search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பேட்டரி குப்பை சேகரிப்பு வாகனங்களை எம்.எல்.ஏ., தொடங்கி வைத்தார்
    X

    பேட்டரி குப்பை சேகரிப்பு வாகனங்களை எம்.எல்.ஏ., தொடங்கி வைத்தார்

    • வாடிப்பட்டி பேரூராட்சியில் பேட்டரி குப்பை சேகரிப்பு வாகனங்களை வெங்கடேசன் எம்.எல்.ஏ., தொடங்கி வைத்தார் .
    • முடிவில் கார்த்திக் நன்றி கூறினார்.

    வாடிப்பட்டி

    வாடிப்பட்டி பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் புதிய பேட்டரி குப்பை சேகரிப்பு வாகனங்களை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி தாதம்பட்டி நீரேத்தான் மந்தி திடலில் நடந்தது. பேரூராட்சி தலைவர் மு.பால்பாண்டியன் தலைமை தாங்கினார் செயல் அலுவலர் ஜெயலட்சுமி முன்னாள் பேரூராட்சி தலைவர் கிருஷ்ண வேணி துணை தலைவர் கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளநிலை உதவியாளர் முத்துப்பாண்டி வரவேற்றார். வெங்கடேசன் எம்.எல். ஏ., வாகனங்களின் செயல்பாட்டை தொடங்கி வைத்தார். வாடிப்பட்டி பேரூராட்சியில் 18 வார்டுகளில் குப்பைகள் சேகரிக்க புஸ்காட் வண்டி பயன்படுத்தப்பட்டு வந்தது. தற்போது கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தில் புதிதாக 22 பேட்டரி வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதில் கவுன்சிலர்கள் நல்லம்மாள், கார்த்திகா ராணி, சரசு, பூமிநாதன், ஜெயகாந்தன், குருநாதன், சுசீந்திரன், மற்றும் தி.மு.க முன்னாள் பேரூர் செயலாளர் மு.பா.பிரகாஷ், முரளி, வினோத், மருதுபாண்டியன், அரவிந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கார்த்திக் நன்றி கூறினார்.

    Next Story
    ×