search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவசாயிகள் வேதனை"

    • அபிராமம் பகுதியில் மழையின்றி நெற்பயிர்கள் கருகி வருகின்றன.
    • இதனால் விவசாயிகள் மனவேதனையில் உள்ளனர்.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டம், அபிராமம் மற்றும் சுற்றுவட்டார பகுதி வானம் பார்த்த பூமியாகும். இங்கு பருவமழையை மட்டுமே எதிர்பார்த்து விவசாயிகள். நெல், மிளகாய் உளுந்து, பருத்தி போன்ற பயிர்களை சுமார் 3 ஆயிரம் ஏக்கருக்கு மேல் சாகுபடி செய்கின்றனர்.

    அபிராமத்தை சுற்றி உள்ள அச்சங்குளம், காடனேரி, வல்லகுளம், நகரத்தார்குறிச்சி, பாப்பனம், நரியன், முத்தாதிபுரம் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 45 நாட்களுக்கு முன் விதைக்கப்பட்ட நெல், பருத்தி உளுந்து, மிளகாய் பயிர்கள் வளர்ந்து பயன்தரக்கூடிய நிலையில் மழை பொய்த்ததால் அந்த பயிர்கள் கருகி வருகின்றன.

    இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்திக்க வேண்டிய நிலை உள்ளது. இதுகுறித்து விவசாயி கர்ணன் கூறுகையில், இந்த ஆண்டு பருவமழை பொய்த்துவிட்டதால் பயிர்கள் கருகும் நிலை உள்ளது. இதனால் பெரும் நஷ்டம் ஏற்படும்.

    இந்த ஆண்டு பயிர் கடன்களை தமிழக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். பார்த்திபனூர் மதகு அணையில் இருந்து கண்மாய்க்கு வரும் கால்வாயை தூர்வாரி அபிராமம் மற்றும் சுற்றுவட்டார கண்மாய்க்கு தண்ணீர் கொண்டுவந்து விவசாயம் செழிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    • குறைவான அளவு திறக்கப்படும் இந்த தண்ணீர் கடைமடை பகுதிக்கு செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
    • கால்வாயின் கடைமடையில் பாசன பகுதிக்குட்பட்ட பகுதி களில் சுமார் 300 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீர் இன்றி கருகுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

    ஈரோடு:

    பவானிசாகர் அணையில் இருந்து 200 கிமீ செல்லும் கீழ்பவானி பிரதான கால்வாயின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசனம் பெறுகின்றன.

    இந்நிலையில் சத்தியமங்கலம் அருகே கடந்த அக்ேடாபர் மாதம் 30-ந் தேதி உடைப்பு ஏற்ப ட்டதால் பாசனத்திற்கான தண்ணீர் நிறுத்தப்பட்டது. பணிகள் முடிவடைந்த நிலையில் நேற்று முதல் விநாடிக்கு 600 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது.

    குறைவான அளவு திறக்கப்படும் இந்த தண்ணீர் கடைமடை பகுதிக்கு செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே தண்ணீர் பிரச்சனையால் தாமதமாக கடைமடை பகுதியில் நெல்சாகுபடி செய்ததாக தெரிவித்த விவசாயிகள், கால்வாய் உடைப்பால் கடந்த 10 நாட்களாக தண்ணீர் முற்றிலும் கிடை க்காத நிலை ஏற்பட்டதாக கூறினர்.

    மேலும் குறைவான அளவு தண்ணீர் திறக்கப்படுவதால் கடைமடை பகுதிக்கு தண்ணீர் வந்து சேராது என்றும் தெரிவித்தனர். கால்வாயின் கடைமடையில் பாசன பகுதி க்குட்பட்ட பாண்டி பாளையம், குட்டக்கா ட்டுவலசு, கணக்க ம்பாளையம், குலவிளக்கு, காகம் உள்ளி ட்ட பகுதி களில் சுமார் 300 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீர் இன்றி கருகுவதாக விவசா யிகள் தெரிவித்துள்ளனர்.

    கடைமடை பகுதிக்கு தண்ணீர் விரைந்து கிடைக்கவும், நெற்பயிர்களை பாதுகாக்கவும் கால்வாயில் முழு கொள்ளளவான 2 ஆயிரம் கன அடி அளவிற்கு தண்ணீரை திறக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தண்ணீர் முழுமையாக கிடைத்தால் மட்டுமே பயிர்களை காப்பாற்ற முடியும் என்றும், இல்லை யெனில் ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் அளவிற்கு செலவு செய்து நடவு செய்த பயிர்கள் வீணாகிவிடும் என்றும் வேதனை தெரிவித்தனர்.

    • விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கியும், தொடர்ந்து வழங்கப்பட்டும் வருகிறது.
    • அவசர, அவசரமாக விளை நிலங்களில் நெற்ப யிற்களை அழிப்பது நியாயம்தானா? எனவும் கேள்வி.

    ஓசூர்,

    பெங்களூர் விமான நிலையம் முதல் ஓசூரை சுற்றி எஸ்.டி.ஆர் ஆர். என்னும் சேட்டிலைட் ரிங்ரோடு, 21 கிராமங்கள் வழியாக 6 வழிச்சாலை அமையவுள்ளது.சேட்டிலைட் ரிங்ரோடு அமைக்க திட்ட மதிப்பீடு முடிந்து விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கியும், தொடர்ந்து வழங்கப்பட்டும் வருகிறது.

    இந்த நிலையில்,ஓசூர் அருகே கொத்தூர் கிராமத்தில் 6 வழிச்சாலை அமைக்க தேர்வு செய்யப்பட்ட நிலத்தில் தற்போது விவசாயிகள் நெற்பயிரிட்டு அறுவடைக்கு தயாராகி வருகிறது.

    இந்நிலையில், அதிகாரிகள் ஜேசிபி வாகனத்தின் மூலம் சாலை பணிகளுக்காக, நெல்வயலில் பயிர்களை அழித்திருப்பது விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    விவசாயிகள் அறுவடைக்காக 1 மாத கால அவகாசம் கேட்டும், அதிகாரிகள் சிறிதும் செவி சாய்க்காமல் பயிர்களை அழித்துள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    சாலை பணிகளை தொடங்கவே, இன்னும் பல மாதங்களாகும் என கூறப்படும் நிலையில், அவசர, அவசரமாக விளை நிலங்களில் நெற்ப யிற்களை அழிப்பது நியாயம்தானா? எனவும் கேள்வி எழுப்பியுள்ள விவசாயிகள், அறுவடைக்கு பிறகு பணிகளை தொடங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு, அரசு அறிவுறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • 500 ஏக்கர் பரப்பளவில் முள்ளங்கி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
    • விவசாயிகள் கடும் வேதனைக்கு ஆளாகி உள்ளனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி, காரிமங்கலம், பாலக்கோடு, பென்னாகரம், நல்லம்பள்ளி, பாப்பி ரெட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் முள்ளங்கி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

    40 நாட்களில் அறு வடைக்கு வருவதால் பெரும்பாலான விவசாயி கள் முள்ளங்கி சாகுபடி செய்து வெளியூர்களுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். இந்நிலையில் கடந்த 2 மாதங்களாக நல்ல மழை பெய்ததால் நீர்நிலைகள் நிரம்பியது.

    இதனால் தருமபுரி மாவட்டம் முழுவதும் சாகுபடி செய்யப்பட்டுள்ள முள்ளங்கி அமோக விளைச்சல் அடைந்துள்ளது. தற்பொழுது மாவட்டத்தில் மாரண்டஹள்ளி, காரிமங்க லம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் முள்ளங்கி அறுவடை செய்து விற்பனை செய்து வருகின்றனர்.

    கடந்த மாதம் முள்ளங்கி வரத்து குறைந்து விலை அதிகரித்து கிலோ ரூ.25 -க்கு விற்பனையானது. இந்நிலையில் தற்போது முள்ளங்கி வரத்து அதிகரித்து விலை கடும் விலை சரிந்துள்ளது. விவசாய நிலங்களுக்கு நேரடியாக வந்து கொள்முதல் செய்யும் வியாபாரிகள் ரூ.2 முதல் 4 ரூபாய் வரை அடிமாட்டு விலைக்கே வாங்கிச் செல்கின்றனர்.

    இதனால் அறுவடை செய்யும் கூலி கிடைக்காமல் விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். கடந்த சில தினங்களுக்கு முன் நல்ல விலைக்கு விற்கப்பட்ட முள்ளங்கி தற்போது ஒரு கிலோ 4 ரூபாய் முதல் 5 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் கடும் வேதனைக்கு ஆளாகி உள்ளனர்.

    • விவசாய நிலங்கள் வானம் பார்த்த பூமியாக மாறியது.
    • அணையில் இருந்த தண்ணீர் முழுவதும் வீணாக சென்று விட்டது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்துள்ள நாகாவதி அணையின் கொள்ளளவு 24 அடி. இந்த அணை கடந்த 1987-ம் ஆண்டு 313 லட்சம் ரூபாய் மதிப்பில் தமிழக அரசால் கட்டப்பட்டது. இந்த அணையை நம்பி பெரும்பாலை, சாமதாள், அரகானஅள்ளி, சிடுவம்பட்டி உள்ளிட்ட 10-க்கும் மேற்ட்ட கிராமங்களை சேர்ந்த சுமார் 1,993 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளது.

    இங்கு ராகி, சாமை, கரும்பு, நெல், கடலை, சோளம், மஞ்சள் உள்ளிட்ட பயிர்கள் விவசாயம் செய்து வருகின்றனர். அது மட்டுமல்லாது அணையை நம்பி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த கால்நடைகள் வளர்ப்பு, மீன் பிடி தொழிலில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளது. இந்த அணை நிரம்பும் சமயத்தில் அங்குள்ள வடது மற்றும் இடது கால்வாய் வழியாக விவசாயத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படும்.

    இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளாக அணை நிரம்பாததால் அணையின் பாசன வசதி இல்லாமல் விவசாய நிலங்கள் வானம் பார்த்த பூமியாக மாறியது. இதனால் விவசாயத்தை நம்பியிருந்த விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாமல் பிழைப்பு தேடி அண்டை மாநிலம் மற்றும் அண்டை மாவட்டங்களுக்கு கூலி வேலைக்கு சென்ற நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக நாகாவதி அணை தனது முழுகொள்ளவை எட்டியது. இதனால் பொது பணி துறையினர் கடந்த மே மாதம் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட்டனர்.

    இந்நிலையில் காலை யில் திறந்து விடும் ஷட்டர் மாலை மீண்டும் அடைத்து விடுவார்கள். மேலும் ஷட்டர் சரியாக பராமரிக்கபடாததால் உடைப்பு ஏற்பட்டு அணையில் இருந்த தண்ணீர் முழுவதும் வீணாக சென்று விட்டது. இதனால் இப்பகுதி விவசாயிகள் செய்வது தெரியாமல் இருந்து வருகின்றனர்.

    தற்போது அணையில் இருந்த ஷட்டரை எடுத்து அணையின் நடை பாதையில் பொது பணி துறையினர் வைத்துள்ளனர். ஷட்டர் உடைந்து தண்ணீர் வீணானதால் கடல் போல் காட்சியளித்த நாகாவதி அணை தற்போது குட்டை போல் காட்சியளிக்கிறது. இந்த அணையை நம்பி இருக்கும் விவசாயிகள் விரைவில் மழை காலம் தொடங்க உள்ளதால் உடைந்து போன ஷட்டரை பொது பணி துறையினர் சரி செய்து தர வேண்டும்.

    என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • திண்டுக்கல் மாவட்டத்தில் சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் பன்னீர் ரோஜா சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
    • விழா காலங்கள் மற்றும் சுபமுகூர்த்த தினங்கள் குறைந்துள்ளதால் பன்னீர் ரோஜா விலை கடும் சரிவை சந்தித்துள்ளது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் பன்னீர் ரோஜா சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

    நாளொன்றுக்கு கொடைரோடு சந்தைக்கு அதிகாலை 5 மணி முதலே சுமார் 500 கிலோ பன்னீர் ரோஜா பூக்கள் கொண்டு வரப்படுவது வழக்கம்.ஆனால் தற்போது விழா காலங்கள் மற்றும் சுபமுகூர்த்த தினங்கள் குறைந்துள்ளதால் பன்னீர் ரோஜா விலை கடும் சரிவை சந்தித்துள்ளது.

    தற்போது இந்த பூக்கள் ரூ.50-க்கு விற்றால் மட்டுமே நஷ்டம் ஏற்படுவதை தவிர்க்க முடியும் எனவும் ஆனால் பன்னீர் ரோஜா பூ கிலோ ரூ.10 முதல் ரூ. 20 வரை மட்டுமே விற்பனை ஆவதால் விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்து வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

    குறிப்பாக கொடைரோடு சந்தையில் இருந்து மதுரை மற்றும் சிவகாசி உள்ளிட்ட பகுதிகளுக்கு பன்னீர் ரோஜா கொள்முதல் செய்து அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். பன்னீர் ரோஜாக்களின் வரத்து அதிகரித்துள்ளதாலும் விழாக்கள் மற்றும் சில்லறை வணிகர்கள், திருமண நிகழ்ச்சிகள் குறைந்துள்ளதால் விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

    எடுப்பு கூலிக்கு கூட இந்த விலை கட்டுபடி ஆகவில்லை என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

    • பாலம் கட்டுமான பணி மெதுவாக நடைபெற்று வருவதால் பொதுமக்கள் போக்குவரத்திற்கு மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
    • இதனால் வளப்பாற்றில் பாசனம் பெறும் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களுக்கு காவிரி நீர் கிடைக்குமா என்ற வேதனையில் விவசாயிகள் குறுவை சாகுபடியை இன்னும் தொடங்கவில்லை.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருப்பய த்தங்குடி வளப்பாற்றில் நெடுஞ்சாலை துறை மூலம் ரூ.1 கோடியே 55 லட்சம் மதிப்பீட்டில் புதிய பாலம் கட்டும் பணி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இந்த பாலம் வழியாக திருப்பயத்தங்குடி, பில்லாளி, திருச்செங்காட்டங்குடி, தென்னமரக்குடி, கீழப்பூ தனூர், நத்தம், வீரபெரு மாநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால், தஞ்சாவூர் சென்று வர முக்கிய வழியாக உள்ளது.மேலும் மேற்கண்ட பகுதிகளை சேர்ந்த பள்ளி கல்லூரி மாணவ-மாணவிகள் சென்று வரவும் இந்த வழியை பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் பாலம் அமைக்கும் பணி மெதுவாக நடைபெற்று வருவதால் மேற்கண்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் போக்குவரத்திற்கு மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் பாலம் கட்டும் பணியால் காவிரி நீர் கடைமடை பகுதியான திருமருகல் பகுதிகளுக்கு வந்து சேருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    இதனால் வளப்பாற்றில் பாசனம் பெறும் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களுக்கு காவிரி நீர் கிடைக்குமா என்ற வேதனையில் விவசாயிகள் குறுவை சாகுபடியை இன்னும் தொடங்கவில்லை. இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை என தெரிவிக்கின்றனர். எனவே பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×