search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இடைத் தேர்தலை சந்திக்க அ.தி.மு.க.விற்கு பயம்- திருநாவுக்கரசர் குற்றச்சாட்டு
    X

    இடைத் தேர்தலை சந்திக்க அ.தி.மு.க.விற்கு பயம்- திருநாவுக்கரசர் குற்றச்சாட்டு

    இடைத் தேர்தலை சந்திக்க அ.தி.மு.க.விற்கு பயம் உள்ளது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். #thirunavukkarasar #admk #byelection

    பீளமேடு:

    தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் இன்று கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது-

    18 எம். எல். ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளதால், இந்த தொகுதிகளில் தேர்தல் நடத்த காலதாமதமாகும்.

    எனவே திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளிலும் , உள்ளாட்சி தேர்தலையும் உடனடியாக நடத்த வேண்டும். பல்வேறு காரணங்களை சொல்லி தலைமை செயலாளர் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பி உள்ளார், இதன் மூலம் இடை தேர்தலை சந்திக்க அ.தி.மு.க.விற்கு பயம் உள்ளது என்பது தெளிவாகிறது.

    மு.க.ஸ்டாலின் , துரைமுருகன் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் இருப்பதாக அமைச்சர் மாபா பாண்டியராஜன் திருவள்ளூரில் நடந்த கூட்டத்தில் பேசியிருப்பதை கண்டிக்கிறேன்.


    இது போன்ற தரம் தாழ்ந்த தரக்குறைவான விமர்சனங்களை அமைச்சர்கள் தவிர்ப்பது நல்லது.

    எதிர்கட்சி தலைவரை இவ்வாறு அநாகரீகமாக பேசுவது தவறு.

    இவ்வாறு அவர் கூறினார். #thirunavukkarasar #admk #byelection

    Next Story
    ×