search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rain duration"

    • கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று மாவட்டத்தின பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது.
    • குறிப்பாக பெத்தநாயக்கன்பாளையம், ஆத்தூர், தலைவாசல் ஆகிய பகுதிகளில் கன மழை பெய்தது . இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

    பரமத்திவேலூர்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று மாவட்டத்தின பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது.

    குறிப்பாக பெத்தநாயக்கன்பாளையம், ஆத்தூர், தலைவாசல் ஆகிய பகுதிகளில் கன மழை பெய்தது . இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

    சேலம் மாநகரில் லேசான சாரல் மழை பெய்தது. மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குளிர்ந்த சீதோஷ்ண நி லை நிலவி வருகிறது. மாவட்டத்தில் அதிக பட்சமாக பெத்தநாயக்கன் பாளையத்தில் 13 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. ஆத்தூர் 5, தலைவாசல் 5, ஏற்காடு 1.4, ஆனைமடுவு 1, சேலம் 0.3 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 25.7 மி.மீ. மழை பெய்துள்ளது.

    நாமக்கல் மாவட்டம்

    நாமக்கல் மாவட்டத்தில் மங்களபுரம், நாமக்கல், பரமத்திவேலூர், கொல்லி மலை ஆகிய பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்தது.

    பரமத்தி வேலூர்

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர், பரமத்தி, நன்செய் இடையாறு, பாலப்பட்டி, மோகனூர், கபிலர்மலை, ஒத்தக்கடை, நல்லூர் , கந்தம்பாளையம், பொத்தனூர் ,பாண்டமங்கலம், வெங்கரை, பிலிக்கல்பாளையம், ஆனங்கூர், ஜேடர்பாளையம், சோழசிராமணி, பெருங்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு சுமார் 7 மணி அளவில் திடீரென சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது.

    அதனைத் தொடர்ந்து மழை சற்று வேகமாக பெய்ய ஆரம்பித்து. இதன் காரணமாக சாலை வழியாக சென்று கொண்டிருந்த இருசக்கர வாகன ஓட்டிகள், நடந்து சென்றபொதுமக்கள் நனைந்து கொண்டு அவதிப்பட்டு சென்றனர் .அதேபோல் சாலை ஓரங்களில் போடப்பட்டிருந்த கட்டில் கடைகள், சிற்றுண்டி கடைகள், பூக்கடைகள் பழக்கடைகள் ,பலகார கடைகள், துணிக்கடைகள், மண்பாண்டம் விற்பனை செய்யும் கடைகள் மற்றும் பல்வேறு கடைக்காரர்கள் கனமழையின் காரணமாக வியாபாரம் செய்ய முடியாமல் அவதிப்பட்டனர். வெப்ப சீதோசன நிலை மாறி குளிர்ச்சியான சீதோசன நிலை ஏற்பட்டுள்ளது . இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது. இதில் அதிக பட்சமாக மங்களபுரத்தில் 11.6 மி.மீ. மழை பெய்துள்ளது. நாமக்கல் 7, பரமத்தி 4, கொல்லி மலை 3 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 25.6 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

    • சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.
    • அதன் தொடர்ச்சியாக நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.

    குறிப்பாக பெத்த நாயக்கன்பாளையம், ஆத்தூர், கெங்கவல்லி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    தாழ்வான பகுதி களில் தண்ணீர் தேங்கியது. கோடைகாலத்தில் பெய்த மழை, பயிர்களுக்கு உகந்ததாக இருக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    மாவட்டத்தில் அதிகபட்சமாக பெத்தநாயக்கன்பாளை யத்தில் 7 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. ஆத்தூர் - 6, கெங்கவல்லி - 5, வீரகனூர் - 4, தலைவாசல் - 4 என மாவட்டம் முழுவதும் 26 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இன்று காலையும் வானம் மேகமூட்டத்துடன் காட்சி அளித்தது.

    • வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    • மாவட்டம் முழுவதும் மொத்தம் 159.40 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    நாமக்கல்:

    மாண்டஸ் புயலின் தாக்கம் இன்று வரை இருக்கும் என்றும், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    நாமக்கல்

    இந்த நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று இரவு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.

    குறிப்பாக கொல்லிமலை, எருமப்பட்டி, மங்களபுரம், நாமக்கல் நகர பகுதி உட்பட பல பகுதிகளில் மழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.மாவட்டத்தில் அதிக–பட்சமாக கொல்லிமலையில் 27 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    கலெக்டர் அலுவலகப் பகுதி- 5, எருமைப்பட்டி- 10, மங்களபுரம் -7 , மோகனூர்- 7, நாமக்கல் -7, பரமத்தி- 5, புதுசத்திரம் -2, சேந்தமங்கலம் -2.4, திருச்செங்கோடு -1 மில்லி மீட்டர் என மாவட்டம் முழுவதும் 73.40 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இன்று காலையும் வானம் மேகமூட்டத்துடன் காட்சியளித்தது.

    சேலம்

    சேலம் மாவட்டத்தில் வீரகனூர், ஆத்தூர், ஏற்காடு, தலைவாசல், சேலம், ஓமலூர், தம்மம்பட்டி, சங்ககிரி, கெங்கவல்லி, எடப்பாடி ஆகிய பகுதிகளில் மழை பரவலாக பெய்து வருகிறது. இதனால் மாவட்டம் முழுவதும் கடும் குளிர் நிலவுகிறது. நேற்று வீரகனூர், தம்மம்பட்டி, தலைவாசல் ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

    இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. வீரகனூரில் அதிகபட்சமாக 45 மில்லிமீட்டர் பதிவாகி உள்ளது. இந்த மழையினால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    சேலம் மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:

    வீரகனூர் - 45 மி.மீ, தம்மம்பட்டி - 27, தலைவாசல் - 23, மேட்டூர் - 12.2, எடப்பாடி - 11, கெங்கவல்லி - 10, ஏற்காடு-8, ஆத்தூர் - 7.6, பெத்தநாயக்கன்பா–ளையம்-6, ஆணைமடுவு -3, சேலம்- 2.6, ஓமலூர்- 2, கடையாம்பட்டி-1, கரிய கோவில்- 1 என மாவட்டம் முழுவதும் மொத்தம் 159.40 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.A 

    ×