என் மலர்
உள்ளூர் செய்திகள்

சிலம்ப போட்டியில் பரிசு பெற்ற மாணவனுக்கு பாராட்டு
- கரூர் வெள்ளியணை அரசு தொடக்கப்பள்ளியில் முதலாம் வகுப்பில் படிக்கும் மாணவன் முகமதுபாரிஸ்(வயது 6).
- சிலம்ப போட்டியில், 10 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் கலந்துகொண்டு விளையாடி மாவட்ட அளவில் 2-ம் இடம் பெற்றார்.
கரூர் :
கரூர் வெள்ளியணை அரசு தொடக்கப்பள்ளியில் முதலாம் வகுப்பில் படிக்கும் மாணவன் முகமதுபாரிஸ்(வயது 6).
இந்த மாணவன் அண்மையில் கரூரில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சிலம்ப போட்டியில், 10 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் கலந்துகொண்டு விளையாடி மாவட்ட அளவில் 2-ம் இடம் பெற்றார்.
இதனையடுத்து மாணவன் முகமதுபாரிசுக்கு பள்ளியின் தலைமையாசிரியர் தர்மலிங்கம் தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது.
இதில் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் என பலர் கலந்துகொண்டு மாணவனை பாராட்டி வாழ்த்தினர்.
Next Story






