search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மழை நீடிப்பு"

    • பேச்சிப்பாறையில் அதிகபட்சமாக 6.2 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
    • பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 37.90 அடியாக உள்ளது

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தின் மலையோர பகுதிகளிலும், அணை பகுதிகளிலும் தொடர்ந்து மழை நீடித்து வருகிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி மாம்பழத் துறையாறு, பாலமோர் பகுதிகளில் நேற்றும் மழை பெய்தது. பேச்சிப்பாறையில் அதிகபட்சமாக 6.2 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    பூதப்பாண்டி, களியல், குழித்துறை, ஆணைக் கிடங்கு, முக்கடல் அணை பகுதிகளிலும் மழை நீடித்தது. நாகர்கோவிலில் இன்று காலையில் வானம் மப்பும் மந்தாரமாக காணப் பட்டது. அவ்வப்போது சாரல் மழை பெய்தது. காலையில் பெய்த மழையின் காரணமாக பள்ளிக்கு சென்ற மாணவ-மாணவி கள் குடைபிடித்தவாறு சென்றனர்.

    குலசேகரம், தக்கலை, இரணியல், குளச்சல் பகுதிகளிலும் இன்று காலையில் மழை பெய்தது. திற்பரப்பு அருவி பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது. பேச்சிப் பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கும் மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 18.55 அடி யாக உள்ளது. அணைக்கு 455 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 583 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 37.90 அடியாக உள்ளது. அணைக்கு 197 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 200 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது.

    • திற்பரப்பு அருவியில் தண்ணீர் கொட்டுகிறது
    • பேச்சிப்பாறை, பெருஞ் சாணி அணைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயில் அடித்து வந்த நிலையில் கடந்த 2 நாட்களாக இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று இரவும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

    பூதப்பாண்டி, சுருளோடு, கன்னிமார், ஆரல்வாய்மொழி, ஆணைக்கிடங்கு, கோழி போர்விளை, முள்ளங்கினா விளை, புத்தன்அணை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழை பெய்தது. முள்ளங்கினா விளையில் அதிகபட்சமாக 18.2 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. திற்பரப்பு அருவி பகுதியில் விட்டுவிட்டு பெய்து வரும் மழையின் காரணமாக அங்கு குளு குளு சீசன் நிலவுகிறது. அருவியில் தண்ணீர் ஆர்ப்ப ரித்து கொட்டி வருகிறது.

    மாவட்டம் முழுவதும் வெப்பம் தணிந்து இதமான குளிர் காற்று வீசி வருகிறது. நாகர்கோவிலில் இன்று காலையிலும் வானத்தில் கருமேகங்கள் திரண்டு மப்பும் மந்தாரமாகவே இருந்தது. காலை 10 மணிக்கு மழை பெய்யத் தொடங்கியது. அரை மணி நேரமாக மழை கொட்டியது.

    பேச்சிப்பாறை, பெருஞ் சாணி அணைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மலையோர பகுதி யான பாலமோர் பகுதியிலும் மழை பெய்து வருவதால் அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பாசனத்திற்காகவும் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 31.46 அடியாக உள்ளது. அணைக்கு 435 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை யிலிருந்து 684 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படு கிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 22.40 அடியாக உள்ளது. அணைக்கு 207 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 250 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை 12, பெருஞ்சாணி 7.2, சிற்றாறு 1-6.4, மாம்பழத்துறையாறு 8.4, பூதப்பாண்டி 6.2, சுருளோடு 12.6, கன்னிமார் 8.4, பாலமோர் 13.4, மயிலாடி 4.6, கொட்டாரம் 2.6, ஆணைக்கிடங்கு 1.2, அடையாமடை 4.1, கோழி போர்விளை 4.2, முள்ளங்கினா விளை 18, திற்பரப்பு 10.9, நாகர்கோவில் 5.4.

    • பெருஞ்சாணியில் 14.8 மில்லி மீட்டர் பதிவு
    • சிற்றார்-1 அணை 11.38 அடியாகவும், சிற்றாறு-2 அணை 11.48 அடியாகவும், பொய்கை அணை நீர்மட்டம் 11.60 அடி

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யாததால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் குறைவான அளவு தண்ணீர் உள்ளது.

    மேலும் பாசன குளங்களிலும் தண்ணீர் குறைவாகவே இருந்து வருகிறது. இதனால் விவசாயிகள் பருவமழையை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். இந்த நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பரவலாக சாரல் மழை பெய்து வருகிறது. நேற்று இரவும் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இன்று காலையில் வானத்தில் கருமேகங்கள் திரண்டு மப்பும் மந்தாரமாக காணப்பட்டது. ஒரு சில இடங்களில் மழை பெய்தது.

    நாகர்கோவில் பகுதியில் இன்று அதிகாலையில் சாரல் மழை பெய்தது. மயிலாடி, கொட்டாரம், பூதப்பாண்டி, சுருளோடு, இரணியல், அடையாமடை, குளச்சல் மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது.

    மழையின் காரணமாக ஒரு சில இடங்களில் தண்ணீர் தேங்கியது. திற்பரப்பு அருவி பகுதியில் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது. அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இதனால் அங்கு ரம்மியமான சூழல் நிலவி வருகிறது.

    பேச்சிப்பாறை, பெருஞ் சாணி அணை பகுதியிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. பெருஞ்சாணியில் அதிகபட்சமாக 14.8 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இரவு மற்றும் அதிகாலையில் மழை பெய்தாலும் அதன் பிறகு வெயில் வழக்கம்போல் சுட்டெரித்தது. பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 32.95 அடியாக உள்ளது. அணைக்கு 363 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை யில் இருந்து 690 கன அடி தண்ணீர் வெளியேற்றப்ப டுகிறது.

    பெருஞ்சாணி அணை யின் நீர்மட்டம் 25.65 அடியாக உள்ளது. அணைக்கு 204 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 250 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றார்-1 அணை நீர்மட்டம் 11.38 அடியாகவும், சிற்றாறு-2 அணை நீர்மட்டம் 11.48 அடியாகவும், பொய்கை அணை நீர்மட்டம் 11.60 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 3.26 அடியாகவும் உள்ளது.

    மாவட்டம் முழுவதும் பெய்தமழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை 5.8, பெருச்சாணி 14.8, சிற்றார் 1 -10.2, சிற்றார் 2-8, நாகர்கோவில் 7.4, பூதப் பாண்டி 7.2, சுருளோடு 8.4, கன்னிமார் 3.4, பாலமோர் 11.2, மயிலாடி 3.6, கொட்டாரம் 5.2, இரணியல் 6.2, ஆணைக் கிடங்கு 8.4, குளச்சல் 8, குருந்தன்கோடு 4, முள்ளாங்கினாவிளை 6.2, புத்தன் அணை 12, திற்பரப்பு 8.2.

    • திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல்
    • பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 30 அடியை எட்டியது

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்தது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதியில் நேற்றும் சாரல் மழை பெய்தது. மழையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.

    திற்பரப்பு அருவி பகுதியில் சாரல் மழை பெய்து வருவதையடுத்து அங்கு ரம்மியமான சூழல் நிலவுகிறது. அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமான இன்று அருவியில் குளிப்பதற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். குமரி மாவட்டம் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்தோடு வந்து ஆனந்த குளியலிட்டு சென்றனர். தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது.

    பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 36 அடியை எட்டியது. அணைக்கு 627 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 646 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது. பெருஞ் சாணி அணையின் நீர்மட்டம் கடந்த 5 நாட்களில் 11 அடி உயர்ந்திருந்த நிலையில் நேற்று மேலும் ஒரு அடி உயர்ந்துள்ளது. அணையின் நீர்மட்டம் இன்று காலை 30 அடியை எட்டியது. அணைக்கு 141 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 20 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    சிற்றாறு-1 அணை நீர்மட்டம் 11.38 அடியாகவும், சிற்றார்-2 அணை நீர்மட்டம் 11.48 அடியாகவும், பொய்கை அணை நீர்மட்டம் 12 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 3.28 அடியாகவும் உள்ளது.

    நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் நீர்மட்டம் தொடர்ந்து மைனஸ் அடியில் இருந்து வருகிறது. இன்று காலை அணையின் நீர்மட்டம் 1 மைனஸ் 15.10 அடியாக உள்ளது.

    • பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 5 நாட்களில் 11 அடி உயர்வு
    • மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 3.28 அடியாக உள்ளது.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக விட்டுவிட்டு பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து இதமான குளிர் காற்று வீசி வருகிறது. நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக சாரல் மழை பெய்தது.

    திற்பரப்பு அருவி பகுதியில் விட்டுவிட்டு பெய்து வரும் மழையின் காரணமாக அங்கு ரம்யமான சூழல் நிலவுகிறது. இன்று காலையில் அங்கு மழை பெய்தது. அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. அருவியில் குளிப்பதற்கு இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர். அவர்கள் அருவியில் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர்.

    கன்னிமார், பூதப்பாண்டி, தக்கலை, மாம்பழத்துறையாறு, நாகர்கோவில் மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது. சிற்றாறு-2 அதிகபட்சமாக 11 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மலையோர பகுதிகளிலும் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணைகளின் நீர்மட்டமும் வெகுவாக உயர்ந்து வருகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் கடந்த 5 நாட்களில் 11 அடி உயர்ந்துள்ளது. அணை நீர்மட்டம் இன்று காலை 28.60 அடியாக உள்ளது. அணைக்கு 294 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 20 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 35.93 அடியாக உள்ளது. அணைக்கு 972 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 646 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றாறு-1 அணை நீர்மட்டம் 11.31 அடியாகவும், சிற்றாறு-2 அணையின் நீர்மட்டம் 11.41 அடியாகவும், பொய்கை அணையின் நீர்மட்டம் 12 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 3.28 அடியாக உள்ளது.

    விட்டு விட்டு பெய்து வரும் மழையின் காரணமாக பாசன குளங்களிலும் தண்ணீர் பெருக தொடங்கியுள்ளது. இதையடுத்து விவசாயிகள் சாகுபடி பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த மழை விவசாயிகளுக்கு ஆறுதல் அளிப்பதாக உள்ளது. இதனால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • சிற்றார் 2- 32.4 மில்லி மீட்டர் பதிவு
    • பல்வேறு பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்து. மின்கம்பங்கள் முறிந்து விழுந்ததில் மின்தடை ஏற்பட்டது.

    நாகர்கோவில் :

    கன்னியாகுமரி மாவட் டத்தில் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் நேற்று மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது.

    இதனால் வெப்பம் தணிந்து இதமான குளிர் காற்று வீசியது. நாகர்கோவிலில் அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது. இன்று காலையிலும் மழை பெய்தது. இதையடுத்து பள்ளிக்கு சென்ற மாணவ-மாணவிகள் குடை பிடித்த வாறு சென்றனர்.

    தொடர்ந்து மழை விட்டு விட்டு பெய்து கொண்டே இருக்கிறது. இதனால் குளுகுளு சீசன் நிலவுகிறது. பூதப்பாண்டி, சுருளோடு, கன்னிமார், ஆரல்வாய் மொழி, மயிலாடி, குளச்சல், அடையாமடை மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது.

    பேச்சிப்பாறை, பெருஞ் சாணி, சிற்றாறு அணை பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. சிற்றாறு 2 அதிகபட்சமாக 32.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மலையோர பகுதியான பாலமோர் பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்துள்ளது. பெருஞ்சாணி அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது. பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 35.10 அடியாக உள்ளது. அணைக்கு 603 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 641 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 17.45 அடியாக உள்ளது. அணைக்கு 103 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 20 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றாறு-1 அணை யின் நீர்மட்டம் 10.66 அடியாகவும், சிற்றாறு-2 அணை நீர்மட்டம் 10.76 அடியாகவும், பொய்கை அணையின் நீர்மட்டம் 12.10 அடியாகவும் மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 3.28 அடியாகவும் உள்ளது.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை 23.4, பெருஞ்சாணி 9.6, சிற்றாறு 1-26, சிற்றார் 2-32.4, மயிலாடி 1.6, இரணியல் 2, ஆணைக்கிடங்கு 1.2, அடையாமடை 7.2, முள்ளங்கினாவிளை 4.6, நாகர்கோ வில் 1.2, பூதப்பாண்டி 7.2, சுருளோடு 9.2, கன்னிமார் 9.6, பாலமோர் 18.6, புத்தன் அணை 8.8, திற்பரப்பு 9.6.

    சாரல் மழையுடன் சூறைக் காற்றும் வீசி வருவதால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்து. மின்கம்பங்கள் முறிந்து விழுந்ததில் மின்தடை ஏற்பட்டது.

    நாகர்கோவில் நகரில் பல்வேறு இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தது. கோட்டார் ரெயில் நிலையம் செல்லும் சாலையில் தென்னை மரம் முடிந்து விழுந்ததில் மின் வயர்கள் அறுந்து விழுந்தன. பார்வதிபுரம், கன்னியாகுமரி, சுங்கான்கடை பகுதிகளிலும் மரங்கள் முறிந்து விழுந்ததில் மின்கம்பங்கள் சேதம் ஏற்பட்டது. மின் வாரிய ஊழியர்கள் உடனடியாக அதை சரி செய்தனர்.

    • பெருஞ்சாணி அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு
    • புத்தன் அணையில் அதிகபட்சமாக 3.2 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயில் கொளுத்தி வருகிறது. மேற்கு மாவட்ட பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்றும் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதிகளில் சாரல் மழை நீடித்து வருகிறது.

    புத்தன் அணையில் அதிகபட்சமாக 3.2 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. பெருஞ்சாணி அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. 50 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில் இன்று 150 கனஅடி தண்ணீர் பாசனத்திற்காக திறந்துவிடப்பட்டுள்ளது. பேச்சிப்பாறை அணையில் இருந்து 715 கன அடி தண்ணீர் வெளியே ற்றப்ப ட்டு வருகிறது. பேச்சி ப்பாறை அணையின் நீர்ம ட்டம் இன்று காலை 36.67 அடியாகவும், பெருஞ்சானி அணை நீர்மட்டம் 21.35 அடியாகவும் உள்ளது.

    • சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.
    • அதன் தொடர்ச்சியாக நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.

    குறிப்பாக பெத்த நாயக்கன்பாளையம், ஆத்தூர், கெங்கவல்லி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    தாழ்வான பகுதி களில் தண்ணீர் தேங்கியது. கோடைகாலத்தில் பெய்த மழை, பயிர்களுக்கு உகந்ததாக இருக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    மாவட்டத்தில் அதிகபட்சமாக பெத்தநாயக்கன்பாளை யத்தில் 7 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. ஆத்தூர் - 6, கெங்கவல்லி - 5, வீரகனூர் - 4, தலைவாசல் - 4 என மாவட்டம் முழுவதும் 26 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இன்று காலையும் வானம் மேகமூட்டத்துடன் காட்சி அளித்தது.

    பேச்சிப்பாறையில் 44 மில்லி மீட்டர் மழை பதிவு

    நாகர்கோவில் :

    தென்மேற்கு பருவமழை வருகிற 4-ந்தேதி தொ டங்கும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. இந்த நிலையில் குமரி மாவட்டத்தின் மேற்கு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    குறிப்பாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. பேச்சிப் பாறை அணைப்பகுதியில் நேற்று 2-வது நாளாக பலத்த மழை பெய்தது. சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக அங்கு மழை நீடித்தது. இதனால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அங்கு அதிகபட்ச மாக 44 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக பேச்சிப்பாறை அணைக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிக ரித்துள்ளது.

    பெருஞ்சாணி, புத்தன் அணை, சிற்றாறு, களியல் பகுதிகளிலும் மழை பெய்தது. மழையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. திற்பரப்பு அருவி பகுதியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது.

    அருவியில் குளிப்பதற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராள மான சுற்றுலா பயணிகள் அருவியில் குவிந்துள்ளனர். மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை 44, பெருஞ்சாணி 19.8, சிற்றார் 1- 9.4, களியல் 12.8, குழித்துறை 12.4, புத்தன் அணை 17.2, குளச்சல் 3, பாலமோர் 7.5

    அணை பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் குமரி மாவட்டத்தில் கிழக்கு பகுதிகளில் சுட்டெரிக்கும் வெயில் அடித்து வருகிறது. நாகர்கோவிலில் இன்று காலையில் சுட்டெரிக்கும் வெயில் அடித்தது. கன்னியா குமரி, அஞ்சுகிராமம், ஆரல் வாய்மொழி பகுதியிலும் வெயில் கொளுத்தியது. வெப்பத்தின் தாக்கம் அதிகமாக காணப்பட்டதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதற்கே சிரமப்பட்டனர். நாகர்கோ வில் பகுதியில் உள்ள சாலை களில் மதியம் நேரங் களில் கானல் நீராக காட்சி அளித்தது.

    • சாகுபடி பணியில் விவசாயிகள் தீவிரம்
    • அணையிலிருந்து குடிநீருக்காக 50 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் பெய்து வரும் மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் இரவு நேரங்களில் குளுகுளு சீசன் நிலவுகிறது. காலையில் சுட்டெரிக்கும் வெயில் அடித்தாலும் இரவில் மழை பெய்து வருவதால் ரம்மியமான சூழல் நிலவுகிறது.

    நேற்றும் பூதப்பாண்டி, தக்கலை, புத்தன் அணை பகுதிகளிலும் மழை பெய்தது. திற்பரப்பு அருவி பகுதியிலும் விட்டுவிட்டு மழை பெய்து வருவதால் குளுகுளு சீசன் நிலவுகிறது. அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது. தற்பொழுது கோடை விடுமுறை தொடங்கியுள்ள நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் திற்பரப்பில் குவிந்த வண்ணம் உள்ளனர். கேரளாவில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் இன்று வருகை தந்திருந்தனர்.

    இதையடுத்து திற்பரப்பு அருவியில் கூட்டம் நிரம்பி வழிந்தது. பொதுமக்கள் குடும்பத்தோடு வந்து அருவியில் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர். திற்பரப்பு அருவியில் கூட்டம் அலைமோதியதையடுத்து அங்கு கடுமையான போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டது.

    பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 38.50 அடியாக இருந்தது.

    அணைக்கு 190 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 41.10 அடியாக உள்ளது. அணைக்கு 110 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து குடிநீருக்காக 50 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. தொடர் மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் உள்ள பாசன குளங்களும் நிரம்பி வருகிறது.

    200-க்கும் மேற்பட்ட குளங்கள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். சாகுபடி பணியில் விவசாயிகள் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளனர்.

    • பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கும் மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
    • பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 39.95 அடியாக உள்ளது.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தின் அணை பகுதிகளிலும், மலையோர பகுதிகளிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. பேச்சிப் பாறை, பெருஞ்சாணி அணைப்பகுதியில் நேற்று பலத்த மழை கொட்டி தீர்த்தது. சுருளோடு பகுதியிலும் கனமழை பெய்தது.

    அங்கு அதிகபட்சமாக 55.2 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கும் மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    இதனால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 38.20 அடியாக உள்ளது. அணைக்கு 235 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 39.95 அடியாக உள்ளது. அணைக்கு 217 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 51 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது.

    • பெருஞ்சாணியில் 34 மில்லி மீட்டர் பெய்தது
    • பல இடங்களிலும் நேற்று முன்தினம் மழை பெய்தது.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் மக்களை சுட்டெரித்து வந்தது. அக்னி நட்சத்திரத்தை நினைவு படுத்தும் வகையில் வெப்பத்தின் தாக்கம் இருந்து வந்தது.

    இந்த நிலையில் வளி மண்டலத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம் காரணமாக குமரி மாவட்டத்தில் பல இடங்களிலும் நேற்று முன்தினம் மழை பெய்தது. பகலிலும் வெப்பம் குறைந்து மேகமூட்டமாகவே காணப்பட்டது. நேற்று 2-வது நாளாக அணைப்பகுதிகளில் பரவலாக மழை நீடித்தது. இதனால் மாவட்டம் முழுவதும் வெப்பம் தணிந்து இரவிலும் குளிர்ச்சியான சூழல் நிலவியது.

    பெருஞ்சாணியில் அதிக பட்சமாக 34 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. புத்தன் அணையில் 30.2, சுருளோட்டில் 27, பூதப்பாண்டியில் 22.4, சிற்றாறு-1 பகுதியில் 20.6, பேச்சிப்பாறையில் 16.8, முக்கடல் அணையில் 10, தக்கலையில் 9.2, ஆரல்வாய் மொழியில் 6.2, நாகர்கோவி லில் 5, பாலமோரில் 4.2, கன்னிமார், சிற்றாறு-2 பகுதிகளில் தலா 2.2, மாம்பழத்துறையாறு 1 மில்லி மீட்டர் மழை பெய்த தாக பதிவாகி உள்ளது.

    மழையின் காரணமாக சிற்றாறு-1 அணைக்கு விநாடிக்கு 6 கன அடி நீரும், சிற்றாறு-2 அணைக்கு 10 கன அடி நீரும், பேச்சிப்பாறை அணைக்கு 244 கன அடி நீரும், பெருஞ்சாணி அணைக்கு 34 கனஅடி நீரும் வந்து கொண்டிருக்கிறது.

    77 அடி கொண்ட பெருஞ்சாணி அணையில் தற்போது 36.90 அடியும், 48 அடி கொண்ட பேச்சிப்பாறையில் 36.05 அடியும் தண்ணீர் உள்ளது. சிற்றாறு-1 அணையில் 8.10 அடியும், சிற்றாறு-2 அணையில் 8.20 அடியும், பொய்கை அணையில் 13.70 அடியும், மாம்பழத்துறை யாறு அணையில் 2.30 அடியும் தண்ணீர் உள்ளது. இதில் பெருஞ்சாணி அணையில் இருந்து 51 கன அடி தண்ணீர் வெளியேற்றப் பட்டு வருகிறது.

    ×