search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வ.உ.சி"

    • சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மேல்கரை பகுதியில் வ.உ.சிதம்பரனார் நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது.
    • பொதுமக்கள் வ.உ.சி. படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மேல்கரை பகுதியில் கப்பலோட்டிய தமிழர் வ.உ. சிதம்பரனாரின் 86-வது நினைவு நாள் நடந்தது. இதில் தி.மு.க. கவுன்சிலர் சதீஷ்குமார், காங்கிரஸ் கவுன்சிலர் புருஷோத்தமன் மற்றும் பொதுமக்கள் வ.உ.சி. படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதேபோல் கால்பிரவு, பெரிய கோட்டை, திருப்பாசேத்தி பகுதியில் வ.உ.சி. நினைவுநாள் நிகழ்ச்சி நடந்தது.

    • தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைய தொடங்கியுள்ளது. இதன் எதிரொலியாக தக்காளி விலையும் அதிகரித்துள்ளது.
    • இன்று வ.உ.சி காய்கறி மார்க்கெட்டில் கிருஷ்ணகிரி, ஆந்திராவில் இருந்து 10 டன் தக்காளி மட்டும் விற்பனைக்கு வந்துள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டுக்கு தினமும் ஆந்திரா, கிருஷ்ணகிரி, ஒட்டன்சத்திரம், தாளவாடி போன்ற பகுதிகளில் இருந்து தக்காளி அதிக அளவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. தினமும் 15 டன் தக்காளி லோடு விற்பனைக்கு வந்தது.

    இந்நிலையில் சமீபகாலமாக தக்காளி விலை கூடுவதும் குறைவதுமாக நிலையற்ற தன்மையுடன் இருந்து வருகிறது. நேற்று வ.உ.சி. மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.35-க்கு விற்பனையானது. நேற்று 15 டன் தக்காளி விற்பனைக்கு வந்தது.

    இந்நிலையில் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைய தொடங்கியுள்ளது. இதன் எதிரொலியாக தக்காளி விலையும் அதிகரித்துள்ளது.

    இன்று வ.உ.சி காய்கறி மார்க்கெட்டில் கிருஷ்ணகிரி, ஆந்திராவில் இருந்து 10 டன் தக்காளி மட்டும் விற்பனைக்கு வந்துள்ளது. நேற்றைவிட இன்று வரத்து குறைந்ததால் தக்காளி விலையும் அதிகரித்தது. இன்று சுமாரான தக்காளி ஒரு கிலோ ரூ.45-க்கும், நல்ல தக்காளி ஒரு கிலோ ரூ.50-க்கும் விற்பனையானது.

    ×