கல்லூரி மாணவி கடத்தல்?

பொங்கல் விடுமுறை முடிந்து கல்லூரிக்கு சென்றவர் மாயமானார் போலீசார் விசாரணை
கல்லூரி மாணவி கடத்தல்?
Published on

ஆம்பூர்:

ஆம்பூர் பகுதியை சேர்ந்த மெக்கானிக் உடைய 19 வயது மகள் சேலம் தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இந்த நிலையில் பொங்கல் பண்டிகை கொண்டாட கடந்த 14-ந் தேதி விடுமுறையில் ஆம்பூருக்கு வந்தார்.

பின்னர் விடுமுறை முடிந்து 23-ந் தேதி கல்லூரிக்கு சென்றார். மகள் கல்லூரிக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மெக்கானிக் மகளை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் ஆம்பூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

போலீசார் வழக்கு பதிவு செய்து திருமண ஆசையில் யாராவது கடத்தி சென்றுள்ளனரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com