search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீரபாண்டிய கட்டபொம்மன்"

    • இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் தென்னகத்தின் தியாக அத்தியாயங்களைத் தம் வீரத்தால் எழுதிய முன்னோடிகளான வீரமங்கை வேலுநாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகியோரின் பிறந்தநாள் இன்று.
    • 1857 சிப்பாய் கலகத்துக்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்பிருந்தே விடுதலைப் போராட்ட விதைகளை ஊன்றிய மண் தமிழ்நாடு எனத் தம் நெஞ்சில் பதிய வேண்டும்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில் கூறி இருப்பதாவது:-

    பதினெட்டாம் நூற்றாண்டிலேயே இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் தென்னகத்தின் தியாக அத்தியாயங்களைத் தம் வீரத்தால் எழுதிய முன்னோடிகளான வீரமங்கை வேலுநாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகியோரின் பிறந்தநாள் இன்று.

    வரி கட்ட மறுத்து, ஆங்கிலேயர்களின் படைபலத்தை எதிர்த்து, உயிரைவிடத் தன்மானமே பெரிதெனத் தமிழரின் பண்பைப் பறைசாற்றிய இவ்விருவரின் வீரத்தை இந்தியர் அனைவரும் அறிய வேண்டும். 1857 சிப்பாய்க் கலகத்துக்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்பிருந்தே விடுதலைப் போராட்ட விதைகளை ஊன்றிய மண் தமிழ்நாடு எனத் தம் நெஞ்சில் பதிய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • சங்கரன்கோவிலில் தி.மு.க. சார்பில் சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் பிறந்தநாள் விழா நடந்தது
    • வீரபாண்டிய கட்டபொம்மன் படத்திற்கு ராஜா எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவிலில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் பிறந்தநாள் விழா நடந்தது. இதில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கி அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த வீரபாண்டிய கட்டபொம்மன் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் சீனிவாசன், மாவட்ட வக்கீல் அணி மருதப்பன், ஒன்றிய செயலாளர் பெரியதுரை, நகர செயலாளர் பிரகாஷ், இளைஞர் அணி சரவணன், மாணவரணி கார்த்திக் மற்றும் பாரதிராஜா, சங்கர், வக்கீல் சதீஷ், பிரகாஷ், ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • ராஜபாளையம் அருகே உள்ள என். புதூர் கிராமத்தில் வீரபாண்டிய கட்டபொம்மனின் 264-வது பிறந்த தின விழா நடந்தது.
    • தே.மு.தி.க.வினரும், தங்கராஜ் தலைமையில் பா.ஜ.க.வினர் கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    ராஜபாளையம்

    வீரபாண்டிய கட்டபொம்மனின் 264-வது பிறந்த தின விழா விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள என். புதூர் கிராமத்தில் நடந்தது. ஊர் தலைவர் நவநீதகிருஷ்ணன் தலைமையில் கட்டபொம்மன் பண்பாட்டுக் கழகத்தினர் மற்றும் ஏராளமான பெண்கள், இளைஞர்கள் மேளதாளம் முழங்க ஊர்வலமாக வந்து கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

    விருதுநகர் மாவட்ட தலைவர் சந்தோஷ்குமார், வக்கீல் பத்மாவதி கண்ணன் முன்னிலையில் ஏராளமான அ.ம.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர்-முன்னாள் எம்.பி.லிங்கம் தலைமையில் தொண்டர்கள் மாலை அணிவித்தனர். ம.தி.மு.க. சார்பில் சாத்தூர் எம்.எல்.ஏ. ரகுராமன் தலைமையிலும், ஒன்றிய செயலாளர் ஞானராஜ் தலைமையில் தி.மு.க.வினரும், ஒன்றிய செயலாளர் ஹாஜா ஷெரிப் தலைமையில் தே.மு.தி.க.வினரும், தங்கராஜ் தலைமையில் பா.ஜ.க.வினர் கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.   

    ×