search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Romantic couples"

    • வ.உ.சி. பூங்காவில் இன்று காலை காதல் ஜோடிகள் பலர் வந்திருந்தனர்.
    • அவர்கள் பூக்கள் கொடுத்து காதலர் தின வாழ்த்துக்களை பறி மாறி கொண்டனர்.

    ஈரோடு:

    காதலர் தினத்தை யொட்டி ஈரோடு மாவட்ட த்தில் பார்க் மற்றும் சுற்றுலா தலங்களில் காதலர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

    இதையொட்டி ஈரோடு வ.உ.சி. பூங்காவில் இன்று காலை காதல் ஜோடிகள் பலர் வந்திருந்தனர். தொடர்ந்து அவர்கள் ரோஜா பூக்கள் கொடுத்து வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர்.

    இதையடுத்து இளம் காதலர்கள் சிலர் ஊஞ்சல் விளையாடி மகி ழ்ந்தனர். இதை தொடர்ந்து நேரம் செல்ல செல்ல காதலர்கள் அதிகளவில் வந்தனர். அவர்கள் பூங்காவில் அமர்ந்து நீண்ட நேரம் பேசி கொண்டு இருந்தனர்.

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணைக்கு ஈரோடு மாவட்ட மக்கள் மட்டுமின்றி வெளி மாவட்ட பொதுமக்க ளும் ஏராளமானோர் தின மும் வந்து கொட்டும் தண்ணீரில் குளித்து செல்கிறார்கள்.

    மேலும் வாலிபர்கள் மற்றும் இளம்பெண்களும் பலர் வந்து அணைைய சுற்றி பார்த்து செல்கிறார்கள்.

    இந்த நிலையில் காதலர் தினத்தை யொட்டி இன்று காலை முதலே காதலர்கள் பலர் கொடிவேரி தடுப்பணைக்கு வந்தனர். அவர்கள் அணையில் கொட்டும் தண்ணீரை ரசித்து செல்பி எடுத்து கொண்டனர்.

    தொடர்ந்து அவர்கள் பூக்கள் கொடுத்து காதலர் தின வாழ்த்துக்களை பறி மாறி கொண்டனர்.

    இதையொட்டி முன் எச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் கோபிசெட்டி பாளையம் மற்றும் கொடி வேரி அணை பகுதியில் ரோந்து சுற்றி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கண் காணித்து வருகிறார்கள்.

    இதே போல் காதலர் தினத்தை யொட்டி சத்திய மங்கலம் அருகே உள்ள பவானிசாகர் அணை பூங்கா வுக்கு இன்று ஏராளமான காதல் ஜோடியினர் இரு சக்கர வாகனம் மற்றும் கார்களில் வந்திருந்தனர்.

    மேலும் புதிதாக திருமண மான இளம் ஜோடியினர் பலரும் பூங்காவுக்கு வந்த னர். இதை தொடர்ந்து நேரம் செல்ல செல்ல பூங்காவில் காதலர்களின் கூட்டம் அலை மோதியது.

    தொடர்ந்து இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் தங்கள் காதலர்களுக்கு ரோஜா பூ கொடுத்தனர். இதையடுத்து அவர்கள் அணை பூங்காவில் சறுக்கு மற்றும் ஊஞ்சல் விளை யாடியும் மகிழ்ந்தனர்.

    இதையடுத்து அணையில் கொட்டும் தண்ணீரை ரசித்துபடி சென்றனர். மேலும் காதலர்கள் பலர் அங்கு கொட்டும் தண்ணீர் அருகே நின்று செல்பி எடுத்து கொண்டனர்.

    இதை தொடர்ந்து அணை பகுதியில் விற்பனை செய்ய ப்படும் மீன் வகைகளையும் வாங்கி ருசித்து விட்டு சென்றனர்.

    இதனால் பவானிசாகர் அணை பகுதி முழுவதும் இைளஞர்கள் மற்றும் இளம் பெண்கள் ஜோடி, ஜோடி யாக வலம் வந்த வண்ணம் இருந்தனர். இதையொட்டி போலீஸ் பாதுகாப்பு போட ப்பட்டு கண்காணி க்கப்பட்டு வருகிறது.

    • ரோஜாப் பூ-பரிசு பொருட்கள் வழங்கி அன்பை பரிமாறினர்.
    • போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

    கோவை

    உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டா–டப்பட்டு வருகிறது.

    ஊட்டியில் ஏராளமான சுற்றுலா தலங்கள் மற்றும் இயற்கை அழகு நிறைந்த பகுதிகள் இருப்பதால் காதல் ஜோடிகள் காதலர் தினத்தை கொண்டாடு–வதற்காக நீலகிரிக்கு வருவது வழக்கம். இந்த ஆண்டும் காதலர் தினத்தை கொண்டாடு–வதற்காக ஏராளமான காதல் ஜோடிகள் ஊட்டிக்கு வந்துள்ளனர்.

    தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டில் இருந்தும் ஏராளமான காதல் ஜோடிகள் வந்துள்ளனர்.

    இன்று காலை காதலர்கள் ஒருவருக்கொ ருவர் காதலர் தின வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர். இருவரும் ஒரே மாதிரியான உடைகளை அணிந்து கொண்டு, ஊட்டி தாவரவியல் பூங்கா மற்றும் ரோஜா பூங்காவுக்கு சென்றனர். அங்கு ரோஜா பூக்களை கொடுத்து ஒருவரு–க்கொருவர் வாழ்த்து தெரிவித்து தங்கள் காதலின் அன்பை வெளிப்படுத்தி கொண்டனர்.தொடர்ந்து பூங்காவில் அடுக்கி வைத்திருந்த மலர் செடிகளை பார்வையிட்டு, அதன்முன்பு ஜோடியாக நின்று புகைப்படமும் எடுத்து மகிழ்ந்தனர்.

    பின்னர் அங்குள்ள புல்வெளியில் அமர்ந்து ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசி காதல் பரிசாக ரோஜாப்பூ, பரிசு பொரு–ட்களையும் வழங்கினர்.

    தொட்ட பெட்டா மலை–சிகரம், படகு இல்லம், பைக்காரா நீர்வீழ்ச்சி, படகு இல்லம், குன்னூர் சிம்ஸ் பூங்கா, கோத்தகிரி நேரு பூங்கா ேபான்ற சுற்றுலா தலங்களையும் கண்டு ரசித்தனர்.

    கோவை மாவட்டத்தில் வ.உ.சி. பூங்கா மற்றும் வா லாங்குளம் கரையில் காலை முதலே காதல் ஜோடிகள் குவிந்தனர்.அவர்கள் தங்களுக்குள் வாழ்த்து க்களை கூறி கொண்டு பல்வேறு பரிசு–பொருட்க–ளையும் பகிர்ந்து கொண்ட–னர். சில கா தல் ஜோடிகள் குளக்க ரையில் அமர்ந்து காதல் பரிசாக அன்பு முத்தங்களை பகிர்ந்து கொண்டதையும் பார்க்க முடிந்தது. இதேபோல் உக்கடம் பெரிய குளம், ஆழியார் அணை, குரங்கு நீர்வீழ்ச்சி, கோவை குற்றாலம் பகுதிக–ளிலும் காதல் ஜோடிகள் நீண்ட நேரம் அமர்ந்து மனம் விட்டு பேசி மகிழ்ந்தனர்.காதலர் தினத்தை–யொட்டி மலர் விற்ப னை நிலை யங்கள், கிப்ட் ஷாப்புக–ளிலும் பரிசு பொருட்கள் வாங்க ஏராளமான காதல் ஜோடிகள் திரண்டு இருந்ததை காண முடிந்தது.

    காதல் ஜோடியினர் பொது இடங்களில் அத்துமீறாமல் இரு க்கவும், அதே சமயம் பல்வே று அ மை– ப்புகளை சேர்ந்த வ ர்கள் காதல் ஜோடிகளை தொந்தரவு செய்யாமல் இருக்கவும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.ஊட்டி மற்றும் கோவையில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்க–ளிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்ப டுத்தப்பட்டிருந்தது. 

    • நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
    • பாரம்பரியத்தை வலியுறுத்தும் ஜல்லிக்கட்டு சிலை ஆகியவை அங்கு நிறுவப்பட்டு வருகிறது.

    குனியமுத்தூர்,

    கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் குறிச்சி குளக்கரையில் அழகான நடைபாதை, வண்ணமயமான விளக்குகள், நமது பாரம்பரியத்தை வலியுறுத்தும் ஜல்லிக்கட்டு சிலை ஆகியவை அங்கு நிறுவப்பட்டு வருகிறது. இதனால் நாள்தோறும் மாலை வேளையில் பார்வையாளர்கள் கூட்டம் அதிகமாகவே காணப்படுகிறது.

    பொதுமக்களை தவிர காதல் ஜோடியினரும் அதிகளவில் குளக்கரையில் குவிந்து வருகின்றனர். அவ்வாறு வரும் காதல் ஜோடியினர் மக்களை போன்று சுற்றி பார்த்து விட்டு சென்றால் பரவாயில்லை.

    ஆனால் அவர்கள் தங்களை யாரும் கண்டு கொள்வதில்லை என்ற நோக்கத்தில் சில காதல் ஜோடியினர் குளக்கரைகளில் அமர்ந்து சில்மிச சேட்டைகளிலும், அத்துமீறலிலும் ஈடுபட்டு வருகின்றனர்.இது அங்கு குடும்பத்தோடு சுற்றி பார்க்க வரும் மக்களுக்கு முகம் சுளிக்கும்படியாக உள்ளது.

    இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

    மக்கள் பொழுதை போக்குவதற்காக குறிச்சி குளக்கரைக்கு வருகின்றனர். அவர்கள் தங்கள் குடும்பத்துடன் குளத்தை சுற்றி பார்த்து, அங்கு ஸ்மார்ட் சிட்டியின் மூலம் அழகுப்படுத்தப்பட்ட பகுதிகளை பார்வையிடுகிறார்கள்.

    அப்படிப்பட்ட இந்த இடத்தில் தினந்ேதாறும் ஏராளமான காதல் ஜோடியினர் குவிந்து வருகிறார்கள். அப்படி குவியும் காதல் ஜோடியினர் நடைபாதையில் அமர்ந்து கொள்கின்றனர். இதிலும் சில காதல் ஜோடியினர் நடைபாதையில் அமர்ந்து கொண்டு சில்மிஷ சேட்டைகளில் ஈடுபடுகின்றனர்.

    இவர்களை பிடித்து விசாரித்தால், அவர்கள் இந்த பகுதியை சேர்ந்தவர்கள் இல்லை என்பது தெரிகிறது. மாநகருக்குள் இருந்து இங்கு வந்து இத்தகைய அநாகரீகமான செயலில் ஈடுபடுகிறார்கள். இது கண்டனத்திற்குரியாதாகும்.

    எனவே இந்த பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். ரோந்து பணியில் ஈடுபட்டு இந்த மாதிரியான நபர்களை பிடித்து விசாரிக்க வேண்டும். அத்து மீறி செயல்படும் காதலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    குறிச்சி குளக்கரை நவீன மயமாக்கப்படும் வேலை இன்னும் முடியவில்லை. அது 100 சதவீதம் முடிந்தால் இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இங்கு தான் வருவார்கள். அதுபோன்ற நேரத்தில் காதல் ஜோடிகள் இதுபோன்று செயல்பட்டால் குடும்பத்தோடு வருபவர்களுக்கு தர்ம சங்கடமாக இருக்கும். எனவே இங்கு காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×