search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மிசோரம் தேர்தல்"

    • 5 மாநில தேர்தலில் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியானது.
    • மிசோரம் மாநிலத்தில் மொத்த இடங்கள் 40 ஆகும்.

    மிசோரம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று மாலையுடன் நிறைவடைந்தது.

    இந்நிலையில், 5 மாநில தேர்தலில் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியானது.

    இதில், மிசோரம் மாநிலத்தில் மொத்த இடங்கள் 40 ஆகும். இதில், பெரும்பான்மையாக பிடிக்க வேண்டிய இடங்கள் 21.

    கருத்துக் கணிப்பு முடிவுகளின் விவரம் வருமாறு:

    ஜன் கி பாத்: மி.தே.மு 10- 14, ஜோ.ம.இ 15- 25, காங்கிரஸ் 05- 09, மற்றவை 00- 02.

    இந்தியா டிவி மற்றும் சிஎன்எக்ஸ்: மி.தே.மு 14- 18, ஜோ.ம.இ 12- 16, காங்கிரஸ் 08- 10, மற்றவை 00- 02.

    பி- மார்க்யூ: மி.தே.மு 14- 20, ஜோ.ம.இ 15- 25, காங்கிரஸ் 05- 09, மற்றவை 00- 02.

    (மி.தே.மு- மிசோ தேசிய முன்னணி, ஜோ.ம.இ- சோரா மக்கள் கட்சி)

    • ஆளுங்கட்சி சார்பில் மீண்டும் 26 எம்.எல்.ஏ.க்கள் மனுத்தாக்கல்
    • பா.ஜனதா சார்பில் 23 பேர், ஆம் ஆத்மி கட்சி சார்பில் 4 பேர் மனுத்தாக்கல்

    மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம், சத்தீஸ்கர், தெலுங்கானா உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் நவம்பர் 30-ந்தேதி வரை தேர்தல் நடைபெற இருக்கிறது. டிசம்பர் 3-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

    40 தொகுதிகளை கொண்ட மிசோரமில் நவம்பர் 7-ந்தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் முடிவடைந்த நிலையில் இன்று, வேட்மனு மீதான பரிசீலனை நடைபெற இருக்கிறது. அதன்பின் அக்டோபர் 23-ந்தேதி வேட்புமனுவை திரும்பப் பெற கடைசி நாளாகும்.

    மிசோரம் மாநிலத்தில் 16 பெண்கள் உள்பட 174 பேர் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். வேட்புமனு பரிசீலனை முடிவடைந்து பின், அக்டோபர் 23-ந்தேதி இறுதி கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். அப்போது அதிகாரப்பூர்வமாக போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும்.

    ஆளும மிசோரம் தேசிய முன்னணி (MNF), எதிர்க்கட்சிகளான சோரம் மக்கள் இயக்கம் (ZPM), காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

    தற்போதைய எம்.எல்.ஏ.க்கள் 35 பேருக்கு மீண்டும் வாயப்பு அளித்துள்ளது ஆளுங்கட்சி. அதேவேளையில் சோரம் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த ஆறு எம்.எல்.ஏ.-க்கள் உள்பட 40 பேர் மறுதேர்தல் நடத்த வலியுறுத்தியுள்ளனர்.

    இவர்களைத்தவிர பா.ஜனதா சார்பில் 23 பேர், ஆம் ஆத்மி கட்சி சார்பில் 4 பேர், சுயேட்சையாக 27 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

    ×