search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உயர்ந்தது"

    • பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
    • அணைக்கு வினாடிக்கு 954 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாய நிலங்களின் வாழ்வாதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது.

    கடந்த சில மாதங்களாகவே அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவு நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் குறைந்து வந்தது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீர் பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

    இதன் காரணமாக நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. இதேப்போல் மாவட்டத்தில் உள்ள மற்ற அணைகளிலும் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 82.74 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 954 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 800 கன அடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 150 கனஅடி என மொத்தம் அணையில் இருந்து பாசனத்திற்காக 950 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    இதேப்போல் 41.75 அடி கொள்ளளவு கொண்ட குண்டேரி பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 35.87 அடியாக உள்ளது.

    30.84 அடி கொள்ளளவு கொண்ட பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 24.31 அடியாக உள்ளது. 33.46 அடி கொள்ளளவு கொண்ட வரட்டுபள்ளம் அணையின் நீர்மட்டம் 25.49 அடியாக உள்ளது.

    • ஈரோட்டில் கடுமையான வெயில் நிலவி வருகிறது.
    • இதனால் பழங்கள் விலை கடந்த வாரங்களை விட அதிக அளவில் உயர்ந்து விட்டது.

    ஈரோடு:

    கோடைக்காலம் தொடங்கும் முன்பே ஈரோட்டில் கடுமையான வெயில் நிலவி வருகிறது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத அளவுக்கு அனல் காற்று வீசி வருகிறது.

    வெப்பத்தை தணிக்க பொதுமக்கள் தர்பூசணி, இளநீர், நுங்கு, வெள்ளரி பிஞ்சுகள், பழங்கள் மற்றும் ஜூஸ்களை சாப்பிட்டு வருகின்றனர்.

    இதனால் பழங்கள் விலை கடந்த வாரங்களை விட அதிக அளவில் உயர்ந்து விட்டது.

    ஈரோடு பழமார்க்கெ ட்டில் இன்று இத்தாலி, துருக்கி ஆப்பிள் கிலோ ரூ.200-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஈரான் ஆப்பிள் கிலோ ரூ.120-க்கும், மாதுளை கிலோ ரூ.180 முதல் ரூ.200 வரைக்கும் விற்பனை யானது.

    மேலும் ஒரு கிலோ ஆரஞ்சு ரூ.120-க்கும், நாக்பூர் ஆரஞ்சு கிலோ ரூ.60 முதல் ரூ.80-க்கும், திராட்சை கிலோ ரூ.70-க்கும் விற்பனையானது.

    இதேபோல் சாத்துக்குடி கிலோ ரூ.70-க்கும், சப்போட்டா கிலோ ரூ.40-க்கும் பன்னீர் திராட்சை கிலோ ரூ.80-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    பழங்களின் விலை உயர்ந்தாலும் கோடை வெப்பத்தை தணிக்க பொதுமக்கள் வழக்கம் போல் பழங்களை வாங்கி வருகின்றனர். 

    • ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டிற்கு இன்று 10 டன் காய்கறிகள் மட்டுமே விற்பனைக்கு வந்தன. இதன் காரணமாக கடந்த வாரத்தை விட இந்த வாரம் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது.
    • ஒரு கிலோ கேரட் ரூ.90 முதல் ரூ.100 வரை விற்கப்பட்டு வருகிறது. இதேபோல் கத்திரிக்காய் விலையும் அதிரடியாக உயர்ந்து உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டில் 700-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் செயல்பட்டு வருகின்றன.

    இங்கு சில்லரை வியாபாரம், மொத்த வியாபாரம் நடைபெற்று வருகின்றன. ஒட்டன் சத்திரம், மேச்சேரி, தாளவாடி, ஊட்டி, மேட்டு ப்பாளையம், ஆந்திரா போன்ற பகுதிகளில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு வருகின்றன.

    வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டில் தினமும் 20 டன் காய்கறிகள் விற்பனை க்கு வந்து கொண்டிருந்தன. இந்நிலையில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால் காய்கறிகள் விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைந்துள்ளது.

    இதன் எதிரொலியாக காய்கறிகள் விலை உயர்ந்துள்ளது. ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டிற்கு இன்று 10 டன் காய்கறிகள் மட்டுமே விற்பனைக்கு வந்தன. இதன் காரணமாக கடந்த வாரத்தை விட இந்த வாரம் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது.

    கேரட்டை பொருத்த வரை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. ஒரு கிலோ கேரட் ரூ.90 முதல் ரூ.100 வரை விற்கப்பட்டு வருகிறது. இதேபோல் கத்திரிக்காய் விலையும் அதிரடியாக உயர்ந்து உள்ளது. கடந்த வாரம் 70 ரூபாய் வரை விற்ற கத்திரிக்காய் இன்று ரூ.90 முதல் ரூ.100 வரை விற்பனையானது.

    இதேபோல் மற்ற காய்கறிகளின் விலை கிலோவில் வருமாறு:

    பீன்ஸ்-80, பீட்ரூட்-50-70, சவ்சவ்-30, குடைமிளகா-60, கோவக்காய்-40, கருணைக்கிழங்கு-40, தக்காளி-40, பீர்க்கங்காய்-60, முள்ளங்கி, பாவக்காய், புடலங்காய், வெண்டைக்காய்-40, முருங்கைக்காய் -60, சின்ன வெங்காயம்-25, பெரிய வெங்காயம்-40, இஞ்சி-70, முட்டைகோஸ்-25, கருப்பு அவரைக்காய்-90, பட்டை அவரைக்காய்-60, காளிப்ளவர்-50.

    இன்னும் சில நாட்கள் காய்கறிகள் விலை இதே நிலையில் நீடிக்கும் என்றும், அதன் பிறகு சரியாகிவிடும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதி, கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களில் கனமழை பெய்ததால் நொய்யல் ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
    • அணையில் இருந்து வினாடிக்கு 421 கன அடி தண்ணீர் நொய்யல் ஆற்றில் வெளியேற்ற ப்பட்டது.

    சென்னிமலை:

    மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகள் மற்றும் கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் நொய்யல் ஆற்றில் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. கடந்த 2 நாட்க ளுக்கு முன்பு சென்னிமலை அருகே உள்ள ஒரத்துப் பாளையம் அணையில் 7 அடி தண்ணீர் மட்டுமே தேங்கி இருந்தது.

    மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதி, கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களில் கனமழை பெய்ததால் நொய்யல் ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இதையடுத்து அதிக அளவு தண்ணீர் அணைக்கு வந்தது. நேற்று முன் தினம் நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 675 கன அடி தண்ணீர் நீர்வரத்து இருந்தது.

    அணையில் இருந்து வினாடிக்கு 421 கன அடி தண்ணீர் நொய்யல் ஆற்றில் வெளியேற்றப்பட்டது.

    அப்போது அணையில் 11 அடி தண்ணீர் தேங்கி இருந்தது.

    பின்னர் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது. நேற்று காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 553 கன அடி நீர்வரத்து இருந்தது.

    அணையில் இருந்து வினாடிக்கு 470 கனஅடி தண்ணீர் ஆற்றில் வெளியேற்றப்பட்டது.

    இதையடுத்து அணையின் நீர்மட்டம் 13 அடியாக உயர்ந்தது. மேலும் நேற்று பகலில் நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது.

    வெள்ளப்பெருக்கால் நீர்வரத்து அதிகரித்ததால் ஒரத்துப்பாளையம் அணையில் இருந்து அதிக அளவு தண்ணீர் 6 மதகு களில் வெளியேற்றப்பட்டது. 

    • வ.உ.சி. பூங்கா காய்கறி மார்க்கெட்டில் காய்கறிகள் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இதன் காரணமாக காய்கறிகள் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
    • ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனையானது.

    ஈரோடு:

    ஈரோடு வ. உ.சி. காய்கறி மார்க்கெட்டிற்கு தாளவாடி, ஒட்டன்சத்திரம், பழனி, ஆந்திரா கர்நாடகா போன்ற பகுதிகளில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு வருகிறது.

    இந்நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்ததால் காய்கறிகள் விளைச்சல் பாதிக்கப்பட்டு காய்கறிகள் வரத்து குறைந்துள்ளது. அதுமட்டுமின்றி தொடர்ந்து முகூர்த்த நாட்கள், கோவில் விசேஷங்கள் வருவதால் காய்கறிகளின் தேவைகள் மேலும் அதிகரித்தது.

    இந்நிலையில் இன்று வ.உ.சி. பூங்கா காய்கறி மார்க்கெட்டில் காய்கறிகள் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இதன் காரணமாக காய்கறிகள் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

    நாளை மறுநாள் ஓணம் பண்டிகை கொண்டா டப்பட உள்ளதால் காய்கறிகள் கேரளாவுக்கு கொண்டு செல்லப்படு வதால் மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக ரூ.10 முதல் ரூ.40 வரை காய்கறிகள் விலை உயர்ந்துள்ளது.

    குறிப்பாக கடந்த வாரம் ஒரு ஒரு கிலோ கத்திரிக்காய் ரூ.60-க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று ஒரு கிலோ ரூ.80-க்கு விற்கப்படுகிறது. வெண்டைக்காயும் கிலோ ரூ. 20 உயர்ந்து ஒரு கிலோ ரூ.80-க்கு விற்கப்படுகிறது.

    மற்ற காய்கறிகளின் விலை கிலோவில் வருமாறு:

    புடலங்காய்-40-50, பீர்க்கங்காய்-60, பாவை காய்-50, முள்ளங்கி-50, இஞ்சி- 90, பீட்ரூட்-60, பீன்ஸ்-80, கேரட்-100-110, மிளகா-50, முட்டை க்கோஸ்-25, காலிப்ளவர்-40-60, உருளைக்கிழங்கு-50, கருப்பு அவரை, பட்டை அவரை-60, சின்ன வெங்காயம்-40, பெரிய வெங்காயம்-30.

    முருங்கைக்காய் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. கடந்த வாரம் ஒரு கிலோ ரூ.40 விற்ற நிலையில் இன்று ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.150-க்கு விற்பனையானது. இதைபோல் தக்காளி விலையும் கடந்த சில நாட்களாக உயர்ந்து வருகிறது.

    தற்போது பரவலாக மழை பெய்து வருவதால் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து அடியோடு சரிந்து உள்ளது. பொதுவாக வ.உ.சி. காய்கறி மார்க்கெட் 5000 முதல் 7000 பெட்டிகள் வரை தக்காளி வரத்தாகி வந்தது. இன்று வெறும் ஆயிரம் பெட்டிகள் மட்டுமே தக்காளிகள் வரத்தாகின.

    இதன் எதிரொலியாக தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து விட்டது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ தக்காளி ரூ.15-க்கு விற்பனையானது. அதன் பிறகு ஒரு கிலோ ரூ.30-45 வரை விற்பனையானது. இன்று மேலும் அதிகரித்து ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனையானது.

    இதனால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்து ள்ளனர். எனினும் இந்த விலை உயர்வு இன்னும் சில நாட்களுக்குள் சரியாகி விடும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • ஈரோடு வ.உ.சி. பூங்கா காய்கறி மார்க்கெ ட்டிற்கு ஆந்திராவில் இருந்து மட்டும் 5 ஆயிரம் தக்காளி பெட்டிகள் வந்தன.
    • இந்த வாரம் வரத்து குறைந்ததன் எதிரொலியாக ஒரு கிலோ தக்காளி ரூ.30 முதல் ரூ. 35 வரை விற்பனையாகி வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டுக்கு தினமும் தாளவாடி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஒட்டன் சத்திரம், பெங்களூரு, கர்நாடகா, ஆந்திரா போன்ற பகுதிகளில் இருந்து 8 ஆயிரம் தக்காளி பெட்டிகள் விற்பனைக்கு வந்தன.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதேபோல் கேரளா, கர்நாடக மாநிலங்களிலும் மழை தீவிரமாக பெய்து வருகிறது.

    இதன் காரணமாக தக்காளி விளைச்சல்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் தக்காளி வரத்தும் சரிய தொடங்கியுள்ளது. இதனால் தக்காளி விலை அதிகரித்துள்ளது.

    இன்று ஈரோடு வ.உ.சி. பூங்கா காய்கறி மார்க்கெ ட்டிற்கு ஆந்திராவில் இருந்து மட்டும் 5 ஆயிரம் தக்காளி பெட்டிகள் வந்தன. இதன் காரணமாக கடந்த வாரத்தை விட இந்த வாரம் தக்காளி விலை உயர்ந்துள்ளது.

    கடந்த வாரம் ஒரு கிலோ தக்காளி ரூ.10 முதல் 15 வரை விற்பனையாகி வந்தது. இந்த வாரம் வரத்து குறைந்ததன் எதிரொலியாக ஒரு கிலோ தக்காளி ரூ.30 முதல் ரூ. 35 வரை விற்பனையாகி வருகிறது. இன்னும் சில நாட்கள் இதே நிலைமை நீடிக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • புஞ்சைபுளியம்பட்டி பூ மார்க்கெட்டில் ஆடிவெள்ளியையொட்டி பூக்களின் விலை உயர்ந்துள்ளது.
    • இன்று புளியம்பட்டி பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.1800-க்கும், ஒரு கிலோ முல்லை ரூ.700-க்கும், ஒரு கிலோ அரளி ரூ.280-க்கும் விற்கப்பட்டது.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி பூ மார்க்கெட்டில் தினமும் கோட்ட பாளையம், மாதம் பாளையம், தோட்ட சாலை உள்பட பல்வேறு பகுதியில் இருந்து பூக்கள் கொண்டுவரப்படுகிறது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக பூக்கள் விலை குறைந்து வந்த நிலையில் இன்று வரலட்சுமி நோன்பு மற்றும் நாளை ஆடிவெள்ளியை ஒட்டி பூக்களின் விலை உயர்ந்துள்ளது.

    இன்று புளியம்பட்டி பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.1800-க்கும், ஒரு கிலோ முல்லை ரூ.700-க்கும், ஒரு கிலோ அரளி ரூ.280-க்கும் விற்கப்பட்டது. இன்றும் மூன்று நாட்களுக்கு பூக்கள் விலை உயர்ந்து காணப்படும் என்றும் அதன் பிறகு பூக்கள் விலை குறைந்து விடும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • மழை பெய்து வருவதால் காய்கறிகள் விளைச்சல் பாதிக்கப்பட்டு காய்கறிகள் வரத்து குறைய தொடங்கியுள்ளது.
    • மார்க்கெட்டிற்கு திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் போன்ற பகுதியில் இருந்து தக்காளிகள் 4 ஆயிரம் பெட்டிகள் விற்பனைக்கு வந்தன.

    ஈரோடு:

    ஈரோடு வ. உ .சி. பூங்கா காய்கறி மார்க்கெட்டில் 700-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு மொத்த வியாபாரம், சில்லரை விற்பனை நடைபெற்று வருகிறது.

    இங்கு சத்தியமங்கலம், தாளவாடி, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பெங்களூர், ஆந்திரா போன்ற பகுதிகளில் இருந்து காய்கறிகள் அதிக அளவில் வரத்தாகி வருகின்றன.

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருவதால் காய்கறிகள் விளைச்சல் பாதிக்கப்பட்டு காய்கறிகள் வரத்து குறைய தொடங்கியுள்ளது.

    இன்று ஈரோடு வ .உ. சி. பூங்கா மார்க்கெட்டிற்கு காய்கறி வழக்கத்தை விட காய்கறிகள் வரத்து குறைந்துள்ளது. இதனால் இன்று மார்க்கெட்டில் காய்கறி விலை ரூ.5 முதல் ரூ.10 வரை உயர்ந்துள்ளது.

    அதே நேரம் தக்காளிகள் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் அதன் விலை கிலோ ரூ.8 முதல் 10-க்கு விற்கப்பட்டு வருகிறது. இன்று வ. உ. சி. காய்கறி மார்க்கெட்டில் விற்கப்பட்ட காய்கறிகள் விலை கிலோவில் வருமாறு:-

    கத்தரிக்காய்-70-80, வெண்டைக்காய்-15, கேரட்-60, பீன்ஸ்-90,, முள்ளங்கி- 25, பீட்ரூட்- 50, உருளைக்கிழங்கு-40, சொரக்காய்-15, முட்டைக்கோஸ்-40, மொர க்காய்-30, கொத்தவரங்காய் -40, பட்டாஅவரை-30, கருப்புஅவரை-80, காலிப்ளவர்-40, பீர்க்க ங்காய்-40, பாவக்காய்-40, பொடலங்காய்-45, தக்காளி-8-10, முருங்கைக்காய்-40, பச்சை மிளகாய்-60, இஞ்சி-60.

    பொதுவாக ஈரோடு வ. உ.சி காய்கறி மார்க்கெட்டிற்கு திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் போன்ற பகுதியில் இருந்து தக்காளிகள் 4 ஆயிரம் பெட்டிகள் விற்பனைக்கு வந்தன. தற்போது விளைச்சல் அதிகரித்து உள்ளதால் 8 ஈயிரம் பெட்டிகள் வரத்தாகி வருகிறது.

    இதனால் தக்காளி விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. இன்று ஒரு கிலோ தக்காளி ரூ.8 முதல் ரூ. 12 வரை ரகத்திற்கு தகுந்தாற்போல் கொடுக்கப்பட்டு வருகிறது. அதிக அளவில் தக்காளிகள் வரத்தாகி வருவதால் விற்பனையாகாமல் அழுகி அதனை குப்பையில் வியாபாரிகள் போட்டு வருகின்றனர். 

    • தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைய தொடங்கியுள்ளது. இதன் எதிரொலியாக தக்காளி விலையும் அதிகரித்துள்ளது.
    • இன்று வ.உ.சி காய்கறி மார்க்கெட்டில் கிருஷ்ணகிரி, ஆந்திராவில் இருந்து 10 டன் தக்காளி மட்டும் விற்பனைக்கு வந்துள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டுக்கு தினமும் ஆந்திரா, கிருஷ்ணகிரி, ஒட்டன்சத்திரம், தாளவாடி போன்ற பகுதிகளில் இருந்து தக்காளி அதிக அளவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. தினமும் 15 டன் தக்காளி லோடு விற்பனைக்கு வந்தது.

    இந்நிலையில் சமீபகாலமாக தக்காளி விலை கூடுவதும் குறைவதுமாக நிலையற்ற தன்மையுடன் இருந்து வருகிறது. நேற்று வ.உ.சி. மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.35-க்கு விற்பனையானது. நேற்று 15 டன் தக்காளி விற்பனைக்கு வந்தது.

    இந்நிலையில் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைய தொடங்கியுள்ளது. இதன் எதிரொலியாக தக்காளி விலையும் அதிகரித்துள்ளது.

    இன்று வ.உ.சி காய்கறி மார்க்கெட்டில் கிருஷ்ணகிரி, ஆந்திராவில் இருந்து 10 டன் தக்காளி மட்டும் விற்பனைக்கு வந்துள்ளது. நேற்றைவிட இன்று வரத்து குறைந்ததால் தக்காளி விலையும் அதிகரித்தது. இன்று சுமாரான தக்காளி ஒரு கிலோ ரூ.45-க்கும், நல்ல தக்காளி ஒரு கிலோ ரூ.50-க்கும் விற்பனையானது.

    ×