search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவிக்கு பாராட்டு"

    • இளம் சாதனையாளர் விருது பெற்ற செல்லப்பன் வித்யா மந்திர் மாணவிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
    • இளம் சாதனையாளர் விருது பெற்ற செல்லப்பன் வித்யா மந்திர் மாணவிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

    காரைக்குடி

    சென்னை ராஜ்பவனில் "திங்க் டு டேர் என்ற இளம் சாதனையாளர்களுடன் ஆளுநரின் தொடர்பு என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக அளவில் காரைக்குடி செல்லப்பன் வித்யா மந்திர் பள்ளியில் 5-ம் வகுப்பு படிக்கும் மாணவி அவந்திகா கலந்துகொண்டார். அவருக்கு ஆளுநர் இளம் சாதனையாளர் விருது வழங்கினார். இதன்மூலம் மாணவி அவந்திகா பள்ளிக்கு பெருமை சேர்த்தார். இவர் சிவகங்கை மாவட்ட அளவிலும் தமிழக அளவிலும் நடைபெற்ற சதுரங்க போட்டிகளில் பல வெற்றிகளை பெற்றவர்.அவற்றுள் சிவகங்கை மாவட்ட அளவில் நடந்த சதுரங்கப் போட்டியில் முதலிடம் பெற்று சதுரங்க இளவல் 2023 என்ற விருதை சிவகங்கை மாவட்ட கலெக்டரிடமும் மற்றும் உதய நிலா பட்டத்தை திரைப்பட இயக்குனர் கரு பழனியப்பனிடமும் பெற்று உள்ளார்.

    2021 ஆம் ஆண்டிற்கான சாதனையாளர் விருதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். மேலும் 2020-ம் ஆண்டு பெருமைமிகு பெண்மை என்ற விருது டாக்டர் ஸ்ரீநிதி சிதம்பரம் மாணவிக்கு வழங்கினார். தற்போது ஆளுநர் அவர்களால் விருது பெற்ற மாணவியை பள்ளியின் தாளாளர் சத்யன், நிர்வாக இயக்குனர் சங்கீதா சத்யன், கல்விசார் இயக்குநர் டாக்டர் ராஜேஸ்வரி, முதல்வர் சங்கர சுப்பிரமணியன், துணை முதல்வர் சுபாஷினி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

    • பரிசு பெற்ற மாணவியை பாராட்டி, அஞ்செட்டி அரசு மேல்நிலைப்பள்ளி யில் பாராட்டு விழா நடை பெற்றது.
    • பள்ளியின் தலைமை ஆசிரியர் கணேஷ்மூர்த்தி, மாண விக்கு சால்வை அணிவித்து சான்றிதழ் வழங்கினார்

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி ஆண்கள் கலைக்கல்லூரியில், தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், கடந்த 28-ம் தேதி மாவட்ட அளவில் நடைபெற்ற கட்டுரை, பேச்சு மற்றும் கவிதைப்போட்டிகளில், அஞ்செட்டி அரசு மேல் நிலைப்பள்ளி பிளஸ்-2 மாணவ, மாணவிகள் 3 பேர் கலந்து கொண்டனர்.

    கட்டுரைப் போட்டியில் கலந்து கொண்ட மாணவி சரண்யா, மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து 10 ஆயிரம் காசோலை மற்றும் சான்றிதழ் பெற்று பள்ளிக் கும், மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்தார்.பரிசு பெற்ற மாணவியை பாராட்டி, அஞ்செட்டி அரசு மேல்நிலைப்பள்ளி யில் பாராட்டு விழா நடை பெற்றது.

    இதில் பள்ளியின் தலைமை ஆசிரியர் கணேஷ்மூர்த்தி, மாண விக்கு சால்வை அணிவித்து சான்றிதழ் வழங்கினார்.மேலும் கவிதைப் போட்டியில் பங்கெடுத்த மாணவி நிவேதா மற்றும் பேச்சுப்போட்டியில் பங்கெடுத்த மாணவன் சஞ்சீவ்மூர்த்தி ஆகியோரை பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டது.

    மாண வியை ஊக்கப்படுத்திய முதுகலை தமிழ் ஆசிரியர் வேணு கோபாலுக்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவிக்கபட்டது. நிகழ்ச்சியில் பள்ளியின் பட்டதாரி உதவி தலைமை ஆசிரியர் முனிராஜ், முன்னாள் மாணவர் மன்ற தலைவர் வெங்கடராஜ், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    • மாநில அளவிலான போட்டியில் வானவில் மன்றம் சார்பில் தேர்ந்தெடுக்க ப்பட்டுள்ளார்.
    • மே மாதம் வெளிநாடு செல்லும் இம்மாணவிக்கு ரூபாய் 15, ஆயிரம் மதிப்பிலான பரிசுப் பொருள்களை வழங்கினர்.

    தருமபுரி

    தருமபுரி மாவட்டம், கே.நடுஅள்ளி, அரசு உயர்நிலைப் பள்ளியில், 8-ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீதிவ்யா பள்ளிக் கல்வித் துறையால் நடத்தப்பட்ட, மாநில அளவிலான போட்டியில் வானவில் மன்றம் சார்பில் தேர்ந்தெடுக்க ப்பட்டுள்ளார்.

    தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவிக்கு, தருமபுரி மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் கவுதமன், மாவட்ட பொறியாளர் அணியின் துணை அமைப்பாளர் விமலன், முன்னாள் மாவட்டத் துணைச் செயலாளர் சந்திர மோகன், பள்ளித் தலைமை ஆசிரியர் செந்தில், பள்ளி உதவித் தலைமை ஆசிரியர் பெரியண்ணன் மற்றும் பள்ளியில் பணியாற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

    மேலும், மே-2023 ஆம் மாதம் வெளிநாடு செல்லும் இம்மாணவிக்கு ரூபாய் 15, ஆயிரம் மதிப்பிலான பரிசுப் பொருள்களை வழங்கினர். 

    • நவீன ஓவிய போட்டியில் வட்டார மற்றும் மாவட்ட அளவில் முதல் பரிசை பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளார்.
    • தேர்வு பெற்ற மாணவியை நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க செயலாளர் மதுரா செந்தில், தேசிய அளவிலான போட்டியிலும் பங்கு பெற வாழ்த்து தெரிவித்து நிதி உதவி வழங்கினார்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பாண்டமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவி யசாவதி, நவீன ஓவிய போட்டியில் வட்டார மற்றும் மாவட்ட அளவில் முதல் பரிசை பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளார்.

    தேர்வு பெற்ற மாணவியை நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க செயலாளர் மதுரா செந்தில், தேசிய அளவிலான போட்டியிலும் பங்கு பெற வாழ்த்து தெரிவித்து நிதி உதவி வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பொத்த னூர் பேரூராட்சித் தலை வரும், பேரூர் செயலா ளருமான கருணாநிதி, பாண்டமங்கலம் பேரூராட்சி துணைத்தலைவரும், பேரூர் செயலாளருமான முருகவேல், தங்கரை பேரூர் செயலாளர் ராமலிங்கம், பொதுக்குழு உறுப்பினர் சாமிநாதன் மற்றும் மாவட்ட ஒன்றிய தேர்வு கழக பொறுப்பாளர்கள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    • பிளஸ் -2 மாணவி எல்.ராஜேஸ்வரி, புதுடெல்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான 50–-வது சீனியர் கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார்.
    • சேலம் மாவட்டத்தில் கேரம் போட்டியில் முதன் முறையாக தேசிய அளவில் தங்கப் பதக்கம் பெற்ற மாணவி எல்.ராஜேஸ்வரிக்கு வாழப்பாடி பேருந்து நிலையம் அருகே உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த பேளூர் சக்தி விகாஸ் பள்ளியின் பிளஸ் -2 மாணவி எல்.ராஜேஸ்வரி, புதுடெல்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான 50–-வது சீனியர் கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில், தமிழக பெண்கள் அணியில் சார்பில் பங்கேற்று, தேசிய அளவில் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார்.

    சேலம் மாவட்டத்தில் கேரம் போட்டியில் முதன் முறையாக தேசிய அளவில் தங்கப் பதக்கம் பெற்ற மாணவி எல்.ராஜேஸ்வரிக்கு, வாழப்பாடி அரிமா சங்கம், பேளூர் சக்தி விகாஸ் பள்ளி மற்றும் வாழப்பாடி, துக்கியாம்பாளையம், அத்தனுார்பட்டி, பேளூர், ஏ.குமாரபாளையம் கிராம பொதுமக்கள் சார்பில், வாழப்பாடி பேருந்து நிலையம் அருகே உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    அதனை தொடர்ந்து நடைபெற்ற பாராட்டு விழாவில், வாழப்பாடி ஒன்றிய தி.மு.க செயலாளர் சக்கரவர்த்தி, சேலம் மாவட்ட கேரம் விளையாட்டு சங்க செயலாளர் டேனியல், அரிமா சங்க நிர்வாகி கள் சந்திரசேகரன், தேவராஜன், மருத்துவர் செந்தில்குமார், ஜவஹர், முருகேசன், முருகன், கருணாநிதி, ஷபீராபானு, சுதாபிரபு, சாந்தமீனா, ஒன்றியக் குழு உறுப்பினர் உழவன் முருகன், பேளூர் திருமூர்த்தி, அ.தி.மு.க நகர செயலாளர் வெங்கடேஷ், அத்தனுார்பட்டி தனபால் மற்றும் சக்திவிகாஸ் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவ –மாணவிகள், ராஜேஸ்வரிக்கு சந்தன மாலை அணிவித்து பரிசுகள் வழங்கி பாராட்டினர்.

    • ராணிபேட்டை மாவட்டத்தில் 2-ம் இடம் பிடித்தார்.
    • மாணவிக்கு பாராட்டு குவிந்தது.

    சோளிங்கர்:

    ராணிப்பேட்டை மாவட்டம்சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட 9 வார்டு போலீஸ் லைன் பகுதியை ஆட்டோ ஓட்டுனர் யுவராஜ் மகள் சர்மிலி பத்தாம் வகுப்பு தேர்வில் வெற்றிப் பெற்றார். இவர் பத்தாம் வகுப்பில் மதிப்பெண் கள் 500-க்கு 492 மதிப்பெண் பெற்று ராணிப்பேட்டை மாவட்டத்தில் இரண்டாம் இடமும் சோளிங்கரில் முதலிடமும் பெற்றது.

    இதனை ஒட்டி இந்த மாணவியை பாராட்டும் விதமாக மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் ஏஎல் சாமி, 9 வார்டு உறுப்பினர் ஏ.எல்.மணிகண்டன் சார்பில் மாணவி சர்மிலியை பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

    தொடர்ந்து மாணவிக்கு பொண்ணாடை போர்த்தி பரிசு பொருள் மற்றும் ரொக்க பரிசு வழங்கினார்கள்.

    ×