search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா பேசிய காட்சி.
    X
    கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா பேசிய காட்சி.

    எச்.ராஜா போலீஸ் பாதுகாப்பு இல்லாமல் வெளியே வர முடியுமா?- ஆ. ராசா

    பாரதிய ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா போலீஸ் பாதுகாப்பு இல்லாமல் வெளியே வர முடியுமா? என்று முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா சவால் விடுத்துள்ளார்.
    கோவை:

    கோவை சுந்தராபுரத்தில் தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது. இதில் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா கலந்து கொண்டு பேசினார்.

    தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் படிப்படியாக கட்சி மற்றும் நிர்வாகங்களில் உயர்ந்தவர். ஸ்டாலினின் வளர்ச்சி என்பது சுக பிரசவம்.

    காவிரி பிரச்சனைக்காக முதல்-அமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் ஒரு துரும்பை கூட தூக்கி போடவில்லை. தன்மானத்தை விட இனமானம் முக்கியம் என்பதால், எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்றார் .


    தமிழகத்தின் அனைத்து எம்.எல்.ஏ, எம்.பிக்கள் ராஜினாமா செய்யலாம் என்ற ஸ்டாலினின் யோசனையை எடப்பாடி பழனிசாமி ஏற்கவில்லை. பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா தன்மானமுள்ள மனிதனாக இருந்தால் போலீஸ் பாதுகாப்பு இல்லாமல் வெளியே வர முடியுமா?

    நீட் விலக்கு, காவிரி நதி நீர் உரிமைகளை பெற்று தராத தமிழக அரசு, முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிற்கு ரூ. 46 கோடியில் நினைவு மண்டபம் கட்டுகிறது .

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×