search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "on motorcycle arrested"

    • போலீசார் மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.
    • 3 சாக்கு மூட்டைகளில் 100 கிலோ அரிசி இருந்தது தெரியவந்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் தாள வாடி மலைப்பகுதியில் உள்ள கிராமங்களில் பொது மக்களிடம் குறைந்த விலை க்கு ரேஷன் அரிசியை வாங்கி கடத்தி சென்று அருகாமையில் உள்ள கர்நாடகா மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது தொடர்கதை ஆகி வருகிறது.

    இதனைதடுக்க தாளவாடி வருவாய் துறையினர் மற்றும் காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று இரவு தாளவாடி வருவாய் துறை அதிகாரிகள் தமிழக-கர்நாடகா எல்லையில் உள்ள ராமாபுரம் என்ற இடத்தில் வாகன சோதனை யில் ஈடுபட்டு கொண்டி ருந்தனர். அப்போது அந்த வழியே ஒரு மோட்டார் சைக்கிள் வந்தது.

    போலீசார் அந்த மோட்டார் சைக்கிள் தடுத்து நிறுத்தி சோதனையிட்டபோது அதில் இருந்த 3 சாக்கு மூட்டைகளில் 100 கிலோ அரிசி இருந்தது தெரியவந்தது. இந்த அரிசியை கர்நாடகாவுக்கு கொண்டு செல்ல முயன்றதும் தெரியவந்தது.

    இது குறித்து போலீசார் விசாரணை நடத்திய போது அவர் தாளவாடி பகுதியை சேர்ந்த பாஷா பாய் (55) என தெரிய வந்தது. பின்னர் போலீசார் பாட்சா பாயை பிடித்து ஈரோடு உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிம் ஒப்படைத்தனர்.

    • மோட்டார் சைக்கிளை போலீசார் நிறுத்தி அவரிடம் விசாரணை நடத்திய போது அவர் முன்னுக்கு பின் முரனாக பேசினார்.
    • இதையடுத்து புஞ்சை புளியம்பட்டி போலீசார் மாரிசாமியை கைது செய்தனர்.

    பு.புளியம்பட்டி

    ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி பகுதியில் மோட்டார் சைக்கிளில் மது கடத்தப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனையடுத்து போலீசார் புஞ்சை புளிய ம்பட்டி-மேட்டுப்பாளையம் சாலை ஜே. ஜே. நகர் பிரிவு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் ஒருவர் வந்து கொண்டிருந்தார்.

    அந்த மோட்டார் சைக்கிளை போலீசார் நிறுத்தி அவரிடம் விசாரணை நடத்திய போது அவர் முன்னுக்கு பின் முரனாக பேசினார். மேலும் மோட்டார் சைக்கிளில் ஒரு சாக்கு மூட்டை இருந்தது. தொடர்ந்து போலீசார் அந்த சாக்கு மூட்டையை பிரித்து சோதனை செய்து செய்தனர். அப்போது அதில் 180 மது பாட்டில்கள் இருந்தது தெரிய வந்தது.

    விசாரணையில் மதுவை கடத்தி வந்தவர் கோவை மாவட்டம் சிறுமுகை சித்தார்த்தர் வீதியைச் சேர்ந்த மாரிசாமி (34) என தெரிய வந்தது. இவர் மொத்தமாக மதுபாட்டில்களை வாங்கி அவற்றை கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய கடத்தி சென்றது தெரிய வந்தது.

    இதையடுத்து புஞ்சை புளியம்பட்டி போலீசார் மாரிசாமியை கைது செய்தனர். இதை தொடர்ந்து போலீசார் அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிள் மற்றும் மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.

    ×