூட்டணி கட்சிகளான காங்கிரஸ்-9, விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகள் தலா 2 இடங்களிலும், ம.தி.மு.க., கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் தலா ஒரு இடத்தில் போட்டியிடுகிறது. இதில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட உள்ளது.

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க கூட்டணிக்கு கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி ஆதரவு அளித்துள்ளது.

    இந்நிலையில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, வரும் 29-ந்தேதி முதல் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பிரசாரம் செய்ய உள்ளார்.

    அவர் வரும் 29-ந்தேதி முதல் ஏப். 16-ந்தேதி வரை பிரசாரம் செய்ய உள்ளார். ஈரோட்டில் 29-ந்தேதி பிரசாரத்தை கமல்ஹாசன் தொடங்குகிறார்.

    • மக்கள் நீதி மய்யம் கட்சியை தனித்துவமாக நடத்துவதாக சொல்லிவிட்டு தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்து விட்டதாக என்னை விமர்சிக்கிறார்கள்.
    • நான் நினைத்திருந்தால் தொகுதி பங்கீடு நடந்தபோது 3 அல்லது 4 சீட்டு கேட்டு நெருக்கடி கொடுத்திருக்க முடியும்.

    தி.மு.க. கூட்டணியில் சேர்ந்து மேல்சபை எம்.பி. பதவி பெற்றிருக்கும் நடிகர் கமல்ஹாசன் அந்த கூ டணியில் சேர்ந்தது பற்றி விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

    தொடக்கத்தில் நற்பணி மன்றம் மூலம் மட்டும் சமூக சேவை செய்தால் போதும் என்று நினைத்தேன். ஆரம் பத்தில் எனக்கும் அரசியல் மீது கொஞ்சம் வெறுப்பு இருந்தது. ஆனால் நல்ல முயற்சிகளை அரசியல் மூலமே செய்ய முடியும் என்பதை உணர்ந்ததால் அரசியலுக்கு வந்தேன்.

    மக்கள் நீதி மய்யம் கட்சியை தனித்துவமாக நடத்துவதாக சொல்லிவிட்டு தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்து விட்டதாக என்னை விமர்சிக்கிறார்கள். அதை பற்றி கவலையில்லை. இதற்கு முன்பு கூட பல்வேறு மாற்று கருத்துக்கள் கொண்டவர்கள் ஓரணியில் இணைந்து இருக்கிறார்கள்.

    தற்போதைய சூழ்நிலை யில் நாட்டில் ஒரு சக்தி மக்களை பிளவுப்படுத்த நினைக்கிறது. அதுவும் மனி தர்கள் மத்தியில் மதத்தின் அடிப்படையில் கடப்பா ரையை வைத்து குத்தி பிளவு ஏற்படுத்துகின்றனர். எனவேதான் அதற்கு எதிராக செயல்பட வேண் டும் என்ற முடிவுடன் நான் தி.மு.க. கூட்டணியில் என்னை இணைத்துக் கொண்டிருக்கிறேன்.

    நான் நினைத்திருந்தால் தொகுதி பங்கீடு நடந்தபோது 3 அல்லது 4 சீட்டு கேட்டு நெருக்கடி கொடுத்திருக்க முடியும். தி.மு.க. கூட்டணி வலுவாக இருக்க வேண்டும் என்ற கொள்கை அடிப்படை யில் நான் அதை செய்ய வில்லை.

     இந்தியா கூட்டணிக்கு தலைமை தாங்க ஒருவர் தேவை. அதற்கு ராகுல்காந்தி பொருத்தமானவர் என்று நான் நினைக்கிறேன்.

    இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.

    • மக்கள் பற்றி யோசித்தே இந்த தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி முடிவெடுத்து உள்ளது.
    • பாராளுமன்றத் தேர்தலே முக்கியம் என்று கருதி தேசத்தின் நலன் கருதி இந்த முடிவை எடுத்துள்ளோம்.

    சென்னை:

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பாராளுமன்றத் தேர்தல் குறித்தும், தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்தது பற்றியும் பேட்டி அளித்து உள்ளார். அவர் கூறியதாவது:

    40 ஆண்டுகளாக எனது நற்பணி மன்றங்கள் மூலம் பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்து வந்துள்ளோம். அந்த பணிகளை அதிகாரத்தின் மூலமாக அரசியலுக்கு வந்து செய்ய நினைத்தோம்.

    அதன் விளைவாகவே மக்கள் நீதி மய்யம் கட்சி உதயமானது. லஞ்ச ஊழலை இல்லாத அரசியலை உருவாக்கவே புதிய கட்சியை தொடங்கி பயணித்து வருகிறோம்.

    முன்பு தி.மு.க.வை கடுமையாக விமர்சித்து டி.வி.யையெல்லாம் உடைத்ததாக என் மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கு பின்னர் பதில் கூறுவேன்.

    அதற்கு பதில் அளிக்க வேண்டிய நேரம் இதுவல்ல. மக்கள் பற்றி யோசித்தே இந்த தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி முடிவெடுத்து உள்ளது. பாரதிய ஜனதா கட்சி பாசிசத்தை நோக்கியே பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது.

    இந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு எச்சரிக்கை மணி அடிக்க வேண்டியது அவசியமாக மாறியுள்ளது. தேச நலனுக்கு எதிரான போராகவே இந்த தேர்தலை பார்க்கிறேன்.

    அதில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் இருப்பதாலேயே இந்தியா கூட்டணியை வலுப்படுத்தும் எண்ணத்தில் தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியுடன் கைகோர்த்துள்ளோம்.

    பாரதிய ஜனதா கட்சியினர் தங்களை மாற்றிக் கொள்வதற்கான எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை.

    அதற்கான அறிகுறிகளும் அவர்களிடம் தென்படவில்லை. தி.மு.க.வுடனான கூட்டணி ஒப்பந்தத்தின்படி மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒரு மேல்சபை எம்.பி. பதவி வழங்கப்பட்டுள்ளது. எனது சொந்த வாழ்க்கையை பற்றி இந்த நேரத்தில் யோசிக்கவில்லை. எனது கட்சியின் முன்னேற்றத்துக்காகவும், சொந்த அரசியல் முன்னேற்றத்துக்காகவும் நான் சுயநலத்தோடு சில முடிவுகளை எடுத்திருக்கலாம்.

    எனது கட்சியில் உள்ள எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களின் எண்ணிக்கையை பார்ப்பது முக்கியம் இல்லை. பாராளுமன்றத் தேர்தலே முக்கியம் என்று கருதி தேசத்தின் நலன் கருதி இந்த முடிவை எடுத்துள்ளோம்.

    தி.மு.க. கூட்டணியில் 3 அல்லது 4 இடங்களை எங்களால் எளிதாக கோரி இருக்க முடியும். ஆனால் தமிழகத்தில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியை வலுப்படுத்துவதே முக்கியம் என்று தோன்றியது. எனது கருத்தை நிரூபிக்க தேர்தலில் பங்கேற்க வேண்டும் என்றே கட்சியினர் கூறினார்கள்.

    ஆனால் அதை வேறு யாராவது பயன்படுத்திக் கொள்ளட்டும். நாம் கூட்டணியை பலப்படுத்தலாம் என்று நான் கூறிவிட்டேன். மற்றத் தரப்பில் இருந்தும் கூட்டணி தொடர்பாக பேசப்பட்டு சலுகைகளை அளிக்கவே தயாராக இருந்தனர். ஆனால் நாங்கள் அதனை ஏற்கவில்லை.

    தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கு இது கடைசி கோட்டையாக இருக்கும் என்றே கருதுகிறேன்.

    இந்தியா முழுவதும் இந்த மறுமலர்ச்சியை பேச்சாக மாற்றி இருக்கிறார்கள். வாழ்வாதார பிரச்சனைகளில் இருந்து மக்களை திசை திருப்பும் சூழ்ச்சியாகவே இதனை பார்க்கிறேன்.

    இல்லத்தரசிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை யோசனையை முதலில் மக்கள் நீதி மய்யம்தான் முன் வைத்தது. ஆனால் அதனைப் பற்றி நினைக்காமல் தி.மு.க. அதனை செயல்படுத்தி உள்ளது.

    தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணியே வெல்லும். மத்தியில் பிரதமர் மோடிக்கு எதிராக தற்போதைய சூழலில் இந்தியா கூட்டணியின் அடையாளமாக ராகுல் காந்தியே உள்ளார்.

    தமிழகத்தில் கவர்னர் அவரது வேலையை சரியாக செய்யாமல் உள்ளார். தமிழகத்தில் திராவிட அரசியலை எப்போதுமே வீழ்த்த முடியாது. தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் களம் தி.மு.க. கூட்டணிக்கு சாதகமாகவே உள்ளது.

    இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.

    • இந்தியாவில் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது
    • உத்தரபிரதேசம், பீகார், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் 7 கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது

    தலைமை தேர்தல் ஆணையர்கள் ராஜீவ் குமார், ஞானேஷ்குமார், சுக்பீர் சிங் சந்து ஆகியோர் தலைமையில் செய்தியாளர்கள் சந்திப்பு தொடங்கியது.

    அப்போது, இந்தியாவில் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கும் தேர்தல் ஜூன் 1-ம் தேதி முடிவடைகிறது. ஜூன் 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

    தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் நிலையில், உத்தரபிரதேசம், பீகார், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் 7 கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது.

    இந்தியாவில் 7 கட்டமாக தேர்தல் நடைபெறுவதை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் விமர்சித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்தும் முன் 'ஒரே கட்டமாக தேர்தல்' நடத்தும் முறையை ஏன் அமல்படுத்தக்கூடாது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

    ×