search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முல்லைப்பெரியாறு அணை"

    • கேரளா அரசின் முடிவை எதிர்த்தும் தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தது.
    • 3 மாதங்களில் அறிக்கை சமர்ப்பிக்கவும் சர்வே ஆஃப் இந்தியாவுக்கு உத்தரவிட்டார்.

    புதுடெல்லி:

    முல்லைப் பெரியாறு அணைப்பகுதியில் மிகப்பெரிய நான்கு சக்கர வாகன நிறுத்தம் அமைக்கும் பணியில் கடந்த 2013 ஆண்டு முதல் கேரள அரசு ஈடுபட்டு வருகிறது.

    இதையடுத்து முல்லைப் பெரியாறு அணையின் நீர்த்தேக்கப் பகுதிகள் தமிழகத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டிருப்பதால், அதில் கட்டுமானப் பணிகள் நடைபெறும் பகுதியில் கட்டுமான பணிகள் மேற்கொள்ள அனுமதி இல்லை என்று தெரிவித்தும், கேரளா அரசின் முடிவை எதிர்த்தும் தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தது.

    கடந்த மாதம் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, நில அளவை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்படும் மேற்பார்வை குழுவின் தலைமையில் கேரளா மற்றும் தமிழகத்தை உள்ளடக்கிய கூட்டு சர்வே நடத்த வேண்டும். இதுகுறித்து இரு மாநில அரசுகளும் பதிலளிக்க வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் வழக்கின் விசாரணையை நவ.28ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.

    இந்நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் பார்க்கிங் விவகார வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, முல்லைப்பெரியாறு அணை பகுதியில் வாகன நிறுத்த மையம் அமைக்கும் விவகாரத்திற்கு தீர்வு காண கூட்டு சர்வே நடத்த உத்தரவிட்டார்.

    3 மாதங்களில் அறிக்கை சமர்ப்பிக்கவும் சர்வே ஆஃப் இந்தியாவுக்கு உத்தரவிட்டார்.

    இதைத்தொடர்ந்து முல்லைப்பெரியாறு அணை பகுதியில் வாகன நிறுத்த மைய விவகாரத்துக்கு தீர்வு காண கூட்டு சர்வே நடத்த தமிழ்நாடு-கேரள மாநில அரசுகள் இசைவு அளித்துள்ளது.

    • ஆங்கிலேய பொறியாளர் கர்னல் ஜான்பென்னிகுவிக் மேற்பார்வையில் 9 வருடங்களாக கட்டுமான பணிகள் நடந்து 1895ம் ஆண்டு முடிவடைந்தது.
    • 999 வருடங்களுக்கு முல்லை பெரியாறு அணையில் இருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிடப்பட வேண்டும்.

    முல்லை பெரியாறு அணை தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்ட மக்களின் நீராதார பிரச்சினையாக உள்ளது. இந்த அணை கேரள மாநில எல்லைக்குள் இருந்தாலும், அணை முழுக்க முழுக்க தமிழகத்திற்கு சொந்தமானது. கடந்த ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் 1886ம் ஆண்டு பெரியாறு அணையின் குறுக்கே 8 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அணை கட்டப்பட்டது.

    ஆங்கிலேய பொறியாளர் கர்னல் ஜான்பென்னிகுவிக் மேற்பார்வையில் 9 வருடங்களாக கட்டுமான பணிகள் நடந்து 1895ம் ஆண்டு முடிவடைந்தது. இந்த அணையில் இருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் கொடுப்பதற்காக 1886ம் ஆண்டு அக்டோபர் மாதம் 29ம் தேதி அப்போதைய திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர் ஸ்ரீ மூலம் திருநாள் முன்னிலையில் திவான் ராமையங்கார், சென்னை மாகாணத்தின் சார்பில் கொச்சி-திருவிதாங்கூர் பொறுப்பில் இருந்த ஜான் சைல்டு ஹானிங்டன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

    999 வருடங்களுக்கு இந்த அணையில் இருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிடப்பட வேண்டும். அதுவரை அணை தமிழ்நாட்டின் கட்டுப்பாட்டில் தான் இருக்கும். கேரளாவிற்கு குத்தகை பணமாக ஏக்கருக்கு ரூ.5 வழங்க வேண்டும் என்பது உள்பட 7 நிபந்தனைகளுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது.

    இந்த ஒப்பந்தம் 1970ம் ஆண்டு மே மாதம் 29ம் தேதி மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. அப்போது குத்தகை பணம் ரூ.30 என்று நிர்ணயிக்கப்பட்டது. முல்லை பெரியாறு அணை நீரை பயன்படுத்தி தமிழ்நாடு தயாரிக்கும் மின்சாரத்திற்காக 1 கி.வாட்டுக்கு ரூ.12 கேரளாவிற்கு கொடுக்க வேண்டும். 30 வருடங்களுக்கு ஒருமுறை மீண்டும் ஒப்பந்தத்தை புதுப்பிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டன.

    முல்லை பெரியாறு அணை ஒப்பந்தம் கையெழுத்தாகி இன்றுடன் 137 வருடங்கள் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • கேரள அரசு அணையின் உறுதி தன்மை குறித்து அடிக்கடி சந்தேகம் கிளப்பி வருகின்றனர்.
    • மாலையில் குமுளி 1-வது மைலில் உள்ள கண்காணிப்பு குழு அலுவலகத்தில் துணைக்குழுவினர் ஆலோசனை நடத்துகின்றனர்.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் கூடலூர் அருகே கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14707 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் தேனி, மதுரை மாவட்ட முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. 152 அடி உயரம் கொண்ட அணையில் உச்சநீதிமன்ற உத்தரவின்படி 142 அடி வரை தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது.

    பருவநிலை மாறுபாடுகளின்போது முல்லைப்பெரியாறு அணையின் உறுதி தன்மை பராமரிப்பு பணிகள் ஆகியவை குறித்து ஆய்வு செய்ய மத்திய தலைமை கண்காணிப்புக்குழு அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

    இந்த குழுவுக்கு உதவியாக துணை மத்திய கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டது. இந்த 2 குழுக்களும் உச்சநீதிமன்றத்தில் ஆய்வறிக்கைகள் சமர்ப்பிப்பார்கள். அதன்படி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். கேரள அரசு அணையின் உறுதி தன்மை குறித்து அடிக்கடி சந்தேகம் கிளப்பி வருகின்றனர். ஆனால் மத்திய குழுவினர் பெரியாறு அணை உறுதியாக உள்ளது என அறிக்கை சமர்பித்துள்ளனர். கடந்த மே மாதம் 15-ந் தேதி மத்திய கண்காணிப்பு துணைக்குழு ஆய்வு நடத்தியது.

    இந்த நிலையில் இன்று தலைவர் சதீஸ்குமார் தலைமையில் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். தமிழக அரசு சார்பில் அணையின் செயற்பொறியாளர் சாம் இர்வின், உதவி செயற்பொறியாளர் குமார், கேரள அரசு சார்பில் கட்டப்பணை நீர் பாசனத்துறை செயற்பொறியாளர் அனில்குமார், உதவி செயற்பொறியாளர் அருண் ஆகியோர் குழுவில் இடம் பெற்றனர். இந்தக்குழுவினர் மெயின் அணை, பேபி அணை, சுரங்கப்பகுதி, மதகுகள் மற்றும் தண்ணீர் கசிவு பகுதிகள் ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.

    மேலும் மதகுகளையும் இயக்கிப்பார்த்து நீர் வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் குறித்து சோதனையிட்டனர். பின்னர் மாலையில் குமுளி 1-வது மைலில் உள்ள கண்காணிப்பு குழு அலுவலகத்தில் துணைக்குழுவினர் ஆலோசனை நடத்துகின்றனர். இதன் அறிக்கைகள் மத்திய அரசுக்கு சமர்ப்பிக்கப்பட உள்ளது.

    • பெரியாறு அணையில் 142 அடிக்கும் அதிகமான அளவில் சேரும் தண்ணீரை 13 ஷட்டர்கள் வழியாக கேரளா கடல் பகுதிக்கு திறக்கப்பட்டு வீணாகிறது.
    • இரு மாநிலங்களுக்கும் இடையேயான பிரச்சனை என்றால், அது சம்பந்தமாக சுப்ரீம் கோர்ட்டில் தான் வழக்கு தொடர்ந்து உரிய பரிகாரம் தேடிக்கொள்ள முடியும்.

    மதுரை:

    மதுரை சர்வேயர் காலனியைச் சேர்ந்த சுந்தர்ராஜன் மற்றும் கனகசபாபதி ஆகியோர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு கொள்ளளவை 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் எனவும், அணையை ஒட்டியுள்ள பேபி அணையை பலப்படுத்திய பின்னர், முழு கொள்ளளவான 152 அடி வரை நீரை தேக்கிக்கொள்ளலாம் எனவும் கடந்த 2014-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

    இதையடுத்து அப்போதில் இருந்து பெரியாறு அணையில் 142 அடிக்கும் அதிகமான அளவில் சேரும் தண்ணீரை 13 ஷட்டர்கள் வழியாக கேரளா கடல் பகுதிக்கு திறக்கப்பட்டு வீணாகிறது. தமிழகப் பகுதிக்கு தேக்கடி ஷட்டரில் இருந்து சுரங்கப் பாதை வழியாக அதிகபட்சமாக வினாடிக்கு 2,500 கனஅடி நீர் மட்டுமே திறக்க முடியும். இதைவிட கூடுதலாக இந்த வழியாக தண்ணீர் திறக்க வாய்ப்பில்லை.

    மேலும் ஒரு சுரங்கப்பாதை அமைத்து தமிழகத்திற்கு கூடுதலாக தண்ணீர் திறந்து விடப்பட்டால், 142 அடிக்கும் அதிகமாக உள்ள தண்ணீர் வீணாக கேரள பகுதியில் வெளியேற்ற வேண்டிய அவசியம் இருக்காது. இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் லோயர் கேம்பில் இருந்து ராமநாதபுரம் மாவட்டம் வரை 259 கிலோ மீட்டர் தூரத்திற்கு விவசாயம், குடிநீருக்கு பற்றாக்குறை ஏற்படாது.

    எனவே முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் பெறும் வகையில் 2-வது சுரங்கப்பாதை அமைக்கும் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.

    இந்த வழக்கு பல்வேறு கட்டங்களாக விசாரணைக்கு வந்த பிறகு, தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. இந்த வழக்கில் இன்று நீதிபதிகள் சுந்தர், பரத சக்கரவர்த்தி அமர்வு தீர்ப்பு வழங்கியது.

    அதில், இரு மாநிலங்களுக்கும் இடையேயான பிரச்சனை என்றால், அது சம்பந்தமாக சுப்ரீம் கோர்ட்டில் தான் வழக்கு தொடர்ந்து உரிய பரிகாரம் தேடிக்கொள்ள முடியும் என்று பல்வேறு உத்தரவுகளில் சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.

    அதன் அடிப்படையில் இந்த வழக்கை நாங்கள் தள்ளுபடி செய்கிறோம். மனுதாரர்கள் தங்களது முறையீடு குறித்து சுப்ரீம் கோர்ட்டை அணுகலாம் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    • வைகை அணையின் நீர்மட்டம் 50.10 அடியாக உள்ளது.
    • சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 80.81 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    முல்லைப்பெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14707 ஏக்கரில் இருபோக நெல்சாகுபடி நடைபெற்று வருகிறது.

    தற்போது முதல் போகத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் மழை இல்லாததால் அணையின் நீர்மட்டம் உயராமலேயே இருந்தது.

    இந்த நிலையில் கடந்த வாரம் பெய்த கன மழையினால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. நேற்று 2349 கன அடி நீர் வந்தது. தற்போது மழைப்பொழிவு குறைந்துள்ளது. எனவே இன்று காலை நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து 1505 கன அடியாக குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 119.55 அடியாக உள்ளது. 356 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    வைகை அணையின் நீர்மட்டம் 50.10 அடியாக உள்ளது. 244 கனஅடி நீர் வருகிறது. அணையில் இருந்து மதுரை மாநகர குடிநீருக்காக 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 47.45 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 80.81 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    பெரியாறு 12, தேக்கடி 8.6, சண்முகநதி அணை 0.6, மஞ்சளாறு 9 மி.மீ மழை அளவு பதிவாகி உள்ளது.

    • கேரளாவில் பல்வேறு மாட்டங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
    • வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் வைகை அணையில் பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்படும்.

    கூடலூர்:

    தென்தமிழக கடலோர பகுதிகள், மன்னார்வளைகுடா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகள் தெற்கு வங்கக்கடல் பகுதிகள் ஆகியவற்றில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், மதுரை உள்பட 10 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்தது.

    மேலும் கேரளாவில் பல்வேறு மாட்டங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. அதன்படி இடுக்கி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கடந்த பல மாதங்களாக நீர்வரத்து குறைவாக இருந்ததால் முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் உயராமலேயே இருந்தது. இந்த நிலையில் இடுக்கி பகுதியிலும் நீர்பிடிப்பு பகுதியிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து சீராக உயர்ந்து வருகிறது.

    நேற்று முன்தினம் 112 கன அடியாக இருந்த நீர்வரத்து 602 கன அடியாகவும் மாலையில் 1200 கன அடியாகவும் அதிகரித்தது. இன்று காலை நீர்வரத்து மேலும் அதிகரித்து 2113 கன அடிநீர் வருகிறது. இதனால் நேற்று 114.95 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 115.80 அடியாக உள்ளது. 256 கன அடி நீர் வருகிறது.

    வைகை அணையின் நீர்மட்டம் 49.97 அடியாக உள்ளது. 48 கன அடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 47.90 அடியாக உள்ளது. 19 கன அடி நீர் வருகிற நிலையில் திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 81.86 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    பெரியாறு 87.2, தேக்கடி 60, கூடலூர் 5.4, உத்தமபாளையம் 4.4. சண்முகாநதி 3.8, போடி 4.6, வைகை அணை 6.4, சோத்துப்பாறை 2, மஞ்சளாறு 1, பெரியகுளம் 1.2, வீரபாண்டி 21.6, அரண்மனைபுதூர் 1.2 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது. இன்று காலையும் தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சாரல் மழை தொடர்ந்தது. தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் அணைகளின் நீர்மட்டம் உயரும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர். இதனால் மும்முரமாக விவசாய பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

    வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் வைகை அணையில் பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்படும். தற்போது நீர்மட்டம் குறைவாக உள்ளதால் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. எனவே மழை கைகொடுக்கும் பட்சத்தில் அணையின் நீர்மட்டம் உயரும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 44.30 அடியாக உள்ளது.
    • பேபி அணை, மெயின் அணை, ஷட்டர்கள் கேலரி பகுதிகளில் ஆய்வு செய்யப்பட்டது.

    கூடலூர்:

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதாக வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்தது. அதன்படி பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இதனால் முல்லைப்பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து அணையின் நீர்மட்டம் உயரும் என எதிர்பார்த்திருந்தனர். ஆனால் போதிய அளவு மழைப்பொழிவு இல்லாததால் அணையின் நீர்மட்டம் உயராமலேயே உள்ளது. நாற்றங்கால் அமைத்து விவசாய பணிகளை தொடங்கியுள்ள விவசாயிகள் மழை இல்லாததால் கவலையில் உள்ளனர்.

    இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 117.90 அடியாக உள்ளது. அணைக்கு 67 கன அடி நீர் வருகிறது. பாசனம் மற்றும் குடிநீருக்காக 250 கன அடி நீர் திறக்கப்படுகிறது. வைகை அணையின் நீர்மட்டம் 51.91 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் மதுரை மாநகர குடிநீருக்காக 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 44.30 அடியாக உள்ளது. 29 கன அடி நீர் வருகிறது. 10 கன அடி நீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 85.73 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    பருவமழை தொடங்கியதையடுத்து முல்லைப்பெரியாறு அணையில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மதுரை நீர் வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் மலர்விழி தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

    பேபி அணை, மெயின் அணை, ஷட்டர்கள் கேலரி பகுதிகளில் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது பெரியாறு அணை செயற்பொறியாளர் ஷாம் இர்வின், உதவி செயற்பொறியாளர் ராஜகோபால் உள்பட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • முல்லைபெரியாறு அணை தேனி, மதுரை மாவட்ட குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.
    • 2-ம் கட்டமாக மற்ற 2 இடங்களில் கருவி பொருத்துவதற்கு மீண்டும் விஞ்ஞானி விஜயராகவன் தலைமையில் ஆய்வு மேற்கொண்டு பொருத்தும் பணி நடைபெற்றது.

    கூடலூர்:

    கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லை பெரியாறு அணை மூலம் தமிழகத்தில் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. குறிப்பாக கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் சுமார் 14707 ஏக்கர் விவசாய நிலங்களில் இருபோக நெல்சாகுபடி நடைபெற்று வருகிறது. மேலும் தேனி, மதுரை மாவட்ட குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. 152 அடி உயரம் கொண்ட முல்லை பெரியாறு அணையில் உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி 142 அடி வரை தண்ணீர் தேக்கப்படுகிறது.

    இதன் உறுதிதன்மை குறித்து பலமுறை நிருபிக்கப்பட்ட பின்னரும் கேரள அரசு நிலநடுக்க ஆபத்து இருப்பதாக புகார் கூறி வந்தது. இதனை தொடர்ந்து அணையை ஆய்வு செய்ய மத்திய கண்காணிப்பு குழுவினர் வந்தனர். அப்போது இதுகுறித்து அவர்களிடம் கேரள அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் அணைப்பகுதியில் நில அதிர்வு மானிகள் பொருத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த பிப்ரவரி 23-ந்தேதி தேசிய புவியியல் ஆய்வு மைய முதுநிலை முதன்மை விஞ்ஞானி விஜயராகவன் தலைமையில் முல்லைபெரியாறு அணை மேல்பகுதியில் நிலஅதிர்வு கணக்கிடும் கருவி பொருத்தப்பட்டது.

    இதில் பதிவாகும் அதிர்வலைகள் செயற்கைகோள் மூலமாக ஐதராபாத்தில் உள்ள தேசிய புவியியல் ஆய்வு மையத்திற்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து வரைபடமாக கிடைக்கிறது. இந்த நிலையில் 2-ம் கட்டமாக மற்ற 2 இடங்களில் கருவி பொருத்துவதற்கு மீண்டும் விஞ்ஞானி விஜயராகவன் தலைமையில் ஆய்வு மேற்கொண்டு பொருத்தும் பணி நடைபெற்றது.

    அப்போது பெரியாறு அணை செயற்பொறியாளர் சாம்இர்வின், உதவிசெயற்பொறியாளர் குமார், உதவி பொறியாளர்கள் ராஜகோபால், நவீன்குமார், முரளிதரன் ஆகியோர் உடனிருந்தனர். முன்னதாக அதிகாரிகள் தேக்கடியில் இருந்து தமிழக பொதுப்பணித்துறை கண்ணகி படகில் அணைக்கு சென்றனர். முல்லை பெரியாறு அணையில் நிலஅதிர்வு கருவிகள் பொருத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இப்பகுதியில் நிலநடுக்க ஆபத்து குறைவாகவே உள்ளது. எனவே அணை பாதுகாப்பாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    விஞ்ஞானி விஜயராகவன் தலைமையில் முல்லைபெரியாறு அணை மேல்பகுதியில் நிலஅதிர்வு கணக்கிடும் கருவி பொருத்தப்பட்டது.

    • மே மாத இறுதி அல்லது ஜூன் மாத தொடக்கத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும்.
    • அணையின் உறுதி தன்மை குறித்தும் அவர்கள் சோதனை நடத்தினர். அதனைத் தொடர்ந்து மாலையில் குமுளியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

    கூடலூர்:

    தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணையின் மொத்த உயரம் 152 அடியாகும். உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில் 142 அடி வரை தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது. இந்த அணை மூலம் தமிழகத்தில் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது. குறிப்பாக கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் இரு போக நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது.

    மேலும் தேனி, மதுரை மாவட்ட குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. அணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள மத்திய நீர் வள ஆணைய முதன்மை பொறியாளர் தலைமையிலான கண்காணிப்பு குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்தது. இவர்களுக்கு உதவியாக துணை கண்காணிப்பு குழு மத்திய நீர் வள ஆணையர் செயற்பொறியாளர் சதீஸ் தலைமையில் செயல்பட்டு வருகிறது.

    துணைக்குழுவில் தமிழக அரசு சார்பில் செயற்பொறியாளர் சாம் இர்வின், உதவி செயற்பொறியாளர் குமார், கேரள அரசு சார்பில் செயற்பொறியாளர் ஹரிக்குமார், உதவி பொறியாளர் பிரசீத் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர். கடந்த பிப்ரவரி மாதம் 1-ந் தேதி அணையின் நீர் மட்டம் 127.75 அடியாக இருந்த போது துணைக்குழு ஆய்வு மேற்கொண்டது. தற்போது அணையின் நீர் மட்டம் 117.8 அடியாக குறைந்துள்ளது.

    மே மாத இறுதி அல்லது ஜூன் மாத தொடக்கத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும். எனவே பருவ மழைக்கு முன்னாள் அணையில் மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு பணிகள் குறித்து துணைக்குழுவினர் இன்று ஆய்வு செய்தனர். மேலும் பேபி அணை, கேலரி, நீர் கசிவு பகுதி உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்தனர்.

    மேலும் அணையின் உறுதி தன்மை குறித்தும் அவர்கள் சோதனை நடத்தினர். அதனைத் தொடர்ந்து மாலையில் குமுளியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

    இதன் அறிக்கையை மத்திய குழுவிற்கு அனுப்பி வைப்பார்கள். அதன் பின்னர் முல்லைப்பெரியாறு அணை பராமரிப்பு குறித்து உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.

    தற்போது அணைக்கு 100 கன அடி நீர் வருகிறது. தமிழக பகுதிக்கு 100 கன அடி நீர் திறக்கப்படுகிறது. வைகை அணையின் நீர் மட்டம் 53.15 அடியாக உள்ளது. 70 கன அடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 72 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 43.10 அடியாக உள்ளது. 32 கன அடி நீர் வருகிறது. திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 89.21 அடியாக உள்ளது. வருகிற 3 கன அடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது. மழை எங்கும் இல்லை.

    • அணையின் மதகு, சுரங்கப் பகுதி, பேபி அணை, பிரதான அணை ஆகியவற்றை அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
    • பேபி அணையை பலப்படுத்தும் பணிக்காக அங்கு உள்ள மரங்களை அகற்றுவதற்கான அனுமதியை தாமதமின்றி பெற வேண்டும்.

    தேனி:

    தமிழக-கேரள மாநில எல்லையில் முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் நீராதாரமாக இந்த அணை திகழ்கிறது. இந்த அணையின் மொத்த உயரம் 152 அடி ஆகும். இதில் 142 அடி வரை தண்ணீரை தேக்கிக் கொள்ள சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.

    நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தும் உத்தரவை நடைமுறைப்படுத்தி நீர்மட்டம் உயர்வதை கண்காணிக்கவும், அணையின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்பார்வை செய்து தேவையான ஆலோசனைகள் வழங்கவும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி மத்திய அரசு பிரதிநிதி தலைமையில் தமிழக-கேரள அரசுகள் தரப்பில் தலா 2 பிரதிநிதிகளை கொண்ட 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காணிப்பு குழுவினர் கடந்த ஆண்டு மே மாதம் 9-ந்தேதி முல்லைப்பெரியாறு அணையில் ஆய்வு செய்தனர்.

    10 மாத இடைவெளிக்கு பிறகு முல்லைப்பெரியாறு அணையில் மத்திய நீர்வள ஆணையத்தின் தலைமை என்ஜினீயர் விஜயசரண்

    அணையின் மதகு, சுரங்கப் பகுதி, பேபி அணை, பிரதான அணை ஆகியவற்றை அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆய்வின் போது அணையின் சுரங்கப் பகுதியில் கசிவு நீர் அளவை பார்வையிட்டனர். அது துல்லியமாக இருந்தது. அதனால் அணை பலமாக இருப்பதை உறுதி செய்தனர்.

    அதன்பிறகு குமுளி 1-ம் மைல் பகுதியில் உள்ள கண்காணிப்பு குழு அலுவலகத்தில் கண்காணிப்புக்குழு தலைவர் விஜயசரண் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில், 'அணையின் பராமரிப்பு பணிகளுக்கும், பேபி அணையை பலப்படுத்தும் பணிக்கும் தேவையான தளவாட பொருட்களை கொண்டு செல்வதற்கு வல்லக்கடவு சாலை மற்றும் ஆற்றுப் பாலத்தை சீரமைக்க வேண்டும்.

    பேபி அணையை பலப்படுத்தும் பணிக்காக அங்கு உள்ள மரங்களை அகற்றுவதற்கான அனுமதியை தாமதமின்றி பெற வேண்டும். வழக்கமான பராமரிப்பு பணிகளுக்கான பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களை தடுத்து நிறுத்தக்கூடாது' என்று தமிழக பிரதிநிதிகள் தரப்பில் வலியுறுத்தினர்.

    • அணை பலம் இழந்து விட்டதாக கூறி புதிய அணை கட்ட வேண்டும் என கேரள அரசு பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது.
    • அணையில் நிலநடுக்க கருவி பொருத்த வேண்டும் என மத்திய கண்காணிப்பு குழுவினர் வலியுறுத்தியது.

    கூடலூர்:

    கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணை மூலம் தமிழகத்தில் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. குறிப்பாக கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14707 ஏக்கரில் இருபோக நெல்சாகுபடி நடைபெற்று வருகிறது.

    அணை பலம் இழந்து விட்டதாக கூறி புதிய அணை கட்ட வேண்டும் என கேரள அரசு பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. பல்வேறு தொழில்நுட்ப குழுவின் ஆய்வுக்கு பின்னர் அணை பலமாக உள்ளது என உச்சநீதிமன்றம் கடந்த 2014-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. மேலும் 142 அடி வரை தண்ணீர் தேக்கிக் கொள்ளலாம். பேபி அணையை பலப்படுத்தி 152 அடி வரை தண்ணீர் தேக்கலாம் என அறிவுறுத்தியது. இதனை தடுக்க கேரள அரசு பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக அணையில் நிலநடுக்க கருவி பொருத்த வேண்டும் என மத்திய கண்காணிப்பு குழுவினர் வலியுறுத்தியது. இதன் அடிப்படையில் தமிழக அரசு சார்பில் தற்போது கருவி பொருத்தப்பட்டுள்ளது. இதற்கு தமிழக விவசாயிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து பெரியாறு, வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் கூறுகையில், நிலநடுக்கம் வந்தால் 3.5 ரிக்டேர் அளவு முதல் 4.5 ரிக்டர் அளவு வரை தாங்கும் வகையில் முல்லைப்பெரியாறு அணை வடிவமைக்கப்பட்டுள்ளது. கடந்த 125 ஆண்டுகளாக இப்பகுதியில் பெரிதாக நிலநடுக்கம் வரவில்லை. முல்லைப்பெரியாறு அணையை விட 10 மடங்கு அதிகம் தண்ணீர் கொள்ளளவு கொண்ட இடுக்கி அணையில் இதுவரை நிலநடுக்க கருவி பொருத்தவில்லை.

    இந்த நிலையில் தமிழக நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள முல்லைப்பெரியாறு அணையில் நிலநடுக்க கருவி பொருத்த கேரள பொறியாளர் குழு எந்த அனுமதியுடன் வந்தது. இதை வைத்து அணை மீண்டும் பலவீனம் அடைந்து விட்டதாக கேரளா நாடகமாடும். எனவே அந்த கருவிகளை அகற்ற வேண்டும் என்றார்.

    • ஆக்ஸலரோகிராப் கருவி அணையின் மேல் பகுதியிலும் சீஸ்மோகிராப் கருவி பெரியாறு அணை கேப்பிலும் பொருத்தப்படுகிறது.
    • கருவிகள் பொருத்தும் பணியில் ஐதராபாத் விஞ்ஞானிகளுடன் சேர்ந்து தமிழக-கேரள அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

    கூடலூர்:

    மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம் சிவகங்கை உள்ளிட்ட 5 மாவட்ட விவசாயிகளின் முக்கிய குடிநீர் ஆதாரமாக முல்லைப்பெரியாறு அணை விளங்கி வருகிறது. இந்த அணை பலவீனமாக உள்ளது என்று கேரள அரசு தொடர்ந்து பொய்யான குற்றச்சாட்டு கூறி வந்தது.

    உச்சநீதிமன்றத்தின் மூலம் அணையின் உறுதி தன்மை நிரூபிக்கப்பட்டது. இருந்தபோதும் கேரள அரசு தொடர்ந்து நிலநடுக்கம், மற்றும் நில அதிர்வால் அணைக்கு பாதிப்பு உள்ளது என பொய்யான தகவலை பரப்பி வந்தது. இதனால் முல்லைப்பெரியாறு அணையில் நிலநடுக்கம் மற்றும் நில அதிர்வுகளை கண்காணிக்க சீஸ்மோகிராப் எனப்படும் நில அதிர்வு மானிகள் பொருத்த கேரள கண்காணிப்பு குழுவை வலியுறுத்தியது. இதனைத் தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் டெல்லியில் நடைபெற்ற மேற்பார்வை குழுவின் கூட்டத்தில் பெரியாறு அணையின் நில அதிர்வு கண்காணிப்பு கருவிகள் பொருத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.

    கேரள அரசின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து அணையில் நில அதிர்வு மற்றும் நிலநடுக்கத்தை அளவிடும் சீஸ்மோகிராப் மற்றும் ஆக்ஸலரோகிராப் கருவிகள் வாங்குவதற்கு ரூ.99.95 லட்சம் நிதி தமிழ்நாடு பொதுப்பணித்துறைக்கு ஒதுக்கப்பட்டது.

    இந்த கருவிகளை பொருத்தும் பணியை செய்து முடிக்க ஐதராபாத்தைச் சேர்ந்த மத்திய அரசின் புவி இயற்பியல் ஆராய்ச்சி நிலையத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. தொடர்ந்து தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் விஜயராகவன், சேகர் ஆகியோர் இன்று முல்லைப்பெரியாறு அணையில் சீஸ்மோகிராப் மற்றும் ஆக்ஸலரோகிராப் கருவிகள் பொருத்துவதற்கான இடம் குறித்து ஆய்வு செய்தனர். முன்னதாக கருவிகள் பொருத்துவதற்கு தேவைப்படும் பொருட்கள் தமிழ்நாடு பொதுப்பணித்துறை அதிகாரிகளான ஷாம் இர்வின், குமார், உதவி பொறியாளர் ராஜகோபால் ஆகியோர் மேற்பார்வையில் கொண்டு செல்லப்பட்டது. என்.ஜி.ஆர்.ஐ. விஞ்ஞானி சேகர் உடன் சென்றார்.

    இன்று சீனியர் விஞ்ஞானி விஜயராகவன் தலைமையில் அணைப்பகுதியில் 3 இடங்களில் நில அதிர்வு மானி பொருத்தப்படுகிறது. இது குறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில், ஆக்ஸலரோகிராப் கருவி அணையின் மேல் பகுதியிலும் சீஸ்மோகிராப் கருவி பெரியாறு அணை கேப்பிலும் பொருத்தப்படுகிறது. இரு மாநிலத்துக்கான பிரச்சினை என்பதால் இங்கு அமைக்கப்படும் நில அதிர்வு மானியின் அறிக்கை ஒவ்வொரு 15 நொடிக்கும் ஐதராபாத்தில் உள்ள தேசிய புவி இயற்பியல் நில நடுக்க ஆய்வுக்குழுவுக்கு தகவல் செல்லும் வகையில் 5 ஆண்டு ஒப்பந்தத்துடன் அமைக்கப்படுகிறது என்றனர்.

    கருவிகள் பொருத்தும் பணியில் ஐதராபாத் விஞ்ஞானிகளுடன் சேர்ந்து தமிழக-கேரள அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

    ×