search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sedal festival"

    • புதுச்சேரி உழவர்கரை நகராட்சி அரும்பார்த்தபுரம் தக்ககுட்டையில் செங்கழுநீர் அம்மன் கோவில் அமைந்துள்ளது.
    • அதன் செடல் திருவிழா நடந்தது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி உழவர்கரை நகராட்சி அரும்பார்த்தபுரம் தக்ககுட்டையில் செங்கழுநீர் அம்மன் கோவில் அமைந்துள்ளது. அதன் செடல் திருவிழா நடந்தது. இதில் அ.ம.மு.க. மாநில இணைச்செயலாளர் லாவண்யா பங்கேற்று சாமி தரிசனம் செய்தார். அவரை கோவில் நிர்வாகிகள் சுந்தரமூர்த்தி, கலியமூர்த்தி, சந்தோஷ், சிவலிங்கம், கணபதி, சிவக்குமார், முருகன், உறுப்பினர்கள் தவச்செல்வம், வேணு, ரவீந்திரன், ஐயனார், விஜயன் என்ற விஜி, மகிமை மற்றும் கிராம மக்கள், இளைஞர்கள் வரவேற்றனர். பின்னர் லாவண்யாவுக்கு பரிவட்டம் கட்டி மரியாதை அளித்தனர்.

    நிகழ்ச்சியில் அ.ம.மு.க. நிர்வாகிகள் லூர்துசாமி, மோகன், பாலா, விஜயன், கணேஷ் சரவணன், கோபி, சுந்தரமூர்த்தி, சபா, சரளா, சந்திரா, உமா, அமலர்சந்திரா, விஜி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • 4-ம் வெள்ளிக்கிழமையான இன்று காலை செடல் உற்சவம் தொடங்கியது .
    • ெசடல் திருவிழாவை முன்னிட்டு கோவில் அருகே 100-க்கும்மேற்பட்ட திருவிழாக்கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    கடலூர்:

    குறிஞ்சிப்பாடி பஸ் நிலையம் அருகே மிகவும் பழமையான புத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் நடைபெறும் செடல் திருவிழா மிகவும் புகழ்பெற்றது. இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 2-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினசரி காலை மாலை இரு வேளையும் அம்மன் வீதி உலா நடந்தது. இரவில் சிறப்பு கலை நிகழ்ச்சிகள் நடந்து வந்தன. 4-ம் வெள்ளிக்கிழமையான இன்று காலை செடல் உற்சவம் தொடங்கியது . இைதயொட்டி அதிகாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. அதனைத் தொடர்ந்து பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற செடல் அணிந்து வந்து அம்மனை வழிபாடு செய்தனர். குறிஞ்சிப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களை சார்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இந்த ெசடல் திருவிழாவில் கலந்து கொள்கின்றனர். ஒவ்வொருவரும் தங்கள் வேண்டுதலுக்கு ஏற்ப செடல் அணிந்து கொள்வதோடு ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளுக்கும் செடல் அணிவித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பலர் மாவிளக்கு எடுத்து அம்மைன வழிபாடு செய்தனர். ெசடல் திருவிழாவை முன்னிட்டு கோவில் அருகே 100-க்கும்மேற்பட்ட திருவிழாக்கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று இரவு வரை உற்சவம் நடைபெறும். குறிஞ்சிப்பாடி போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். நாளை காலை தேரோட்டம் நடைபெறுகிறது வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைக்கிறார் அறநிலையத்துறை அதிகாரிகள், பரம்பரை தர்மகர்த்தாக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர்.

    • குளக்கரையில் இருந்து ஜலம் திரட்டி கொடியேற்றுவிழா நடைபெற்றது .
    • அம்ம னுக்கு அபிஷேகம் செய்து மாலை 4 மணிக்கு ஊஞ்சல் செடல் உற்சவம் நடைபெற உள்ளது.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் நடுக்கு ப்பம் கிராமத்தில் உள்ள முத்தாலம்மன் கோவிலில் ஆடி செடல் உற்சவம திருவிழாவை முன்னிட்டு கடந்த 13-ந் தேதி மாலை 6மணிக்கு குளக்கரையில் இருந்து ஜலம் திரட்டி கொடியேற்றுவிழா நடைபெற்றது . நேற்று ( வியாழக்கிழமை) அம்மனு க்கு சாகை வார்த்தல் மற்றும் அன்ன தா னம், இரவு தெருக்கூத்து நடைபெற்றது.

    இன்று (வெள்ளிகிழமை ) காலை 9 மணி அளவில் நடுக்குப்பம் குளக்கரையில் இருந்து பால் குடம் எடுத்துச் சென்று அம்ம னுக்கு அபிஷேகம் செய்து மாலை 4 மணிக்கு ஊஞ்சல் செடல் உற்சவம் நடைபெற உள்ளது. நாளை ( சனிக்கிழமை) இரவு 8 மணி யளவில் முத்தாலம்மனுக்கு தலை குளம் பம்பை சிவகுமார் தலைமையில் தாலாட்டு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    • தேரோட்டத்தை முதல்-அமைச்சர் ரங்கசாமி சம்பத் எம்.எல்.ஏ. ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர்.
    • விழாவையொட்டி தினந்தோறும் சாமி வீதிவுலா இன்னிசை கச்சேரி மற்றும் தெருக்கூத்து நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    புதுச்சேரி:

    புதுவை நைனார் மண்டபத்தில் பிரசித்தி பெற்ற நாகமுத்து மாரியம்மன் மற்றும் முத்து மாரியம்மன் கோவில் உள்ளது.

    இக்கோவில்களில் ஓவ்வொரு ஆண்டும் செடல் திருவிழா விமர்சியாக நடைபெறும். இந்த ஆண்டு செடல் திருவிழா நேற்று காலை சக்தி கரக ஊர்வலத்துடன் தொடங்கியது. தொடந்து கொடியேற்றம் மற்றும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் கோவில் அறங்காவலர் குழு தலைவர் அழகப்பன், துணை தலைவர் கார்த்திகேயன், செயலாளர் ஏழுமலை, பொருளாளர் சுந்தரன், உறுப்பினர் லட்சுமணன் மற்றும் விழா உபயதாரர்கள், ஊர் பிரமுகர்கள் பா.ஜனதா கட்சி கூட்டுறவு பிரிவு அமைப்பாளர் வெற்றிச்செல்வம் பா.ஜனதா தொகுதி தலைவர் இன்பசேகர், பொதுச்செயலாளர் விஜயகுமார், கிளைத்தலைவர் மணிகண்டன்,கூட்டுறவு பிரிவு செயற்குழு தலைவர் அசோக் குமார் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து விழா வருகிற 23-ந் தேதி வரை நடைபெறுகிறது. முக்கிய நிகழ்ச்சியான செயல் திருவிழா வருகிற 21-ந் தேதி நடைபெறுகிறது.

    அன்றுமாலை 4.30 மணிக்கு செடல் ஊர்வலமும் மாலை 5 மணிக்கு தேர் பவனியும் நடைபெறுகிறது. தேரோட்டத்தை முதல்-அமைச்சர் ரங்கசாமி சம்பத் எம்.எல்.ஏ. ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர்.

    விழாவில் பக்தர்கள் செடல் அணிந்து கார், பஸ், டிராக்டர், பொக்லை எந்திரம் போன்ற வற்றை இழுத்து சென்று நேர்த்திகடன் செலுத்துவார்கள்

    இக்காட்சி பக்தர்களை மெய்சிலிர்க்க வைக்கும். விழாவையொட்டி தினந்தோறும்  சாமி வீதிவுலா இன்னிசை கச்சேரி மற்றும் தெருக்கூத்து நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    • தீச்சட்டி ஏந்தி ஊர்வலம் நிகழ்ச்சியும் விமர்சையாக நடைபெற்றது.
    • இதற்கான ஏற்பாடுகளை காட்டுக்குப்பம் கிராம மக்கள் செய்திருந்தனர்.

    புதுச்சேரி:

     பாகூர் தொகுதி காட்டுக்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ள கடம்பாடி அம்மன் 42வது ஆண்டு செடல் உற்சவ விழா கடந்த மாதம் 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    பின்னர் தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும்  நேரங்களில் சிறப்பு அலங்காரத்தில் ராஜராஜேஸ்வரி, தானிய லட்சுமி, ஆனந்த சேஷனம், திருச்செந்தூர் முருகன், மதுரை மீனாட்சி சாமிகளின் வீதி உலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நாளான நேற்று காலை 108 பால்குட ஊர்வலமும் பிறகு மாலையில் 101 தீச்சட்டி ஏந்தி ஊர்வலம் நிகழ்ச்சியும் விமர்சையாக நடைபெற்றது.

    பிறகு கார், டிராக்டர், கிரேன் வாகனங்களை கொண்டு பக்தர்கள் செடல் உற்சவம் நிகழ்ச்சியும் விமர்சையாக நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை காட்டுக்குப்பம் கிராம மக்கள் செய்திருந்தனர்.

    • மேலிருப்பு முத்தாலம்மன் கோவில் செடல் திருவிழா வரும் 5-ந் தேதி வெள்ளிக்கிழமை சித்ராபவுர்ணமி அன்று நடக்கிறது.
    • இன்று முதல் 10 நாட்கள் தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, விசேஷ பூஜை ஆகியவை நடைபெற உள்ளது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் மேலிருப்பு முத்தாலம்மன் கோவில் செடல் திருவிழா வரும் 5-ந்தேதி வெள்ளிக்கிழமை சித்ராபவுர்ணமி அன்று நடக்கிறது.இதனை முன்னிட்டு இன்று கொடியேற்று விழா நடந்தது. இன்று முதல் 10 நாட்கள் தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, விசேஷ பூஜை ஆகியவை நடைபெற உள்ளது. இதில் ஏராளமான பெண்கள் உள்பட பலர் திரளாக கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள், விழா குழுவினர், இளைஞர் மன்றத்தினர் சிறப்பாக செய்து வருகின்றனர்.

    ×