search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "the market"

    • சின்ன வெங்காயம் விலை அதிகரித்ததால் மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
    • இன்று விலை குறைந்து ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.100-க்கு விற்பனையானது.

    ஈரோடு:

    ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டில் 700-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் செயல்பட்டு வருகிறது. தாளவாடி, சத்தியமங்கலம், தாராபுரம், ஒட்டன்சத்திரம், பெங்களூரு, ஆந்திரா போன்ற பகுதிகளில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

    கடந்த சில நாட்களாக பல்வேறு காரணங்களால் காய்கறிகள் விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்தும் குறைந்தது. இதன் காரணமாக காய்கறிகள் விலை அதிரடியாக உயர்ந்தது. குறிப்பாக சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.160 வரை விற்பனையானது.

    ஏற்கனவே கத்திரிக்காய், பீன்ஸ், இஞ்சி, தக்காளி விலைகள் அதிகரித்து வந்த நிலையில் சின்ன வெங்காயம் விலையும் அதிகரித்ததால் மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

    வெங்காயத்தை பொறுத்தவரை தாளவாடி, ஒட்டன்சத்திரத்தில் இருந்து அதிக அளவில் மார்க் கெட்டுக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படும்.

    இந்நிலையில் தாளவாடி பகுதியில் இருந்து அதிக அளவு சின்ன வெங்காயம் வரத்தானதால் விலை சரிய தொடங்கியது. கடந்த 2 நாட்களாக ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.120-க்கு விற்பனையாகி வந்தது.

    இந்த நிலையில் இன்று மேலும் விலை குறைந்து ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.100-க்கு விற்பனையானது. இன்னும் சில நாட்களில் காய்கறிகளின் விலை மேலும் குறையும் என வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர். 

    • சந்தைகளில் வழக்கத்தை விட அமாவாசை நாட்களில் கூடுதலாக காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனையாவது வழக்கம்.
    • உழவர் சந்தைகளிலும் அதிகாலை முதலே பொது மக்கள் கூட்டம் அலை மோதியது.

    அன்னதானப்பட்டி:

    சேலம் மாநகரில் சூரமங்கலம், தாதகாப்பட்டி, அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை மற்றும் மாவட்டத்தில் ஆத்தூர், மேட்டூர், ஜலகண்டாபுரம் , எடப்பாடி, இளம்பிள்ளை, தம்மம்பட்டி , ஆட்டையாம்பட்டி ஆகிய 11 இடங்களில் உழவர் சந்தைகள் உள்ளன. இந்த சந்தைகளில் வழக்கத்தை விட அமாவாசை நாட்களில் கூடுதலாக காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனையாவது வழக்கம்.

    அதன்படி, இன்று ஆவணி மாத அமாவாசையையொட்டி அனைத்து உழவர் சந்தைகளிலும் அதிகாலை முதலே பொது மக்கள் கூட்டம் அலை மோதியது. முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவும், வீடுகளில் முன்னோர்கள், மற்றும் சாமிக்கு பூஜைகள் செய்து, படையலிட்டு சமைப்பதற்காகவும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள், பூக்கள் உள்ளிட்டவற்றை அதிகளவில் வாங்கி சென்றனர். பழங்கள், தேங்காய், வாழை இலை , கீரை வகைகள் , பூசணிக்காய் , காய்கறிகள் உள்ளிட்டவை அதிகளவில் விற்பனை ஆனது . இதே போல் , பூக்கள் வியாபாரமும் வழக்கத்தை விட அதிகரித்து காணப்பட்டது.

    சேலம் மாவட்டத்தில் உள்ள 11 உழவர் சந்தைகளிலும் இன்று 1013 விவசாயிகள், பல்வேறு வகையான 4924 காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவற்றை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். காய்கறிகள், பழங்களின் மொத்த வரத்து 247.293 மெட்ரிக் டன் ஆகும். அவற்றை 55,282 நுகர்வோர்கள் வாங்கிச் சென்றனர். இதன் மூலம் இன்று ஒரே நாளில் ரூ.69, 11, 292 லட்சம் மதிப்பிலான காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை ஆனதாக வேளாண்மைத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

    ×