பள்ளி மாணவி கடத்தல்

வாலிபர் மீது புகார் போலீசார் விசாரணை
பள்ளி மாணவி கடத்தல்
Published on

ஜோலார்பேட்டை:

ஜோலார்பேட்டையை அடுத்த அசோக் நகர் பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவி அப்பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இவரை அதே பகுதியை சேர்ந்த 25 வயதுடைய வாலிபர் ஒருவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்ததும் பெற்றோர்கள் மாண வியை கண்டித்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மாணவியை, வாலிபர் கடத்தி சென்று விட்டதாக வும், மகளை கண்டுபிடித்து தருமாறும் மாணவியின் தாயார் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத் தார். புகாரின் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் வழக்குப் பதிவு செய்து பள்ளி மாணவியை தேடி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com