search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஈரோடு வ.உ.சி. மார்க்கெட்டில் காய்கறிகள் விலை உயர்ந்தது
    X

    ஈரோடு வ.உ.சி. மார்க்கெட்டில் காய்கறிகள் விலை உயர்ந்தது

    • வ.உ.சி. பூங்கா காய்கறி மார்க்கெட்டில் காய்கறிகள் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இதன் காரணமாக காய்கறிகள் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
    • ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனையானது.

    ஈரோடு:

    ஈரோடு வ. உ.சி. காய்கறி மார்க்கெட்டிற்கு தாளவாடி, ஒட்டன்சத்திரம், பழனி, ஆந்திரா கர்நாடகா போன்ற பகுதிகளில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு வருகிறது.

    இந்நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்ததால் காய்கறிகள் விளைச்சல் பாதிக்கப்பட்டு காய்கறிகள் வரத்து குறைந்துள்ளது. அதுமட்டுமின்றி தொடர்ந்து முகூர்த்த நாட்கள், கோவில் விசேஷங்கள் வருவதால் காய்கறிகளின் தேவைகள் மேலும் அதிகரித்தது.

    இந்நிலையில் இன்று வ.உ.சி. பூங்கா காய்கறி மார்க்கெட்டில் காய்கறிகள் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இதன் காரணமாக காய்கறிகள் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

    நாளை மறுநாள் ஓணம் பண்டிகை கொண்டா டப்பட உள்ளதால் காய்கறிகள் கேரளாவுக்கு கொண்டு செல்லப்படு வதால் மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக ரூ.10 முதல் ரூ.40 வரை காய்கறிகள் விலை உயர்ந்துள்ளது.

    குறிப்பாக கடந்த வாரம் ஒரு ஒரு கிலோ கத்திரிக்காய் ரூ.60-க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று ஒரு கிலோ ரூ.80-க்கு விற்கப்படுகிறது. வெண்டைக்காயும் கிலோ ரூ. 20 உயர்ந்து ஒரு கிலோ ரூ.80-க்கு விற்கப்படுகிறது.

    மற்ற காய்கறிகளின் விலை கிலோவில் வருமாறு:

    புடலங்காய்-40-50, பீர்க்கங்காய்-60, பாவை காய்-50, முள்ளங்கி-50, இஞ்சி- 90, பீட்ரூட்-60, பீன்ஸ்-80, கேரட்-100-110, மிளகா-50, முட்டை க்கோஸ்-25, காலிப்ளவர்-40-60, உருளைக்கிழங்கு-50, கருப்பு அவரை, பட்டை அவரை-60, சின்ன வெங்காயம்-40, பெரிய வெங்காயம்-30.

    முருங்கைக்காய் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. கடந்த வாரம் ஒரு கிலோ ரூ.40 விற்ற நிலையில் இன்று ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.150-க்கு விற்பனையானது. இதைபோல் தக்காளி விலையும் கடந்த சில நாட்களாக உயர்ந்து வருகிறது.

    தற்போது பரவலாக மழை பெய்து வருவதால் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து அடியோடு சரிந்து உள்ளது. பொதுவாக வ.உ.சி. காய்கறி மார்க்கெட் 5000 முதல் 7000 பெட்டிகள் வரை தக்காளி வரத்தாகி வந்தது. இன்று வெறும் ஆயிரம் பெட்டிகள் மட்டுமே தக்காளிகள் வரத்தாகின.

    இதன் எதிரொலியாக தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து விட்டது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ தக்காளி ரூ.15-க்கு விற்பனையானது. அதன் பிறகு ஒரு கிலோ ரூ.30-45 வரை விற்பனையானது. இன்று மேலும் அதிகரித்து ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனையானது.

    இதனால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்து ள்ளனர். எனினும் இந்த விலை உயர்வு இன்னும் சில நாட்களுக்குள் சரியாகி விடும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×