செய்திகள்

வாடிப்பட்டி அருகே கார் மோதி விபத்து; போட்டோகிராபர் பலி

Published On 2017-11-15 04:38 GMT   |   Update On 2017-11-15 04:38 GMT
வாடிப்பட்டி அருகே கார் மோதிய விபத்தில் போட்டோகிராபர் பலியானார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாடிப்பட்டி:

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே உள்ள வாவிடமருதூரைச் சேர்ந்தவர் வீரன். இவரது மகன் பெரியபுலியன் (வயது 43). இவர் மதுரையில் உள்ள ஸ்டூடியோவில் போட்டோ கிராபராக பணியாற்றி வந்தார்.

நேற்று வேலை வி‌ஷயமாக பெரியபுலியன் திண்டுக்கல் சென்றார். இரவில் அங்கிருந்து பஸ்சில் ஊருக்கு புறப்பட்டார். வாடிப்பட்டி அருகே இறங்கிய அவர், அலங்காநல்லூர் சாலையில் வீட்டுக்கு நடந்து சென்றார்.

அப்போது அருப்புக்கோட்டையில் இருந்து சின்னாளப்பட்டிக்கு கார் சென்றது. அந்த கார் எதிர்பாராத விதமாக பெரியபுலியன் மீது மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த பெரியபுலியன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.

வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் விமலா, சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

பலியான பெரிய புலியனுக்கு சரஸ்வதி என்ற மனைவியும், பிரிதர்‌ஷன் என்ற மகனும், தனலட்சுமி, சுபாதர்ஷினி என்ற மகள்களும் உள்ளனர்.

விபத்தில் இறந்த பெரியபுலியன், முன்னாள் எம்.எல்.ஏ. கருப்பையாவின் உறவினர். அவரது சாவு குறித்த தகவல் கிடைத்ததும் கருப்பையா அரசு ஆஸ்பத் திரிக்கு விரைந்து வந்தார்.

Tags:    

Similar News