search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெருஞ்சாணி"

    • அணைகளுக்கு நீர்வரத்து குறைய தொடங்கியது
    • மழை குறைந்துள்ள நிலையில் அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து படிப்படியாக குறைய தொடங்கி உள்ளது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கொட்டித்தீர்த்த கனமழை யின் காரணமாக பாசன குளங்கள் கிடு கிடுவென நிரம்பி வருகிறது. மாவட்டம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குளங்கள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது. மேலும் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்துள்ளது. தற்பொழுது மழை குறைந்துள்ள நிலையில் அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து படிப்படியாக குறைய தொடங்கி உள்ளது.

    பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 33.49 அடியாக இருந்தது. அணைக்கு 992 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 284 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 62.05 அடியாக உள்ளது. அணைக்கு 284 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 80 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    சிற்றாறு-1 அணை நீர்மட்டம் 14.69 அடியாக உள்ளது. அணைக்கு 239 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்ப டுகிறது. சிற்றாறு-2 அணை நீர்மட்டம் 14.79 அடியாகவும், பொய்கை அணை நீர்மட்டம் 9.20 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 33.46 அடியாகவும் உள்ளது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணை நீர்மட்டம் 14.10 அடியாக உள்ளது.

    மாவட்டம் முழுவதும் தொடர் மழையின் காரணமாக பல்வேறு இடங்களில் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி இருந்தது. சுமார் 300 ஹெக்டேரில் தண்ணீர் மூழ்கி இருந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மழை சற்று குறைந்ததையடுத்து அந்த தண்ணீர் வடியத்தொடங்கியது. தற்பொழுது 111 ஹெக்டேரில் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. இந்த பகுதியிலும் தேங்கி இருந்த தண்ணீர் படிப்படியாக வடிந்து வருகிறது.

    தண்ணீர் வடிந்தாலும் ஒரு சில பகுதிகளில் நெற்பயிர்கள் முளைத்து காணப்படுவதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். மாவட் டம் முழுவதும் ஏற்கனவே 5500 ஹெக்டேரில் கன்னிப்பூ சாகுபடி செய்யப்பட்டது. தற்பொழுது 3500 ஹெக்டேரில் அறுவடை முடிந்திருந்த நிலையில் இன்னும் 1500 ஹெக்டேரில் அறுவடை செய்ய வேண்டியது உள்ளது. மணவாளக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் இன்னும் அறுவடைக்கு ஒரு மாத காலம் ஆகலாம்.

    கன்னிப்பூ சாகுபடி தாமதமாக தொடங்கியதால் அறுவடை தாமதமாகி உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். கன்னிப்பூ அறுவடை நடைபெற்ற பகுதிகளில் விவசாயிகள் கும்பப்பூ சாகுபடி பணியை தொடங்கி உள்ளனர். திருப்பதிசாரம் 3-ரக நெல்லை வேளாண் துறை அதிகாரிகள் தங்கு தடை இன்றி வழங்கி வருகிறார்கள். சுசீந்திரம், தேரூர், பூதப்பாண்டி பகுதிகளில் நடவு பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.

    அறுவடை செய்யப்படாத பகுதியிலும் விவசாயிகள் கும்பப்பூ சாகுபடி செய்வதற்கு தேவையான ஏற்பாடுகளை வேளாண் துறை அதிகாரிகள் செய்து வருகிறார்கள். அறுவடை நடைபெற்றவுடன் அந்த பகுதியில் நடவு பணியை மேற்கொள்ள வேறு விளை நிலங்களில் நாற்றுப் பாவும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

    • பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கும் மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
    • பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 39.95 அடியாக உள்ளது.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தின் அணை பகுதிகளிலும், மலையோர பகுதிகளிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. பேச்சிப் பாறை, பெருஞ்சாணி அணைப்பகுதியில் நேற்று பலத்த மழை கொட்டி தீர்த்தது. சுருளோடு பகுதியிலும் கனமழை பெய்தது.

    அங்கு அதிகபட்சமாக 55.2 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கும் மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    இதனால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 38.20 அடியாக உள்ளது. அணைக்கு 235 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 39.95 அடியாக உள்ளது. அணைக்கு 217 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 51 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது.

    • பெருஞ்சாணியில் 59 மில்லி மீட்டர் பதிவு
    • அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயில் அடித்து வந்த நிலையில் மாவட்டத்தில் மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்திருந்தது.

    இந்த நிலையில் நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இடி-மின்ன லுடன் கனமழை கொட்டி தீர்த்தது. நாகர்கோவிலில் காலையில் வழக்கமாக வெயில் அடித்து வந்த நிலையில் மதியத்திற்கு பிறகு மழை பெய்தது. புத்தன் அணை, குழித்துறை, தக்கலை பகுதியில் மாலையில் வானத்தி சாரல் மழை பெய்ய தொடங்கியது.

    நேரம் செல்ல மழையின் வேகம் அதிகரித்தது. அதன்பின்னர் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக பலபகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கியது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார் அணை பகுதிகளிலும் மழை பெய்தது. பெருஞ்சாணியில் இடி, மின்னலுடன் கனமழை கொட்டி தீர்த்தது. அங்கு அதிகபட்சமாக 59 மில்லி மீட்டர் மழை பதிவாகி யுள்ளது. திற்பரப்பு அருவி பகுதியில் விட்டுவிட்டு மழை பெய்தது. அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது. அருவி யில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியலிட்டு வருகிறார்கள்.

    மாவட்டம் முழுவதும் கொட்டி தீர்த்த மழை காரணமாக கோடை வெப்பம் தணிந்து இதமான சீதோஷ்னம் நிலவியது. மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் பலத்த மழை பெய்தது. இதனால் அணைகளுக்கு வரும் நீர்வரத்து அதிக ரித்துள்ளது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 36.25 அடியாக உள்ளது. அணைக்கு 320 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பெருஞ் சாணி அணையின் நீர்மட்டம் 37.45 அடியாக உள்ளது. அணைக்கு 242 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து நாகர் கோவில் நகர குடிநீருக்காக 51 கன அடி தண்ணீர் திறக் கப்பட்டு உள்ளது.

    சிற்றார்-1 நீர்மட்டம் 8.20 அடியாகவும், சிற்றார்-2 நீர்மட்டம் 8.30 அடியாகவும், பொய்கை அணை நீர்மட்டம் 13.70 அடியாகவும், மாம்ப ழத்துறையாறு அணை நீர்மட்டம் 2.30 அடியாகவும் உள்ளது. முக்கடல் நீர்மட்டம் தொடர்ந்து மைனஸ் அடியாகவே இருக்கிறது. இன்று காலை அணையின் நீர்மட்டம் மைனஸ் 19.10 அடியாக உள்ளது.

    மாவட்டம் முழுவதும் பெய்து மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை 28.6, பெருஞ்சாணி 59, சிற்றார்-1-30, சிற்றார்-2-6.4, பூதப்பாண்டி 30.4, களியல் 12, கன்னிமார் 18.2, குழித்துறை 20, நாகர்கோவில் 4, புத்தன் அணை 57.8, சுருளோடு 55.4, தக்கலை 30.3, இரணியல் 22, பாலமோர் 24.2, மாம்பழத் துறை ஆறு 25, திற்பரப்பு 7.4, ஆரல்வாய்மொழி 3, கோழிபோர்விளை 4.7, குருந்தன்கோடு 36, ஆணைக் கிடங்கு 23, முக்கடல் 21.2.

    நேற்று மாவட்டத்தில் மழை பெய்து வந்த நிலை யில் இன்று காலையில் மீண்டும் வெயில் அடித்தது.

    • முக்கடலுக்கு இன்று மாலை வந்து சேரும்
    • முக்கடல் வந்து சேரும் தண்ணீரை பொது மக்களுக்கு தங்குதடையின்றி குடிநீர் சப்ளை செய்ய நடவடிக்கை

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநகர மக்களுக்கு முக்கடல் அணையில் இருந்து பைப் லைன் மூலமாக கிருஷ்ணன் கோவிலில் உள்ள சுத்தி கரிப்பு நிலையத்திற்கு தண்ணீர் கொண்டு வரப் பட்டு குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. 25 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம் கோடை தொடங்கியதையடுத்து படிப்படியாக சரிய தொடங்கியது.

    இந்த நிலையில் நேற்று முக்கடல் அணை நீர்மட்டம் மைனஸ் அடியாக குறைந்தது. அணையின் நீர்மட்டம் சரிந்ததையடுத்து பேச்சிப்பாறை அணையில் இருந்து குடிநீருக்காக தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மேயர் மகேஷ் பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகனை சந்தித்து கோரிக்கை வைத்திருந்தார்.

    இதையடுத்து பேச்சிப்பாறை அல்லது பெருஞ் சாணி அணையில் இருந்து தினமும் 50 கன அடி தண்ணீர் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி பெருஞ் சாணி அணை குடிநீருக்காக இன்று காலை 8 மணிக்கு திறக்கப்பட்டது. அணையில் இருந்து 50 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

    அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் புத்தன் அணை, பாண்டியன் கால்வாய், அனந்தனார் சானல் வழியாக முக்கடல் சென்றடையும். இன்று மாலை அல்லது நள்ளிரவு பெருஞ்சாணி அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் முக்கடல் வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முக்கடல் வந்து சேரும் தண்ணீரை பொது மக்களுக்கு தங்குதடையின்றி குடிநீர் சப்ளை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    முக்கடல் அணை பகுதிக்கு வந்து சேரும் பெருஞ்சாணி தண்ணீரை பைப் லைன் மூலமாக கிருஷ்ணன் கோவிலில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு வந்து பொதுமக்களுக்கு வினியோகம் செய்ய மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர். பெருஞ்சாணி அணையில் இருந்து முக்கடல் அணைக்கு தண்ணீர் வரும் பகுதிகளை ஆணையாளர் ஆனந்த மோகன் மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    • இருச்சக்கர வாகன ஓட்டிகள் வாகனம் ஓட்ட முடியாத அளவிற்கு தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது.
    • பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 36.85 அடியாக உள்ளது.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கடும் அவதிக்கு ஆளாகி வருகிறார்கள். மதியம் நேரங்களில் சாலைகளில் கானல் நீர் கண்ணுக்கு தெரியும் அளவில் வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் இருச்சக்கர வாகன ஓட்டிகள் வாகனம் ஓட்ட முடியாத அளவிற்கு தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது.

    நாகர்கோவில் நகரில் மதியம் நேரங்களில் வெயில் கொளுத்துகிறது. பொது மக்கள் வீட்டுக்குள் இருக்க முடியாத அளவிற்கு வெப்பம் அதிகமாக உள்ளது. வெப்பத்தின் தாக்கம் ஒருபுறம் இருக்க மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை காரணமாக பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள்.

    கோடை விடுமுறை தொடங்கியுள்ள நிலையில் சுற்றுலா தலங்களிலும் கூட்டம் அதிகரித்து வருகிறது. வெப்பத்தின் தாக்கத்தின் காரணமாக மாலை நேரங்களில் மட்டுமே சுற்றுலா தலங்களில் பொதுமக்கள் செல்ல முடியும் அளவிற்கு உள்ளது. கன்னியாகுமரி சொத்தவிளை, வட்டக்கோட்டை பீச் பகுதிகளில் மாலை நேரங்களில் பொதுமக்கள் அதிகளவு குவிந்த வண்ணம் உள்ளனர்.

    கோடை மழையும் கண்ணாமூச்சி காட்டி வருகிறது. மேற்கு மாவட்ட பகுதிகளில் ஒரு சில பகுதிகளில் மட்டுமே அவ்வப்போது லேசான மழை பெய்து வருகிறது. அணை பகுதிகளில் 2 நாட்களாக சாரல் மழை நீடித்தது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சுருளோடு, கன்னிமார் பகுதிகளில் மழை பெய்தது. பெருஞ்சாணியில் அதிகபட்சமாக 5.2 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 35.58 அடியாக உள்ளது. அணைக்கு 145 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 36.85 அடியாக உள்ளது. அணைக்கு 34 கனஅடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணை நீர்மட்டம் 0.30 அடியாக சரிந்துள்ளது. அணையின் நீர்மட்டம் ஒரு அடிக்கு கீழ் சென்றுள்ளது. ஏற்கனவே வாரத்திற்கு ஒரு முறை பொதுமக்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    தற்பொழுது முக்கடல் அணையில் தண்ணீர் நீர்மட்டம் சரிந்துள்ள நிலை யில் பேச்சிப்பாறை அணை யில் இருந்து குடிநீருக்காக வருகிற 25-ந்தேதி முதல் தண்ணீர் திறக்க அரசு உத்தர விட்டுள்ளது. அதை தொடர்ந்து பொதுமக்க ளுக்கு தங்கு தடையின்றி தண்ணீர் வழங்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • ஆற்றின் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
    • பேச்சிபாறையில் 65 மி.மீ மழை

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. வங்க கடல் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு உருவாகியுள்ளதால் மேலும் மழை நீடிக்கும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.

    இந்த நிலையில் நேற்று இரவு மாவட்டம் முழுவதும் கனமழை கொட்டி தீர்த்தது. நாகர்கோவில், மயிலாடி, தக்கலை, குளச்சல், இரணியல், ஆரல்வாய்மொழி, ஆணைக் கிடங்கு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழை பெய்தது. திற்பரப்பு அருவி பகுதியிலும் விட்டுவிட்டு மழை பெய்து வருவதால் அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

    பேச்சுப் பாறை, பெருஞ் சாணி, சிற்றார் அணை பகுதியிலும் மழை பெய்தது. பேச்சிபாறையில் அதிகபட்சமாக 65 மில்லி மீட்டர் மழை பதிவாகி யுள்ளது. மழையோர பகுதி யான பாலமோர் பகுதியிலும் மழை பெய்து வருவதால் பேச்சிபாறை அணைக்கு வரக்கூடிய நீர் வரத்து கணிசமாக உயர்ந்துள்ளது. அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டி வருவதையடுத்து பொதுபணித்துறை அதிகாரிகள் அணையின் நீர்மட்டத்தை கண்காணித்து வருகிறார்கள்.

    பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை களின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டி யுள்ளதை யடுத்து குழித்துறை யாறு, கோதையாறு, வள்ளியாறு, பரளிஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பெருஞ் சாணி, சிற்றாறு அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட தண்ணீர் மூடப்பட்டுள்ளது.

    பேச்சிப்பாறை அணை யின் நீர்மட்டம் இன்று காலை 45.44 அடியாக இருந்தது. அணைக்கு 1468 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 6.86 கன அடி தண்ணீர் வெளியேற்றபடுகிறது. பெருஞ்சானி அணை நீர்மட்டம் 72. 10 அடியாக உள்ளது. அணைக்கு 643 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    சிற்றார் 1-அணை நீர்மட்டம் 13.12 அடியாகவும், சிற்றார் 2 நீர்மட்டம் 13.22 அடியாகவும், பொய்கை அணை நீர்மட்டம் 18 அடியாகவும், மாம்பழத் துறையார் அணையின் நீர்மட்டம் 49.13 அடியாகவும் உள்ளது. முக்கடல் அணையின் நீர்மட்டம் 20 அடியை நெருங்குகிறது.

    மாவட்ட முழுவதும் பெய்து மழை அளவு மில்லி மீட்டரில் வரு மாறு:- பேச்சுப்பாறை 65, பெருஞ்சாணி 44.8, சிற்றார்1-40.6, சிற்றார் 2 -50.2, பூதப்பாண்டி 25.6, களியல் 48, கன்னிமார் 13.6, கொட்டாரம் 28.2, குழித்துறை 43, மைலாடி 20.2, நாகர்கோவில் 24.4, சுருளோடு 49, தக்கலை 20, குளச்சல் 3, இரணியல் 3, பாலமோர் 25.4, மாம்பழத்துறையாறு 26.4, திற்பரப்பு 54, ஆரல்வாய்மொழி 17.2, கோழிப் போர்வை 20.4, அடையாமடை 18.2, குருந்தன்கோடு 22, முள்ளங்கினாவிளை 42.6, ஆணை கிடங்கு 24.

    • கரையோர பொதுமக்களுக்கு எச்சரிக்கை
    • குமரி மாவட்டம் முழுவதும் மழை நீடிப்பு

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.

    நேற்றும் மாவட்டம் முழுவதும் மழை நீடித்தது.இன்று காலையிலும் ஒரு சில இடங்களில் மழை கொட்டி தீர்த்தது. பேச்சிப்பாறை அணை பகுதியில் சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக மழை வெளுத்து வாங்கியது.அங்கு அதிகபட்சமாக 57.8 மில்லிமிட்டர் மழை பதிவாகியுள்ளது.

    கன்னிமார், கொட்டாரம், மயிலாடி, ஆரல்வாய்மொழி மற்றும் அதன் புறநகர் பகுதி களிலும் மழை பெய்தது. மலையோர பகுதியான பாலமோர் பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை களுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    பேச்சிப்பாறை அணைக்கு வரக்கூடிய நீர்வரத்து கணிசமான அளவு உயர்ந்துள்ளது. அணையின் நீர்மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள்.அணைக்கு வரக்கூடிய தண்ணீ ருக்கு ஏற்ப அணையிலி ருந்து தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது.

    இன்று காலை பேச்சிப்பாறை, பெருஞ் சாணி அணைகளில் இருந்து 2 ஆயிரம் கனஅடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் குழித்துறை ஆறு, பரளியாறு கோதை யாறுகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகி றார்கள். திற்பரப்பு அருவி யில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் அருவியில் குளிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீட்டிக்கப் பட்டு உள்ளது.

    பேச்சிப்பாறை நீர்மட்டம் இன்று காலை 42.27 அடியாக உள்ளது. அணைக்கு 1437 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 1066 கனஅடி உபரி நீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 71.70 அடியாக உள்ளது. அணைக்கு 842 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை யில் இருந்து 1864 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி அணைகளில் இருந்து சுமார் 3 ஆயிரம் கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    சிற்றார்-1 அணை நீர்மட்டம் 13.12 அடியாகவும், சிற்றார்-2 நீர்மட்டம் 13.22 அடியாகவும், பொய்கை அணை நீர்மட்டம் 16 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 38.93 அடியாகவும் உள்ளது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணையின் நீர்மட்டம் 13.20 அடியாக உள்ளது.

    குமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக பாசன குளங்கள் நிரம்பி வழிகின்றன. மாவட்டம் ழுழுவதும் 750 குளங்கள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. 500-க்கும் மேற்பட்ட குளங்கள் 50 சதவீதம் நிரம்பியுள்ளது.

    தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக விவசாயிகள் சாகுபடி பணியில் தீவிரமாக ஈடு பட்டு வருகிறார்கள். தெரிசனங்கோப்பு, அரும நல்லூர், பூதப்பாண்டி சுசீந்திரம் பகுதிகளில் கும்பப்பூ சாகுபடி நடந்து வருகிறது.

    • குழித்துறை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
    • பேச்சிப்பாறையில் 67.4 மி.மீ. மழை பதிவு

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக பரவலாக மழை பெய்து வருகிறது.

    பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார் அணை பகுதிகளில் பலத்த மழை கொட்டி தீர்த்து வருகிறது. பேச்சிப்பாறை அணை பகுதியில் நேற்று மாலை சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக மழை வெளுத்து வாங்கியது. அங்கு அதிகபட்சமாக 67.4 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    கனமழை கொட்டி தீர்த்ததையடுத்து பேச்சிப்பாறை, பெருஞ் சாணி அணைகளுக்கு வரக் கூடிய நீர்வரத்து கணிச மான அளவு உயர்ந்துள் ளது. இதனால் அணை களின் நீர்மட்டம் கிடுகிடு வென உயர்ந்து வருகிறது.

    பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 45 அடியை நெருங்கி வருகிறது. இதை யடுத்து அணையின் நீர்மட் டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள். ஏற்கனவே கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

    பெருஞ்சாணி அணை யின் நீர்மட்டமும் 71.45 அடியை எட்டியது. அணை யின் நீர்மட்டம் 71 அடியை கடந்ததையடுத்து அருவிக்க ரை, திருவட்டார் மற்றும் குழித்துறை ஆற்றின் கரை யோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆற்றின் கரையோர பொதுமக்கள் பாதுகாப்பான இடங்க ளுக்கு செல்லுமாறு அறிவு றுத்தி வருகிறார்கள்.

    பேச்சிப்பாறை அணை யின் நீர்மட்டம் இன்று காலை 44.87 அடியாக உள்ளது. அணைக்கு 1494 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 227 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 71.45 அடியாக உள்ளது. அணைக்கு 1197 தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணை யில் இருந்து 160 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    சிற்றார்-1 அணையின் நீர்மட்டம் 12.40 அடியாக வும், சிற்றார்-2 அணையின் நீர்மட்டம் 12.49 அடியாகவும், பொய்கை அணை நீர்மட் டம் 17 அடியாகவும், மாம்ப ழத்துறையாறு அணை நீர் மட்டம் 37.89 அடியாகவும் உள்ளது.

    நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணை நீர்மட்டம் 13.60 அடியாக உள்ளது.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை-67.4, பெருஞ்சாணி-44, சிற்றார்-1-55.2 பூதப்பாண்டி- 7.2, கன்னிமார்-8.8, புத்தன் அணை-43, சுருளோடு-18.4, பாலமோர்-27.4, திற்பரப்பு-7.4, அடையா மடை-2.

    • திற்பரப்பில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல்
    • மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் கனமழை

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் 4-வது நாளாக மழை நீடித்தது. பேச்சிப்பாறை பெருஞ்சாணி சிற்றாறு அணை பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. பெருஞ்சாணியில் சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக மழை வெளுத்து வாங்கியது. அங்கு அதிகபட்சமாக 58 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் கனமழை கொட்டி வருவதால் பேச்சிபாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு கணிசமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணைகளின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டிவருவதையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் அணையை கண்காணித்து வருகிறார்கள். குழித்துறை தாமிரபரணி ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்ந்து விடப்பட்டுள்ளது. திற்பரப்பு அருவி பகுதியிலும் சாரல் மழை பெய்து வருகிறது. விடுமுறை தினமான இன்று அருவியில் குளிப்பதற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராள மான சுற்றுலாப் பயணிகள் அங்கு வந்திருந்தனர்.அவர்கள் அருவியில் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர்.

    பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 44.13 அடியாக இருந்தது.அணைக்கு 1171 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 227 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சானி அணை நீர்மட்டம் 70.40 அடியாக உள்ளது.அணைக்கு 888 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.அணையில் இருந்து 160 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது .

    சிற்றார்-1 அணையின் நீர்மட்டம் 12.10 அடியாகவும் சிற்றார்-2 அணையின் நீர்மட்டம் 12.20 அடியாகவும் பொய்கை அணை நீர்மட்டம் 17 அடியாகவும் மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 37.89 அடியாகவும் உள்ளது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணையின் நீர்மட்டம் 13.50 அடியாக உள்ளது.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சுப்பாறை 29 பெருஞ்சாணி 58 சிற்றார்-1-25.4 சிற்றார்-2-24.8 பூதப்பாண்டி 18.6 களியல் 4.4 குழித்துறை 8.4 நாகர்கோவில் 4.8 புத்தன் அணை54.8 சுருளோடு 42.8 தக்கலை 15.1 குளச்சல் 6 இரணியல் 9.2 பாலமோர் 14.2 மாம்பழத் துறையாறு- 21 ஆரல்வாய்மொழி 2 கோழி போர்வைவிளை 9.6 ஆணை கிடங்கு 194 முக்கடல் 30.2 குருந்தன்கோடு 9.4

    • பேச்சிப்பாறையில் இருந்து 639 கன அடி தண்ணீர் வெளியேற்றம்
    • நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணை நீர்மட்டம் 6.60 அடியாக சரிந்துள்ளது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் பெய்து வரும் சாரல் மழை காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை களுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    இதையடுத்து பேச்சிப்பாறை, பெரு ஞ்சாணி சிற்றார் அணைகளில் இருந்து கன்னி பூ சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு இருந்தது.3 அணைகளில் இருந்தும் 1000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்தது.

    அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட தண்ணீர் தோவாளை அனந்தனார் சானல்களில் ஷிப்ட் முறையில் திறந்து விடப்பட்டது.

    இதையடுத்து மாவட்டம் முழுவதும் விவசாயிகள் கன்னிப்பூ சாகுபடியில் தீவிரமாக ஈடுபட்டனர். இந்த நிலையில் தற்போது பெருஞ்சாணி, சிற்றார் அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டு ள்ளது. பேசிப்பாறை அணையில் இருந்து மட்டுமே தண்ணீர் பாசனத்திற்காக வெளியேற்றப்பட்டு வருகிறது.

    பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 39.20 அடியாக உள்ளது. அணைக்கு 664 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து 639 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சானி அணை நீர்மட்டம் 58.50 அடியாக உள்ளது.அணைக்கு 235 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.சிற்றார் -1 அணையின் நீர்மட்டம் 11.61 அடியாகவும், சிற்றார்-2 அணையின் நீர்மட்டம் 11.71 அடியாகவும் பொய்கை அணை நீர்மட்டம் 17 அடியாகவும் மாம்பழத் துறையாறு அணை நீர்மட்டம் 28. 70 அடியா கவும் உள்ளது.

    நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணை நீர்மட்டம் 6.60 அடியாக சரிந்துள்ளது.

    ×