search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "flock"

    • ரோஜாப் பூ-பரிசு பொருட்கள் வழங்கி அன்பை பரிமாறினர்.
    • போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

    கோவை

    உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டா–டப்பட்டு வருகிறது.

    ஊட்டியில் ஏராளமான சுற்றுலா தலங்கள் மற்றும் இயற்கை அழகு நிறைந்த பகுதிகள் இருப்பதால் காதல் ஜோடிகள் காதலர் தினத்தை கொண்டாடு–வதற்காக நீலகிரிக்கு வருவது வழக்கம். இந்த ஆண்டும் காதலர் தினத்தை கொண்டாடு–வதற்காக ஏராளமான காதல் ஜோடிகள் ஊட்டிக்கு வந்துள்ளனர்.

    தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டில் இருந்தும் ஏராளமான காதல் ஜோடிகள் வந்துள்ளனர்.

    இன்று காலை காதலர்கள் ஒருவருக்கொ ருவர் காதலர் தின வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர். இருவரும் ஒரே மாதிரியான உடைகளை அணிந்து கொண்டு, ஊட்டி தாவரவியல் பூங்கா மற்றும் ரோஜா பூங்காவுக்கு சென்றனர். அங்கு ரோஜா பூக்களை கொடுத்து ஒருவரு–க்கொருவர் வாழ்த்து தெரிவித்து தங்கள் காதலின் அன்பை வெளிப்படுத்தி கொண்டனர்.தொடர்ந்து பூங்காவில் அடுக்கி வைத்திருந்த மலர் செடிகளை பார்வையிட்டு, அதன்முன்பு ஜோடியாக நின்று புகைப்படமும் எடுத்து மகிழ்ந்தனர்.

    பின்னர் அங்குள்ள புல்வெளியில் அமர்ந்து ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசி காதல் பரிசாக ரோஜாப்பூ, பரிசு பொரு–ட்களையும் வழங்கினர்.

    தொட்ட பெட்டா மலை–சிகரம், படகு இல்லம், பைக்காரா நீர்வீழ்ச்சி, படகு இல்லம், குன்னூர் சிம்ஸ் பூங்கா, கோத்தகிரி நேரு பூங்கா ேபான்ற சுற்றுலா தலங்களையும் கண்டு ரசித்தனர்.

    கோவை மாவட்டத்தில் வ.உ.சி. பூங்கா மற்றும் வா லாங்குளம் கரையில் காலை முதலே காதல் ஜோடிகள் குவிந்தனர்.அவர்கள் தங்களுக்குள் வாழ்த்து க்களை கூறி கொண்டு பல்வேறு பரிசு–பொருட்க–ளையும் பகிர்ந்து கொண்ட–னர். சில கா தல் ஜோடிகள் குளக்க ரையில் அமர்ந்து காதல் பரிசாக அன்பு முத்தங்களை பகிர்ந்து கொண்டதையும் பார்க்க முடிந்தது. இதேபோல் உக்கடம் பெரிய குளம், ஆழியார் அணை, குரங்கு நீர்வீழ்ச்சி, கோவை குற்றாலம் பகுதிக–ளிலும் காதல் ஜோடிகள் நீண்ட நேரம் அமர்ந்து மனம் விட்டு பேசி மகிழ்ந்தனர்.காதலர் தினத்தை–யொட்டி மலர் விற்ப னை நிலை யங்கள், கிப்ட் ஷாப்புக–ளிலும் பரிசு பொருட்கள் வாங்க ஏராளமான காதல் ஜோடிகள் திரண்டு இருந்ததை காண முடிந்தது.

    காதல் ஜோடியினர் பொது இடங்களில் அத்துமீறாமல் இரு க்கவும், அதே சமயம் பல்வே று அ மை– ப்புகளை சேர்ந்த வ ர்கள் காதல் ஜோடிகளை தொந்தரவு செய்யாமல் இருக்கவும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.ஊட்டி மற்றும் கோவையில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்க–ளிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்ப டுத்தப்பட்டிருந்தது. 

    ×