search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாடிப்பட்டி"

    • தேவர் ஜெயந்தி குருபூஜை விழா நடந்தது.
    • முடிவில் ஒன்றிய விவசாய அணி செயலாளர் வையாபுரி நன்றி கூறினார்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி போடிநாயக்கன்பட்டியில் பிரமலைக்கள்ளர்நலசங்கம் சார்பில் தேவர் ஜெயந்தி விழா- குருபூஜை விழா நடந்தது.

    சங்கதலைவர் தங்க மலைச்சாமி தலைமை தாங்கினார். தி.மு.க. ஒன்றிய செயலாளர் பால ராஜேந் திரன், பாரதிய ஜனதா கட்சி நிர்வாகி முத்துராமன், அ.தி.மு.க.பேரூர் செயலாளர் அசோக்குமார், மாநகராட்சி அதிகாரி பாஸ்கர பாண்டியன், கவுன்சிலர் ஜெயகாந்தன், சங்க துணைத் தலைவர் சந்திரமோகன் ஆகியோர் முன்னிலை வகித்தார்.

    செயலாளர் பாஸ்கரன் வரவேற்றார். ராமன் கொடியேற்றினார். உருவபடத்திற்கு ஆசிரியர் ஜெயராஜ் மாலை அணி வித்தார். அரண்மனையார் ஞானசேகர பாண்டியன் குருபூஜையை செய்தார். அய்யாவு இருளாண்டி ஆகியோர் அன்னதானம் வழங்கினார். பேரூர் செயலாளர் பால்பாண்டி யன், அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.

    இதில் விவசாய சங்க தலைவர் கஜேந்திரன் நிர்வாகிகள் செல்வம், உதயாபாலு, பால்பாண்டி, முருகன், வை.பாண்டி, ரூபன்சக்ரவர்த்தி, போஸ், விஜி, விக்னேஷ், கவாஸ்கர், ராமமூர்த்தி, சிரஞ்சிவி, ரமேஷ், பிரபாகரன், உள்பட பலர் கலந்து கொண்டனர். பொருளாளர் செல்வபாண்டியன் நன்றி கூறினார். மதுரை வடக்குமாவட்ட மூவேந்தர் முன்னேற்ற கழகம் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் செந்தில் பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் கணேசன், ஒன்றிய தலைவர் கருப்பையா ஆகி யோர் முன்னிலை வகித்த னர். ஒன்றிய துணை செயலாளர் கருப்புமணி வண்ணன் வரவேற்றார்.

    மாநில பொருளாளர் தேவர் படத்திற்கு மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினார். இதில் கம்பன் இலக்கியமன்ற தலைவர் புலவர் அழகர் சாமி, அ.தி.மு.க.பேரவை பேரூர் செயலாளர் தன சேகரன், தே.மு.தி.க. பேரூர் செயலாளர் பாலாஜி, கிளை செயலாளர் அன்பு, சின்னு கருப்பையா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய விவசாய அணி செயலாளர் வையாபுரி நன்றி கூறினார்.

    • வாடிப்பட்டி பேரூராட்சியில் பேட்டரி குப்பை சேகரிப்பு வாகனங்களை வெங்கடேசன் எம்.எல்.ஏ., தொடங்கி வைத்தார் .
    • முடிவில் கார்த்திக் நன்றி கூறினார்.

    வாடிப்பட்டி

    வாடிப்பட்டி பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் புதிய பேட்டரி குப்பை சேகரிப்பு வாகனங்களை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி தாதம்பட்டி நீரேத்தான் மந்தி திடலில் நடந்தது. பேரூராட்சி தலைவர் மு.பால்பாண்டியன் தலைமை தாங்கினார் செயல் அலுவலர் ஜெயலட்சுமி முன்னாள் பேரூராட்சி தலைவர் கிருஷ்ண வேணி துணை தலைவர் கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளநிலை உதவியாளர் முத்துப்பாண்டி வரவேற்றார். வெங்கடேசன் எம்.எல். ஏ., வாகனங்களின் செயல்பாட்டை தொடங்கி வைத்தார். வாடிப்பட்டி பேரூராட்சியில் 18 வார்டுகளில் குப்பைகள் சேகரிக்க புஸ்காட் வண்டி பயன்படுத்தப்பட்டு வந்தது. தற்போது கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தில் புதிதாக 22 பேட்டரி வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதில் கவுன்சிலர்கள் நல்லம்மாள், கார்த்திகா ராணி, சரசு, பூமிநாதன், ஜெயகாந்தன், குருநாதன், சுசீந்திரன், மற்றும் தி.மு.க முன்னாள் பேரூர் செயலாளர் மு.பா.பிரகாஷ், முரளி, வினோத், மருதுபாண்டியன், அரவிந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கார்த்திக் நன்றி கூறினார்.

    • வாடிப்பட்டி வாரச்சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.
    • காய்கறிகள் விற்கப்படுகிறது.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப் பட்டி பஸ் நிலையம் அருகில் செவ்வாய்க்கிழமை செயல் படும் தனியார் வாரச்சந்தை உள்ளது. இந்த சந்தையில் ஆடு, மாடு, கோழி மற்றும் காய்கறி கள் விற்கப்படுகிறது.

    இந்த சந்தைக்கு மதுரை, திண்டுக்கல், தேனி, திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்க ளில் இருந்து வியாபாரிகளும், விவசாயிகளும் வந்து செல்கின்றனர். ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு தொடங்கி இரவு 8 மணி வரை சந்தை செயல்படும். இதில் ஆடு, மாடு, கோழிகளுக்கு எப்போதும் கிராக்கி இருக்கும். அதனால் இவைகள் காலை 9 மணிக்குள் விற்பனை செய்யப்பட்டு விடும். அதன் பின்னர் காய்கறி, பலசரக்கு வீட்டு உபயோக பொருட்கள் தொடர்ந்து விற்பனை யாகும்.

    வருகிற 29-ந்தேதி (வியாழக்கிழமை) பக்ரீத் பண்டிகை வருவதை யொட்டி சுற்று வட்டார கிராமப்புறங்களில் இருந்து அதிகளவில் ஆடுகள் இன்று விற்பனைக்கு வந்தது. ஆடுகளின் விற்பனை ஜோராக இருந்தது. ரூ.10 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை ஆடுகள் விலை போனது. மதியம் வரை ரூ.2 கோடி மதிப்புக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டதாக வியாபாரிகள் கூறினர்.

    • வாடிப்பட்டி அருகே 2-ந் தேதி மின்தடை ஏற்படுகிறது
    • பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

    மதுரை

    சமயநல்லூர் கோட்டத்திற்குட்பட்ட வாடிப்பட்டி துணைமின் நிலையத்தில் உள்ள ராயபுரம் பீடரில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

    இதன் காரணமாக நாளை மறுநாள் (2-ந் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ரிஷபம், திருமால்நத்தம், ஆலங்கொட்டாரம், ராயபுரம், கல்லுப்பட்டி, மேட்டுநீரேத்தான், நெடுங்குளம், ஆண்டிப்பட்டி பங்களா ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    மேற்கண்ட தகவலை சமயநல்லூர் மின்னியல் செயற்பொறியாளர் ஆறுமுகராஜ் தெரிவித்துள்ளார்.

    • வாடிப்பட்டியில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா நடந்தது.
    • தாதம்பட்டி வளவன் நன்றி கூறினார்.

    வாடிப்பட்டி

    வாடிப்பட்டி பேரூர், ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா பஸ் நிலையம் முன்பு நடந்தது. ஒன்றிய செயலாளர் தமிழ் நிலவன் தலைமை தாங்கினார்.

    துணைச் செயலாளர் சிறுத்தை பாலன், பாசறை பேரூர் செயலாளர் யுவராஜா, தொகுதி செயலாளர் வளவன் முன்னிலை வகித்தனர். பேரூர் செயலாளர் அரசு விஜயார் வரவேற்றார். மாவட்ட அமைப்பாளர் தளபதி, அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவித்தார்.

    நில உரிமை மீட்பு துணை அமைப்பாளர் விடுதலை வீரன் இனிப்பு வழங்கினார். தி.மு.க முன்னாள் பேரூர் செயலாளர் பிரகாஷ், த.மா.க வட்டாரத் தலைவர் பால சரவணன், கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் மச்சராசன், குண்டுமலை, பாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர். தாதம்பட்டி வளவன் நன்றி கூறினார்.

    • வாடிப்பட்டியில் கலைவிழா போட்டிகள் நடந்தது.
    • அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆஷா நன்றி கூறினார்.

    வாடிப்பட்டி

    பள்ளிக்கல்வித் துறை சார்பில் வாடிப்பட்டி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் கலைவிழா போட்டிகள் நடந்தது. இதனை பேரூராட்சி தலைவர் பால்பாண்டியன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். வட்டார கல்வி அலுவலர்கள் ஷாஜகான், அகிலத்து இளவரசி, கவுன்சிலர் சரசு ராமு ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் சரவண முருகன் வரவேற்றார். இந்த போட்டியில் 16 அரசு நடுநிலைப்பள்ளிகள், 4அரசு உயர்நிலைப்பள்ளிகள், 9 அரசு மேல்நிலைப் பள்ளிகளை சேர்ந்த 500-க்கு மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் முதல் 2 இடங்களை பெற்ற மாணவ மாணவிகள் மாவட்ட, மாநில அளவில் நடைபெறும் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

    வட்டார வள மையம் மேற்பார்வையாளர் தமிழ்ச்செல்வி தலைமையில் ஆசிரியர் பயிற்றுநர்கள்லெட்சுமி, பாண்டிக்குமார், பெரியகருப்பன், சரண்யா, அலெக்ஸ்பாண்டியன் மற்றும் ஆசிரியர் ஆசிரியைகள் கலந்து கொண்டு போட்டியினை நடத்தினர். முடிவில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆஷா நன்றி கூறினார்.

    ×