search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரேவாரி"

    அரியானா மாநிலம் ரேவாரி பகுதியில் 19 வயது மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிக்கு 4 நாள் போலீஸ் காவலும், இருவருக்கு 14 நாள் நீதிமன்ற காவலும் விதிக்கப்பட்டுள்ளது. #Rewari #RewariRapeCase
    சண்டிகர்:

    அரியானா மாநிலத்தில் சி.பி.எஸ்.சி. தேர்வில் முதலிடம் பிடித்து சமீபத்தில் ஜனாதிபதியிடம் விருது பெற்ற 19 வயது மாணவி, கோச்சிங் கிளாஸ் சென்று விட்டு தனது கிராமத்துக்கு நடந்து சென்று கொண்டிருக்கும் போது காரில் வந்த சிலர் அவரை கடத்திச் சென்று மறைவிடத்தில் வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

    அதன்பின்னர், அங்குள்ள பஸ் ஸ்டாப் ஒன்றில் மாணவியை தூக்கி வீசி விட்டு அங்கிருந்து அவர்கள் தப்பிச்சென்றனர். இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் சார்பில் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளை கைது செய்யதனிப்படை அமைத்து தேடி வந்தனர். 



    மாணவியை பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில் தேடப்பட்டு வரும் நிஷு உள்பட 3 குற்றவாளிகளின் புகைப்படங்களை போலீசார் வெளியிட்டனர்.

    இதற்கிடையே, மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி நிஷு உள்பட 3 பேரை சிறப்பு அதிரடிப் படை போலீசார் கைது செய்தனர்.

    இந்நிலையில், ரேவாரி மாணவி பாலியல் வன்புணர்வு விவகாரத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் 3 பேரையும் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்களில் முக்கிய குற்றவாளியான நிஷுவுக்கு 4 நாள் போலீஸ் காவலும், டாக்டர் சஞ்சீவ் மற்றும் தீன்தயாள் ஆகியோருக்கு 14 நாள் நீதிமன்ற காவலும் விதிக்கப்பட்டுள்ளது. #Rewari #RewariRapeCase 
    அரியானாவின் ரேவாரி பகுதியில் மீண்டும் ஒரு பெண்ணை இரண்டு பேர் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #Rewari #RewariGangRape
    சண்டிகர்:

    அரியானா மாநிலத்தின் மகேந்திரகர்க் மாவட்டத்தில் அமைந்துள்ள ரேவாரி பகுதியில் கடந்த புதன்கிழமை 19 வயதான மாணவியை ஒரு கும்பல் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பிச் சென்றது.

    மாணவி கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் 3 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
    இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், அதே ரேவாரி பகுதியை சேர்ந்த ஒரு விதவை பெண்ணை இரண்டு பேர் பாலியல் பலாத்காரம் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ரேவாரி நகரில் உள்ள ஜுலானா பகுதியை சேர்ந்த விதவை பெண் ஒருவர் மருந்து பொருள்களை வாங்கிக் கொண்டு கடையில் இருந்து திரும்பினார்.

    அப்போது பைக்கில் வந்த இரண்டு பேர் அவரது உடல் நிலை குறித்து விசாரிப்பது போல், அவரை அங்கிருந்து கடத்திச் சென்றனர். அருகிலுள்ள ஜிந்த் மாவட்டத்தில் உள்ள வயல்வெளியில் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தனர்.

    இதுகுறித்து அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடந்த ஒரு வாரத்துக்குள் ரேவாரி பகுதியில் நடைபெற்றுள்ள இரண்டாவது பலாத்கார சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது. #Rewari #RewariGangRape
    அரியானா மாநிலம் ரேவாரி பகுதியில் 19 வயது மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர். #Rewari #RewariRapeCase
    சண்டிகர்:

    அரியானா மாநிலத்தில் சி.பி.எஸ்.சி. தேர்வில் முதலிடம் பிடித்து சமீபத்தில் ஜனாதிபதியிடம் விருது பெற்ற 19 வயது மாணவி, கோச்சிங் கிளாஸ் சென்று விட்டு தனது கிராமத்துக்கு நடந்து சென்று கொண்டிருக்கும் போது காரில் வந்த சிலர் அவரை கடத்திச் சென்று மறைவிடத்தில் வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

    அதன்பின்னர், அங்குள்ள பஸ் ஸ்டாப் ஒன்றில் மாணவியை தூக்கி வீசி விட்டு அங்கிருந்து அவர்கள் தப்பிச்சென்றனர். இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் சார்பில் போலீசில் புகார் அளித்தனர்.

    புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளை விரைவில் கைது செய்வதற்காக தனிப்படை அமைத்து தேடி வருகிறோம் என்றனர். 

    இதற்கிடையே, மாணவியை பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில் தேடப்பட்டு வரும் ராணுவ வீரர் பங்கஜ், மனீஷ், நிஷு உள்பட 3 குற்றவாளிகளின் புகைப்படங்களை போலீசார் நேற்று வெளியிட்டனர்.

    இந்நிலையில், ரேவாரி மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி நிஷுவை சிறப்பு அதிரடிப்படையை சேர்ந்த போலீசார் கைது செய்தனர். #Rewari #RewariRapeCase 
    அரியானா மாநிலத்தில் இன்று மாலை லாரியும், காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #Haryana #Accident
    சண்டிகர்:

    அரியானா மாநிலம் ரேவாரி பகுதியில் உள்ள நெருஞ்சாலையில் இன்று மாலை லாரியும் காரும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து நடந்தது. இந்த விபத்தை நேரில் கண்டவர்கள் உடனடியாக காவல்துறைக்கும், ஆம்புலன்ஸ் வாகனத்துக்கும் தகவல் அளித்தனர்.

    இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கும் பணியில் துரிதமாக ஈடுபட்டனர். இந்த விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், விபத்துக்கான காரணம் குறித்தும், இறந்தவர்களின் அடையாளம், முகவரி குறித்தும் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #Haryana #Accident
    ×