search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரோஷன்"

    ஒமர் லூலு இயக்கத்தில் ரோஷன் அப்துல் ரகூப் - நூரின் ஷெரிப் - பிரியா வாரியர் நடிப்பில் வெளியாகி இருக்கும் `ஒரு அடார் லவ்' படத்தின் விமர்சனம். #OruAdaarLove #OruAdaarLoveReview #Roshan #PriyaVarrier
    பள்ளியில் 11-வது படிக்கும் ரோஷனுக்கும், நூரின் ஷெரிப்புக்கும் இடையே நட்பு ஏற்படுகிறது. இந்த நிலையில், அதே பள்ளியில் சேரும் பிரியா வாரியரை பார்க்கும் ரோஷனுக்கு அவள் மீது காதல் ஏற்டுகிறது.

    ஒரு கட்டத்தில் இருவருமே காதலிக்க ஆரம்பிக்கிறார்கள். ரோஷன், நூரின் ஷெரிப்புடன் தோழமையாக பழகுவது பிரியா வாரியருக்கு பிடிக்காமல் போக, இருவருக்கும் இடையே விரிசல் ஏற்டுகிறது. பிரியா வாரியருடன் மீண்டும் இணைய நினைக்கும் ரோஷன், நூரின் ஷெரிப்புடன் நெருக்கமாக பழகுவது போல நடிக்கிறார். ஒரு கட்டத்தில் ரோஷன் - நூரின் ஷெரிப் இடையே நெருக்கம் அதிகமாகி காதலாகிறது.



    கடைசியில், ரோஷன் யாருடன் இணைந்தார்? யார் காதல் வெற்றி பெற்றது? என்பதே படத்தின் மீதி காதல் கதை.

    காதல் காட்சிகளில் ரோஷன், பிரியா வாரியர் இளைஞர்களை கவர்கின்றனர். இருப்பினும் இரண்டாவது பாதியில், அனைவரையும் கவர்ந்து ரசிகர்களின் கவனத்தை தன்வசமாக்குகிறார் நூரின் ஷெரிப். மற்றபடி அனீஷ் ஜி மோகன், தில்ருபா, மிச்செல் அல் டேனியல், ரோஷ்னா அன் ராய் என மற்ற கதாபாத்திரங்களும் ரசிக்கும்படி நடித்துள்ளார்கள்.



    பள்ளிப்பருவத்தில் நடக்கும் காதலை, இளைஞர்கள் ரசிக்கும்படியான படமாக இயக்கியிருக்கிறார் ஒமர் லூலு. இளைஞர்கள் தனது பள்ளி, கல்லூரி காலங்களில் யாரிடமும் பகிர முடியாமல் இருக்கும் ரகசியங்கள் பற்றி இந்த படத்தில் பேசியிருக்கிறார்கள். எனவே இளைஞர்களை கவரும் ஒரு படமாக இருக்கும். குறிப்பாக தமிழில் வசனங்கள் சரியான இடத்தில் இடம்பெற்றிருப்பது மிகச் சிறப்பான ஒன்று. நூரின் ஷெிப்பின் கதாபாத்திரம் சிறப்பாக வந்துள்ளது. அனைத்து கதாபாத்திரங்களையும் சிறப்பாக வேலை வாங்கியிருக்கிறார்.

    ஷான் ரஹ்மான் இசையில் மாணிக்க மலராய பூவே பாடல் ஹிட்டடித்த நிலையில், மற்ற பாடல்களும் ரசிக்கும்படியாகவே உள்ளது. சினு சித்தார்த்தின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன.

    மொத்தத்தில் `ஒரு அடார் லவ்' இளமைக் காதலின் இனிமை. #OruAdaarLove #OruAdaarLoveReview #Roshan #PriyaVarrier #NoorinSherif 

    சுசீந்திரன் இயக்கத்தில் யுவன் இசையில் ரோஷன், பிரியா லால் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஜீனியஸ்’ படத்தின் விமர்சனம். #Genius #GeniusReview
    ஆடுகளம் நரேன்-மீரா கிருஷ்ணன் தம்பதியின் ஒரே மகன் ரோஷன். படிப்பில் படுசுட்டியாக திகழும் ரோஷனின் திறமையை உணர்ந்த தந்தை நரேன், அவனை சிறு வயது முதலே படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வைக்கிறார். தொடர்ந்து கோச்சிங் சென்டருக்கு அனுப்பி படிக்க வைத்து, பத்தாம் வகுப்பில் மாநிலத்திலேயே முதல் மார்க்கும் வாங்க வைக்கிறார். 

    இதனால், ரோஷனின் விளையாட்டு ஆர்வமும், சந்தோஷமும் பறி போகிறது. அதன் பின் ரோஷன் கல்லூரி படிப்பை முடித்து நல்ல ஐடி கம்பெனியிலும் வேலை கிடைத்து கை நிறைய சம்பாதிக்கிறார். இந்நிலையில் ரோஷனின் திறமையை பார்த்து மேலதிகாரி அதிக வேலைகளை கொடுக்கிறார். 

    இரவு பகல் பாராமல் வேலை செய்யும் ரோஷனுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் ரோஷன், குணமடைந்தாலும் மன அழுத்தத்தால் அடிக்கடி கோபப்படும் சூழ்நிலையும் தன்னிலை மறக்கும் நிலையும் உருவாகிறது. ரோஷனை குணப்படுத்த பெற்றோர்கள் பலவிதங்களில் முயற்சி செய்கிறார்கள். இவர்களின் முயற்சி வெற்றி பெற்றதா? ரோஷன் குணமடைந்தாரா? என்பதே மீதிக்கதை.



    இப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி இருக்கிறார் ரோஷன். தன்னால் முடிந்தளவிற்கு சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். கதாநாயகியாக நடித்திருக்கும் பிரியாலால், சிறிது நேரம் மட்டுமே வந்தாலும் மனதில் நிற்கிறார். 

    பெற்றோர்களாக நடித்திருக்கும் நரேன், மீரா கிருஷ்ணன் ஆகியோரின் நடிப்பு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. வழக்கம்போல் இல்லாமல் வித்தியாசமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். டாக்டராக ஜெயபிரகாஷ், சிங்கமுத்து, ஈரோடு மகேஷ், பாலாஜி, திலீபன் ஆகியோர் படத்தின் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவியிருக்கிறார்கள்.



    குழந்தைகளுக்கு படிப்பு மட்டும் போதாது கூடவே விளையாட்டும் முக்கியம் என்பதை ஜீனியஸ் படம் மூலம் சொல்லியிருக்கிறார் இயக்குனர் சுசீந்திரன். இந்தக் காலத்தில் பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் எப்படி நடந்துகொள்கிறார்கள்? என்பதை காட்சிகளில் பிரதிபலித்திருக்கிறார் இயக்குனர். அத்துடன் பெற்றோர்களுக்கு எச்சரிக்கையோடு நல்ல அறிவுரையும் வழங்கியிருக்கிறார்.

    யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையையும் ரசிக்க முடிகிறது. ஆர்.பி.குருதேவ்வின் ஒளிப்பதிவு ஆங்காங்கே பளிச்சிடுகிறது.

    மொத்தத்தில் ‘ஜீனியஸ்’ அட்வைஸ்.
    படிப்பு முக்கியம் தான், படிப்போடு விளையாட்டும் தேவை என்பதை படத்தில் மிகவும் ஆழமாக கூறியுள்ளோம் என்று இயக்குனர் சுசீந்திரன் கூறியுள்ளார். #Genius #Suseenthiran
    சுதேசிவுட் நிறுவனம் சார்பில் ரோஷன் தயாரித்து நடிக்கும் திரைப்படம் `ஜீனியஸ்'. சுசீந்தரன் இயக்கியிருக்கும் இந்த படம் வருகிற 26-ஆம் தேதி (நாளை) வெளியாக இருக்கிறது.

    படத்தை பற்றி இயக்குனர் சுசீந்திரன் கூறியதாவது, பத்து வருடங்களுக்கு முன்னர் ஒரு டீ கடையில் ஒரு நபரை பார்த்தேன். ஐடியில் வேலை செய்பவரை போல் நன்றாக உடை அணிந்துக்கொண்டு டீ ஆர்டர் செய்து அதை குடித்துவிட்டு பணம் கொடுக்காமல் திரும்பி சென்றார். அப்படி சென்ற அவரிடம் கடைகாரர் பணம் கேட்ட போது அவரிடம் பயங்கரமாக கோபப்பட்டு நாளை தருகிறேன் என்று கத்தி கூறினார். அந்த கோபம் பயங்கரமானதாக இருந்தது. 

    நல்ல படித்த, பெரிய வேலையில் உள்ள நபர் போல் தோற்றமளித்த அவரின் ஸ்ட்ரெஸ்க்கு காரணம் என்னவாக இருக்கும் என்று யோசிக்கும் போது தோன்றிய கதை தான் இந்த படத்தின் கதை. இக்கதையை நான் விஜய், அல்லு அர்ஜுன் மற்றும் ஜெயம் ரவி போன்ற பல ஹீரோக்களிடம் கூறியுள்ளேன். அனைவருக்கும் இக்கதையில் நடிக்கவேண்டும் என்று ஆசை. ஆனால் இக்கதையில் ஹீரோ இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்று எனக்கு தோன்றியது. ஹீரோவுக்காக கதை பண்ணாமல் இக்கதைக்கான ஹீரோவை படத்தின் கதையே முடிவு செய்தது.



    இப்படம் கல்வி பற்றி பேசும் படமாக இருக்கும். தமிழில் வெளிவந்த படங்களில் கல்வி மையமாக கொண்டு வெளிவந்த திரைப்படங்களில் ஜீனியஸ் முக்கியமான படமாக இருக்கும். ஒரு படைப்பாளிக்கு கதையை எழுதிவிட்டு அதை படமாக திரையில் பார்க்க வேண்டும் என்று ஆசை இருக்கும். எனக்கும் அந்த ஆசை இருந்தது, அது ரோஷன் மூலம் நிறைவேறியுள்ளது. ரோஷன் நல்ல தயாரிப்பாளர் விரைவில் நல்ல நடிகராக அனைவராலும் அறிப்படுவார். 

    இன்று ஆங்கில வழி கல்வி முக்கியமான ஒன்றாகிவிட்டது. எனக்கு ஆங்கிலம் பெரிதாக தெரியாது, நான் 12-ஆம் வகுப்பு வரை தமிழ் வழி கல்வி தான் கற்றேன். நமது அரசாங்கம் ஆங்கில வழி கல்வியை இலவசமாக வழங்க வேண்டும். அப்போது தான் அனைவராலும் ஆங்கிலம் எளிதாக பயின்று பேச முடியும். இன்று ஆங்கிலம் மிகவும் தேவையான ஒன்றாகிவிட்டது. படத்தில் படிப்போடு விளையாட்டும் தேவை என்பதை மிகவும் ஆழமாக கூறியுள்ளோம் என்றார் இயக்குனர் சுசீந்திரன். #Genius #Suseenthiran

    சுசீந்திரன் இயக்கத்தில் ரிலீசுக்கு தயாராகி இருக்கும் `ஜீனியஸ்' படம் உண்மை கதையை மையப்படுத்தி உருவாகி இருப்பதாக தெரிவித்துள்ளார். #Genius #Suseenthiran #Roshan
    வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல, பாண்டியநாடு, ஜீவா என்று வெற்றிப் படங்களை கொடுத்த சுசீந்தரன் அடுத்து புதுமுகங்களான ரோ‌ஷன், பிரியா லால் நடிப்பில் இயக்கி இருக்கும் படம் ஜீனியஸ். படம் பற்றி கூறும்போது ‘பத்து ஆண்டுகளுக்கு முன்பு என் வாழ்க்கையில் ஒரு மனிதரை சந்தித்தேன்.

    நல்லா சரளமாக ஆங்கிலம் பேசிய அவர் பேச்சு, நடவடிக்கைகளில் நிறைய வித்தியாசம் இருந்தது. ‘நான் பேசுறதைப் பார்த்து என்னைப் பைத்தியம்னு நினைச்சிடாதீங்க. நான் கொஞ்சம் கன்ட்ரோல் இல்லாம இருக்கேன் அவ்ளோதான்’னு அவனுக்கு அவனே பேசிக்கிட்டு இருந்தான். அதிகமா படிச்சுப் படிச்சு அதுக்கான வடிகாலே இல்லாம இந்தத் தலைமுறையினர் இருக்காங்க.

    பெத்தவங்களும் படி படினு டார்ச்சர் பண்ணி, ஸ்கூல் முடிச்சா டியூசன், அந்த கிளாஸ் இந்த கிளாஸ்னு குழந்தைகளுக்குள்ள கல்வியைத் திணிக்கிறாங்க. அப்படி பாதிக்கப்பட்ட ஒரு பையன் வாழ்க்கையை எப்படி அணுகுறான் என்பதை எமோ‌ஷனோடு ஹியூமர் கலந்து இயக்கி இருக்கும் படம்தான், இந்த ‘ஜீனியஸ்’.



    வெறும் பள்ளி படிப்போடு மட்டுமே நிறுத்திக்கொள்ளாமல் வாழ்க்கை முழுக்க இலக்குகளை நோக்கி ஓடிக்கொண்டே இருப்பதால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதை கூறி இருக்கிறேன். புதுமுகங்களை வெச்சு ஒரு பெரிய வெற்றிப்படம் கொடுக்க ஆசைப்படுறேன். அது மட்டுமல்லாமல், புதுமுகங்கள் சினிமாவுல ஏதாவது சாதிக்கணும்னு ஒரு வெறியோட வருவாங்க. அது நமக்கு ரொம்பவே பயன்படும்’ என்று கூறியுள்ளார். #Genius #Suseenthiran #Roshan

    சுசீந்திரன் இயக்கத்தில் ரோஷன் - நடிப்பில் உருவாகி இருக்கும் `ஜீனியஸ்' படத்தின் முன்னோட்டம். #Genius #Roshan
    சுதேசிவுட்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பில் ரோஷன் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் `ஜீனியஸ்'.

    ரோஷன் என்ற புதுமுகம் நாயகனாக அறிமுகமாகும் இந்த படத்தில் ஆடுகளம் நரேன், மீரா கிருஷ்ணன், யோகேஷ், மோனிகா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    இசை - யுவன் ஷங்கர் ராஜா, பாடல்கள் - வைரமுத்து, படத்தொகுப்பு - தியாகு, ஒளிப்பதிவு - ஆர்.பி.குருதேவ், கலை இயக்குனர் - ஜி.சி.ஆனந்தன், சண்டைப்பயிற்சி - அன்பறிவ், நடனம் - ஷோபி, லலிதா ஷோபி, உடை - ஆர்.நிருபமா ரகுபதி, தயாரிப்பு - ரோஷன், இணை தயாரிப்பு - ராம், சீனு, பாலாஜி, சாமி, ஜகதீஷ், குணா, தயாரிப்பு நிறுவனம் - சுதேசிவுட்ஸ் பிலிம்ஸ், வசனம் - அமுதேஸ்வர், எழுத்து, இயக்கம் - சுசீந்திரன்.

    பத்திரிகையாளர் சந்திப்பில் படம் பற்றி இயக்குனர் சுசீந்தரன் பேசியதாவது, 



    நான் ஜீனியஸ் திரைப்படத்தின் கதையை முதலில் யோசித்த போது அது கதையாக இல்லை. கருவாக தான் இருந்தது. ஜுனியஸ் கதையாக உருவாகிய பிறகு ஜீனியஸ் கதையை விஜய், அல்லு அர்ஜுன், ஜெயம் ரவி உள்ளிட்ட பலரிடம் இந்த கதையை கூறியுள்ளேன். அனைவருக்கும் இந்த கதை மிகவும் பிடித்திருந்தது. ஆனால் சில காரணங்களால் அவர்களால் இதில் நடிக்க முடியவில்லை.

    கடைசியாக இந்த கதை அறிமுக நாயகன் மற்றும் புதிய தயாரிப்பாளரான ரோஷனிடம் சென்று தற்போது ஜீனியஸ் படமாக வந்துள்ளது. இப்படம் மக்களுக்கு கருத்து சொல்லும் பொழுதுபோக்கு படமாக இருக்கும். இந்தியில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற பி.கே படத்தின் பாதிப்பில் தான் நான் இந்த படத்தை இயக்கியுள்ளேன். இந்த படம் பி.கே போல மெசேஜ் சொல்லும் பொழுதுபோக்கு படமாக இருக்கும். இப்படத்தின் கதை அனைத்து மொழி மக்களுக்கும் பிடிக்கும் வகையில் உள்ளதால் படத்தை இந்தி மற்றும் தெலுங்கில் வெளியிடவும் முடிவு செய்துள்ளோம். ரோஷனை இப்படத்தின் மூலமாக தயாரிப்பாளராகவும், ஹீரோவாகவும் அறிமுகம் செய்வதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி என்றார்.

    படம் வருகிற அக்டோபர் 26-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. #Genius #Roshan

    சுசீந்திரன் இயக்கத்தில் `ஜீனியஸ்' படம் வருகிற அக்டோபர் 26-ஆம் தேதி வெளியாகவிருக்கும் நிலையில், தனது அடுத்த படமான `சாம்பியன்' படத்தின் படப்பிடிப்பை முடித்த சுசீந்திரன், டப்பிங் பணிகளை துவங்கியிருக்கிறார். #Champion
    சுசீந்திரன் இயக்கத்தில் `ஜீனியஸ்' திரைப்படம் வருகிற அக்டோபர் 26-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில், சுசீந்திரன் தனது அடுத்த படமான `சாம்பியன்' படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ளார். மேலும் படத்தின் டப்பிங் பணிகளும் இன்று துவங்கியிருக்கிறது. 

    சுசீந்திரன் இயக்கத்தில் விளையாட்டை மையமாக வெளியான `வெண்ணிலா கபடி குழு', `ஜீவா' படங்கள் வெற்றி பெற்றதை தொடர்ந்து சாம்பியன் படத்தை கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாக்கி இருக்கிறார்.

    இதில் புதுமுகம் ரோஷன், மிர்னாலினி நாயகன் நாயகியாக நடித்துள்ளார்கள். இவர்களோடு ஜி.கே.ரெட்டி, அஞ்சாதே நரேன், ஜெயப்பிரகாஷ், ஆர்.சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.



    அரோல் கோரொலி இசையமைக்கும் இந்த படத்துக்கு, சுஜித் சாரங் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். களஞ்சியம் சினி ஆர்ட்ஸ் சார்பாக கே.ராகவி இந்த படத்தை தயாரிக்கிறார். இந்த படம் டிசம்பரில் வெளியாக உள்ளது.

    சுசீந்திரன் இயக்கத்தில் `ஏஞ்சலினா' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. #Champion

    சுசீந்திரன் அடுத்ததாக இயக்கும் `சாம்பியன்' படத்தில் யுவன் ஷங்கர் ராஜாவுடன் பணியாற்ற முடியாததற்கான காரணம் குறித்து சுசீந்திரன் டுவிட்டரில் வருத்தம் தெரிவித்துள்ளனர். #Champion #Suseenthiran
    விளையாட்டை மையப்படுத்திய வெண்ணிலா கபடிக்குழு, ஜீவா படங்களை தொடர்ந்து சுசீந்திரன் அடுத்ததாக `சாம்பியன்' என்ற படத்தை இயக்குகிறார். கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று துவங்கியது. 

    இந்த நிலையில், இந்த படத்தில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவுடன் பணியாற்ற முடியாதது குறித்து இயக்குநர் சுசீந்திரன் அவரது டுவிட்டர் பக்கத்தில் வருத்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சுசீந்திரன் கூறியிருப்பதாவது, 

    யுவன் ஷங்கர் - உடன் சாம்பியன் படத்தில் நான் பணியாற்ற முடியவில்லை... யுவன் ரசிகர்களுக்கு எனது வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன்... யுவனுடன் நான் பணியாற்ற முடியாத சூழ்நிலைக்கு காரணம் இப்பொழுது யுவனை சுற்றியுள்ள நண்பர்கள் தான் (புதிய நண்பர்கள்) காரணம்... இந்த தகவலை கூட நான் யுவனிடம் கூற முடியவில்லை. எதிர்காலத்தின் உறுதியாக நான் யுவனுடன் பணியாற்ற ஆவலுடன் உள்ளேன். 

    இவ்வாறு கூறியிருக்கிறார். 



    இந்த படத்தில் ரோஷன் என்ற புதுமுகம் நாயகனாகவும், மிருணாளினி நாயகியாகவும் நடிக்கிறார்கள். ஜி.கே.ரெட்டி, அஞ்சாதே நரேன், ஆர்.கே.சுரேஷ், ஜெயபிரகாஷ், ஹரிஷ் உத்தமன், சூரி உள்ளிட்ட பலரும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். அரோல் கொரலி இந்த படத்திற்கு இசையமைக்கிறார். #Champion #Suseenthiran

    சுசீந்திரன் இயக்கத்தில் விளையாட்டை மையப்படுத்தி உருவான வெண்ணிலா கபடிக்குழு, ஜீவா ஆகிய இரு படங்களும் வெற்றிபெற்ற நிலையில், தனது அடுத்த ஸ்போர்ஸ் படத்தை சுசீந்திரன் இன்று துவங்கியுள்ளார். #Champion
    சுசீந்திரன் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’.  இப்படம் எதிர்பார்த்தளவிற்கு ரசிகர்களிடையே வரவேற்பு பெறவில்லை. இதனைத் தொடர்ந்து, புதுமுகங்களை வைத்து ‘ஏஞ்சலினா’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார் சுசீந்திரன். இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. அதேநேரத்தில் ‘ஜீனியஸ்’ என்ற படத்தையும் இயக்கி முடித்துவிட்டார்.

    இந்த நிலையில், சுசீந்திரன் அடுத்ததாக கால் பந்தாட்டத்தை மையமாக வைத்து ஒரு புதிய படத்தை இயக்க இருக்கிறார். `சாம்பியன்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியிருப்பதாக சுசீந்திரன் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 



    சுசீந்திரன் கூறியிருப்பதாவது, 

    `இன்று கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து `சாம்பியன்' என்ற திரைப்படத்தை துவங்கி உள்ளோம். வெண்ணிலா கபடிக்குழு, ஜீவா திரைப்படத்தை தொடர்ந்து நான் இயக்கும் மூன்றாவது ஸ்போர்ட்ஸ் திரைப்படம். இத்திரைப்படத்தில் ரோஷன் என்ற புதுதுமுக ஹீரோ அறிமுகமாகிறார். அஞ்சாதே நரேன், ஜி.கே.ரெட்டி, ஜெயப்பிரகாஷ் இவர்களுடன் மிருணாளினி ஹீரோயினாக அறிமுகம் ஆகிறார். இத்திரைப்படத்தை டிசம்பர் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளோம்' என்று கூறியிருக்கிறார். #Champion #Suseenthiran


    ×