search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "of Adi Velli"

    • புஞ்சைபுளியம்பட்டி பூ மார்க்கெட்டில் ஆடிவெள்ளியையொட்டி பூக்களின் விலை உயர்ந்துள்ளது.
    • இன்று புளியம்பட்டி பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.1800-க்கும், ஒரு கிலோ முல்லை ரூ.700-க்கும், ஒரு கிலோ அரளி ரூ.280-க்கும் விற்கப்பட்டது.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி பூ மார்க்கெட்டில் தினமும் கோட்ட பாளையம், மாதம் பாளையம், தோட்ட சாலை உள்பட பல்வேறு பகுதியில் இருந்து பூக்கள் கொண்டுவரப்படுகிறது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக பூக்கள் விலை குறைந்து வந்த நிலையில் இன்று வரலட்சுமி நோன்பு மற்றும் நாளை ஆடிவெள்ளியை ஒட்டி பூக்களின் விலை உயர்ந்துள்ளது.

    இன்று புளியம்பட்டி பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.1800-க்கும், ஒரு கிலோ முல்லை ரூ.700-க்கும், ஒரு கிலோ அரளி ரூ.280-க்கும் விற்கப்பட்டது. இன்றும் மூன்று நாட்களுக்கு பூக்கள் விலை உயர்ந்து காணப்படும் என்றும் அதன் பிறகு பூக்கள் விலை குறைந்து விடும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

    ×