என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
அஞ்செட்டி அரசு பள்ளி மாணவிக்கு பாராட்டு
- பரிசு பெற்ற மாணவியை பாராட்டி, அஞ்செட்டி அரசு மேல்நிலைப்பள்ளி யில் பாராட்டு விழா நடை பெற்றது.
- பள்ளியின் தலைமை ஆசிரியர் கணேஷ்மூர்த்தி, மாண விக்கு சால்வை அணிவித்து சான்றிதழ் வழங்கினார்
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி ஆண்கள் கலைக்கல்லூரியில், தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், கடந்த 28-ம் தேதி மாவட்ட அளவில் நடைபெற்ற கட்டுரை, பேச்சு மற்றும் கவிதைப்போட்டிகளில், அஞ்செட்டி அரசு மேல் நிலைப்பள்ளி பிளஸ்-2 மாணவ, மாணவிகள் 3 பேர் கலந்து கொண்டனர்.
கட்டுரைப் போட்டியில் கலந்து கொண்ட மாணவி சரண்யா, மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து 10 ஆயிரம் காசோலை மற்றும் சான்றிதழ் பெற்று பள்ளிக் கும், மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்தார்.பரிசு பெற்ற மாணவியை பாராட்டி, அஞ்செட்டி அரசு மேல்நிலைப்பள்ளி யில் பாராட்டு விழா நடை பெற்றது.
இதில் பள்ளியின் தலைமை ஆசிரியர் கணேஷ்மூர்த்தி, மாண விக்கு சால்வை அணிவித்து சான்றிதழ் வழங்கினார்.மேலும் கவிதைப் போட்டியில் பங்கெடுத்த மாணவி நிவேதா மற்றும் பேச்சுப்போட்டியில் பங்கெடுத்த மாணவன் சஞ்சீவ்மூர்த்தி ஆகியோரை பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டது.
மாண வியை ஊக்கப்படுத்திய முதுகலை தமிழ் ஆசிரியர் வேணு கோபாலுக்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவிக்கபட்டது. நிகழ்ச்சியில் பள்ளியின் பட்டதாரி உதவி தலைமை ஆசிரியர் முனிராஜ், முன்னாள் மாணவர் மன்ற தலைவர் வெங்கடராஜ், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்