search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேவர் ஜெயந்தி குருபூஜை விழா
    X

    போடிநாயக்கன்பட்டியில் தேவர் ஜெயந்தி குருபூஜை நடந்தது.

    தேவர் ஜெயந்தி குருபூஜை விழா

    • தேவர் ஜெயந்தி குருபூஜை விழா நடந்தது.
    • முடிவில் ஒன்றிய விவசாய அணி செயலாளர் வையாபுரி நன்றி கூறினார்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி போடிநாயக்கன்பட்டியில் பிரமலைக்கள்ளர்நலசங்கம் சார்பில் தேவர் ஜெயந்தி விழா- குருபூஜை விழா நடந்தது.

    சங்கதலைவர் தங்க மலைச்சாமி தலைமை தாங்கினார். தி.மு.க. ஒன்றிய செயலாளர் பால ராஜேந் திரன், பாரதிய ஜனதா கட்சி நிர்வாகி முத்துராமன், அ.தி.மு.க.பேரூர் செயலாளர் அசோக்குமார், மாநகராட்சி அதிகாரி பாஸ்கர பாண்டியன், கவுன்சிலர் ஜெயகாந்தன், சங்க துணைத் தலைவர் சந்திரமோகன் ஆகியோர் முன்னிலை வகித்தார்.

    செயலாளர் பாஸ்கரன் வரவேற்றார். ராமன் கொடியேற்றினார். உருவபடத்திற்கு ஆசிரியர் ஜெயராஜ் மாலை அணி வித்தார். அரண்மனையார் ஞானசேகர பாண்டியன் குருபூஜையை செய்தார். அய்யாவு இருளாண்டி ஆகியோர் அன்னதானம் வழங்கினார். பேரூர் செயலாளர் பால்பாண்டி யன், அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.

    இதில் விவசாய சங்க தலைவர் கஜேந்திரன் நிர்வாகிகள் செல்வம், உதயாபாலு, பால்பாண்டி, முருகன், வை.பாண்டி, ரூபன்சக்ரவர்த்தி, போஸ், விஜி, விக்னேஷ், கவாஸ்கர், ராமமூர்த்தி, சிரஞ்சிவி, ரமேஷ், பிரபாகரன், உள்பட பலர் கலந்து கொண்டனர். பொருளாளர் செல்வபாண்டியன் நன்றி கூறினார். மதுரை வடக்குமாவட்ட மூவேந்தர் முன்னேற்ற கழகம் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் செந்தில் பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் கணேசன், ஒன்றிய தலைவர் கருப்பையா ஆகி யோர் முன்னிலை வகித்த னர். ஒன்றிய துணை செயலாளர் கருப்புமணி வண்ணன் வரவேற்றார்.

    மாநில பொருளாளர் தேவர் படத்திற்கு மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினார். இதில் கம்பன் இலக்கியமன்ற தலைவர் புலவர் அழகர் சாமி, அ.தி.மு.க.பேரவை பேரூர் செயலாளர் தன சேகரன், தே.மு.தி.க. பேரூர் செயலாளர் பாலாஜி, கிளை செயலாளர் அன்பு, சின்னு கருப்பையா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய விவசாய அணி செயலாளர் வையாபுரி நன்றி கூறினார்.

    Next Story
    ×