என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஸ்லோகம்"
- உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் பதவி உயர்வு கிடைக்கும்.
- வியாபாரத்தில் ஈடுபடுவோருக்கு லாபம் பன்மடங்கு பெருகும்.
வியாழக்கிழமை என்றதுமே நினைவுக்கு வரும் தெய்வம் குரு தட்சிணாமூர்த்தி. குருவின் அம்சமாகத் திகழும் அற்புதத் தெய்வம்... ஸ்ரீதட்சிணாமூர்த்தி. சிவனாரின் வடிவங்களில் ஒன்று என்கிறது சிவஞான போதகம். சிவனாரின் வடிவமான தட்சிணாமூர்த்தி, தென் முகக் கடவுள். தெற்குப் பார்த்த நிலையில் இருப்பதால்தான், அவரின் திருநாமம் தட்சிணாமூர்த்தி என்று அமைந்ததாகச் சொல்கிறது சிவபுராணம். தட்சிணம் என்றால் தெற்கு.
சனகாதி முனிவர்களுக்கு கல்லால மரத்தடியில் அமர்ந்தபடி, சிவபெருமானே தட்சிணாமூர்த்தி அம்சத்துடன் வந்து, உபதேசித்து அருளினார். அதனால்தான், ஞானமும் யோகமும் வேண்டுவோர், தட்சிணாமூர்த்தியை வணங்குங்கள் என அறிவுறுத்துகிறார்கள் ஆச்சார்யர்கள்.
வியாழன் என்பவரே குரு பகவானைக் குறிக்கும். குரு பிரகஸ்பதிதான், நவக்கிரகங்களில் குரு பகவானாகத் திகழ்கிறார். அதேபோல், குரு ஸ்தானத்தில் குரு தட்சிணாமூர்த்தியே காட்சி தருவதால், சிவ சொரூபமாகத் திகழும் தென்முகக் கடவுளாம் தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமைகளில் வணங்கினால், புத்தியில் தெளிவும் செயலில் திண்மையும் கிடைக்கப் பெறலாம் என்பது ஐதீகம்.
ஓம் நமோ பகவதே தட்சிணாமூர்த்தயே
மஹ்யம் மேதாம் பிரக்ஞாம் ப்ரயச்ச நமஹ;
என்பது ஸ்ரீதட்சிணாமூர்த்திக்கு உரிய மூலமந்திரம். சக்தி வாய்ந்த இந்த மந்திரத்தை தினமும் காலையில் பாராயணம் செய்வது ரொம்பவே விசேஷம். நற்பலன்களையெல்லாம் வழங்கும்.
அதேபோல், வியாழக்கிழமைகளிலும் பௌர்ணமி தினங்களிலும் சிவன் கோயிலில், கோஷ்டத்தில் வீற்றிருக்கும் தட்சிணாமூர்த்திக்கு எதிரே அமர்ந்துகொண்டு இந்த மந்திரத்தைச் சொல்லி ஜபிக்கலாம். தம்பதி சமேதராக இருந்து இந்த மந்திரத்தை பாராயணம் செய்து வழிபட்டால், தம்பதி இடையே ஒற்றுமை அதிகரிக்கும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
குடும்பத்தில் வீண் சண்டையோ சச்சரவுகளோ ஏற்பட்டுக்கொண்டிருக்கும் நிலையெல்லாம் அறவே மாறிவிடும். முகத்தில் தேஜஸ் குடிகொள்ளும். எடுக்கும் காரியங்களில் உங்களுக்கு வெற்றி உண்டாகும். வாக்குவன்மை பலமாகும்.
உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் ஈடுபடுவோருக்கு லாபம் பன்மடங்கு பெருகும்.
அடுத்து... தட்சிணாமூர்த்தி காயத்ரி மந்திரம்
ஓம் தட்சிணாமூர்த்தியே வித்மஹே
த்யாநஸ்தாய தீமஹி
தந்நோ தீஸஹ் ப்ரசோதயாத்
வீட்டில் பூஜையறையில் அமர்ந்துகொண்டு, தட்சிணாமூர்த்தி காயத்ரி மந்திரத்தையும் மூல மந்திரத்தையும் ஜபித்து வாருங்கள். வீட்டில் உள்ள தரித்திர நிலை மாறிவிடும். சுபிட்சமும் ஐஸ்வரியமும் குடிகொள்ளும். மாணவர்கள், கல்வி கேள்விகளில் சிறந்துவிளங்குவார்கள் என்பது ஐதீகம்.
- சஷ்டி என்பது அமாவாசை அல்லது பவுர்ணமிக்கு அடுத்து ஆறாம் நாள்.
- எல்லா தோஷத்தைப் போக்கும் பெருமான் திருமுருகப்பெருமான்.
சஷ்டி கவசத்தை தினம் காலையிலும் மாலையிலும் ஓத முருகனே காட்சி தந்துவிடுவான்.
ஆரம்பமே சஷ்டியை நோக்க என்று இருக்கிறது. சஷ்டி என்பது அமாவாசை அல்லது பவுர்ணமிக்கு அடுத்து ஆறாம் நாள். ஜாதகத்தில் ஆறாம் இடம் ரோகம், கடன், விரோதம், சத்ரு போன்றவைகளைக் குறிக்கும். செவ்வாய் ரோகக் காரகன். இந்த எல்லா தோஷத்தைப் போக்கும் பெருமான் திருமுருகப்பெருமான்.
அவருக்கு உகந்த நாள் சஷ்டி. சஷ்டி என்றால் ஆறு, முருகனுக்கோ ஆறு முகங்கள், சரவணபவ என்று ஆறு அட்சரம், ஆறு படை வீடுகள், ஆறு கார்த்திகைப் பெண்ணால் வளர்க்கப்பட்டவர். நாம் அந்தத் திருவடியை விடாது பிடித்தால் மேலே சொன்ன ஒரு கெடுதலும் அண்டாது. வீட்டில் கடன், வியாதி, சத்ரு பயம் இல்லை என்ற நிலை ஏற்படும்.
இப்போது சஷ்டி கவசத்தைப் பார்ப்போம்.
கந்தன் வரும் அழகே அழகு, பாதம் இரண்டில் பண்மணிச் சலங்கை கீதம் பாட கிண்கிணியாட, மயில் மேல் அமர்ந்து ஆடி ஆடி வரும் அழகை என்னவென்பது? இந்திரன் மற்ற எட்டு திசைகளில் இருந்தும் பலர் போற்றுகிறார்கள். முருகன் வந்து விட்டான், இப்போது என்னைக் காக்க வேண்டும், பன்னிரண்டு விழிகளும் பன்னிரெண்டு ஆயுதத்துடன் வந்து என்னைக் காக்க வேண்டும்.
அவர் அழகை வர்ணிக்கும் போது பரமேஸ்வரி பெற்ற மகனே முருகா, உன் நெற்றியில் இருக்கும் திரு நீர் அழகும், நீண்ட புருவமும், பவளச் செவ்வாயும், காதில் அசைந் தாடும் குண்டலமும், அழகிய மார்பில் தங்க நகைகளும், பதக்கங்களும், நவரத்ன மாலை அசைய உன் வயிறும், அதில் பட்டு வஸ்திரமும் சுடர் ஒளி விட்டு வீச, மயில் மேலேறி வந்து கேட்டவர்களுக்கு எல்லாம் வரம் தரும் முருகா, என்றெல்லாம் அவரை ஸ்ரீ தேவராயர் வர்ணிக்கிறார்.
அவர் கூப்பிடும் வேல்கள் தான் எத்தனை? உடம்பில் தான் எத்தனை பாகங்கள்? காக்க என்று வேலை அழைக்கிறார். வதனத்திற்கு அழகு வேல், நெற்றிக்குப் புனிதவேல், கண்ணிற்குக் கதிர்வேல் நாசிகளுக்கு நல்வேல், செவிகளுக்கு வேலவர் வேல், பற்களுக்கு முனைவேல், செப்பிய நாவிற்கு செவ்வேல், கன்னத்திற்கு கதிர்வேல், கழுத்திற்கு இனிய வேல், மார்பிற்கு ரத்தின வடிவேல், இளமுலை மார்புக்கு திருவேல், தோள்களுக்கு வடிவேல், பிடறிகளுக்கு பெருவேல், அழகு முதுகிற்கு அருள்வேல், வயிறுக்கு வெற்றிவேல் சின்ன இடைக்கு செவ்வேல், நாண்கயிற்றை நால்வேல், பிட்டம் இரண்டும் பெருவேல், கணைக்காலுக்கு கதிர் வேல், ஐவிரல்களுக்கு அருள்வேல், கைகளுக்கு கருணை வேல், நாபிக்கமலம் நல்வேல், முப்பால் நாடியை முனை வேல், எப்போதும் என்னை எதிர் வேல், பகலில் வஜ்ர வேல், இரவில் அனைய வேல், காக்க காக்க கனக வேல் காக்க. அப்பப்பா எத்தனை விதமான வேல் நம்மைக் காக்கின்றன.
அடுத்தது எந்தெந்த வகை பயங்களில் இருந்து காக்க வேண்டும் என்று விளக்கப்பட்டுள்ளது.
பில்லி, சூன்யம், பெரும் பகை, வல்லபூதம், பேய்கள், அடங்காமுனி, கொள்ளிவாய்ப் பிசாசு, குறளைப் பேய்கள், பிரும்ம ராட்சசன், இரிசி காட்டேரி, இவைகள் அத்தனையும் முருகன் பெயர் சொன்னாலே ஓடி ஒளிந்து விடும் என்கிறார்.
அடுத்தது மந்திரவாதிகள் கெடுதல் செய்ய உபயோகிக்கும் பொருட்கள் பாவை, பொம்மை, முடி, மண்டைஓடு, எலும்பு, நகம், சின்ன மண்பானை, மாயாஜால மந்திரம், இவைகள் எல்லாம் சஷ்டி கவசம் படித்தால் செயலிழந்து விடும் என்கிறார்.
பின் மிருகங்களைப் பார்ப்போம், புலியும் நரியும், எலியும் கரடியும், தேளும் பாம்பும் செய்யான், பூரான் இவைகளால் ஏற்படும் விஷம் சஷ்டி கவச ஓசையிலேயே இறங்கி விடும் என்கிறார். நோய்களை எடுத்துக்கொ ண்டால் வலிப்பு, சுரம், சுளுக்கு, ஒற்றை தலைவலி, வாதம், பைத்தியம், பித்தம், சூலை, குடைச்சல், சிலந்தி, குடல் புண், பக்கப் பிளவை போன்ற வியாதிகள் இதனைப் படித்தால் உடனே சரியாகி விடும் என்கிறார்.
இதைப் படித்தால் வறுமை ஓடிவிடும் நவகிரகங்களும் நமக்குத் துணை இருப்பார்கள். சத்ருக்கள் மனம் மாறி விடுவார்கள். முகத்தில் தெய்வீக ஒளி வீசும் என்று கூறப்பட்டுள்ளது. எனவே தினம், தினம் கந்தசஷ்டி கவசம் படியுங்கள். வேலனைப் போற்றுங்கள் உங்கள் வேதனைகள் எல்லாம் விலகி ஓடிவிடும்.
- குருவின் சந்நிதியில் மனமுருகி பாடுங்கள். பண மழையில் நனையலாம்.
- குருவின் சந்நிதியில் நேரில் நின்று வழிபட்டால் சீரும், சிறப்பும், செல்வாக்கும் வந்து சேரும்.
குருவின் சந்நிதியில் நேரில் நின்று வழிபட்டால் சீரும், சிறப்பும், செல்வாக்கும் நமக்கு வந்து சேரும். குருவின் சந்நிதியில் நாம் பாட வேண்டிய பாடல்:
"வானவர்க் கரசே! வளம் தரும் குருவே!
காணா இன்பம் காண வைப்பவனே!
பொன்னிற முல்லையும் புஷ்ப ராகமும்!
உந்தனுக்களித்தால் உள்ளம் மகிழ்வாய்!
சுண்டல் தானியமும் சொர்ண அபிஷேகமும்!
கொண்டுனை வழிபடக் குறைகளைத் தீர்ப்பாய்!
தலைமைப் பதவியும் தனித்தோர் புகழும்!
நிலையாய் தந்திட நேரினில் வருக!''
"நாளைய பொழுதை நற்பொழுதாக்குவாய்!
இல்லற சுகத்தினை எந்தனுக் களிப்பாய்!
உள்ளத்தில் அமைதி உறைத்திடச் செய்வாய்!
செல்வ செழிப்பும் சேர்ந்திட வைப்பாய்!
வல்லவன் குருவே! வணங்கினோம் அருள்வாய்!
என்று மனமுருகி பாடுங்கள். பண மழையில் நனையலாம். "பார் போற்ற வாழலாம்''.
- நவராத்திரி 9 நாட்களும் போற்றி பாடுவது நல்லது.
- இன்று ஒன்பதாம் நாளுக்குரிய போற்றி பாடலை பார்க்கலாம்.
முதலில் பிள்ளையாருக்கு இந்த 16 போற்றிகளை சொல்லவும்.
ஓம் அகர முதல்வா போற்றி!
ஓம் அணுவிற்கணுவாய் போற்றி!
ஓம் ஆனை முகத்தோய் போற்றி!
ஓம் இந்திரன் இளம்பிறைபோற்றி!
ஓம் ஈடிலாத் தெய்வமே போற்றி!
ஓம் உமையவள் மைந்தா போற்றி!
ஓம் ஊழ்வினை அறுப்பாய் போற்றி!
ஓம் எருக்கினில் இருப்பாய்போற்றி!
ஓம் ஐங்கரனே போற்றி!
ஓம் ஒற்றைக் கொம்பனே போற்றி!
ஓம் கற்பக களிறே போற்றி!
ஓம் பேழை வயிற்றோய் போற்றி!
ஓம் பெரும்பாரக் கோட்டாய் போற்றி!
ஓம் வெள்ளிக்கொம்பனே விநாயகா போற்றி!
ஓம் பொன்னும் மெய்ப்பொருளும் தருவாய் போற்றி!
ஓம் போகமும் திருவும் புணர்ப்பாய் போற்றி!
ஒன்பதாம் நாள் போற்றி
ஓம் ஓங்காரத்துப் பொருளேபோற்றி
ஓம் ஊனாகி நின்ற உத்தமியேபோற்றி
ஓம் படைத்தோன் பாகம் பிரியாய்போற்றி
ஓம் அடியவர்க்கு மங்களம் அருள்வாய் போற்றி
ஓம் முக்கோணத்துள் உள்ள மூர்த்தமேபோற்றி
ஓம் ரீங்காரம் தன்னில் இருப்பவளேபோற்றி
ஓம் நாற்பத்து முக்கோண நாயகியேபோற்றி
ஓம் சொற்பொருள் சுவைதனைத் தந்தாய் போற்றி
ஓம் ஆறாது தத்துவம் அருளினாய்போற்றி
ஓம் பளிங்கு ஒளியாய் நின்ற பரமேபோற்றி
ஓம் ஓசை விந்துநாத உட்பொருளாய்போற்றி
ஓம் அகண்ட பூரணி அம்மாபோற்றி
ஓம் உண்ணும் சிவயோக உத்தமியேபோற்றி
ஓம் பண் மறைவேதப் பாசறையேபோற்றி
ஓம் மாகேஸ்வரியே மங்கள உருவேபோற்றி
ஓம் சாம்பவி சங்கரித் தேவியே போற்றி! போற்றி!!
- விநாயகரை நினைத்து நமஸ்காரம் செய்யவும்.
- நாளை சரஸ்வதி தேவிக்குரிய 108 போற்றியை சொல்லி வழிபாடு செய்யுங்கள்...
ஓம் அறிவுருவேபோற்றி
ஓம் அறியாமை தீர்ப்பாய் போற்றி
ஓம் அன்பின் வடிவே போற்றி
ஓம் அநுபூதி அருள்வாய்போற்றி
ஓம் அறிவுக்கடலேபோற்றி
ஓம் அளத்தற்கு அரியவளேபோற்றி
ஓம் அன்ன வாகினியேபோற்றி
ஓம் அகில லோக குருவேபோற்றி
ஓம் அருளின் பிறப்பிடமேபோற்றி
ஓம் ஆசான் ஆனவளேபோற்றி
ஓம் ஆனந்த வடிவேபோற்றி
ஓம் ஆதாரசக்தியேபோற்றி
ஓம் இன்னருள் சுரப்பாய்போற்றி
ஓம் இகபர சுகம் தருவாய்போற்றி
ஓம் ஈர நெஞ்சம் கொண்டாய் போற்றி
ஓம் ஈடேறச் செய்பவளேபோற்றி
ஓம் உண்மைப் பொருளே போற்றி
ஓம் உள்ளத்து உறைபவளே போற்றி
ஓம் ஊமையை பேசவைத்தாய் போற்றி
ஓம் எண்ணம் நிறைவேற்றுவாய் போற்றி
ஓம் ஏடு கையில் ஏந்தியவளே போற்றி
ஓம் ஓங்கார வடிவினளே போற்றி
ஓம் கலைக் களஞ்சியமே போற்றி
ஓம் கற்போர்க்கு இனியவளே போற்றி
ஓம் கலைஞானச் செல்வியே போற்றி
ஓம் கரை சேர்க்கும் கண்ணே போற்றி
ஓம் கலைவாணித் தெய்வமே போற்றி
ஓம் காட்சிக்கு இனியவளே போற்றி
ஓம் காயத்ரியாய் அருள்பவளே போற்றி
ஓம் குருவாக உபதேசிப்பவளே போற்றி
ஓம் குறை தீர்த்தருள்வாய் போற்றி
ஓம் குணக் குன்றானவளே போற்றி
ஓம் குற்றம் பொறுப்பவளே போற்றி
ஓம் சந்தேகம் போக்குவாய் போற்றி
ஓம் சச்சிதானந்தப் பொருளே போற்றி
ஓம் சாந்த சொரூபினியே போற்றி
ஓம் சான்றோர் நெஞ்சினளே போற்றி
ஓம் சாரதாம்பிகையே போற்றி
ஓம் சித்தம் தெளிவிப்பாய் போற்றி
ஓம் சித்தியளிப்பவளே போற்றி
ஓம் சுருதிக்கு ஆதாரமே போற்றி
ஓம் சுத்தஞான வடிவே போற்றி
ஓம் ஞானக்கடலானாய் போற்றி
ஓம் ஞானம் தந்தருள்வாய் போற்றி
ஓம் ஞானப்பூங்கோதையே போற்றி
ஓம் ஞானேஸ்வரியே போற்றி
ஓம் ஞானத்தின் வரம்பே போற்றி
ஓம் ஞான ஆசிரியையே போற்றி
ஓம் ஞானத்தின் காவலே போற்றி
ஓம் தவத்தில் ஆழ்ந்தவளே போற்றி
ஓம் தகைமை தருபவளே போற்றி
ஓம் தஞ்சம் அளிப்பவளே போற்றி
ஓம் தாயான தயாபரியே போற்றி
ஓம் தண்ணருள் தருவாய் போற்றி
ஓம் துதித்தவர்க்கு துணையே போற்றி
ஓம் நவமி தேவதையே போற்றி
ஓம் நவராத்திரி நாயகியே போற்றி
ஓம் நன்னெறி தருபவளே போற்றி
ஓம் நலம் அளிப்பவளே போற்றி
ஓம் நாவிற்கு அரசியே போற்றி
ஓம் நல்லவர்களின் மனமே போற்றி
ஓம் நா நயம் அருள்வாய் போற்றி
ஓம் நான்மறை நாயகியே போற்றி
ஓம் நாவில் உறைபவளே போற்றி
ஓம் நாதத்தின் தலைவியே போற்றி
ஓம் நாத வெள்ளமானாய் போற்றி
ஓம் நித்திய ஒளிவடிவே போற்றி
ஓம் நிமலையாய் நின்றவளே போற்றி
ஓம் நித்தம் வளர்பவளே போற்றி
ஓம் நிறைவு அளிப்பவளே போற்றி
ஓம் நுட்பம் கொண்டவளே போற்றி
ஓம் பண்ணின் இசையே போற்றி
ஓம் பாட்டின் ஆதாரமே போற்றி
ஓம் பாவலர் நாடும் பண்பே போற்றி
ஓம் பிரணவ சொரூபமே போற்றி
ஓம் பிரம்மனின் நாயகியே போற்றி
ஓம் பிரம்ம ஞான வடிவே போற்றி
ஓம் பிறவிப்பிணி அறுப்பாய் போற்றி
ஓம் பூரண வடிவானவளே போற்றி
ஓம் புவனத்தைக் காப்பவளே போற்றி
ஓம் புத்தகத்தில்உறைபவளே போற்றி
ஓம் மனம்வாக்கு கடந்தவளே போற்றி
ஓம் மங்கல வடிவானவளே போற்றி
ஓம் மந்திரப் பொருளானவளே போற்றி
ஓம் மாயையை அழிப்பவளே போற்றி
ஓம் முனிவர் நெஞ்சமர்ந்தாய் போற்றி
ஓம் முற்றறிந்த அறிவே போற்றி
ஓம் முக்காலம் உணர்ந்தவளே போற்றி
ஓம் மூலமந்திர வடிவினளே போற்றி
ஓம் மூல நாளில் வந்தவளே போற்றி
ஓம் முக்தி அளிப்பவளே போற்றி
ஓம் மேதையாக்குபவளே போற்றி
ஓம் மேன்மை தருபவளே போற்றி
ஓம் யாகத்தின் பலனே போற்றி
ஓம் யோகத்தின் பயனே போற்றி
ஓம் வழித்துணை வருவாய் போற்றி
ஓம் வரம் அருள்பவளே போற்றி
ஓம் வாணி சரஸ்வதியே போற்றி
ஓம் வாக்கின் நாயகியே போற்றி
ஓம் வித்தக வடிவினளே போற்றி
ஓம் வித்யா லட்சுமியே போற்றி
ஓம் வெண்கலை பூண்டவளே போற்றி
ஓம் வெள்ளை மனத்தாளே போற்றி
ஓம் வெண்தாமரையினாளே போற்றி
ஓம் வீணை ஏந்தியவளே போற்றி
ஓம் வீட்டின்பம் தருவாய் போற்றி
ஓம் வேதத்தின் உட்பொருளே போற்றி
ஓம் வையம் வாழ்விப்பாய் போற்றி
- நவராத்திரி 9 நாட்களும் போற்றி பாடுவது நல்லது.
- இன்று எட்டாம் நாளுக்குரிய போற்றி பாடலை பார்க்கலாம்.
முதலில் பிள்ளையாருக்கு இந்த 16 போற்றிகளை சொல்லவும்.
ஓம் அகர முதல்வா போற்றி!
ஓம் அணுவிற்கணுவாய் போற்றி!
ஓம் ஆனை முகத்தோய் போற்றி!
ஓம் இந்திரன் இளம்பிறைபோற்றி!
ஓம் ஈடிலாத் தெய்வமே போற்றி!
ஓம் உமையவள் மைந்தா போற்றி!
ஓம் ஊழ்வினை அறுப்பாய் போற்றி!
ஓம் எருக்கினில் இருப்பாய்போற்றி!
ஓம் ஐங்கரனே போற்றி!
ஓம் ஒற்றைக் கொம்பனே போற்றி!
ஓம் கற்பக களிறே போற்றி!
ஓம் பேழை வயிற்றோய் போற்றி!
ஓம் பெரும்பாரக் கோட்டாய் போற்றி!
ஓம் வெள்ளிக்கொம்பனே விநாயகா போற்றி!
ஓம் பொன்னும் மெய்ப்பொருளும் தருவாய் போற்றி!
ஓம் போகமும் திருவும் புணர்ப்பாய் போற்றி!
எட்டாம் நாள் போற்றி
ஓம் வேத மெய்பொருளேபோற்றி
ஓம் மேனிக் கருங்குயிலேபோற்றி
ஓம் அண்டர் போற்றும்
அருட் பொருளே போற்றி
ஓம் எண்திசை ஈஸ்வரியேபோற்றி
ஓம் எங்கும் நிறைந்தவளேபோற்றி
ஓம் மாயோனின் மனம்
நிறைந்தவனே போற்றி
ஓம் தூய ஒளியாய் தெரிபவளேபோற்றி
ஓம் சிங்க வாகினித் தேவியேபோற்றி
ஓம் அங்கமெலாம் காக்கும் ஆதரவேபோற்றி
ஓம் சூலத்தில் சத்தியம் காப்பாய்போற்றி
ஓம் துன்பம் துடைக்கும் தூமணிபோற்றி
ஓம் எதிரிகள் விரட்டும் ஏந்தலாய்போற்றி
ஓம் கடுவிஷம் இறக்கும் மருந்தேபோற்றி
ஓம் காப்பதில் நிகரிலாத் தெய்வமேபோற்றி
ஓம் கற்பகமாய் எம்முன் தோன்றுவாய்போற்றி
ஓம் ஜம்தும் துர்க்கா தேவியே போற்றி!!
- நவராத்திரி 9 நாட்களும் போற்றி பாடுவது நல்லது.
- இன்று ஏழாம் நாளுக்குரிய போற்றி பாடலை பார்க்கலாம்.
முதலில் பிள்ளையாருக்கு இந்த 16 போற்றிகளை சொல்லவும்.
ஓம் அகர முதல்வா போற்றி!
ஓம் அணுவிற்கணுவாய் போற்றி!
ஓம் ஆனை முகத்தோய் போற்றி!
ஓம் இந்திரன் இளம்பிறைபோற்றி!
ஓம் ஈடிலாத் தெய்வமே போற்றி!
ஓம் உமையவள் மைந்தா போற்றி!
ஓம் ஊழ்வினை அறுப்பாய் போற்றி!
ஓம் எருக்கினில் இருப்பாய்போற்றி!
ஓம் ஐங்கரனே போற்றி!
ஓம் ஒற்றைக் கொம்பனே போற்றி!
ஓம் கற்பக களிறே போற்றி!
ஓம் பேழை வயிற்றோய் போற்றி!
ஓம் பெரும்பாரக் கோட்டாய் போற்றி!
ஓம் வெள்ளிக்கொம்பனே விநாயகா போற்றி!
ஓம் பொன்னும் மெய்ப்பொருளும் தருவாய் போற்றி!
ஓம் போகமும் திருவும் புணர்ப்பாய் போற்றி!
ஏழாம் நாள் போற்றி
ஓம் மெய்த் தவமே போற்றி
ஓம் மூலாதாரத்து ஒளியேபோற்றி
ஓம் ஆதிமுதல் அம்பரமேபோற்றி
ஓம் அகண்ட பரிபூரணியேபோற்றி
ஓம் அகிலலோக நாயகி போற்றி
ஓம் நல்வினை நிகழ்த்துவாய்போற்றி
ஓம் அஞ்சலென்று அருள்வாய்போற்றி
ஓம் ஆறுமுகன் வேல் தந்தோய்போற்றி
ஓம் சொல்லுக்கு இனிய சுந்தரிபோற்றி
ஓம் வில்லோன் மாயை தந்தவளே போற்றி
ஓம் ஐந்தெழுத்தோன் ஆரணங்கே போற்றி
ஓம் எழுவரில் ஒன்றானவளேபோற்றி
ஓம் இல்லத்தொளி தரும் இறைவி போற்றி
ஓம் ஏற்றம் தரும் ஏறே போற்றி
ஓம் காட்சிக்கு இனியவளேபோற்றி
ஓம் சாம்பவி மாதே போற்றி
- நவராத்திரி 9 நாட்களும் போற்றி பாடுவது நல்லது.
- இன்று ஆறாம் நாளுக்குரிய போற்றி பாடலை பார்க்கலாம்.
முதலில் பிள்ளையாருக்கு இந்த 16 போற்றிகளை சொல்லவும்.
ஓம் அகர முதல்வா போற்றி!
ஓம் அணுவிற்கணுவாய் போற்றி!
ஓம் ஆனை முகத்தோய் போற்றி!
ஓம் இந்திரன் இளம்பிறைபோற்றி!
ஓம் ஈடிலாத் தெய்வமே போற்றி!
ஓம் உமையவள் மைந்தா போற்றி!
ஓம் ஊழ்வினை அறுப்பாய் போற்றி!
ஓம் எருக்கினில் இருப்பாய்போற்றி!
ஓம் ஐங்கரனே போற்றி!
ஓம் ஒற்றைக் கொம்பனே போற்றி!
ஓம் கற்பக களிறே போற்றி!
ஓம் பேழை வயிற்றோய் போற்றி!
ஓம் பெரும்பாரக் கோட்டாய் போற்றி!
ஓம் வெள்ளிக்கொம்பனே விநாயகா போற்றி!
ஓம் பொன்னும் மெய்ப்பொருளும் தருவாய் போற்றி!
ஓம் போகமும் திருவும் புணர்ப்பாய் போற்றி!
இன்று ஆறாம் நாள் போற்றி பாடல் பாடி...
ஆறாம் நாள் போற்றி
ஓம் பொன்னரசியே போற்றி
ஓம் நவமணி நாயகியே போற்றி
ஓம் இன்னமுதாய் இருப்போய்போற்றி
ஓம் சிங்கார நாயகியே போற்றி
ஓம் செம்பொன் மேனியளேபோற்றி
ஓம் மங்காத ஒளியவளே போற்றி
ஓம் சித்திகள் தருவாய் போற்றி
ஓம் திக்கெட்டும் பரவினோய்போற்றி
ஓம் சுத்த பரிபூரணியே போற்றி
ஓம் மகாமந்திர உருவே போற்றி
ஓம் மாமறையுள் பொருளேபோற்றி
ஓம் ஆநந்த முதலே போற்றி
ஓம் ஐவர்க்கும் தலைவி போற்றி
ஓம் செம்மேனியாய் மிளிர்வாய்போற்றி
ஓம் மாகேஸ்வரியே போற்றி
ஓம் மகா சண்டிகையே போற்றி
- நவராத்திரி 9 நாட்களும் போற்றி பாடுவது நல்லது.
- இன்று ஐந்தாம் நாளுக்குரிய போற்றி பாடல்.
முதலில் பிள்ளையாருக்கு இந்த 16 போற்றிகளை சொல்லவும்.
ஓம் அகர முதல்வா போற்றி!
ஓம் அணுவிற்கணுவாய் போற்றி!
ஓம் ஆனை முகத்தோய் போற்றி!
ஓம் இந்திரன் இளம்பிறைபோற்றி!
ஓம் ஈடிலாத் தெய்வமே போற்றி!
ஓம் உமையவள் மைந்தா போற்றி!
ஓம் ஊழ்வினை அறுப்பாய் போற்றி!
ஓம் எருக்கினில் இருப்பாய்போற்றி!
ஓம் ஐங்கரனே போற்றி!
ஓம் ஒற்றைக் கொம்பனே போற்றி!
ஓம் கற்பக களிறே போற்றி!
ஓம் பேழை வயிற்றோய் போற்றி!
ஓம் பெரும்பாரக் கோட்டாய் போற்றி!
ஓம் வெள்ளிக்கொம்பனே விநாயகா போற்றி!
ஓம் பொன்னும் மெய்ப்பொருளும் தருவாய் போற்றி!
ஓம் போகமும் திருவும் புணர்ப்பாய் போற்றி!
இன்று ஐந்தாம் நாள் போற்றி பாடல்...
ஐந்தாம் நாள் போற்றி
ஓம் வீரசக்தியே போற்றி
ஓம் திரிசூலியே போற்றி
ஓம் கபாலியே போற்றி
ஓம் தாளிசினியே போற்றி
ஓம் கவுரி தேவியே போற்றி
ஓம் உத்தமத் தாயே போற்றி
ஓம் தர்மம் காப்பவளே போற்றி
ஓம் உதிரத்தின் தலைவியேபோற்றி
ஓம் மெய்ஞான விதியே போற்றி
ஓம் தாண்டவத் தாரகையேபோற்றி
ஓம் போற்றுவோர் துணையேபோற்றி
ஓம் பச்சைக் காளியே போற்றி
ஓம் பவள நிறத்தினாய் போற்றி
ஓம் ஆகாய ஒளியே போற்றி
ஓம் பூதங்கள் உடையோய்போற்றி
ஓம் காளிகாதேவி சக்தியேபோற்றி
- 9 நாட்களும் போற்றி பாடுவது நல்லது.
- இன்று நான்காவது நாளுக்குரிய போற்றி பாடல்.
முதலில் பிள்ளையாருக்கு இந்த 16 போற்றிகளை சொல்லவும்.
ஓம் அகர முதல்வா போற்றி!
ஓம் அணுவிற்கணுவாய் போற்றி!
ஓம் ஆனை முகத்தோய் போற்றி!
ஓம் இந்திரன் இளம்பிறைபோற்றி!
ஓம் ஈடிலாத் தெய்வமே போற்றி!
ஓம் உமையவள் மைந்தா போற்றி!
ஓம் ஊழ்வினை அறுப்பாய் போற்றி!
ஓம் எருக்கினில் இருப்பாய்போற்றி!
ஓம் ஐங்கரனே போற்றி!
ஓம் ஒற்றைக் கொம்பனே போற்றி!
ஓம் கற்பக களிறே போற்றி!
ஓம் பேழை வயிற்றோய் போற்றி!
ஓம் பெரும்பாரக் கோட்டாய் போற்றி!
ஓம் வெள்ளிக்கொம்பனே விநாயகா போற்றி!
ஓம் பொன்னும் மெய்ப்பொருளும் தருவாய் போற்றி!
ஓம் போகமும் திருவும் புணர்ப்பாய் போற்றி!
இன்று நான்காவது நாள் போற்றி பாடல் பாடி...நவராத்திரியை கொண்டாடுவோம்!
ஓம் கருணை வடிவே போற்றி
ஓம் கற்பகத் தருவே போற்றி
ஓம் உள்ளத்திருள் ஒழிப்பாய் போற்றி
ஓம் ஊழ்விணை தீர்ப்பவளே போற்றி
ஓம் கரும்பின் சுவையே போற்றி
ஓம் கார்முகில் மழையே போற்றி
ஓம் வீரத்திருமகளே போற்றி
ஓம் வெற்றிக்கு வித்திடுவாய் போற்றி
ஓம் பகைக்குப் பகையே போற்றி
ஓம் ஆவேசத் திருவே போற்றி
ஓம் தீமைக்குத் தீயே போற்றி
ஓம் நல்லன வளர்ப்பாய் போற்றி
ஓம் நாரணன் தங்கையே போற்றி
ஓம் அற்புதக் கோலமே போற்றி
ஓம் ஆற்றலுள் அருளே போற்றி
ஓம் புகழின் காரணியே போற்றி
ஓம் காக்கும் கவசமே போற்றி
ஓம் ரோகிணி தேவியே போற்றி
- விநாயகரை நினைத்து நமஸ்காரம் செய்யவும்.
- அம்மன் எழுந்தருளல் முடிந்த உடன் நவராத்திரிக்கு உரிய பூஜையைத் தொடங்க வேண்டும்.
முதலில் பிள்ளையாருக்கு இந்த 16 போற்றிகளை சொல்லவும்.
ஓம் அகர முதல்வா போற்றி!
ஓம் அணுவிற்கணுவாய் போற்றி!
ஓம் ஆனை முகத்தோய் போற்றி!
ஓம் இந்திரன் இளம்பிறைபோற்றி!
ஓம் ஈடிலாத் தெய்வமே போற்றி!
ஓம் உமையவள் மைந்தா போற்றி!
ஓம் ஊழ்வினை அறுப்பாய் போற்றி!
ஓம் எருக்கினில் இருப்பாய்போற்றி!
ஓம் ஐங்கரனே போற்றி!
ஓம் ஒற்றைக் கொம்பனே போற்றி!
ஓம் கற்பக களிறே போற்றி!
ஓம் பேழை வயிற்றோய் போற்றி!
ஓம் பெரும்பாரக் கோட்டாய் போற்றி!
ஓம் வெள்ளிக்கொம்பனே விநாயகா போற்றி!
ஓம் பொன்னும் மெய்ப்பொருளும் தருவாய் போற்றி!
ஓம் போகமும் திருவும் புணர்ப்பாய் போற்றி!
இன்று மூன்றாம் நாள் போற்றி பாடல் பாடி...நவராத்திரியை கொண்டாடுவோம்!
ஓம் அறிவினுக்கறிவே போற்றி
ஓம் ஞானதீபமே போற்றி
ஓம் அருமறைப் பொருளே போற்றி
ஓம் ஆதிமூலமாய் நின்றவளே போற்றி
ஓம் புகழ்தரும் புண்ணியளே போற்றி
ஓம் நற்பாகின் சுவையே போற்றி
ஓம் நல்வினை நிகழ்த்துவோய்போற்றி
ஓம் பரமனின் சக்தியே போற்றி
ஓம் பாபங்கள் களைவாய் போற்றி
ஓம் அன்பெனும் முகத்தவளே போற்றி
ஓம் அகிலத்தின் காப்பே போற்றி
ஓம் செம்மேனியளே போற்றி
ஓம் செபத்தின் விளக்கமே போற்றி
ஓம் தானியந் தருவாய் போற்றி
ஓம் கல்யாணியம்மையே போற்றி
- ஒன்பது நாட்களும் 10-வது நாள் விஜயதசமி என்றும் கொண்டாட வேண்டும்.
- ஒவ்வொரு நாளும் இப்படி தொடங்கி 9 நாட்களும் போற்றி பாடுவது நல்லது.
முதலில் பிள்ளையாருக்கு இந்த 16 போற்றிகளை சொல்லவும்.
ஓம் அகர முதல்வா போற்றி!
ஓம் அணுவிற்கணுவாய் போற்றி!
ஓம் ஆனை முகத்தோய் போற்றி!
ஓம் இந்திரன் இளம்பிறைபோற்றி!
ஓம் ஈடிலாத் தெய்வமே போற்றி!
ஓம் உமையவள் மைந்தா போற்றி!
ஓம் ஊழ்வினை அறுப்பாய் போற்றி!
ஓம் எருக்கினில் இருப்பாய்போற்றி!
ஓம் ஐங்கரனே போற்றி!
ஓம் ஒற்றைக் கொம்பனே போற்றி!
ஓம் கற்பக களிறே போற்றி!
ஓம் பேழை வயிற்றோய் போற்றி!
ஓம் பெரும்பாரக் கோட்டாய் போற்றி!
ஓம் வெள்ளிக்கொம்பனே விநாயகா போற்றி!
ஓம் பொன்னும் மெய்ப்பொருளும் தருவாய் போற்றி!
ஓம் போகமும் திருவும் புணர்ப்பாய் போற்றி!
இன்று இரண்டாவது நாள் போற்றி போற்றி பாடல் பாடி...நவராத்திரியை கொண்டாடுவோம்!
ஓம் வளம் நல்குவாய் போற்றி
ஓம் நலந்தரும் நாயகி போற்றி
ஓம் முக்கண் மூர்த்தியேபோற்றி
ஓம் அறத்தின் வடிவோய்போற்றி
ஓம் மின் ஒளி அம்மா போற்றி
ஓம் எரி சுடராய் நின்ற தேவிபோற்றி
ஓம் ஏற்றத்துக்கரசி போற்றி
ஓம் எரம்பன் தாயானவளேபோற்றி
ஓம் எங்களின் தெய்வமேபோற்றி
ஓம் ஒளிக்குள் ஒளிர்பவனேபோற்றி
ஓம் ஈரேழுலகில் இருப்பாய்போற்றி
ஓம் சூளா மணியே போற்றி
ஓம் சுந்தர வடிவே போற்றி
ஓம் ஞானத்தின் வடிவே போற்றி
ஓம் நட்புக்கரசியே போற்றி
ஓம் திரிமூர்த்தி தேவியேபோற்றி!
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்