search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kudos to the student"

    • நவீன ஓவிய போட்டியில் வட்டார மற்றும் மாவட்ட அளவில் முதல் பரிசை பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளார்.
    • தேர்வு பெற்ற மாணவியை நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க செயலாளர் மதுரா செந்தில், தேசிய அளவிலான போட்டியிலும் பங்கு பெற வாழ்த்து தெரிவித்து நிதி உதவி வழங்கினார்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பாண்டமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவி யசாவதி, நவீன ஓவிய போட்டியில் வட்டார மற்றும் மாவட்ட அளவில் முதல் பரிசை பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளார்.

    தேர்வு பெற்ற மாணவியை நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க செயலாளர் மதுரா செந்தில், தேசிய அளவிலான போட்டியிலும் பங்கு பெற வாழ்த்து தெரிவித்து நிதி உதவி வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பொத்த னூர் பேரூராட்சித் தலை வரும், பேரூர் செயலா ளருமான கருணாநிதி, பாண்டமங்கலம் பேரூராட்சி துணைத்தலைவரும், பேரூர் செயலாளருமான முருகவேல், தங்கரை பேரூர் செயலாளர் ராமலிங்கம், பொதுக்குழு உறுப்பினர் சாமிநாதன் மற்றும் மாவட்ட ஒன்றிய தேர்வு கழக பொறுப்பாளர்கள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    • கரூர் வெள்ளியணை அரசு தொடக்கப்பள்ளியில் முதலாம் வகுப்பில் படிக்கும் மாணவன் முகமதுபாரிஸ்(வயது 6).
    • சிலம்ப போட்டியில், 10 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் கலந்துகொண்டு விளையாடி மாவட்ட அளவில் 2-ம் இடம் பெற்றார்.

    கரூர் :

    கரூர் வெள்ளியணை அரசு தொடக்கப்பள்ளியில் முதலாம் வகுப்பில் படிக்கும் மாணவன் முகமதுபாரிஸ்(வயது 6).

    இந்த மாணவன் அண்மையில் கரூரில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சிலம்ப போட்டியில், 10 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் கலந்துகொண்டு விளையாடி மாவட்ட அளவில் 2-ம் இடம் பெற்றார்.

    இதனையடுத்து மாணவன் முகமதுபாரிசுக்கு பள்ளியின் தலைமையாசிரியர் தர்மலிங்கம் தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது.

    இதில் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் என பலர் கலந்துகொண்டு மாணவனை பாராட்டி வாழ்த்தினர்.

    ×