என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பிளஸ்-1 மாணவி கடத்தல்: வாலிபருக்கு வலைவீச்சு
- வாலிபர் ஒருவர் மாணவியுடன் பழகியதாகவும், பின்னர் இருவரும் காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
- கடந்த 16-ந் தேதி பள்ளிக்கு சென்ற மாணவி மாயமானார்.
திருச்செந்தூர்:
நெல்லை மாவட்டம் வள்ளியூர் பகுதியை சேர்ந்த தொழிலாளி ஒருவரின் 16 வயது மகள் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் மாணவியுடன் பழகியதாகவும், பின்னர் இருவரும் காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதையறிந்த தொழிலாளி மகளின் படிப்பை நிறுத்தி விட்டு திருச்செந்தூர் பகுதியில் உள்ள அரசு விடுதியில் சேர்த்தார். அங்கிருந்து மாணவி அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 16-ந் தேதி பள்ளிக்கு சென்ற மாணவி மாயமானார். இதையறிந்த அவரது தந்தை சகமாணவிகளிடம் விசாரித்தபோது வள்ளியூரை சேர்ந்த வாலிபர் மாணவியை மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து மாணவி தந்தை அளித்த புகாரின் பேரில் திருச்செந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்