search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முசாபர்நகர்"

    வரதட்சணை கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட 21 வயது இளம் பெண்ணின் கணவர் மற்றும் மாமனார் கைது செய்யப்பட்டனர். #UttarPradesh
    லக்னோ:

    உத்தரப்பிரதேச மாநிலம் ஜோகியாகேடா என்ற கிராமத்தில் உள்ள சமேதீன் என்பவருக்கு கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் நடந்தது. திருமணத்தின் போது பெண் வீட்டார் அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை என  கூறப்படுகிறது. இதனால், மாப்பிள்ளை வீட்டார் அந்த பெண்ணை தினம் தினம் கொடுமை படுத்தி வந்துள்ளனர்.

    இந்நிலையில், சமீபத்தில் மாப்பிள்ளையின் சகோதரிகளால் அந்த பெண் கழுத்து நெறித்து கொலை செய்யப்பட்டார். இதையடுத்து இறந்த பெண்ணின் வீட்டார் அவரது மரணத்துக்கு நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இறந்த பெண்ணின் கணவர் மற்றும் மாமனாரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #UttarPradesh
    உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகரில் உள்ள பழைய இரும்புக்கடையில் இன்று திடீரென குண்டுவெடித்ததில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
    லக்னோ :

    உத்தரப்பிரதேச மாநிலம், முசாபர்நகரின் கச்சி சதக் பகுதியில் உள்ள பழைய இரும்புக்கடையில் இன்று திடீரென குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் நிகழ்ந்த இந்த குண்டுவெடிப்பில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உடல் சிதறி பலியாகியுள்ளனர். மேலும், 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் சிறப்பு பாதுகாப்பு படை அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். மேலும், வெடிக்காத நிலையில் வேறு ஏதேனும் வெடிகுண்டுகள் உள்ளதா என்று குண்டுகளை செயலிழக்க செய்யும் அதிகாரிகள் குழுவினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த திடீர் குண்டிவெடிப்புக்கான காரணம் குறித்தும் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×