search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Erode V.U.C."

    • வரத்து அதிகரிப்பால் இன்று தக்காளி விலை மேலும் குறைந்தது.
    • இதனால் பொதுமக்கள் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டிற்கு தாளவாடி, தாராபுரம், திருப்பூர், கிருஷ்ணகிரி, ஆந்திரா, ஒட்டன்சத்திரம் போன்ற பகுதியில் இருந்து தக்காளிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும்.

    வழக்கமாக சாதாரண நாட்களில் 7000 தக்காளி பெட்டிகள் விற்பனைக்கு கொண்டுவரப்படும். இதனால் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ தக்காளி ரூ.10 முதல் 20 வரை விற்பனையானது.

    ஆனால் அதன் பிறகு பல்வேறு காரணங்களால் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு தமிழ்நாடு முழுவதும் தக்காளி வரத்து குறைய தொடங்கியது. இதனால் தக்காளி விலை உயர தொடங்கியது. சென்னை போன்ற பெருநகரங்களில் ஒரு கிலோ தக்காளி ரூ.200-ஐ கடந்தது. ஈரோட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.160-க்கு விற்பனையானது.

    ஈரோட்டில் 600 முதல் 800 பெட்டிகள் மட்டுமே விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன. தக்காளி விலை உயர்வால் பொதுமக்கள் பெண்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். கிலோ கணக்கில் வாங்கிய பெண்கள் 100, 200 என்ற அளவில் தக்காளியை வாங்கி சென்றனர். ஓட்டல்களில் தக்காளி சட்னி, தக்காளி சாதம் நிறுத்தப்பட்டது.

    இதனையடுத்து கடந்த சில நாட்களாக தக்காளி வரத்து சற்று அதிகரிக்க தொடங்கியதால் விளையும் சரிய தொடங்கியது. ஒரு கிலோ 160-க்கு விற்கப்பட்ட தக்காளி படிப்படியாக குறைந்து ரூ.100-க்கு விற்பனையானது. கடந்த ஒரு வாரமாக மேலும் விலை குறைந்து ரூ.80-க்கு விற்பனையாகி வந்தது.

    இந்நிலையில் இன்று ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டிற்கு ஆந்திரா, கிருஷ்ணகிரி, தாராபுரம் தாளவாடி போன்ற பகுதிகளில் இருந்து 2000 தக்காளி தக்காளி பெட்டிகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. வரத்து அதிகரிப்பால் இன்று தக்காளி விலை மேலும் குறைந்தது.

    இன்று ஒரு கிலோ தக்காளி சில்லரை விற்பனையில் ரூ.70-க்கு விற்பனையானது. சுமாரான தக்காளி ரூ.60-க்கு விற்பனையானது. இனி வரக்கூடிய நாட்களில் வரத்து மேலும் அதிகரித்து தக்காளி விலை மேலும் குறையும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    இதனால் பொதுமக்கள் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • காய்கறிகள் விலையும் குறைய தொடங்கி வருகிறது.
    • கடந்த வாரம் 70 ரூபாய்க்கு விற்ற கத்திரிக்காய் இன்று ஒரு கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    ஈரோடு:

    ஈரோடு வ.உ.சி காய்கறி மார்க்கெட்டில் 700-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் செயல்பட்டு வருகின்றன. தாளவாடி, ஓசூர், ஒட்ட ன்சத்திரம், திண்டுக்கல், பெங்களூர், கர்நாடகா, தாராபுரம் போன்ற பகுதி களிலிருந்து தினமும் 100 டன்னுக்கு மேற்பட்ட காய்க றிகள் விற்பனைக்கு கொண் டுவரப்படும்.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக பல்வேறு கார ணங்களால் காய்கறிகள் வரத்து குறைய தொடங்கி யது. இதன் எதிரொலியாக தக்காளி, சின்ன வெங்கா யம், பீன்ஸ், இஞ்சி, போன்ற வைகளின் விலை விண் ணை தொடும் அளவிற்கு உயர்ந்தது. தக்காளி சில்ல ரை விற்பனையில் கிலோ 160 ரூபாய்க்கு விற்பனை யானது.

    இதேபோல் சின்ன வெங்காயம் ஒரு கிலோ 160 ரூபாய் வரை உயர்ந்தது. இதனால் மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். தக்காளி, சின்ன வெங்காயம் விலை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் மீண்டும் காய்கறிகள் வரத்து அதிகரிக்க தொடங்கியது.

    இதன் எதிரொலியாக காய்கறிகள் விலையும் குறைய தொடங்கி வருகிறது. கடத்த சில நாட்களாக உச்சத்தில் இருந்த தக்காளியின் விலை இன்று கிலோ ரூ. 80 முதல் ரூ.100 வரை விற்பனையாகி வருகிறது.

    இதைப்போல் சின்ன வெங்காயத்தின் விலை கடந்த வாரம் ரூ.80 இருந்தது. இன்று மேலும் குறைந்து ரூ.65-க்கு விற்பனையாகி வருகிறது.

    இன்று ஈரோடு வ.உ.சி. மார்க்கெட்டிற்கு 120 டன் காய்கறிகள் விற்ப னைக்கு கொண்டு வரப்ப ட்டிருந்தது. இதனால் பல காய்கறிகளின் விலை கட ந்த வாரத்தை பட இந்த வாரம் குறைந்து உள்ளது.

    கடந்த வாரம் 70 ரூபாய்க்கு விற்ற கத்திரி க்காய் இன்று ஒரு கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்ய ப்படுகிறது. இதேபோல் 40 ரூபாய்க்கு விற்ற வெண்டை க்காய் இன்று ரூ.30-க்கும், 40 ரூபாய்க்கு விற்ற முள்ளங்கி இன்று ரூ.20-க்கு விற்பனை செய்ய ப்படுகிறது.

    இன்று வ.உ.சி. மார்க்கெ ட்டில் விற்கப்பட்ட காய்கறி களின் விலை கிலோவில் வருமாறு:- பாவக்காய்-50, பீர்க்கங்காய்-50, புடலங்காய்-40, முருங்கை க்காய்-30, சுரைக்காய்-20,

    கருப்பு அவரை-100, பட்ட வரை-50, கேரட்-80, பீட்ரூ ட்-80, முட்டைகோஸ்-25, பீன்ஸ்-100, காலிபி ளவர்-40, உருளைக்கிழங்கு-40, பெரிய வெங்காயம்-25, பச்சை மிளகாய்-50, கொ டைமிளகாய்-90, பழைய இஞ்சி-250, புதிய இஞ்சி-150.

    • சின்ன வெங்காயம் விலை அதிகரித்ததால் மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
    • இன்று விலை குறைந்து ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.100-க்கு விற்பனையானது.

    ஈரோடு:

    ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டில் 700-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் செயல்பட்டு வருகிறது. தாளவாடி, சத்தியமங்கலம், தாராபுரம், ஒட்டன்சத்திரம், பெங்களூரு, ஆந்திரா போன்ற பகுதிகளில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

    கடந்த சில நாட்களாக பல்வேறு காரணங்களால் காய்கறிகள் விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்தும் குறைந்தது. இதன் காரணமாக காய்கறிகள் விலை அதிரடியாக உயர்ந்தது. குறிப்பாக சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.160 வரை விற்பனையானது.

    ஏற்கனவே கத்திரிக்காய், பீன்ஸ், இஞ்சி, தக்காளி விலைகள் அதிகரித்து வந்த நிலையில் சின்ன வெங்காயம் விலையும் அதிகரித்ததால் மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

    வெங்காயத்தை பொறுத்தவரை தாளவாடி, ஒட்டன்சத்திரத்தில் இருந்து அதிக அளவில் மார்க் கெட்டுக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படும்.

    இந்நிலையில் தாளவாடி பகுதியில் இருந்து அதிக அளவு சின்ன வெங்காயம் வரத்தானதால் விலை சரிய தொடங்கியது. கடந்த 2 நாட்களாக ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.120-க்கு விற்பனையாகி வந்தது.

    இந்த நிலையில் இன்று மேலும் விலை குறைந்து ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.100-க்கு விற்பனையானது. இன்னும் சில நாட்களில் காய்கறிகளின் விலை மேலும் குறையும் என வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர். 

    • முகூர்த்தம் காரணமாக காய்கறிகள் தேவை அதிகரித்து விலையும் உயர்ந்துள்ளது.
    • மார்க்கெட்டில் பழங்கள் விலை சற்று உயர்ந்துள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு வ .உ.சி . காய்கறி மார்க்கெட்டிற்கு ஒட்டன்சத்திரம், ஊட்டி , தாளவாடி, ஆந்திரா, எடப்பாடி, மேட்டுப்பா ளையம், பெங்களூர், தாரா புரம் போன்ற பகுதிகளில் இருந்து காய்கறிகள் விற்ப னைக்கு கொண்டு வரப்படு கிறது.

    இங்கு வழக்கமாக 75 முதல் 90 டன் வரை காய்கறிகள் வரத்தாகி வரும். ஆனால் பரவலாக மழை பெய்தது காரணமாக காய்கறிகள் விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்தும் குறைந்துவிட்டது.

    இதனால் இன்று வ. உ. சி. காய்கறி மார்க்கெட்டிற்கு வெறும் 50 டன் காய்கறிகள் மட்டுமே விற்பனைக்கு வந்து இருந்தது.

    அதே சமயம் தொடர் முகூர்த்தம் காரணமாக காய்கறிகள் தேவை அதிகரித்து இதன் எதிரொலியாக விலையும் உயர்ந்துள்ளது. கடந்த வாரத்தை விட ஒரு சில காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது.

    இன்று வ. உ.சி. மார்க்கெட்டில் விற்க ப்பட்ட காய்கறிகளின் விலை கிலோவில் வருமாறு:

    கத்திரிக்காய் - 80 - 90, பீர்க்கங்காய்-60, புடல ங்காய்-50, தக்காளி - 35 - 40, பெரிய வெங்காயம் - 30, சின்ன வெங்காயம் - 80, பீன்ஸ்-80, கேரட் - 65, பாவக்காய் - 60,

    முட்டைக்கோஸ் - 20, காலிபிளவர் - 30, குடமிளகாய் -60, முருங்கை க்காய் - 80, பீட்ரூட் - 55, வெண்டைக்காய் - 70, முள்ளங்கி - 40, சுரைக்காய் - 15, சவ்சவ் - 20, பட்ட அவரை - 80, கருப்பு அவரை - 100. இஞ்சி வரத்து வெகுவாக குறைந்து விட்டதால் விலை கிடுகிடு என உயர்ந்து இன்று ஒரு கிலோ ரூ. 200-க்கு விற்கப்படுகிறது.

    ஈரோடு மார்க்கெட்டிற்கு பெங்களூர், மகாராஷ்ட்ரா, ஊட்டி கொடைக்கானல், ஆந்திரா, கிருஷ்ணகிரி போன்ற பகுதிகளில் இருந்து பழங்கள் வரத்தாகி வருகிறது.

    இங்கு நாளொன்றுக்கு 30 டன் வரை பழங்கள் வரத்தாகி வந்தன. தற்போது வரத்து குறைவால் இன்று 10 டன் பழங்கள் மட்டுமே வரத்தாகி இருந்தன.

    இதேப்போல் தொடர் முகூர்த்தம் காரணமாகவும், வரத்து குறைவு காரணமா கவும் ஈரோடு காய்கறி மார்க்கெட்டில் பழங்கள் விலை சற்று உயர்ந்துள்ளது. இன்று விற்கப்பட்ட பழங்களின் விலை கிலோவில் வருமாறு:-

    கொய்யா-50, செந்தூரம் மாம்பழம் - 50, ஜில் பசந்த் மாம்பழம் - 70, ருமேனியா மாம்பழம் -70, கோப்பூர் அல்வா மாம்பழம்-60, இமாம் பசந்த் மாம்பழம் - 50, மாதுளை பழம் - 120, ஆப்பிள் - 200, ஆஸ்திரேலியா ஆரஞ்சு - 120, சாத்துக்குடி-80, பன்னீர் திராட்சை - 120, சின்ன நாவல் பழம் - 240, பெரிய நாவல் பழம் - 360. 

    • வ.உ.சி. பூங்காவில் இன்று காலை காதல் ஜோடிகள் பலர் வந்திருந்தனர்.
    • அவர்கள் பூக்கள் கொடுத்து காதலர் தின வாழ்த்துக்களை பறி மாறி கொண்டனர்.

    ஈரோடு:

    காதலர் தினத்தை யொட்டி ஈரோடு மாவட்ட த்தில் பார்க் மற்றும் சுற்றுலா தலங்களில் காதலர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

    இதையொட்டி ஈரோடு வ.உ.சி. பூங்காவில் இன்று காலை காதல் ஜோடிகள் பலர் வந்திருந்தனர். தொடர்ந்து அவர்கள் ரோஜா பூக்கள் கொடுத்து வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர்.

    இதையடுத்து இளம் காதலர்கள் சிலர் ஊஞ்சல் விளையாடி மகி ழ்ந்தனர். இதை தொடர்ந்து நேரம் செல்ல செல்ல காதலர்கள் அதிகளவில் வந்தனர். அவர்கள் பூங்காவில் அமர்ந்து நீண்ட நேரம் பேசி கொண்டு இருந்தனர்.

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணைக்கு ஈரோடு மாவட்ட மக்கள் மட்டுமின்றி வெளி மாவட்ட பொதுமக்க ளும் ஏராளமானோர் தின மும் வந்து கொட்டும் தண்ணீரில் குளித்து செல்கிறார்கள்.

    மேலும் வாலிபர்கள் மற்றும் இளம்பெண்களும் பலர் வந்து அணைைய சுற்றி பார்த்து செல்கிறார்கள்.

    இந்த நிலையில் காதலர் தினத்தை யொட்டி இன்று காலை முதலே காதலர்கள் பலர் கொடிவேரி தடுப்பணைக்கு வந்தனர். அவர்கள் அணையில் கொட்டும் தண்ணீரை ரசித்து செல்பி எடுத்து கொண்டனர்.

    தொடர்ந்து அவர்கள் பூக்கள் கொடுத்து காதலர் தின வாழ்த்துக்களை பறி மாறி கொண்டனர்.

    இதையொட்டி முன் எச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் கோபிசெட்டி பாளையம் மற்றும் கொடி வேரி அணை பகுதியில் ரோந்து சுற்றி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கண் காணித்து வருகிறார்கள்.

    இதே போல் காதலர் தினத்தை யொட்டி சத்திய மங்கலம் அருகே உள்ள பவானிசாகர் அணை பூங்கா வுக்கு இன்று ஏராளமான காதல் ஜோடியினர் இரு சக்கர வாகனம் மற்றும் கார்களில் வந்திருந்தனர்.

    மேலும் புதிதாக திருமண மான இளம் ஜோடியினர் பலரும் பூங்காவுக்கு வந்த னர். இதை தொடர்ந்து நேரம் செல்ல செல்ல பூங்காவில் காதலர்களின் கூட்டம் அலை மோதியது.

    தொடர்ந்து இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் தங்கள் காதலர்களுக்கு ரோஜா பூ கொடுத்தனர். இதையடுத்து அவர்கள் அணை பூங்காவில் சறுக்கு மற்றும் ஊஞ்சல் விளை யாடியும் மகிழ்ந்தனர்.

    இதையடுத்து அணையில் கொட்டும் தண்ணீரை ரசித்துபடி சென்றனர். மேலும் காதலர்கள் பலர் அங்கு கொட்டும் தண்ணீர் அருகே நின்று செல்பி எடுத்து கொண்டனர்.

    இதை தொடர்ந்து அணை பகுதியில் விற்பனை செய்ய ப்படும் மீன் வகைகளையும் வாங்கி ருசித்து விட்டு சென்றனர்.

    இதனால் பவானிசாகர் அணை பகுதி முழுவதும் இைளஞர்கள் மற்றும் இளம் பெண்கள் ஜோடி, ஜோடி யாக வலம் வந்த வண்ணம் இருந்தனர். இதையொட்டி போலீஸ் பாதுகாப்பு போட ப்பட்டு கண்காணி க்கப்பட்டு வருகிறது.

    • வ.உ.சி. பூங்கா காய்கறி மார்க்கெட்டில் காய்கறிகள் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இதன் காரணமாக காய்கறிகள் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
    • ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனையானது.

    ஈரோடு:

    ஈரோடு வ. உ.சி. காய்கறி மார்க்கெட்டிற்கு தாளவாடி, ஒட்டன்சத்திரம், பழனி, ஆந்திரா கர்நாடகா போன்ற பகுதிகளில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு வருகிறது.

    இந்நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்ததால் காய்கறிகள் விளைச்சல் பாதிக்கப்பட்டு காய்கறிகள் வரத்து குறைந்துள்ளது. அதுமட்டுமின்றி தொடர்ந்து முகூர்த்த நாட்கள், கோவில் விசேஷங்கள் வருவதால் காய்கறிகளின் தேவைகள் மேலும் அதிகரித்தது.

    இந்நிலையில் இன்று வ.உ.சி. பூங்கா காய்கறி மார்க்கெட்டில் காய்கறிகள் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இதன் காரணமாக காய்கறிகள் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

    நாளை மறுநாள் ஓணம் பண்டிகை கொண்டா டப்பட உள்ளதால் காய்கறிகள் கேரளாவுக்கு கொண்டு செல்லப்படு வதால் மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக ரூ.10 முதல் ரூ.40 வரை காய்கறிகள் விலை உயர்ந்துள்ளது.

    குறிப்பாக கடந்த வாரம் ஒரு ஒரு கிலோ கத்திரிக்காய் ரூ.60-க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று ஒரு கிலோ ரூ.80-க்கு விற்கப்படுகிறது. வெண்டைக்காயும் கிலோ ரூ. 20 உயர்ந்து ஒரு கிலோ ரூ.80-க்கு விற்கப்படுகிறது.

    மற்ற காய்கறிகளின் விலை கிலோவில் வருமாறு:

    புடலங்காய்-40-50, பீர்க்கங்காய்-60, பாவை காய்-50, முள்ளங்கி-50, இஞ்சி- 90, பீட்ரூட்-60, பீன்ஸ்-80, கேரட்-100-110, மிளகா-50, முட்டை க்கோஸ்-25, காலிப்ளவர்-40-60, உருளைக்கிழங்கு-50, கருப்பு அவரை, பட்டை அவரை-60, சின்ன வெங்காயம்-40, பெரிய வெங்காயம்-30.

    முருங்கைக்காய் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. கடந்த வாரம் ஒரு கிலோ ரூ.40 விற்ற நிலையில் இன்று ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.150-க்கு விற்பனையானது. இதைபோல் தக்காளி விலையும் கடந்த சில நாட்களாக உயர்ந்து வருகிறது.

    தற்போது பரவலாக மழை பெய்து வருவதால் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து அடியோடு சரிந்து உள்ளது. பொதுவாக வ.உ.சி. காய்கறி மார்க்கெட் 5000 முதல் 7000 பெட்டிகள் வரை தக்காளி வரத்தாகி வந்தது. இன்று வெறும் ஆயிரம் பெட்டிகள் மட்டுமே தக்காளிகள் வரத்தாகின.

    இதன் எதிரொலியாக தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து விட்டது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ தக்காளி ரூ.15-க்கு விற்பனையானது. அதன் பிறகு ஒரு கிலோ ரூ.30-45 வரை விற்பனையானது. இன்று மேலும் அதிகரித்து ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனையானது.

    இதனால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்து ள்ளனர். எனினும் இந்த விலை உயர்வு இன்னும் சில நாட்களுக்குள் சரியாகி விடும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    ×