search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விசேஷ பூஜை"

    • பண்டிதர்கள் மற்றும் அர்ச்சகர்கள் உகாதி ஆஸ்தானம் செய்தனர்.
    • பஞ்சாங்க ஸ்ரவணம் நடைபெற்றது.

    திருமலை:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தெலுங்கு வருடப்பிறப்பையொட்டி உகாதி ஆஸ்தானம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, காலையில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் மலையப்பசுவாமி, விஷ்வக்சேனர் விசேஷ சமர்ப்பணம் செய்தனர். பின்னர் விமான பிரகாரம் மற்றும் கொடிமரத்தை சுற்றி ஊர்வலமாக கோவிலுக்குள் சென்றனர்.

    தங்க வாசலில் கருடாழ்வார் எதிரே சர்வபூபால வாகனத்தில் உற்சவர்களை கொண்டு வந்தனர். உற்சவர்களுக்கு அடுத்துள்ள மற்றொரு பீடத்தில் விஷ்வக்சேனரை கொண்டு வந்தனர். அதன்பின் மூலவர் மற்றும் உற்சவமூர்த்திக்கு புது வஸ்திரம் அணிவித்தனர்.

    அதன்பின் பஞ்சாங்க ஸ்ரவணம் நடைபெற்றது. தங்கவாசலில் ஆகம பண்டிதர்கள் மற்றும் அர்ச்சகர்கள் உகாதி ஆஸ்தானம் செய்தனர். இதில் தேவஸ்தான தலைவர் பூமண. கருணாகர் ரெட்டி, முதன்மை நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • மேலிருப்பு முத்தாலம்மன் கோவில் செடல் திருவிழா வரும் 5-ந் தேதி வெள்ளிக்கிழமை சித்ராபவுர்ணமி அன்று நடக்கிறது.
    • இன்று முதல் 10 நாட்கள் தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, விசேஷ பூஜை ஆகியவை நடைபெற உள்ளது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் மேலிருப்பு முத்தாலம்மன் கோவில் செடல் திருவிழா வரும் 5-ந்தேதி வெள்ளிக்கிழமை சித்ராபவுர்ணமி அன்று நடக்கிறது.இதனை முன்னிட்டு இன்று கொடியேற்று விழா நடந்தது. இன்று முதல் 10 நாட்கள் தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, விசேஷ பூஜை ஆகியவை நடைபெற உள்ளது. இதில் ஏராளமான பெண்கள் உள்பட பலர் திரளாக கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள், விழா குழுவினர், இளைஞர் மன்றத்தினர் சிறப்பாக செய்து வருகின்றனர்.

    ×