search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Burning paddy fields"

    • அபிராமம் பகுதியில் மழையின்றி நெற்பயிர்கள் கருகி வருகின்றன.
    • இதனால் விவசாயிகள் மனவேதனையில் உள்ளனர்.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டம், அபிராமம் மற்றும் சுற்றுவட்டார பகுதி வானம் பார்த்த பூமியாகும். இங்கு பருவமழையை மட்டுமே எதிர்பார்த்து விவசாயிகள். நெல், மிளகாய் உளுந்து, பருத்தி போன்ற பயிர்களை சுமார் 3 ஆயிரம் ஏக்கருக்கு மேல் சாகுபடி செய்கின்றனர்.

    அபிராமத்தை சுற்றி உள்ள அச்சங்குளம், காடனேரி, வல்லகுளம், நகரத்தார்குறிச்சி, பாப்பனம், நரியன், முத்தாதிபுரம் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 45 நாட்களுக்கு முன் விதைக்கப்பட்ட நெல், பருத்தி உளுந்து, மிளகாய் பயிர்கள் வளர்ந்து பயன்தரக்கூடிய நிலையில் மழை பொய்த்ததால் அந்த பயிர்கள் கருகி வருகின்றன.

    இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்திக்க வேண்டிய நிலை உள்ளது. இதுகுறித்து விவசாயி கர்ணன் கூறுகையில், இந்த ஆண்டு பருவமழை பொய்த்துவிட்டதால் பயிர்கள் கருகும் நிலை உள்ளது. இதனால் பெரும் நஷ்டம் ஏற்படும்.

    இந்த ஆண்டு பயிர் கடன்களை தமிழக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். பார்த்திபனூர் மதகு அணையில் இருந்து கண்மாய்க்கு வரும் கால்வாயை தூர்வாரி அபிராமம் மற்றும் சுற்றுவட்டார கண்மாய்க்கு தண்ணீர் கொண்டுவந்து விவசாயம் செழிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    ×