என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மோட்டார் சைக்கிளில்"
- வாகன சோதனையின் போது மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய 5 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
- அவர்களிடமிருந்து 2 கிலோ பொட்டலங்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு வீரப்பன் சத்திரம் சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர் செல்வம் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது மாணிக்கம் பாளையம், முனியப்பன் கோவில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது 2 மோட்டார் சைக்கிளில் வாலிபர்கள் வந்து கொண்டிருந்தனர்.
மோட்டார் சைக்கிளை நிறுத்தி போலீசார் சோதனை செய்ததில் தடை செய்யப்பட்ட கஞ்சா பொட்டலங்கள் 2 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ. 20 ஆயிரம் இருக்கும். விசாரணையில் அவர்கள் சரவணகுமார் (23), விக்னேஷ் (28), மெய் அழகன் (23) என தெரிய வந்தது.
இது குறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 கிலோ பொட்டலங்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதேபோல் வீரப்பன்சத்திரம் போலீசார் நசியனூர் ரோடு, கைகாட்டிவலசில் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்தி வந்த தமிழ்செல்வன் (26) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து ஒரு கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதேபோல் டவுன் சப்-இன்ஸ்பெக்டர் செல்வன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது கஞ்சா கடத்திய சசிகுமார்(33) என்பவரை கைது செய்தனர் அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
- மோட்டார் சைக்கிளை போலீசார் நிறுத்தி அவரிடம் விசாரணை நடத்திய போது அவர் முன்னுக்கு பின் முரனாக பேசினார்.
- இதையடுத்து புஞ்சை புளியம்பட்டி போலீசார் மாரிசாமியை கைது செய்தனர்.
பு.புளியம்பட்டி
ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி பகுதியில் மோட்டார் சைக்கிளில் மது கடத்தப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து போலீசார் புஞ்சை புளிய ம்பட்டி-மேட்டுப்பாளையம் சாலை ஜே. ஜே. நகர் பிரிவு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் ஒருவர் வந்து கொண்டிருந்தார்.
அந்த மோட்டார் சைக்கிளை போலீசார் நிறுத்தி அவரிடம் விசாரணை நடத்திய போது அவர் முன்னுக்கு பின் முரனாக பேசினார். மேலும் மோட்டார் சைக்கிளில் ஒரு சாக்கு மூட்டை இருந்தது. தொடர்ந்து போலீசார் அந்த சாக்கு மூட்டையை பிரித்து சோதனை செய்து செய்தனர். அப்போது அதில் 180 மது பாட்டில்கள் இருந்தது தெரிய வந்தது.
விசாரணையில் மதுவை கடத்தி வந்தவர் கோவை மாவட்டம் சிறுமுகை சித்தார்த்தர் வீதியைச் சேர்ந்த மாரிசாமி (34) என தெரிய வந்தது. இவர் மொத்தமாக மதுபாட்டில்களை வாங்கி அவற்றை கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய கடத்தி சென்றது தெரிய வந்தது.
இதையடுத்து புஞ்சை புளியம்பட்டி போலீசார் மாரிசாமியை கைது செய்தனர். இதை தொடர்ந்து போலீசார் அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிள் மற்றும் மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்