search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "யோகிபாபு"

    • நடிகர் யோகிபாபு தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராக வலம் வருகிறார்.
    • இவர் 'ஜெயிலர்' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    தமிழ் திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகராக இருந்து வருபவர் யோகிபாபு. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள யோகிபாபு, தற்போது தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராக வலம் வருகிறார். இவர் ரஜினி நடிப்பில் வெளியாகியுள்ள 'ஜெயிலர்' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.


    கிரிக்கெட்டின் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட யோகிபாபு படப்பிடிப்பு தளங்களில் கிரிக்கெட் விளையாடி மகிழ்வார். இது தொடர்பான வீடியோவையும் இவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகிறார். மேலும், கடவுள் மீது அதீத நம்பிக்கைக் கொண்ட யோகிபாபு அடிக்கடி கோவில்களுக்கு சென்று வழிபாடும் செய்து வருகிறார்.

    இந்நிலையில், நடிகர் யோகிபாபு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை நேரில் சந்தித்து ஆசிப்பெற்றுள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமாக நடைபெற்றதாக கூறப்படுகிறது.

    • நடிகர் யோகிபாபு நடித்துள்ள திரைப்படம் ‘லக்கி மேன்’.
    • 'லக்கி மேன்' திரைப்படம் செப்டம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் யோகிபாபு 'லக்கி மேன்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் வீரா, ரேச்சல் ரெபேக்கா, அப்துல் லீ, ஆர்.எஸ். சிவாஜி, அமித் பார்கவ், சாத்விக் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். திங்க் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.


    உண்மையான அதிர்ஷ்டம் என்றால் என்ன என்பதைக் கண்டறியும் ஒரு மனிதனின் அதிர்ஷ்டத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. 'லக்கி மேன்' படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் கைப்பற்றியுள்ளது.


    இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. 'உனக்கு பிடிச்சததான் இயற்கை முதல்ல புடுங்கும்' போன்ற வசனங்கள் இடம்பெற்றுள்ள இந்த டிரைலர் சமூக வலைதளத்தில் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. 'லக்கி மேன்' திரைப்படம் செப்டம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.




    • தமிழ் சினிமா படப்பிடிப்புகள் மட்டுமின்றி, கன்னடம், தெலுங்கு உள்பட பல்வேறு சினிமா படப்பிடிப்புகளும் நடந்து வருகிறது.
    • நடிகர் யோகிபாபு மற்றும் பல்வேறு முன்ணி நட்சத்திரங்கள் பங்கேற்று நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன.

    ஊட்டி:

    மலைப்பிரதேசமான நீலகிரி மாவட்டம் பசுமை நிறைந்தும், இயற்கை எழிலுடன் காணப்படுகிறது. தென்னிந்திய அளவில் சினிமா படப்பிடிப்புக்கு ஏற்ற இடமாக நீலகிரி உள்ளது.

    இங்கு தமிழ் சினிமா படப்பிடிப்புகள் மட்டுமின்றி, கன்னடம், தெலுங்கு உள்பட பல்வேறு சினிமா படப்பிடிப்புகளும் நடந்து வருகிறது.

    குன்னூர், கோத்தகிரி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நிலவி வரும் சிதோஷ்ண நிலையும், இங்குள்ள இயற்கை காட்சிகளுக்காகவே அதிகளவிலான படப்பிடிப்புகள் நடைபெற்று வருகிறது.

    குறிப்பாக, சூட்டிடங் மட்டம், தாவரவியல் பூங்கா உள்ளிட்ட இடங்களில் மிகப்பெரிய நடிகர்களின் திரைப்படங்களும் படமாக்கப்பட்டுள்ளன.

    இந்தநிலையில் கடந்த ஒரு வாரமாக ஊட்டி சுற்று வட்டார பகுதியில் நகைச்சுவை நடிகர் யோகி பாபு, சார்லி, நடிககைள் வாணி போஜன், சம்யுக்தா ஆகியோர் நடிப்பில் பிரபல இயக்குனர் ராதாமோகன் இயக்கி வரும் சட்னி, சாம்பார் என்ற இணைய தொடருக்கான படப்பிடிப்பு நடந்து வருகிறது.

    நேற்று காலை தேவர்சோலை பகுதியில் நடிகர் யோகிபாபு நடித்து வரும் வெப்சீரிஸ் படத்திற்கான படப்பிடிப்பு நடந்தது. அப்போது நடிகர் யோகிபாபு மற்றும் பல்வேறு முன்ணி நட்சத்திரங்கள் பங்கேற்று நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன.

    தங்கள் பகுதியில் சினிமா படப்பிடிப்பு நடந்ததை அறிந்ததும் அங்கு ஏராளமான பொதுமக்கள், சிறுவர்கள் அதிகளவில் குவிந்தனர். அவர்கள் சினிமா படப்பிடிப்பை பார்வையிட்டு மகிழ்ந்தனர்.

    கடந்த 3 நாட்களுக்கு முன்னர் நடிகர் யோகி பாபு ஊட்டியில் நடந்த படப்பிடிப்பின் போது, அங்குள்ள சிறுவர்களுடன் சேர்ந்து கால்பந்து விளையாடினார்.

    இதனை அவர் தனது டிவிட்டர் பக்கத்திலும் வெளியிட்டு இருந்தார். இதுகுறித்து படப்பிடிப்பு நிர்வாகத்தினர் கூறுகையில், சட்னி, சாம்பார் என்ற தலைப்பில் நடிகர்கள் யோகி பாபு, சார்லி, நடிகைகள் வாணிபோஜன், சம்யுக்தா உள்ளிட்டோர் நடித்த வெப் சீரிஸ் தொடருக்கான படப்பிடிப்பு நீலகிரியில் பல்வேறு பகுதிகளில் நடந்து வருகிறது. ஒரு வாரத்தில் படப்பிடிப்பு முடிந்து விடும். இந்தத் தொடரை இயக்குனர் ராதா மோகன் இயக்குகிறார் என்றனர்.

    • இயக்குனர் பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'லக்கி மேன்'.
    • இப்படம் வருகிற செப்டம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    தமிழ் திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகராக இருந்து வருபவர் யோகிபாபு. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள யோகிபாபு, தற்போது தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராக வலம் வருகிறார். இவர் ரஜினி நடிப்பில் வெளியாகியுள்ள 'ஜெயிலர்' திரைப்படத்தில் நடித்துள்ளார்.


    இயக்குனர் பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் யோகிபாபு நடிக்கும் திரைப்படம் 'லக்கி மேன்'. இப்படத்தில் வீரா, ரேச்சல் ரெபேக்கா, அப்துல் லீ, ஆர்.எஸ். சிவாஜி, அமித் பார்கவ், சாத்விக் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். திங்க் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

    உண்மையான அதிர்ஷ்டம் என்றால் என்ன என்பதைக் கண்டறியும் ஒரு மனிதனின் அதிர்ஷ்டத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்றது. 'லக்கி மேன்' படத்தின் போஸ்டர் அண்மையில் வெளியாகி கவனம் ஈர்த்தது.


    லக்கிமேன் போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'லக்கி மேன்' படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளனர். 'லக்கி மேன்' திரைப்படம் செப்டம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.




    • தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத காமெடி நடிகராக இருப்பவர் யோகிபாபு.
    • இவர் தற்போது ஜெயிலர் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

    தமிழ் திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகராக இருந்து வருபவர் யோகி பாபு. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள யோகி பாபு, தற்போது தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராக வலம் வருகிறார். இவர் தற்போது ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள 'ஜெயிலர்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற ஆகஸ்ட் 10-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து, பாலிவுட்டில் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் திரைப்படத்திலும் நடித்துள்ளார். இப்படம் செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    முருகன் மீது அதீத பக்தி கொண்ட நடிகர் யோகிபாபு அடிக்கடி கோவிலுக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். சமீபத்தில் இவர் சிறுவாபுரியில் உள்ள முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றிருந்தார். அப்போது யோகிபாபு அங்கிருந்த அர்ச்சகருக்கு கை கொடுத்தார். ஆனால், அந்த அர்ச்சகரோ, யோகிபாபுவுக்கு கை கொடுக்க மறுத்துவிட்டார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலான நிலையில் பலர் யோகிபாபு தீண்டாமையை எதிர்கொண்டதாக கண்டனம் தெரிவித்து வந்தனர்.


    வைரலாகும் புகைப்படம்

    இந்நிலையில், நடிகர் யோகிபாபு இதற்கு விளக்கமளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில், "12 வருடங்களுக்கு மேலாக சிறுவாபுரி கோவிலுக்கு சென்று கொண்டிருக்கிறேன். எனக்கு அந்த அர்ச்சகரை அப்போதிலிருந்தே தெரியும். அவர் ரொம்ப நல்ல மனிதர். யாரோ வேண்டுமென்றே இவ்வாறு தவறான வதந்தியை பரப்பி வருகின்றனர். இதில் சாதி எல்லாம் பார்க்க வேண்டாம். அர்ச்சகரால் எந்த தீண்டாமையும் நடக்கவில்லை. அவர்கூட நான் கைக்குலுக்கப் போகவே இல்லை. டாலர் பத்திதான் விசாரித்தேன். அந்த வீடியோவை நல்லா பார்த்தாலே இது தெரியும்." என்று கூறியுள்ளார்.

    • யோகிபாபு இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
    • இவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக படத்தின் டைட்டிலை படக்குழு வெளியிட்டுள்ளது.

    மலையாளத்தில் மாஸ்குரேட் என்ற வெப் சீரிஸை இயக்கிய சஜின் கே.சுரேந்திரன், தற்போது யோகி பாபு, ரமேஷ் திலக், காளி வெங்கட், லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி, மாஸ்டர் ஷக்தி ரித்விக், 'லவ் டுடே' பிராத்தனா நாதன் மற்றும் கல்கி ராஜா ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் படத்தை இயக்கி வருகிறார்.



    பவி கே பவன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஃபின் ஜார்ஜ் படத்தொகுப்பு செய்துள்ளார். இப்படத்தை 'ஈடன் ஃபிளிக்ஸ் புரொடக்ஷன்ஸ்' தாமஸ் ரென்னி ஜார்ஜ் தயாரித்துள்ளார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் கோவிந்த் வசந்த இசையமைத்துள்ளார். மல்டி ஸ்டாரர் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.



    இந்நிலையில் யோகிபாபுவின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டரை ஜிவி பிரகாஷ் குமார் மற்றும் இயக்குனர் மடோன் அஸ்வின் வெளியிட்டுள்ளனர். அதன்படி இப்படத்திற்கு 'வானவன்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.


    • நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் யோகிபாபு.
    • இவர் மேட்டுப்பாளையத்தில் சாமி தரிசனம் செய்துள்ளார்.

    மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் வனபத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு கோவை மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்து செல்கின்றனர்.

    இந்த கோவிலில் வெள்ளி, செவ்வாய், அமாவாசை மற்றும் முக்கிய விழா நாட்களில் கூட்டம் அதிகமாக காணப்படும். வனபத்ர காளியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிக்குண்டம் திருவிழா நடப்பது வழக்கம்.

    தற்போது வனபத்ர காளியம்மன் கோவிலில் ஆடிக்குண்டம் திருவிழா நடந்து வருகிறது. இதனையொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும், வழிபாடு நடக்கிறது. இதனால் தினமும் கோவிலுக்கு ஏராளமான பக்தர்களும் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.


    இந்த நிலையில் திரைப்பட நகைச்சுவை நடிகரும், குணச்சித்திர நடிகருமான யோகிபாபு நேற்று மேட்டுப்பாளையம் வனபத்ர காளியம்மன் கோவிலுக்கு வந்தார். அவர் கோவிலுக்குள் சென்று வனபத்ர காளியம்மனை மனமுருகி வழிபட்டார். தொடர்ந்து கோவிலை சுற்றி வந்தும் சாமி தரிசனம் செய்தார்.

    கோவிலுக்கு வந்த அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் யோகிபாபு கோவில் வளாகத்தில் உள்ள புத்தக நிலையத்திற்கு சென்றார். அங்கு புத்தகங்களை பார்வையிட்ட யோகிபாபு ரூ.5 ஆயிரம் மதிப்பிலான ஆன்மீக புத்தகங்களை வாங்கி சென்றார்.

    இதற்கிடையே நடிகர் யோகிபாபு கோவிலுக்கு வந்த தகவல் அறிந்ததும் அங்கு வந்திருந்த மக்கள் திரண்டு வந்து, அவரை பார்த்து, அவருடன் செல்பி புகைப்படம் எடுத்து கொண்டனர்.

    • இயக்குனர் ராதா மோகன் தற்போது வெப்தொடர் ஒன்றை இயக்குகிறார்.
    • இந்த வெப்தொடரின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது.

    எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான 'பொம்மை' திரைப்படத்தை இயக்கிய ராதா மோகன் தற்போது "சட்னி சாம்பார்" என்ற வெப் தொடரை இயக்குகிறார். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்த வெப்தொடரில் யோகிபாபு முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார். இதில் வாணிபோஜன், 'கயல்' சந்திரமௌலி, நிதின் சத்யா, சார்லி, குமரவேல், காயத்ரி ஷான், தீபா, நிழல்கள் ரவி, ஐஸ்வர்யா, சம்யுக்தா விஸ்வநாத் மற்றும் நம்ரிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும், பிரபல தயாரிப்பாளரும் இயக்குனருமான ஆர். சுந்தர்ராஜன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

    "சட்னி சாம்பார்" வெப்தொடருக்கு பிச்சைக்காரன், சிவப்பு மஞ்சள் பச்சை போன்ற படங்களில் பணியாற்றிய பிரசன்னா குமார் ஒளிப்பதிவு செய்கிறார். சூப்பர் சிங்கர் புகழ் அஜீஷ் அசோக் இசையமைக்கிறார். அதுமட்டுமல்லாமல் இரும்புத்திரை, சர்தார், கைதி மற்றும் மாஸ்டர் போன்ற படங்களில் பணியாற்றிய எழுத்தாளர் பொன் பார்த்திபன் இந்த வெப் தொடருக்கு வசனங்களை எழுதியுள்ளார்.


    "சட்னி சாம்பார்" வெப்தொடர் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ளது. இதையடுத்து இந்த வெப்தொடரின் படப்பிடிப்பு பூஜையுடன் சமீபத்தில் தொடங்கியது. இந்த நிகழ்ச்சில் இயக்குனர் ராதாமோகன் பேசியதாவது, "சட்னி - சாம்பார்" வெப்தொடரின் படப்பிடிப்பை,  அட்டகாசமான குழுவுடன் இணைந்து, மகிழ்ச்சியுடன் துவங்கியிருக்கிறோம். இது முழுக்க முழுக்க காமெடியாக அனைவரும் ரசிக்கும்படியான படைப்பாக இருக்கும். யோகி பாபு மற்றும் வாணி போஜன் மட்டுமில்லாமல், இந்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் சீரிஸில் 'கயல்' சந்திரமௌலி, நிதின் சத்யா, சார்லி மற்றும் குமரவேல் உட்பட பல முக்கிய நட்சத்திரங்களும் நடிக்கிறார்கள் என்றார்.

    மேலும், நடிகர் யோகிபாபு பேசியதாவது, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசித்து பார்க்கும்படியான ஒரு அருமையான சிரீஸாக "சட்னி சாம்பார்" இருக்கும் என்றார்.

    • கிரிக்கெட் வீரர் டோனி தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் லெட்ஸ் கெட் மேரிட்.
    • காதல் கதையம்சம் கொண்ட படமாக உருவாகி வரும் இப்படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார்.

    இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான மகேந்திரா சிங் டோனியும், அவரது மனைவி சாக்ஷி சிங் டோனியும் இணைந்து 'தோனி எண்டர்டெயின்மெண்ட்' என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தமிழில் லெட்ஸ் கெட் மேரிட் (Lets Get Married-LGM) என்ற திரைப்படத்தை தயாரித்து வருகின்றனர்.

    காதல் கதையம்சம் கொண்ட படமாக உருவாகி வரும் இப்படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார். இதில் ஹரிஷ் கல்யாண், லவ் டுடே படத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்த இவானா, நதியா மற்றும் நகைச்சுவை நடிகர் யோகி பாபு நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 'எல்.ஜி.எம்' படத்தின் போஸ்டர்கள், டீசர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.


    இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் டோனி, அவரது மனைவி சாக்ஷி சிங் டோனி, ஹரிஷ் கல்யாண், யுவனா, யோகி பாபு மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் டோனி பேசியதாவது, "என்னுடைய டெஸ்ட் அறிமுகம் இங்கே சென்னையில்தான் நடந்தது. என்னுடைய அதிகபட்ச ஸ்கோரை சென்னையில்தான் ஸ்கோர் செய்தேன். ஐ.பி.எல். போட்டி நடந்த போது என்னை தமிழகம் தத்தெடுத்தது.

    தன் மனைவி எப்போதெல்லாம் எனக்கு ஒரு ஐடியா தோன்றுகிறது என்று கூறுகிறாளோ அப்போது கணவன் பயப்படுகிறான், இதுதான் எல்.ஜி.எம். இரண்டு பெண்களுக்கு நடுவே ஹரீஷ் கல்யாண் ரொம்பவே சிரமப்பட்டிருக்கிறார். சாண்ட்விச்சுக்கு நடுவே சிக்கியதை போலத்தான் இருந்தது ஹரீஷின் நிலைமை. நான் சாக்ஷியிடன் ஒரு விஷயம் தான் கூறினேன். இது வீடு கட்டுவது போன்றது அல்ல கதைக்களம் முடிவு செய்து நடிகர்களை தேடுவது. ஒரு தடவை நீங்கள் முடிவு செய்துவிட்டால் முழுமையாக ஈடுபடுங்கள் என்று கூறினேன்.


    இந்தத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கிப் பட வேலைகளில் இறங்கிய போது ஒன்றே ஒன்றை மட்டும் உறுதியாகச் சொன்னேன். கிரிக்கெட் ஆடும்போது நாங்கள் நல்ல உணவைத்தான் எதிர்பார்ப்போம். அதுபோல இங்கேயும் எல்லாருக்கும் முறையான நல்ல சாப்பாட்டைக் கொடுக்கச் சொன்னோம். நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் உட்படக் குழுவில் உள்ள அனைவருக்கும் நல்ல உணவைக் கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன் என்று கூறினார்.

    • கிரிக்கெட் வீரர் டோனி தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் லெட்ஸ் கெட் மேரிட்.
    • காதல் கதையம்சம் கொண்ட படமாக உருவாகி வரும் இப்படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார்.

    இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான மகேந்திரா சிங் டோனியும், அவரது மனைவி சாக்ஷி சிங் டோனியும் இணைந்து 'தோனி எண்டர்டெயின்மெண்ட்' என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தமிழில் லெட்ஸ் கெட் மேரிட் (Lets Get Married-LGM) என்ற திரைப்படத்தை தயாரித்து வருகின்றனர்.


    காதல் கதையம்சம் கொண்ட படமாக உருவாகி வரும் இப்படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார். இதில் ஹரிஷ் கல்யாண், லவ் டுடே படத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்த இவானா, நதியா மற்றும் நகைச்சுவை நடிகர் யோகி பாபு நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 'எல்.ஜி.எம்' படத்தின் போஸ்டர்கள், டீசர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.


    இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் டோனி, அவரது மனைவி சாக்ஷி சிங் டோனி, ஹரிஷ் கல்யாண், யுவனா, யோகி பாபு மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் நடிகர் யோகிபாபு பேசியதாவது, லெட்ஸ் கெட் மேரிட் திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பளித்ததற்கு நன்றி. இயக்குனர் ரமேஷ் தமிழ் மணி இந்த படத்தில் நடிப்பதற்காக என்னிடம் ஹால்சீட் கேட்டிருந்தார். அப்போது நான் யோசித்துக் கொண்டிருந்தேன். ஆனால், அவர் டோனியிடம் இருந்து பேட் வாங்கி தருவதாக் கூறினார். டோனி சாரின் பேட்டுக்காக நடிக்க ஒத்துக் கொண்டேன் என்று பேசினார்.

    • 'நடராஜன் கிரிக்கெட் மைதானம்' என்ற பெயரில் கிரிக்கெட் வீரர் நடராஜன் கிரிக்கெட் மைதானத்தை நிறுவியுள்ளார்.
    • இந்த மைதானத்தை இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் ரிப்பன் வெட்டி இன்று திறந்து வைத்தார்.

    இந்திய கிரிக்கெட் அணி வீரர் தங்கராசு நடராஜன் தனது சொந்த ஊரான சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியில் 'நடராஜன் கிரிக்கெட் மைதானம்' என்ற பெயரில் கிரிக்கெட் மைதானத்தை நிறுவியுள்ளார். இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. நடராஜன் கிரிக்கெட் மைதானத்தை இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் ரிப்பன் வெட்டி இன்று திறந்து வைத்தார்.



    இந்த மைதானம் திறப்பு நிகழ்ச்சியில் கிரிக்கெட் வீரர்கள் வருண் சக்கரவர்த்தி, விஜயசங்கர், சாய் கிஷோர் ஆகியோர் பங்கேற்றனர். அதேபோல நடிகர் யோகிபாபு, நடிகர் புகழ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அது மட்டுமின்றி தமிழ்நாடு கிரிக்கெட் வாரிய தலைவர் அசோக் சிகாமணி, செயலாளர் பழனி, சி.எஸ்.கே. சிஇஓ விஸ்வநாதன் மற்றும் திருச்சி கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் இந்த விழாவில் பங்கேற்றனர்.

    இந்நிலையில், சேலத்தில் நடிகர் யோகிபாபு பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:-

    நானும் ஒரு கிரிக்கெட் மைதானம் கட்டி கிரிக்கெட் வீரர் நடராஜன் மாதிரி நிறைய வீரர்களை உருவாக்கலாம் என ஆசை உள்ளது. ஐ.பி.எல்., டி.என்.பி.எல். இளைஞர்கள் விளையாடுகிறார்கள். எல்லோருடைய பங்களிப்பும் திறமையாக உள்ளது. எனக்கு ரொம்ப பிடித்த கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக். அடுத்தது நம்முடைய தமிழக வீரர் நடராஜை பிடிக்கும். அடுத்து கிரிக்கெட் தொடர்பான படம் நடிக்க உள்ளேன்.


    விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது பணியை சரியாக செய்து கொண்டிருக்கிறார். நடிகர் விஜய் 10, 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை அழைத்து உற்சாகப்படுத்தி உள்ளார். அதுபோல் தோல்வி அடைந்தவர்களையும் உற்சாகப்படுத்தி உள்ளார். அவர் நல்ல விஷயம் தான் செய்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

    • இயக்குனர் ஜான்சன் தனது அடுத்த படத்திற்கான வேலையை துவங்கியுள்ளார்.
    • இந்த படத்தில் கதாநாயகனாக யோகி பாபு நடிக்கவுள்ளார்.

    "ஏ1, பாரீஸ் ஜெயராஜ்", போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் ஜான்சன்.கே, தனது அடுத்த படத்தை துவங்கியுள்ளார். இப்படத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர் வலம் வரும் யோகி பாபு கதாநாயகனாக நடிக்கிறார். மேலும், தர்ஷா குப்தா, மன்சூர் அலிகான், சேசு, கல்கி, மதுரை முத்து, டி.எஸ்.ஆர், நாஞ்சில் சம்பத், கேபிஒய் வினோத், கேபிஒய் பாலா, டைகர் தங்கதுரை, சித்தார்த் விபின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

    மெடிக்கல் மிராக்கல்

    மெடிக்கல் மிராக்கல்

    அரசியல் காமெடி ஜானரில் உருவாகவிருக்கும் இப்படத்திற்கு "மெடிக்கல் மிராக்கல்" என்று படக்குழுவினர் பெயர் வைத்துள்ளனர். இப்படத்தை ஏ1 புரோடெக்ஷன்ஸ் தயாரிப்பதன் மூலம் இயக்குனர் ஜான்சன்.கே தயாரிப்பாளராகவும் அறிமுகமாகிறார். சித்தார்த் விபின் இசையமைக்கும் இப்படத்திற்கு எஸ்.மணிகண்ட ராஜா ஒளிப்பதிவு செய்கிறார். ரோகேஷ் பாடல்கள் எழுதியுள்ளார். இப்படத்தின் பூஜை இன்று தொடங்கியது. "மெடிக்கல் மிராக்கல்" படத்தின் படப்பிடிப்பினை சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இப்படம் குறித்த பிற அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×