search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வ.உ.சி மார்க்கெட்டில் காய்கறி விலை உயர்ந்தது
    X

    வ.உ.சி மார்க்கெட்டில் காய்கறி விலை உயர்ந்தது

    • மழை பெய்து வருவதால் காய்கறிகள் விளைச்சல் பாதிக்கப்பட்டு காய்கறிகள் வரத்து குறைய தொடங்கியுள்ளது.
    • மார்க்கெட்டிற்கு திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் போன்ற பகுதியில் இருந்து தக்காளிகள் 4 ஆயிரம் பெட்டிகள் விற்பனைக்கு வந்தன.

    ஈரோடு:

    ஈரோடு வ. உ .சி. பூங்கா காய்கறி மார்க்கெட்டில் 700-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு மொத்த வியாபாரம், சில்லரை விற்பனை நடைபெற்று வருகிறது.

    இங்கு சத்தியமங்கலம், தாளவாடி, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பெங்களூர், ஆந்திரா போன்ற பகுதிகளில் இருந்து காய்கறிகள் அதிக அளவில் வரத்தாகி வருகின்றன.

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருவதால் காய்கறிகள் விளைச்சல் பாதிக்கப்பட்டு காய்கறிகள் வரத்து குறைய தொடங்கியுள்ளது.

    இன்று ஈரோடு வ .உ. சி. பூங்கா மார்க்கெட்டிற்கு காய்கறி வழக்கத்தை விட காய்கறிகள் வரத்து குறைந்துள்ளது. இதனால் இன்று மார்க்கெட்டில் காய்கறி விலை ரூ.5 முதல் ரூ.10 வரை உயர்ந்துள்ளது.

    அதே நேரம் தக்காளிகள் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் அதன் விலை கிலோ ரூ.8 முதல் 10-க்கு விற்கப்பட்டு வருகிறது. இன்று வ. உ. சி. காய்கறி மார்க்கெட்டில் விற்கப்பட்ட காய்கறிகள் விலை கிலோவில் வருமாறு:-

    கத்தரிக்காய்-70-80, வெண்டைக்காய்-15, கேரட்-60, பீன்ஸ்-90,, முள்ளங்கி- 25, பீட்ரூட்- 50, உருளைக்கிழங்கு-40, சொரக்காய்-15, முட்டைக்கோஸ்-40, மொர க்காய்-30, கொத்தவரங்காய் -40, பட்டாஅவரை-30, கருப்புஅவரை-80, காலிப்ளவர்-40, பீர்க்க ங்காய்-40, பாவக்காய்-40, பொடலங்காய்-45, தக்காளி-8-10, முருங்கைக்காய்-40, பச்சை மிளகாய்-60, இஞ்சி-60.

    பொதுவாக ஈரோடு வ. உ.சி காய்கறி மார்க்கெட்டிற்கு திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் போன்ற பகுதியில் இருந்து தக்காளிகள் 4 ஆயிரம் பெட்டிகள் விற்பனைக்கு வந்தன. தற்போது விளைச்சல் அதிகரித்து உள்ளதால் 8 ஈயிரம் பெட்டிகள் வரத்தாகி வருகிறது.

    இதனால் தக்காளி விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. இன்று ஒரு கிலோ தக்காளி ரூ.8 முதல் ரூ. 12 வரை ரகத்திற்கு தகுந்தாற்போல் கொடுக்கப்பட்டு வருகிறது. அதிக அளவில் தக்காளிகள் வரத்தாகி வருவதால் விற்பனையாகாமல் அழுகி அதனை குப்பையில் வியாபாரிகள் போட்டு வருகின்றனர்.

    Next Story
    ×