search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வருமான வரித்துறை சோதனை"

    • சோதனையில் முக்கிய ஆவணங்கள் ஏதும் கைப்பற்றப்பட்டதா? என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை.
    • வரி ஏய்ப்பு அடிப்படையில் சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் டவுன் பகுதியில் வாசவி என்ற பெயரில் தங்க, வெள்ளி நகைக்கடை செயல்பட்டு வருகிறது. இதன் உரிமையாளர் பிரபு காந்த் (45). இவர் நகைக்கடையுடன் நண்பர்களுடன் இணைந்து ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று மதியம் கோவையில் இருந்து 3 கார்களில் வருமான வரித்துறையினர் வந்தனர். சத்தியமங்கலம் டவுன் பகுதியில் உள்ள நகைக்கடைக்கு திடீரென சென்று ஷட்டரை மூடி சோதனையில் ஈடுபட்டனர். இதேப்போல் வெள்ளி கடை மற்றும் உரிமையாளர் வீடு, அவரது நண்பர்கள் வீடுகளிலும் ஒரே நேரத்தில் வருமானவரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். கிட்டத்தட்ட 20-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.

    மேலும் கடையின் போன் இணைப்பு துண்டிக்கப்பட்டது. கடையில் உள்ளவர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. அதேபோல் வெளியே உள்ளவர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை.

    கடையின் ஒவ்வொரு பகுதியாக சென்று வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். மதியம் 2 மணிக்கு தொடங்கிய சோதனை இரவு 12 மணி வரை கிட்டத்தட்ட 10 மணி நேரம் வரை தொடர்ந்து சோதனை நடந்தது.

    பின்னர் வருமானவரித்துறையினர் சோதனை முடித்துக் கொண்டு கிளம்பி சென்றனர். வரி ஏய்ப்பு அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.

    எனினும் இந்த சோதனை குறித்து வருமான வரித்துறையினர் முழுமையான தகவல் தெரிவிக்கவில்லை. சோதனையில் முக்கிய ஆவணங்கள் ஏதும் கைப்பற்றப்பட்டதா? என்பது குறித்தும் தகவல் வெளியாகவில்லை. ஒரே நேரத்தில் வருமான வரித்துறையினர் நடத்திய இந்த சோதனை சத்தியமங்கலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பெங்களூரு, கொச்சி உள்ளிட்ட இடங்களிலும் நீலகண்டன் ஜவுளி தொடர்பான தொழிலில் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது.
    • நுங்கம்பாக்கம், வேப்பேரி, கோபாலபுரம், பட்டாளம் ஆகிய இடங்களிலும் வருமான வரி சோதனை நடைபெற்றது.

    சென்னை:

    சென்னை கே.கே. நகரில் வசித்து வருபவர் நீலகண்டன். இவர் ஜவுளி தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.

    இந்த நிலையில் கே.கே. நகரில் உள்ள அவரது வீடு மற்றும் ஜவுளி நிறுவனங்கள் ஆகியவற்றில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    தி.நகர் பகுதியை சேர்ந்த தொழில் அதிபர்களான பிரகாஷ், தினேஷ், நாகேஸ் ஆகியோருக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது. நுங்கம்பாக்கம், வேப்பேரி, கோபாலபுரம், பட்டாளம் ஆகிய இடங்களிலும் வருமான வரி சோதனை நடைபெற்றது.

    பெங்களூரு, கொச்சி உள்ளிட்ட இடங்களிலும் நீலகண்டன் ஜவுளி தொடர்பான தொழிலில் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது.

    ஜவுளி நிறுவனம் முறையாக வருமான வரி கட்டவில்லை என்கிற புகாரின்பேரிலும், தொழில் அதிபர்கள் மீதான புகாரின் பேரிலும் சென்னையில் 10 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. பெங்களூருவில் இருந்து வந்திருந்த வருமான வரித்துறை அதிகாரிகள் சென்னையில் உள்ள அதிகாரிகளுடன் சேர்ந்து சோதனை நடத்தி வருகிறார்கள்.

    இந்த சோதனையின்போது ஜவுளி நிறுவனம் சார்பில் முறையாக வருமான வரி கட்டப்பட்டுள்ளதா? என்பது பற்றி ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன. கம்ப்யூட்டர்களில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த ஆவணங்களையும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    இந்த சோதனை முடிவில் தான் வரி ஏய்ப்பு தொடர்பான தகவல்கள் தெரிய வரும்.

    கே.கே. நகர் 9-வது செக்டார் 59-வது தெருவில் நீலகண்டன் வசித்து வருகிறார். "வஸ்த்ரா டெக்ஸ்டைல்ஸ்" என்ற பெயரில் ஜவுளி நிறுவனத்தை இவர் நடத்தி வருகிறார்.

    இந்த வீட்டில் தான் வருமான வரித்துறை அதிகாரிகள் 6 பேர் இன்று காலை 7.30 மணியில் இருந்து சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆயுதப்படை போலீஸ் பாதுகாப்புடன் சோதனை நடந்து வருகிறது. மற்ற இடங்களிலும் போலீஸ் பாதுகாப்புடன் சோதனை நடைபெற்று வருகிறது.

    • சிமெண்டு சாக்குப்பையில் கட்டுக்கட்டாக பணம் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
    • கிடைத்த பணமான ரூ.78 லட்சத்தை கேரளா கொண்டு செல்வதற்காக ஒரு காரில் இருந்து மற்றொரு காருக்கு மாற்றினோம்.

    கோவை:

    கோவை மதுக்கரை போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் இளவேந்தன் தலைமையில் இரவு 7.30 மணியளவில் செட்டிப்பாளையம் பிரிவு அருகே ரோந்து சென்றனர்.

    அப்போது அங்கு நின்று கொண்டு இருந்த சிலர் ஒரு காரில் இருந்து மற்றொரு காருக்கு சிமெண்டு சாக்குப்பைகளை மாற்றிக் கொண்டு இருந்தனர். அவர்கள் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    இதனையடுத்து போலீசார் காரின் அருகே சென்று சோதனை செய்தனர்.

    அப்போது சிமெண்டு சாக்குப்பையில் கட்டுக்கட்டாக பணம் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து போலீசார் அங்கு நின்றுகொண்டு இருந்த 3 பேரையும் மடக்கி பிடித்தனர். மேலும் சாக்குப்பையில் இருந்த பணம் மற்றும் 2 கார்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த சசிகாந்த் (வயது 48). இவரது மகன் நிகில் (22), சுரேஷ் (45) என்பது தெரிய வந்தது. பின்னர் போலீசார் அவர்களிடம் பணம் எப்படி வந்தது என விசாரணை நடத்தினர்.

    நாங்கள் கேரள மாநில வடக்கஞ்சேரியில் தங்க நகை வியாபாரம் செய்து வருகிறோம். கோவை ராஜ வீதியை சேர்ந்த மனோஜ்குமார் என்பவரது வீட்டில் 1,403 கிராம் தங்க கட்டிகளை விற்றோம். அதில் கிடைத்த பணமான ரூ.78 லட்சத்தை கேரளா கொண்டு செல்வதற்காக ஒரு காரில் இருந்து மற்றொரு காருக்கு மாற்றினோம். அப்போது எங்களை போலீசார் பிடித்து விட்டனர்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ஆனால் அவர்களிடம் பணத்தை கொண்டு செல்வதற்கான உரிய ஆவணங்கள் இல்லை. எனவே மதுக்கரை போலீசார் ரூ.78 லட்சம் பணம், 2 கார்கள் மற்றும் 3 பேரையும் மத்திய வருமான வரித்துறை குற்ற புலனாய்வு துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர். அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • 2 இடங்களிலும் 10-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
    • கோவையில் 6 இடங்களில் நடந்த சோதனையில் 4 இடங்களில் சோதனை நிறைவு பெற்று விட்டது.

    கோவை:

    அமைச்சர் எ.வ. வேலு தொடர்புடையவர்களின் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் கடந்த 3-ந் தேதி முதல் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    கோவை நஞ்சுண்டாபுரம் ரோட்டில் உள்ள பார்சன் குடியிருப்பில் வசித்து வரும் தி.மு.க. கலை இலக்கிய பகுத்தறிவு பிரிவு பேரவை துணை செயலாளர் மீனா ஜெயக்குமார் வீடு, அவரது மகன் வீட்டிலும், கோவை சவுரிபாளையத்தில் உள்ள அவரது மகன் அலுவலகத்திலும் சோதனை நடந்தது.

    இதபோல் சிங்காநல்லூரை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் எஸ்.எம்.சாமி, சவுரிபாளையத்தில் உள்ள காசா கிராண்ட் அலுவலகம், கள்ளிமடையில் உள்ள காசா கிராண்ட் முன்னாள் இயக்குனர் செந்தில்குமாரின் வீடுகளிலும் சோதனை நடந்தது.

    இதில் 2 இடங்களில் சோதனை ஒரே நாளில் நிறைவடைந்தது. மற்ற இடங்களில் 4 நாட்களை கடந்தும் சோதனை நடந்தது. நேற்று மீனா ஜெயக்குமார் வீடு உள்பட 3 இடங்களில் சோதனை நடைபெற்றது.

    இன்று 6-வது நாளாக கோவையில் சோதனை நடைபெற்று வருகிறது. நஞ்சுண்டாபுரம் ரோட்டில் உள்ள மீனா ஜெயக்குமாரின் வீடு மற்றும், சவுரிபாளையத்தில் உள்ள அவரது மகன் அலுவலகத்தில் இந்த சோதனையானது நடக்கிறது.

    2 இடங்களிலும் 10-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். ஏற்கனவே அங்கு பல முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ள நிலையில் அதிகாரிகள் தொடர்ந்து சோதனை செய்து மேலும் சில ஆவணங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    கோவையில் 6 இடங்களில் நடந்த சோதனையில் 4 இடங்களில் சோதனை நிறைவு பெற்று விட்டது. இந்த 4 இடங்களில் இருந்தும் பல்வேறு முக்கிய ஆவணங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

    • நான் ஒன்றும் வெளிநாட்டில் இருந்து வரவில்லை. இந்த மண்ணுக்கு சொந்தகாரன்.
    • எனது மூத்த மகன் குமரன் தான் சரஸ்வதி அறக்கட்டளையின் தலைவராக உள்ளார்.

    சென்னை:

    தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான சென்னை, திருவண்ணாமலை உள்பட இடங்களில் 5 நாட்கள் நடைபெற்ற வருமான வரி சோதனை நேற்று நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து அமைச்சர் எ.வ.வேலு திருவண்ணாமலையில் உள்ள தனது இல்லத்தில் நேற்று இரவு நிருபர்களிடம் கூறியதாவது:-

    என்னுடைய கோப்புகளை பார்க்கும் உதவியாளர் சுப்பிரமணி மற்றும் எனது டிரைவரிடம் 5 நாட்களாக கேள்வி என்ற பெயரில் வருமான வரித்துறையினர் மன உளைச்சலை உருவாக்கி விட்டார்கள். கண்ணீர் வரவைக்கும் வகையில் கேள்விகளால் துளைத்து விட்டார்கள். நான் தனியாக வசித்து வருகிறேன். எனது மனைவி தனியே வசிக்கிறார். எனது மகன்கள் இருவரும் தனித்தனியே வசிக்கிறார்கள். அனைவருமே வருமான வரியை சரியாக கட்டி வருகிறோம். ஆனால் அனைவரிடமுமே வருமான வரித்துறையினர் கேள்விகளால் துளைத்தெடுத்து மன உளைச்சலை ஏற்படுத்தி இருக்கிறார்கள். இறுதியாக நான் தங்கியிருந்த கல்லூரிக்கே வந்து, சல்லடை போட்டு ஆய்வும் நடத்தினார்கள். என்னை தொடர்புபடுத்தி விழுப்புரம், வந்தவாசி, கரூர், கோவை, திருவண்ணாமலையில் பல இடங்களில் சோதனை நடத்தி இருக்கிறார்கள். எல்லோருமே பயந்துபோயிருக்கிறார்கள்.

    வருமான வரித்துறை அதிகாரிகள் மீது எனக்கு கோபம் இல்லை. அம்புதான் இவர்கள். அம்பு விட்டவர்கள் எங்கேயோ இருக்கிறார்கள்.

    இந்த 4 நாட்கள் நடந்த வருமான வரி சோதனை தொடர்பான வெளியாகி உள்ள கற்பனை கதைகளுக்கு பதில் சொல்ல வேண்டிய சூழ்நிலையில் நான் இருக்கிறேன். நான் ஒன்றும் வெளிநாட்டில் இருந்து வரவில்லை. இந்த மண்ணுக்கு சொந்தகாரன். நான் அடிப்படையில் விவசாய வீட்டு பிள்ளையை சேர்ந்தவன் என்பது அனைவருக்கும் தெரியும்.

    சென்னை வந்து படத்தொழிலில் ஈடுபட்டேன். பல திரைப்படங்களுக்கு வினியோகஸ்தராக இருந்தேன். பட தயாரிப்பாளராகவும் ஆனேன். இப்படி நான் ஈட்டிய பணத்தின் மூலம்தான் என்னுடைய தாயார் சரஸ்வதி அம்மாள் என்ற பெயரில் அறக்கட்டளையை 1991-ம் ஆண்டு தொடங்கினேன்.

    இந்த அறக்கட்டளையின் நிறுவனராக இருந்து அதன் மூலம் பல்வேறு கல்வி நிறுவனங்களை நாங்கள் உருவாக்கினோம். இந்த பகுதியில் நாங்கள் தொடங்கிய கல்லூரிகளால் பல என்ஜினீயர்கள் உருவாகி உள்ளனர். தொழிற்புரட்சி ஏற்பட்டது.

    நான் பொதுவாழ்க்கையில் ஒழுக்கத்தை கடைபிடித்துக் கொண்டிருப்பவன்.

    என் வீட்டிலோ, என் மனைவி வீட்டிலோ அல்லது எனது 2 மகன்கள் வீட்டிலோ, கல்லூரி வளாகத்திலோ ஒரு பைசா கூட பறிமுதல் செய்திருந்தால் கூட அதற்கு பொறுப்பேற்று பதில் சொல்வதற்கு நான் தயாராக இருக்கிறேன்.

    எனது மூத்த மகன் குமரன் தான் சரஸ்வதி அறக்கட்டளையின் தலைவராக உள்ளார். எனக்கும் அறக்கட்டளைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனக்குள்ள சொத்து என்றால் 48 ஏக்கர் 33 செண்டு நிலம் இருக்கிறது. காந்திநகரில் உள்ள எனக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தை ஒரு மருத்துவமனைக்காக 33 ஆண்டுகள் லீசுக்கு வழங்கியுள்ளோம். சென்னையில் ஒரு வீடு உள்ளது. இது மட்டும் தான் எனக்கான சொத்து. இதைத்தான் தேர்தல் பிரமாண பத்திரத்திலும் குறிப்பிட்டுள்ளேன்.

    அமைச்சர் பதவிக்கு வந்தபிறகு ஒரு செண்டு நிலம் கூட நான் சொத்தாக சேர்த்துக்கொள்ளவில்லை. ஒவ்வொரு ஆண்டும் வருமான வரித்துறைக்கு எனது வரவு செலவு கணக்கை சரியாக தாக்கல் செய்து வருகிறேன். வருமான வரித்துறையை ஏமாற்றுபவன் அல்ல நான்.

    என்னிடம் மக்கள் மனு அளிக்க வருவது தவறா? என்னுடன் தொடர்புபடுத்தி அவர்கள் அனைவரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வருவது நியாயமா?

    பா.ஜ.க.வில் தொழில் அதிபர்களே இல்லையா... அங்கெல்லாம் வருமான வரித்துறை போகிறதா? தி.மு.க. மீது மட்டும் வருமான வரித்துறையினர் ரெய்டுக்கு வருவது ஏன்? இந்த ரெய்டுக்கெல்லாம் நாங்களோ, தி.மு.க.வோ, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினோ பயப்பட போவது கிடையாது. ரெய்டு மூலமாக எங்களை அடக்கிவிட முடியாது. இந்த ரெய்டால் 5 நாட்கள் எனது அரசுப்பணி முடங்கி இருக்கிறது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிசாவையே பார்த்தவர். அவரது அரவணைப்பில் இருப்பவர்கள் நாங்கள். வருகிற பாராளுமன்ற தேர்தல் தான் எங்களது இலக்கு. அந்த தேர்தலில் 40-க்கு 40 தொகுதிகளை வென்று காட்டுவதே குறிக்கோள். அந்த குறிக்கோளை முன்வைத்தே நாங்கள் செயல்பட்டு கொண்டிருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது அமைச்சர் எ.வ.வேலுவின் மூத்த மகன் குமரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • 2 கார்களில் வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் 10-க்கு மேற்பட்டோர் சோதனையில் ஈடுபட்டனர்
    • அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் மணப்பாறை சாமிநாதன் வீட்டில் சோதனை நடத்தப்பட்டதாக தெரிகிறது.

    திருச்சி:

    தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சராக இருக்கும் எ.வ.வேலு வீடு, அலுவலகங்கள், அவர் தொடர்புடையவர்கள் அலுவலகங்கள் வீடுகளில் கடந்த சில நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    அந்த வகையில் அவருடன் தொடர்பு இருப்பதாக கருதப்படும் திருச்சி தென்னூர் அண்ணா நகர் கண்ணதாசன் சாலை பகுதியைச் சேர்ந்த தொழில் அதிபர் மணப்பாறை சாமிநாதன் வீட்டில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

    2 கார்களில் வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் 10-க்கு மேற்பட்டோர் இந்த சோதனையில் ஈடுபட்டனர். நிதி நிறுவன அதிபரான சாமிநாதன் காப்பி தூள் ஏஜென்சியாகவும் உள்ளார். சோதனைக்கு பின்னர் சாமிநாதன் குடும்பத்தினரை வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணைக்காக காரில் அழைத்து சென்றனர் சென்றனர்.

    அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் மணப்பாறை சாமிநாதன் வீட்டில் சோதனை நடத்தப்பட்டதாக தெரிகிறது.

    ஏற்கனவே கரூர் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் 80-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்ட நிலையில் திருச்சியிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கரூர் மாவட்டத்தில் நான்கு இடங்களில் வருமான வரி சோதனை தொடங்கின.
    • தொடர்ந்து நள்ளிரவு வரை சுரேஷ் என்பவரின் நிதி நிறுவனம் மற்றும் அவரது வீடு ஆகிய இடங்களில் சோதனை நடைபெற்றது.

    கரூர்:

    அமைச்சர் எ.வ.வேலுக்கு தொடர்புடைய இடங்களில் 3-ம் தேதி தொடங்கிய சோதனை பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்டத்தில் நான்கு இடங்களில் சோதனை தொடங்கின. கரூர் மாநகராட்சி பகுதியில் தி.மு.க.வை சேர்ந்த மறைந்த முன்னாள் கரூர் மாவட்ட செயலாளர் வாசுகி முருகேசனின் சகோதரி பத்மாவின் வீடு, காந்திபுரம் பகுதியில் உள்ள சுரேஷ் என்பவர் நிதி நிறுவனம், வையாபுரி நகர் பகுதியில் உள்ள அவரது வீடு என தொடர்ந்து 3 இடங்களில் கடந்த 3 நாட்களாக நடைபெற்றது.

    4-வது நாளான நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை முடிவில் மறைந்த முன்னாள் தி.மு.க. மாவட்ட செயலாளர் வாசுகி முருகேசனின் சகோதரி பத்மா என்பவரின் வீட்டில் சோதனை நிறைவடைந்தது.

    தொடர்ந்து நள்ளிரவு வரை சுரேஷ் என்பவரின் நிதி நிறுவனம் மற்றும் அவரது வீடு ஆகிய இடங்களில் சோதனை நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து சிறிய ஓய்வெடுப்பதற்காக தங்கும் விடுதிக்கு சென்ற அதிகாரிகள், 2 இடங்களிலும் மத்திய பாதுகாப்பு படை போலீசாரை பாதுகாப்பில் அமர்த்திவிட்டு சென்றனர்.

    இந்நிலையில் தற்போது மீண்டும் வருமான வரித்துறை அதிகாரிகள் 5-வது நாளாக 2 இடங்களிலும் சோதனை நடத்தி வருகின்றனர்.

    • காசாகிராண்ட், ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களிலும் இன்று 5-வது நாளாக சோதனை நடந்தது.
    • அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் தொடர் சோதனை நடந்து வருவது திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    வேங்கிக்கால்:

    தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவின் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

    சென்னை, திருவண்ணாமலை உள்பட எ.வ.வேலுவுக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் பாதுகாப்புடன் வருமானத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    திருவண்ணாமலையில் எ.வ.வேலுவுக்கு சொந்தமான வீடு மற்றும் கல்லூரியிலும் இன்று 5-வது நாளாக வருமான வரி சோதனை நடந்தது.

    இது தவிர காசாகிராண்ட், ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களிலும் இன்று 5-வது நாளாக சோதனை நடந்தது.

    கடந்த வெள்ளிக்கிழமை 3-ந் தேதி முதல் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது. எனினும் இதுவரை நடைபெற்ற சோதனையில் கைப்பற்றப்பட்ட முக்கிய ஆவணங்கள் குறித்து எந்த தகவலையும் வருமான வரித்துறை வெளியிடவில்லை.

    அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் தொடர் சோதனை நடந்து வருவது திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான ஆழ்வார்பேட்டை வீட்டில் சோதனை எதுவும் நடைபெறவில்லை.
    • மீனா ஜெயக்குமார் வீடு மற்றும் அருகே வசிக்கும் அவரது மகன் ஸ்ரீராம் வீடுகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    சென்னை:

    தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு வீடு மற்றும் அலுவலகங்களில் இன்று தொடர்ந்து 4-வது நாளாக வருமான வரி சோதனை நடந்தது.

    சென்னை, திருவண்ணாமலையில் உள்ள அவரது வீடு, கல்லூரிகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    சென்னை கிண்டியில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான சிறப்பு விருந்தினர் மாளிகையில் கடந்த 3 நாட்களாக அதிகாரிகள் சோதனை நடத்தினர். அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான ஆழ்வார்பேட்டை வீட்டில் சோதனை எதுவும் நடைபெறவில்லை.

    இது தவிர காசாகிராண்ட், அப்பாசாமி ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் இன்று சோதனை நடந்தது. மேலும் கோவையில் உள்ள அமைச்சரின் நெருக்கமான பிரமுகர் ஒருவர் வீட்டிலும் சோதனை நடந்து வருகிறது.

    எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் கடந்த வெள்ளிக்கிழமை 3-ந் தேதி முதல் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    எனினும் இதுவரை நடைபெற்ற சோதனையில் கைப்பற்றப்பட்ட முக்கிய ஆவணங்கள் குறித்து எந்த தகவலையும் வருமான வரித்துறை வெளியிடவில்லை.

    சோதனையின் முடிவில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்த தகவலை வருமான வரித்துறை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பொதுப்பணி ஒப்பந்ததாரர் வீடுகள் அலுவலகங்கள், பிரபல கட்டுமான நிறுவனங்கள், ரியல் எஸ்டேட், காசா கிராண்ட் ஆகியவற்றிலும், கரூரில் உள்ள தி.மு.க.வின் முன்னாள் எம்.எல்.ஏ.வான வாசுகி முருகேசன் சகோதரி பத்மா வீடுகளிலும் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

    எனினும் அதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை. கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாகவும் எ.வ.வேலு வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

    தி.மு.க. கலை இலக்கிய பகுத்தறிவு பிரிவு மாநில துணை செயலாளராக இருப்பவர் மீனா ஜெயக்குமார். இவர் தனது குடும்பத்தினருடன் கோவை நஞ்சுண்டாபுரம் ரோட்டில் உள்ள பார்சன் குடியிருப்பில் வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் கடந்த 3-ந் தேதி இவரது வீட்டிற்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்துவதற்காக 2 கார்களில் வந்தனர்.

    மீனா ஜெயக்குமார் வீடு மற்றும் அருகே வசிக்கும் அவரது மகன் ஸ்ரீராம் வீடுகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதே போல் சவுரிபாளையத்தில் உள்ள ஸ்ரீராமின் அலுவலகத்திலும் சோதனை நடந்தது.

    இதேபோல் சிங்காநல்லூரில் உள்ள தி.மு.க. பிரமுகர் எஸ்.எம்.சாமி வீட்டிலும் சோதனை நடந்தது. சோதனை முடிவுக்கு பிறகு எஸ்.எம்.சாமியை அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

    இதுதவிர சிங்காநல்லூர் அடுத்த கள்ளிமடையில் உள்ள காசா கிராண்ட் முன்னாள் இயக்குனர் செந்தில்குமார் வீடு, சவுரி பாளையத்தில் உள்ள காசா கிராண்ட் அலுவலகத்திலும் வருமான வரித்துறை சோதனை நடந்தது.

    இதில் மீனா ஜெயக்குமார் மகன் ஸ்ரீராம் மற்றும் தி.மு.க. பிரமுகர் எஸ்.எம்.சாமி வீட்டில் சோதனை நிறைவடைந்து விட்டது.

    மற்ற இடங்களில் 3 நாட்களை கடந்து சோதனை சென்று கொண்டிருக்கிறது.

    இன்று 4-வது நாளாக மீனா ஜெயக்குமார் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

    சோதனையின்போது வீட்டில் இருந்து பல்வேறு முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாக தெரிகிறது. கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் வீட்டில் இருப்பவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    இதேபோல் சவுரிபாளையத்தில் உள்ள மீனா ஜெயக்குமாரின் மகன் ஸ்ரீராம் அலுவலகத்திலும் 4-வது நாளாக சோதனை நடந்தது.

    சிங்காநல்லூர் கள்ளிமடையில் உள்ள காசா கிராண்ட் முன்னாள் இயக்குனர் செந்தில்குமார் வீட்டிலும் சோதனை நடைபெற்றது. அவரது வீட்டிலும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு விசாரணை நடந்தது.

    இதேபோல் சவுரிபாளையத்தில் உள்ள காசா கிராண்ட் அலுவலகத்திலும் 4-வது நாளாக சோதனை நீடிக்கிறது.

    சோதனை நடைபெறும் இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள், ஆதரவாளர்கள் வீடுகளில் சோதனை நடத்தப்படுகிறது.
    • சோதனைகளால் கட்சிகளை முடக்கவோ மக்கள் ஆதரவை பெறவோ முடியாது.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியதாவது:-

    தமிழகத்தில் பா.ஜனதாவுக்கு மக்கள் என்றுமே ஆதரவு தரப்போவதில்லை. தூத்துக்குடியில் காங்கிரஸ் பூத் கமிட்டி மாநாடு நேற்று நடந்தது. இது மிகப்பெரிய எழுச்சியுடன் நடந்தது. அத்தனை பேரும் காங்கிரஸ் உணர்வுடன் கலந்து கொண்டார்கள்.

    அண்ணாமலை செல்லும் இடமெல்லாம் காசு கொடுத்து கூட்டத்தை சேர்க்க முயற்சிக்கிறார்கள். பணத்தை வாரி இறைத்தும் பலனில்லை.

    மிகப்பெரிய வாக்கு சதவீதத்தை பெற போவதாக அண்ணாமலை கனவு காண்கிறார். கடந்த தேர்தலில் அண்ணாமலைக்கே செல்வாக்கு இல்லாமல் போனதை மக்கள் பார்த்தார்கள். அந்த கோபத்தில் தான் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது வருமான வரித்துறையை ஏவி விட்டார்கள்.

    சோதனை நடத்தினார்கள். வழக்கு போட்டார்கள். ஆனால் செந்தில் பாலாஜி வீட்டில் என்ன கண்டு பிடித்தார்கள்? என்ன கைப்பற்றினார்கள்? என்ற எந்த விவரத்தையும் அதிகாரப்பூர்வமாக அமலாக்கத்துறையோ, வருமான வரித்துறையோ வெளியிடவில்லையே.

    அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள், ஆதரவாளர்கள் வீடுகளில் சோதனை நடத்தப்படுகிறது. இப்போதும் அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் சோதனை நடத்துகிறார்கள். சோதனைகளால் கட்சிகளை முடக்கவோ மக்கள் ஆதரவை பெறவோ முடியாது. சாதனைகளை சொல்லித்தான் ஆதரவை பெற முடியும். மோடி அரசாங்கத்துக்கு சாதனை என்று சொல்ல எதுவுமில்லை. மக்களிடையே வெறுப்பையும், மோதலையும் தான் உருவாக்கி வருகிறது.

    தி.மு.க. அரசு சாதனைகளை சொல்லி மக்கள் ஆதரவை பெற்றுள்ளது. அதை எதிர்கொள்ள முடியாமல்தான் சோதனையை ஏவுகிறார்கள். தி.மு.க.வும் சோதனைகளை கண்டு அஞ்சவில்லை. மக்களும் இதை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. இந்த பழி வாங்கும் நடவடிக்கைகளை பார்த்து பார்த்து மக்களுக்கு மோடி அரசாங்கம் மீது கூடுதல் வெறுப்புதான் வரும்.

    வருகிற 25 மற்றும் 26-ந்தேதிகளில் நெல்லை, கன்னியாகுமரியில் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டம் நடக்கிறது.

    அதைத் தொடர்ந்து வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இன்னும் 2 மாதத்தில் கூட்டங்களை நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் கடந்த வெள்ளிக்கிழமை 3-ந் தேதி முதல் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
    • கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாகவும் எ.வ.வேலு வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்றது.

    வேங்கிக்கால்:

    தமிழக பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள் அமைச்சர் எ.வ.வேலு வீடு மற்றும் அலுவலகங்களில் இன்று தொடர்ந்து 4-வது நாளாக வருமான வரி சோதனை நடந்தது.

    சென்னை, திருவண்ணாமலையில் உள்ள அவரது வீடு, கல்லூரிகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் கடந்த வெள்ளிக்கிழமை 3-ந் தேதி முதல் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    எனினும் இதுவரை நடைபெற்ற சோதனையில் கைப்பற்றப்பட்ட முக்கிய ஆவணங்கள் குறித்து எந்த தகவலையும் வருமான வரித்துறை வெளியிடவில்லை.

    சோதனையின் முடிவில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்த தகவலை வருமான வரித்துறை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பொதுப்பணி ஒப்பந்தாரர் வீடுகள் அலுவலகங்கள், பிரபல கட்டுமான நிறுவனங்கள், ரியல் எஸ்டேட், காசா கிராண்ட், ஆகியவற்றிலும், கரூரில் உள்ள தி.மு.க.வின் முன்னாள் எம்.எல்.ஏவான வாசுகி முருகேசன் சகோதரி பத்மா ஆகியோரின் வீடுகளிலும் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

    எனினும் அதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை. கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாகவும் எ.வ.வேலு வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்தது.

    • சோதனையின் போது வீட்டில் இருந்து பல்வேறு முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாக தெரிகிறது.
    • கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் வீட்டில் இருப்பவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    கோவை:

    தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்கள் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடு, அலுவலகங்களில் தமிழகம் முழுவதும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    தி.மு.க. கலை இலக்கிய பகுத்தறிவு பிரிவு மாநில துணை செயலாளராக இருப்பவர் மீனா ஜெயக்குமார்.

    இவர் தனது குடும்பத்தினருடன் கோவை நஞ்சுண்டாபுரம் ரோட்டில் உள்ள பார்சன் குடியிருப்பில் வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் கடந்த 3-ந்தேதி இவரது வீட்டிற்கு வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்துவதற்காக 2 கார்களில் வந்தனர்.

    மீனா ஜெயக்குமார் வீடு மற்றும் அருகே வசிக்கும் அவரது மகன் ஸ்ரீராம் வீடுகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதேபோல் சவுரிபாளையத்தில் உள்ள ஸ்ரீராமின் அலுவலகத்திலும் சோதனை நடந்தது.

    இதேபோல் சிங்காநல்லூரில் உள்ள தி.மு.க. பிரமுகர் எஸ்.எம்.சாமி வீட்டிலும் சோதனை நடந்தது. சோதனை முடிவுக்கு பிறகு எஸ்.எம்.சாமியை அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

    இதுதவிர சிங்காநல்லூர் அடுத்த கள்ளிமடையில் உள்ள காசாகிராண்ட் முன்னாள் இயக்குனர் செந்தில்குமார் வீடு, சவுரிபாளையத்தில் உள்ள காசா கிராண்ட் அலுவலகத்திலும் வருமான வரித்துறை சோதனை நடந்தது.

    இதில் மீனா ஜெயக்குமார் மகன் ஸ்ரீராம் மற்றும் தி.மு.க. பிரமுகர் எஸ்.எம்.சாமி வீட்டில் சோதனை நிறைவடைந்து விட்டது.

    மற்ற இடங்களில் 3 நாட்களை கடந்து சோதனை சென்று கொண்டிருக்கிறது.

    இன்று 4-வது நாளாக மீனா ஜெயக்குமார் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

    சோதனையின் போது வீட்டில் இருந்து பல்வேறு முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாக தெரிகிறது. கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் வீட்டில் இருப்பவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    இதேபோல் சவுரிபாளையத்தில் உள்ள மீனா ஜெயக்குமாரின் மகன் ஸ்ரீராம் அலுவலகத்திலும் 4-வது நாளாக சோதனை நடந்தது.

    சிங்காநல்லூர் கள்ளிமடையில் உள்ள காசா கிராண்ட் முன்னாள் இயக்குனர் செந்தில்குமார் வீட்டிலும் சோதனை நடைபெற்றது. அவரது வீட்டிலும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு விசாரணை நடந்தது.

    இதேபோல் சவுரிபாளையத்தில் உள்ள காசா கிராண்ட் அலுவலகத்திலும் 4-வது நாளாக சோதனை நீடிக்கிறது.

    சோதனை நடைபெறும் இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    ×