search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவி கடத்தல்"

    • வாலிபரின் வீட்டுக்கு தீ வைத்த உறவினர்கள்
    • போலீசார் விசாரணை

    வந்தவாசி:

    வந்தவாசி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் 20 வயது மாணவி. இவர் வந்த வாசியில் உள்ள தனியார் கல் லூரியில் இறுதி ஆண்டு படித்துவருகிறார். இந்தநிலை யில் வீட்டின் பின்புறமுள்ள தோட்டத்திற்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற மாணவி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

    இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் தோட்டத்துக்குச் சென்று பார்த்த போது மாணவி அங்கு இல்லை. பின்னர் எங்கு தேடியும் மாணவி கிடைக்கவில்லை.

    வந்தவாசியை அடுத்த வீரம் பாக்கம் புதூர் கிராமத்தைச் சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் தங்களது மகளுடன் பேசி வந்த நிலையில் அவர் கடத்திச் சென்றிருக்கலாம் என கருதி மாணவியின் பெற் றோர் மற்றும் உறவினர்கள் அங்கு சென்று பார்த்தனர்.

    அப்போது அந்த வாலிபர் வீட்டில் இல்லாததால் சந்தே கம் அடைந்த அவர்கள் அங் கிருந்தவர்களிடம் கேட்ட போது சரியான தகவல் கூற வில்லை.

    இதனால் ஆத்திரம் அடைந்த மாணவியின் உறவி னர்கள் அவர்களுடன் தக ராறு செய்தனர். பின்னர் வாலிபரின் குடிசை வீட்டுக்கு திடீரென தீ வைத்ததாக கூறப்படுகிறது.

    அப்போது மாணவியின் உறவினர்களில் சிலர் உடனே தீயை அணைத்த னர். அதற்குள் வீடு முழுவதும் தீ பரவியதால் அக்கம் பக்கத் தினர் வந்தவாசி வடக்கு போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று தகராறில் ஈடுபட்ட அனைவரையும் தடுத்து நிறுத்தினர். மேலும் தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை ஆசை வார்த்தை யாராவது கடத்திச் சென்றனரா அல்லது வேறு ஏதும் காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பஸ் கண்டக்டர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
    • திருமணமாகி மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வருவது தெரியவந்தது.

    கவுண்டம்பாளையம்,

    ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவர் கோவை கவுண்டம்பாளையத்தல் பெற்றோருடன் தங்கி அங்குள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இந்த நிலையில் கடந்த வாரம் சிறுமி வழக்கம் போல பள்ளிக்கு சென்றார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் குடும்பத்தினர் அவரை அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.

    இதையடுத்து சிறுமியின் பெற்றோர் துடியலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    புகாரில் சிறுமி பஸ் கண்டக்டர் ஒருவருடன் சென்று இருக்கலாம் என சந்தேகம் இருப்பதாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    விசாரணையில் பல்லடத்தைச் சேர்ந்த சபரிநாதன் என்பவர் சிறுமியை கடத்தி சென்றது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து சிறுமியை மீட்டனர்.

    மேலும் விசாரணையில் சபரிநாதன் கடந்த ஒருமாதமாக காதலிப்பதாக கூறி சிறுமியை கடத்தி சென்றதும், தனியார் பஸ்சில் கண்டக்டராக வேலை செய்து வந்ததும், இவருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வருவதும் தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து போலீசார் சபரிநாதன் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். 

    • வழக்கம் போல் தனது வீட்டில் இருந்து கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்றார். பின்னர் கல்லூரிக்கு சென்ற மாணவி மீண்டும் வீட்டிற்கு வரவில்லை.
    • கல்லூரி மாணவியையும், வாலிபரையும் வலைவீசி தேடி வருகின்றனர்

    கடலூர்:

    கடலூர் வண்டி ப்பாளையம் பகுதியை சேர்ந்த தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.எஸ்.சி படித்து வரும் மாணவி நேற்று காலை வழக்கம் போல் தனது வீட்டில் இருந்து கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்றார். பின்னர் கல்லூரிக்கு சென்ற மாணவி மீண்டும் வீட்டிற்கு வரவில்லைஅதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கல்லூரி மாணவியை எங்கும் தேடியும் கிடைக்கவில்லை. மேற்கொண்டு மாணவி எங்கு சென்றார் என விசாரித்த போது அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் கல்லூரி மாணவி யை கடத்திச் சென்றதாக கூறப்படுகிறதுஇது குறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து கடத்தி செல்லப்பட்ட கல்லூரி மாணவியையும், வாலிபரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

    இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

    • சினேகா (வயது 16).பண்ருட்டியில் உள்ள நர்சிங் பள்ளியில் படித்து வருகிறார்.
    • பல இடங்களில் தேடினர். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை

    கடலூர்:

    விழுப்புரம் மாவட்டம் பூவரசன் குப்பம் அருகே நரசிம்மபுரம் கிராமத்தை சேர்ந்தவர் முத்துராமன். அவரது மகள் சினேகா (வயது 16).பண்ருட்டியில் உள்ள நர்சிங் பள்ளியில் படித்து வருகிறார் இவர்கடந்த 28-ந்தேதி நர்சிங் பள்ளிக்கு செல்வதாக வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சினேகாவை பல இடங்களில் தேடினர். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை 

    எனவே இதுகுறித்து பண்ருட்டி போலீசில் தாயார் அன்னக்கிளிபுகார் செய்தார். புகார் மனுவில் நர்சிங் பள்ளிக்கு சினேகா செல்லும் போது எல்.என். புரம்,அய்யனார் கோவில் வழியாக செல்வார். அப்போது அதே பகுதியை சேர்ந்தசரண்ராஜ் (22)பழக்கம் ஏற்பட்டு உள்ளது.எனவே சினேகாவை சரண்ராஜ் அழைத்து சென்றுவிட்டதாக கூறி உள்ளார் இது குறித்து பண்ருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன சினேகாவை தேடி வருகின்றனர்.

    • பொங்கல் விடுமுறை முடிந்து கல்லூரிக்கு சென்றவர் மாயமானார்
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    ஆம்பூர் பகுதியை சேர்ந்த மெக்கானிக் உடைய 19 வயது மகள் சேலம் தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இந்த நிலையில் பொங்கல் பண்டிகை கொண்டாட கடந்த 14-ந் தேதி விடுமுறையில் ஆம்பூருக்கு வந்தார்.

    பின்னர் விடுமுறை முடிந்து 23-ந் தேதி கல்லூரிக்கு சென்றார். மகள் கல்லூரிக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மெக்கானிக் மகளை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் ஆம்பூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து திருமண ஆசையில் யாராவது கடத்தி சென்றுள்ளனரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாலிபர் மீது புகார்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டையை அடுத்த அசோக் நகர் பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவி அப்பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இவரை அதே பகுதியை சேர்ந்த 25 வயதுடைய வாலிபர் ஒருவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்ததும் பெற்றோர்கள் மாண வியை கண்டித்ததாக கூறப்படுகிறது.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் மாணவியை, வாலிபர் கடத்தி சென்று விட்டதாக வும், மகளை கண்டுபிடித்து தருமாறும் மாணவியின் தாயார் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத் தார். புகாரின் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் வழக்குப் பதிவு செய்து பள்ளி மாணவியை தேடி வருகிறார்.

    • 21 வயது கல்லூரி மாணவி. இவர் கடந்த 5-ந்தேதி அன்று வீட்டை விட்டு மாயமானார்.
    • போலீசில் எனது மகளை அதே பகுதியை சேர்ந்த பெரியசாமி (வயது21) என்பவர் கடத்தி சென்றிருக்கலாம் என புகார் கொடுத்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ராம்நகர் பகுதியை சேர்ந்தவர் 21 வயது கல்லூரி மாணவி. இவர் கடந்த 5-ந்தேதி அன்று வீட்டை விட்டு மாயமானார். இதனால் அவரை உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் அவர் கிடைக்கவில்லை.

    இது குறித்து மாணவியின் பெற்றோர் எனது மகளை அதே பகுதியை சேர்ந்த பெரியசாமி (வயது21) என்பவர் கடத்தி சென்றிருக்கலாம் என புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து தேடி வருகின்றனர்.

    • மாணவியை ஆசை வார்த்தை கூறி இசக்கிமுத்து கடத்தி சென்றுவிட்டார்.
    • மகள் காணாமல் போனது குறித்து மாணவியின் பெற்றோர் ஆலங்குளம் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

    ஆலங்குளம்:

    தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள புதுப்பட்டியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் இசக்கிமுத்து(வயது 21). இவர் பள்ளி மாணவி ஒருவரை ஒரு தலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

    கடந்த 4-ந்தேதி இரவு அந்த மாணவியை ஆசை வார்த்தை கூறி இசக்கிமுத்து கடத்தி சென்றுவிட்டார். இதற்கிடையே தனது மகள் காணாமல் போனது குறித்து மாணவியின் பெற்றோர் ஆலங்குளம் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

    இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில், மாணவியை இசக்கிமுத்து கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் வலைவீசி தேடி வந்த நிலையில் நேற்று தனது சகோதரி வீட்டில் பதுங்கி இருந்த இசக்கிமுத்துவை போலீசார் பிடித்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    • நேற்று கணவன் - மனைவி 2 பேரும் கட்டிட வேலைக்கு சென்று இருந்தனர்.
    • புதுப்பேட்டை போலீசில் கஸ்தூரி புகார் கொடுத்தார்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே உள்ள தொரப்பாடியை சீனிவாசன் நகரை சேர்ந்தவர்முருகப்பன்-கஸ்தூரிதம்பதியினர்.இவர்களது மகள் கோமதி (வயது 15). இவர் புதுப்பேட்டை பெண்கள் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று கணவன் - மனைவி 2 பேரும் கட்டிட வேலைக்கு சென்று இருந்தனர். கோமதிவீட்டி ல்தனியாக இருந்தார்.

    அப்போது அங்கு வந்த அதே பகுதியைசேர்ந்த மணிகண்டன் என்ற வாலிபர் கோமதியை மயக்கி ஆசைவா ர்த்தை கூறி கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. இது பற்றிபுதுப்பேட்டை போலீசில் கஸ்தூரி புகார் கொடுத்தார். புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர்நந்த குமார் வழக்குபதிவு செய்து கடத்தப்பட்ட பள்ளி மாணவி கோமதியை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • வாலிபர் ஒருவர் மாணவியுடன் பழகியதாகவும், பின்னர் இருவரும் காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
    • கடந்த 16-ந் தேதி பள்ளிக்கு சென்ற மாணவி மாயமானார்.

    திருச்செந்தூர்:

    நெல்லை மாவட்டம் வள்ளியூர் பகுதியை சேர்ந்த தொழிலாளி ஒருவரின் 16 வயது மகள் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

    அப்போது அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் மாணவியுடன் பழகியதாகவும், பின்னர் இருவரும் காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

    இதையறிந்த தொழிலாளி மகளின் படிப்பை நிறுத்தி விட்டு திருச்செந்தூர் பகுதியில் உள்ள அரசு விடுதியில் சேர்த்தார். அங்கிருந்து மாணவி அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வந்தார்.

    இந்நிலையில் கடந்த 16-ந் தேதி பள்ளிக்கு சென்ற மாணவி மாயமானார். இதையறிந்த அவரது தந்தை சகமாணவிகளிடம் விசாரித்தபோது வள்ளியூரை சேர்ந்த வாலிபர் மாணவியை மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து மாணவி தந்தை அளித்த புகாரின் பேரில் திருச்செந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காதல் விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
    • மாணவியின் பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் அங்கு வந்த சரவணன் மாணவியை கடத்தி சென்றார்.

    கோவை:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 16 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். மாணவி பள்ளிக்கு செல்லும்போது அவருக்கு செங்குட்டு பாளையத்தை சேர்ந்த சரவணன் (வயது 20) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது.

    நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் கடந்த ஒரு வருடங்களாக ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வந்தனர். மேலும் அடிக்கடி நேரில் சந்தித்தும், செல்போனில் பேசியும் தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

    இந்த காதல் விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அவர் வாலிபருடன் பேசுவதையும், பழகுவதையும் தவிர்க்க வேண்டும் என தங்களது மகளை கண்டித்தனர்.

    இதனால் சரவணன் தனது காதலியை சந்திக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வந்தார்.

    சம்பவத்தன்று மாணவியின் பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் அங்கு வந்த சரவணன் மாணவியை கடத்தி சென்றார். அங்குள்ள ஒரு கோவிலில் வைத்து நண்பர்கள் முன்னிலையில் மாணவியை அவர் திருமணம் செய்தார்.

    பின்னர் சரவணன் மாணவியை தன்னுடைய வீட்டிற்கு அழைத்து சென்றார். மாணவியிடம் சரவணனின் பெற்றோர் விசாரணை நடத்தினர். அப்போது 16 வயது சிறுமியை அவர் திருமணம் செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து சரவணனின் பெற்றோர் மாணவியை பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசில் ஒப்படைத்தனர்.

    போலீசார் பிளஸ்-1 மாணவியை கடத்தி சென்று திருமணம் செய்த சரவணன் மீது குழந்தை திருமணம் தடுப்பு சட்டம், கடத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தற்போது தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    • உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
    • எனது மகளை ஓசூரை சேர்ந்த சதீஸ்குமார் என்பவர் கடத்தி சென்றிருக்க லாம் என்று மாாணவியின்தந்தை புகார் கூறியிருந்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்துள்ள தின்னூர் பகுதிைய சேர்ந்தவர் பிளஸ்-2 படிக்கும் 16 வயது மாணவி. இவர் கடந்த 15-ந்தேதி வெளியில் சென்றவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரை உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    இது குறித்து மாணவியின் பெற்றோர் ஓசூர் அனைத்து மகளிர் போலீசில் எனது மகளை ஓசூரை சேர்ந்த சதீஸ்குமார் என்பவர் கடத்தி சென்றிருக்க லாம் என்று புகார் கூறியி ருந்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×